சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் சால
சால     சாலோகம்     சாலிநீள்     சாலியின்     சாலநாள்     சாலி     சால்பாய     சாலமிகத்     சாலக்    
1.055   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சால மா மலர் கொண்டு, சரண்! என்று,
மேலையார்கள் விரும்புவர்
மாலினார் வழிபாடு செய் மாற்பேற்று
நீலம் ஆர் கண்ட! நின்னையே.

7.041   7 st/nd Thirumurai   Song # 3   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
சாலக் கோயில் உள நின் கோயில்; அவை என் தலை மேல் கொண்டாடி
மாலைத் தீர்ந்தேன்; வினையும் துரந்தேன்-வானோர் அறியா நெறியானே!
கோலக் கோயில் குறையாக் கோயில் குளிர் பூங் கச்சூர் வடபாலை
ஆலக்கோயில், கல்லால் நிழல் கீழ் அறம் கட்டுரைத்த அம்மானே!.

10.513   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
சாலோகம் ஆதி சரியா தியிற்பெறும்
சாலோகம் சாமீபம் தங்கும் கிரியையால்
சாலோகம் சேரில் வழிஆகும் சாரூபம்
பாலோக மில்லாப் பரனுறு ஆமே.

12.000   12 st/nd Thirumurai   Song # 62   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
சாலிநீள் வயலின் ஓங்கித் 
தந்நிகர் இன்றி மிக்கு
வாலிதாம் வெண்மை உண்மைக்
கருவினாம் வளத்த வாகிச்
சூல்முதிர் பசலை கொண்டு 
சுருள்விரித் தரனுக் கன்பர்
ஆலின சிந்தை போல 
அலர்ந்தன கதிர்க ளெல்லாம்.
12.000   12 st/nd Thirumurai   Song # 65   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
சாலியின் கற்றை துற்ற
தடவரை முகடு சாய்த்துக்
காலிரும் பகடு போக்குங்
கரும்பெரும் பாண்டில் ஈட்டம்
ஆலிய முகிலின் கூட்டம்
அருவரைச் சிமயச் சாரல்
மேல்வலங் கொண்டு சூழுங்
காட்சியின் மிக்க தன்றே.
12.020   12 st/nd Thirumurai   Song # 19   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
சாலநாள் கழிந்த பின்பு
தலைவனார் தாமுன் வைத்த
கோலமார் ஓடு தன்னைக்
குறியிடத் தகலப் போக்கிச்
சீலமார் கொள்கை யென்றுந்
திருந்துவேட் கோவர் தம்பால்
வாலிதாம் நிலைமை காட்ட
முன்புபோல் மனையில் வந்தார்.
12.130   12 st/nd Thirumurai   Song # 10   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
சாலி நேடி அறுத்தவை தாம்பெறும்
கூலி யெல்லாந் திருவமு தாக்கொண்டு
நீல நெல்லரி கூலிகொண் டுண்ணுநாள்
மால யற்கரி யாரது மாற்றுவார்.
12.150   12 st/nd Thirumurai   Song # 5   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
சால்பாய மும்மைத் தமிழ்தங்கிய
அங்கண் மூதூர்
நூல்பா யிடத்தும் உளநோன்றலை
மேதி பாயப்
பால்பாய் முலைதோய் மதுப்பங்கயம்
பாய எங்கும்
சேல்பாய் தடத்தும் உளசெய்யுள்மிக்
கேறு சங்கம்.
12.210   12 st/nd Thirumurai   Song # 213   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
சாலநாள் அங்கமர்ந்து
தந்தலைமேல் தாள்வைத்த
ஆலமார் மணிமிடற்றார்
அணிமலர்ச்சே வடிநினைந்து
சேலுலாம் புனற்பொன்னித்
தென்கரையே றிச்சென்று
கோலநீள் மணிமாடத்
திருநல்லூர் குறுகினார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 200   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சால மிக்க வியப்புறு தன்மையின்
பால ராதலும் பள்ளி யெழுச்சியின்
காலம் எய்திடக் காதல் வழிப்படுஞ்
சீலம் மிக்கார் திருக்காப்பு நீக்கினார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 895   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சாலமிகத் தளர்வாரைத் தளரா வண்ணம்
தகுவனமற் றவர்க்கருளிச் செய்த பின்பு
மேலவர்தம் பணிமறுக்க அவரும்அஞ்சி
மீள்வதனுக் கிசைந்துதிரு வடியில் வீழ்ந்து
ஞாலமுய்ய வந்தருளும் பிள்ளை யாரைப்
பிரியாத நண்பினொடும் தொழுது நின்றார்
ஆலவிட முண்டவரை அடிகள் போற்றி
அந்நாட்டை அகன்றுமீண் டணையச் செல்வார்.
12.360   12 st/nd Thirumurai   Song # 49   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
சால நன்று முந்நிரையும்
உடையேன் தாழ்விங் கெனக்கில்லை
ஆலம் உண்டா ரன்பர்உமக்
கமுதாம் பசுத்தான் இன்னதென
ஏல வருளிச் செயப்பெற்றால்
யான்போய் அமுது கடிதமைத்துக்
காலந் தப்பா மேவருவேன்
என்று மொழிந்து கைதொழுதார்.
12.430   12 st/nd Thirumurai   Song # 14   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
சால நாள்கள்இப் படிவரத்
தாம்உண வயர்த்துக்
கோல மேனியுந் தளரவுந்
தந்தொழில் குறையாச்
சீல மேதலை நின்றவர்
தந்திறந் தெரிந்தே
ஆல முண்டவர் தொண்டர்அன்
பெனும்அமு துண்பார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list