சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter: ( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் சந்தி
சந்தி
சந்திப்
சந்திரன்
சந்திர
சந்தித்த
சந்தின்
சந்திரன்,
சந்திரசேகரனே,
சந்தியானை,
சந்திர(ன்)னொடு
சந்திரனை
சந்திரனும்
சந்திரனைத்
3.031
3 st/nd Thirumurai
Song # 6
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சந்திரன், கதிரவன், தகு புகழ் அயனொடும்,
இந்திரன், வழிபட இருந்த எம் இறையவன்-
மந்திரமறை வளர் மயேந்திரப்பள்
அந்தம் இல் அழகனை அடி பணிந்து உய்ம்மினே!
3.060
3 st/nd Thirumurai
Song # 3
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சந்திரசேகரனே, அருளாய்! என்று, தண் விசும்பில்
இந்திரனும் முதலா இமையோர்கள் தொழுது இறைஞ்ச,
அந்தர மூ எயிலும்(ம்) அனல் ஆய் விழ, ஓர் அம்பினால்,
மந்தர மேரு வில்லா வளைத்தான் இடம் வக்கரையே.
4.077
4 st/nd Thirumurai
Song # 4
திருநாவுக்கரசர்
தேவாரம்
சந்திரன் சடையில் வைத்த சங்கரன், சாமவேதி,
அந்தரத்து அமரர் பெம்மான், ஆன் நல் வெள் ஊர்தியான் தன்
மந்திரம் நமச்சிவாய ஆக, நீறு அணியப் பெற்றால்,
வெந்து அறும், வினையும் நோயும் வெவ் அழல் விறகு இட்டன்றே!
5.044
5 st/nd Thirumurai
Song # 2
திருநாவுக்கரசர்
தேவாரம்
சந்தியானை, சமாதி செய்வார் தங்கள்
புந்தியானை, புத்தேளிர் தொழப்படும்
அந்தியானை, ஆமாத்தூர் அழகனை,
சிந்தியாதவர் தீவினையாளரே.
5.052
5 st/nd Thirumurai
Song # 4
திருநாவுக்கரசர்
தேவாரம்
சந்திர(ன்)னொடு சூரியர்தாம் உடன்
வந்து சீர் வழிபாடுகள் செய்தபின்,
ஐந்தலை அரவின் பணி கொண்டு, அருள்
மைந்தர்போல்-மணி நாகேச்சுரவரே.
6.002
6 st/nd Thirumurai
Song # 9
திருநாவுக்கரசர்
தேவாரம்
சந்தித்த கோவணத்தர், வெண் நூல் மார்பர்; சங்கரனைக் கண்டீரோ? கண்டோம்-இந் நாள்,
பந்தித்த வெள்விடையைப் பாய ஏறி, படுதலையில் என்கொலோ ஏந்திக் கொண்டு,
வந்து ஈங்கு என் வெள் வளையும் தாமும் எல்லாம், மணி ஆரூர் நின்று, அந்தி கொள்ளக்கொள்ள,
பொன் தீ மணிவிளக்குப் பூதம் பற்ற, புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார்தாமே.
6.004
6 st/nd Thirumurai
Song # 1
திருநாவுக்கரசர்
தேவாரம்
சந்திரனை மா கங்கைத் திரையால் மோதச் சடாமகுடத்து இருத்துமே; சாமவேத-
கந்தருவம் விரும்புமே; கபாலம் ஏந்து கையனே: மெய்யனே; கனகமேனிப்
பந்து அணவு மெல்விரலாள் பாகன் ஆமே; பசு ஏறுமே; பரமயோகி ஆமே;
ஐந்தலைய மாசுணம் கொண்டு அரை ஆர்க்கு(ம்)மே;- அவன் ஆகில் அதிகை வீரட்டன் ஆமே.
6.049
6 st/nd Thirumurai
Song # 1
திருநாவுக்கரசர்
தேவாரம்
சந்திரனும் தண்புனலும் சந்தித்தான் காண்; தாழ் சடையான் காண்; சார்ந்தார்க்கு அமுது ஆனான் காண்;
அந்தரத்தில் அசுரர் புரம் மூன்று அட்டான் காண்; அவ் உருவில் அவ் உருவம் ஆயினான் காண்;
பந்தரத்து நால் மறைகள் பாடினான் காண்; பலபலவும் பாணி பயில்கின்றான் காண்;
மந்திரத்து மறை பொருளும் ஆயினான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே.
