சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter: ( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் கொள்
கொள்ளினும்
கொள்கையி
கொள்ளுங்
கொள்ளி
கொள்ளித்
கொள்ளும்
கொள்ளிடக்
கொள்ளைக்
கொள்ளேன்
கொள்ளும்கில்,
கொள்
2.121
2 st/nd Thirumurai
Song # 2
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கொள்ளி நக்க பகுவாய பேய்கள் குழைந்து ஆடவே,
முள் இலவம் முது காட்டு உறையும் முதல்வன்(ன்) இடம்,
புள் இனங்கள் பயிலும் பாதிரிப் புலியூர் தனை
உள்ள, நம்மேல் வினை ஆயின ஒழியுங்களே
5.034
5 st/nd Thirumurai
Song # 7
திருநாவுக்கரசர்
தேவாரம்
கொள்ளித் தீ-எரி வீசிக் கொடியது ஓர்
கள்ளிக் காட்டு இடை ஆடுவர்; காண்மினோ!
தெள்ளித் தேறித் தெளிந்து நெய்த்தானனை
உள்ளத்தால்-தொழுவார் உம்பர்வாணரே.
5.039
5 st/nd Thirumurai
Song # 1
திருநாவுக்கரசர்
தேவாரம்
கொள்ளும் காதன்மை பெய்து உறும் கோல்வளை
உள்ளம் உள்கி உரைக்கும், திருப்பெயர்
வள்ளல் மா மயிலாடுதுறை உறை
வெள்ளம் தாங்கு சடையனை வேண்டியே.
5.049
5 st/nd Thirumurai
Song # 2
திருநாவுக்கரசர்
தேவாரம்
கொள்ளி வெந்தழல் வீசி நின்று ஆடுவார்,
ஒள்ளிய(க்) கணம் சூழ் உமை பங்கனார்,
வெள்ளியன், கரியன், பசு ஏறிய
தெள்ளியன், திரு வெண்காடு அடை, நெஞ்சே!
5.071
5 st/nd Thirumurai
Song # 3
திருநாவுக்கரசர்
தேவாரம்
கொள்ளிடக் கரைக் கோவந்த புத்தூரில்
வெள்விடைக்கு அருள்செய் விசயமங்கை-
யுள் இடத்து உறைகின்ற உருத்திரன்
கிள்ளிட, தலை அற்றது, அயனுக்கே.
6.035
6 st/nd Thirumurai
Song # 5
திருநாவுக்கரசர்
தேவாரம்
கொள்ளைக் குழைக் காதின் குண்டைப்பூதம் கொடுகொட்டி கொட்டிக் குனித்துப் பாட,
உள்ளம் கவர்ந்திட்டுப் போவார் போல உழிதருவர்; நான் தெரியமாட்டேன், மீண்டேன்;
கள்ளவிழி விழிப்பார், காணாக் கண்ணால்; கண்ணுளார் போலே கரந்து நிற்பர்;
வெள்ளச் சடைமுடியர்; வேத நாவர் வெண்காடு மேவிய விகிர்தனாரே.
7.050
7 st/nd Thirumurai
Song # 8
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
கொள்ளி வாயின கூர் எயிற்று ஏனம் கிழிக்கவே
தெள்ளி மா மணி தீவிழிக்கும்(ம்) இடம் செந் தறை
கள்ளி வற்றி, புல் தீந்து, வெங் கானம் கழிக்கவே,
புள்ளி மான் இனம் புக்கு ஒளிக்கும் புனவாயிலே.
8.105.01
8 st/nd Thirumurai
Song # 2
மாணிக்க வாசகர்
திருவாசகம்
கொள்ளேன் புரந்தரன், மால், அயன் வாழ்வு; குடி கெடினும்,
நள்ளேன் நினது அடியாரொடு அல்லால்; நரகம் புகினும்,
எள்ளேன் திரு அருளாலே இருக்கப் பெறின்; இறைவா!
உள்ளேன் பிற தெய்வம், உன்னை அல்லாது; எங்கள் உத்தமனே!
8.105.05
8 st/nd Thirumurai
Song # 46
மாணிக்க வாசகர்
திருவாசகம்
கொள்ளும்கில், எனை அன்பரில் கூய்ப் பணி
கள்ளும், வண்டும், அறா மலர்க் கொன்றையான்;
நள்ளும், கீழ் உளும், மேல் உளும், யா உளும்,
எள்ளும் எண்ணெயும் போல், நின்ற எந்தையே?
8.106
8 st/nd Thirumurai
Song # 2
மாணிக்க வாசகர்
திருவாசகம்
கொள் ஏர் பிளவு அகலாத் தடம் கொங்கையர் கொவ்வைச் செவ் வாய்
விள்ளேன் எனினும், விடுதி கண்டாய்? நின் விழுத் தொழும்பின்
உள்ளேன்; புறம் அல்லேன்; உத்தரகோசமங்கைக்கு அரசே,
கள்ளேன் ஒழியவும், கண்டுகொண்டு ஆண்டது எக் காரணமே?
10.614
10 st/nd Thirumurai
Song # 4
திருமூலர்
திருமந்திரம்
கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக
உள்ள பொருள்உடல் ஆவி யுடன் ஈக
எள்ளத் தனையும் இடைவிடா தேநின்று
தெள்ளி அறியச் சிவபதந் தானே.
10.815
10 st/nd Thirumurai
Song # 8
திருமூலர்
திருமந்திரம்
கொள்கையி லான கலாந்தம் குறிக்கொள்ளில்
விள்கையி லான நிவிர்த்தி மேதாதாதிக்(கு)
உள்ளன ஆம்விந்து உள்ளே ஒடுங்கலும்
தெள்ளி அதனைத் தெளிதலும் ஆமே.
11.029
11 st/nd Thirumurai
Song # 68
பட்டினத்துப் பிள்ளையார்
திருஏகம்பமுடையார் திருவந்தாதி
கொள்ளுங் கடுங்கதி ரிற்கள்ளி
தீச்சில வேயுலறி
விள்ளும் வெடிபடும் பாலையென்
பாவை விடலைபின்னே
தெள்ளும் புனற்கச்சி யுற்திரு
ஏகம்பர் சேவடியை
உள்ளும் அதுமறந் தாரெனப்
போவ துரைப்பரிதே.
This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list