சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் சண்பை
சண்பை     சண்பைவருந்     சண்பைவரும்     சண்பைத்     சண்பைநா     சண்பையாளும்     சண்பையர்தம்     சண்பை,    
2.070   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சண்பை, பிரமபுரம், தண் புகலி, வெங்குரு, நல் காழி,
சாயாப்
பண்பு ஆர் சிரபுரமும், கொச்சைவயம், தராய், புறவம்,
பார்மேல்
நண்பு ஆர் கழுமலம், சீர் வேணுபுரம், தோணிபுரம் நாண்
இலாத
வெண்பல் சமணரொடு சாக்கியரை வியப்பு அழித்த
விமலன் ஊரே.

12.210   12 st/nd Thirumurai   Song # 272   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
சண்பை ஆளுந் தமிழ்விரகர்
தாமும் திருநா வுக்கரசர்
பண்பின் மொழிந்த உரைகொண்டு
பதிகம் பாடும் அவ்வளவில்
கண்பொற் பமைந்த நுதற்காள
கண்டர் அருளால் கடிதுடனே
திண்பொற் கதவந் திருக்காப்புச்
செய்த தெடுத்த திருப்பாட்டில்.

12.210   12 st/nd Thirumurai   Song # 393   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
சண்பைவருந் தமிழ்விரகர்
எழுந்தருளத் தாங்கேட்டு
மண்பரவும் பெருங்கீர்த்தி
வாகீசர் மனமகிழ்ந்து
கண்பெருகுங் களிகொள்ளக்
கண்டிறைஞ்சுங் காதலினால்
எண்பெருகும் விருப்பெய்த
எழுந்தருளி எதிர்சென்றார்.

12.260   12 st/nd Thirumurai   Song # 36   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
சண்பை யாளியார் தாமெழுந்
தருளும்எப் பதியும்
நண்பு மேம்பட நாளிடைச்
செலவிட்டு நண்ணி
வண்பெ ரும்புக ழவருடன்
பயின்றுவந் துறைந்தார்
திண்பெ ருந்தொண்ட ராகிய
திருநீல நக்கர்.
12.280   12 st/nd Thirumurai   Song # 207   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சண்பை யாளியார் தாங்கண்ட மெய்யருள்
பண்பு தந்தையார் தம்முடன் பாங்கமர்
தொண்ட ருக்கருள் செய்து தொழாமுனம்
விண்பு லப்பட வீங்கிருள் நீங்கலும்.
12.280   12 st/nd Thirumurai   Song # 389   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சண்பைவரும் பிள்ளையார்
சடாமகுடர் வலஞ்சுழியை
எண்பெருகத் தொழுதேத்திப்
பழையாறை எய்துதற்கு
நண்புடைய அடியார்கள்
உடன்போத நடந்தருளி
விண்பொருநீள் மதிளாறை
மேற்றளிசென் றெய்தினார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 529   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சண்பை மன்னருந் தம்பிரான்
அருள்வழி நிற்பது தலைச்செல்வார்
பண்பு மேம்படு பனிக்கதிர்
நித்திலச் சிவிகையிற் பணிந்தேறி
வண்பெ ரும்புக லூரினைக்
கடந்துபோய் வரும்பரி சனத்தோடும்
திண்பெ ருந்தவர் அணைந்ததெங்
கென்றுபோய்த் திருஅம்பர் நகர்புக்கார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 552   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சண்பைத் திருமறை யோர்கள் எல்லாம்
தம்பிரா னாரைப் பணிந்து போந்து
நண்பிற் பெருகிய காதல் கூர்ந்து
ஞானசம் பந்தர் மடத்தில் எய்திப்
பண்பிற் பெருகுங் கழும லத்தார்
பிள்ளையார் பாதம் பணிந்து பூண்டே
எண்பெற்ற தோணி புரத்தில் எம்மோ
டெழுந்தரு ளப்பெற வேண்டும் என்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 598   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சண்பைநா டுடைய பிள்ளை
தமிழ்மொழித் தலைவ ரோடு
மண்பயில் கீர்த்திச் செல்வ
மாமறைக் காட்டு வைகிக்
கண்பயில் நெற்றி யார்தங்
கழலிணை பணிந்து போற்றிப்
பண்பயில் பதிகம் பாடிப்
பரவிஅங் கிருந்தா ரன்றே.
12.280   12 st/nd Thirumurai   Song # 975   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சண்பை வேந்தர் தண்தரளச்
சிவிகை நின்றும் இழிந்தருளி
நண்பின் மிக்க சீரடியார்
சூழ நம்பர் கோபுரஞ்சூழ்
விண்பின் னாகமுன் னோங்கும்
வியன்பொற் புரிசை வலங்கொண்டு
பண்பு நீடிப் பணிந்தெழுந்து
பரமர் கோயில் உள்ளடைந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 989   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சண்பையாளும் மன்னர்முன்பு
தொண்டர்வந்து சார்தலும்
பண்புநீடி யானமுன்
பிழிந்திறைஞ்சு பான்மைகண்
டெண்பெருக்கு மிக்கதொண்டர்
அஞ்சலித்து எடுத்தசொல்
மண்பரக்க வீழ்ந்தெழுந்து
வானம்முட்ட ஆர்த்தனர்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1069   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சண்பை மன்னவர் திருவொற்றி
யூர்நகர் சார்ந்து
பண்பு பெற்றநற் றொண்டர்க
ளுடன்பணிந் திருந்த
நண்பு மிக்கநல் வார்த்தைஅந்
நற்பதி யுள்ளோர்
வண்பு கழ்ப்பெரு வணிகர்க்கு
வந்துரை செய்தார்.
12.360   12 st/nd Thirumurai   Song # 24   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
சண்பையர்தம் பெருமானும்
தாங்கரிய பெருங்காதல்
பண்புடைய சிறுத்தொண்ட
ருடன்பயின்று மற்றவரை
மண்பரவுந் திருப்பதிகத்
தினில்வைத்துச் சிறப்பித்து
நண்பருளி எழுந்தருளத்
தாமினிது நயப்புற்றார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list