6.052
6 st/nd Thirumurai
Song # 9
திருநாவுக்கரசர்
தேவாரம்
சந்திரனைத் திருவடியால்-தளர்வித்தான் காண்; தக்கனையும முனிந்து எச்சன் தலை கொண்டான் காண்;
இந்திரனைத் தோள் முறிவித்து அருள் செய்தான் காண்; ஈசன் காண்; நேசன் காண், நினைவோர்க்கு எல்லாம்,
மந்திரமும் மறைப்பொருளும் ஆயினான் காண்; மாலொடு அயன் மேலொடு கீழ் அறியா வண்ணம்
வெந்தழலின் விரி சுடர் ஆய் ஓங்கினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே.
8.108
8 st/nd Thirumurai
Song # 15
மாணிக்க வாசகர்
திருவாசகம்
சந்திரனைத் தேய்த்தருளி, தக்கன் தன் வேள்வியினில்
இந்திரனைத் தோள் நெரித்திட்டு, எச்சன் தலை அரிந்து,
அந்தரமே செல்லும் அலர் கதிரோன் பல் தகர்த்து,
சிந்தித் திசை திசையே தேவர்களை ஓட்டு உகந்த,
செம் தார்ப் பொழில் புடை சூழ் தென்னன் பெருந்துறையான்
மந்தார மாலையே பாடுதும் காண்; அம்மானாய்!
10.101
10 st/nd Thirumurai
Song # 23
திருமூலர்
திருமந்திரம்
சந்தி எனத்தக்க தாமரை வாள்முகத்
தந்தமில் ஈசன் அருள்நமக் கேயென்று
நந்தியை நாளும் வணங்கப் படும்அவர்
புந்தியி னுள்ளே புகுந்துநின் றானே.
10.104
10 st/nd Thirumurai
Song # 29
திருமூலர்
திருமந்திரம்
சந்திப் பதுநந்தி தன்திருத் தாளிணை
சிந்திப் பதுநந்தி செய்ய திருமேனி
வந்திப் பதுநந்தி நாமம்என் வாய்மையால்
புந்திக்குள் நிற்பது நந்திபொற் போதமே.
10.204
10 st/nd Thirumurai
Song # 2
திருமூலர்
திருமந்திரம்
சந்தி செயக்கண் டெழுகின் றரிதானும்
எந்தை யிவனல்லம் யாமே உலகினிற்
பந்தஞ்செய் பாதத்து வீழ்ந்து தவஞ்செய்ய
அந்தமி லானும் அருள்புரிந் தானே.
10.311
10 st/nd Thirumurai
Song # 64
திருமூலர்
திருமந்திரம்
சந்திரன் சூரியன் தற்பரன் தாணுவிற்
சந்திரன் தானுந் தலைப்படுந் தன்மையைச்
சந்தியி லேகண்டு தானாஞ் சகமுகத்
துந்திச் சமாதி யுடையொளி யோகியே.
10.724
10 st/nd Thirumurai
Song # 2
திருமூலர்
திருமந்திரம்
சந்திரன் சூரியன் தான்வரின் பூசனை
முந்திய பானுவில் இந்துவந் தேய்முறை;
அந்த இரண்டும் உபய நிலத்தினில்,
சிந்தை தெளிந்தார்; சிவமாயி னாரே.
10.902
10 st/nd Thirumurai
Song # 7
திருமூலர்
திருமந்திரம்
சந்திர பூமிக்குள் தன்புரு வத்திடைக்
கந்த மலரில் இரண்டிதழ்க் கன்னியும்
பந்தம் அறுத்த பளிங்கின் உருவினர்
பந்தம் அறுத்த பரம்குரு பற்று.
10.927
10 st/nd Thirumurai
Song # 7
திருமூலர்
திருமந்திரம்
சந்திரன் பாம்பொடுஞ் சூடும் சடாதரன்
வந்தென்னை ஆண்ட மணிவிளக் கானவன்
அந்தமும் ஆதியும் இல்லா அரும்பொருள்
சிந்தையின் மேவித் தியக்கறுத் தானே.
11.006
11 st/nd Thirumurai
Song # 83
சேரமான் பெருமாள் நாயனார்
பொன்வண்ணத்தந்தாதி
சந்தித்த கூற்றுக்குக் கூற்றாம்
பிணிக்குத் தனிமருந்தாம்
சிந்திக்கிற் சிந்தா மணியாகித்
தித்தித் தமுதமுமாம்
வந்திக்கில் வந்தென்னை மால்செய்யும்
வானோர் வணங்கநின்ற
அந்திக்கண் ஆடியி னானடி
யார்களுக் காவனவே.
11.010
11 st/nd Thirumurai
Song # 39
நக்கீரதேவ நாயனார்
திருஈங்கோய்மலை எழுபது
சந்தின் இலையதனுள் தண்பிண்டி தேன்கலந்து
கொந்தியினி துண்ணக் குறமகளிர் மந்தி
இளமகளிர் வாய்க்கொடுத்துண் ஈங்கோயே வெற்பின்
வளமகளிர் பாகன் மலை.
This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list