சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் சிலை
சிலை     சிலையினைக்     சிலைமறவ     சிலையினால்     சிலைதனால்     சிலைத்தார்     சிலையால்     சிலைத்து     சிலையொன்று     சிலைமலி    
1.022   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சிலை தனை நடு இடை நிறுவி, ஒரு சினம் மலி அரவு அது கொடு, திவி
தலம் மலி சுரர் அசுரர்கள், ஒலி சலசல கடல் கடைவுழி, மிகு
கொலை மலி விடம் எழ, அவர் உடல் குலை தர, அது நுகர்பவன்-எழில்
மலை மலி மதில் புடை தழுவிய மறைவனம் அமர் தரு பரமனே.

2.040   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சிலை அதுவே சிலை ஆகத் திரி புரம் மூன்று எரிசெய்த
இலை நுனை வேல் தடக்கையன், ஏந்திழையாள் ஒருகூறன்,
அலை புனல் சூழ் பிரமபுரத்து அருமணியை அடி
பணிந்தால்,
நிலை உடைய பெருஞ்செல்வம் நீடு உலகில் பெறல் ஆமே.

2.056   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சிலை உய்த்த வெங்கணையால் புரம் மூன்று எரித்தீர்!
திறல் அரக்கன்
தலைபத்தும் திண்தோளும் நெரித்தீர்! தையல் பாகத்தீர்!
இலை மொய்த்த தண்பொழிலும் வயலும் சூழ்ந்த
இடைமருதில்,
நலம் மொய்த்த கோயிலே கோயில் ஆக நயந்தீரே.

3.026   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சிலையினால் முப்புரம் தீ எழச் செற்றவன்,
நிலை இலா இருவரை நிலைமை கண்டு ஓங்கினான்,
கலையின் ஆர் புறவில்-தேன் கமழ் தரு கானப்பேர்
தலையினால் வணங்குவார் தவம் உடையார்களே

3.029   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சிலைதனால் முப்புரம் செற்றவன், சீரின் ஆர்
மலைதனால் வல் அரக்கன் வலி வாட்டினான்,
கலைதனால் புறவு அணி மல்கு காட்டுப்பள்
தலைதனால் வணங்கிட, தவம் அது ஆகுமே.

6.047   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சிலைத்தார் திரிபுரங்கள் தீயில் வேவச் சிலை வளைவித்து உமையவளை அஞ்ச நோக்கிக்
கலித்து ஆங்கு இரும்பிடிமேல் கை வைத்து ஓடும் களிறு உரித்த கங்காளா! எங்கள் கோவே!
நிலத்தார் அவர் தமக்கே பொறை ஆய், நாளும், நில்லா உயிர் ஓம்பும் நீதனேன் நான்
அலுத்தேன்; அடியேனை, அஞ்சேல்! என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.

6.058   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சிலை நவின்று ஒரு கணையால் புரம் மூன்று எய்த தீவண்ணர்; சிறந்து இமையோர் இறைஞ்சி ஏத்த,
கொலை நவின்ற களியானை உரிவை போர்த்து, கூத்து ஆடி, திரிதரும் அக் கூத்தர்; நல்ல
கலை நவின்ற மறையவர்கள் காணக்காண, கடு விடை மேல், பாரிடங்கள் சூழ, காதல்
மலை மகளும் கங்கையும் தாமும் எல்லாம் வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே.

7.027   7 st/nd Thirumurai   Song # 3   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
சிலையால் முப்புரங்கள் பொடி ஆகச் சிதைத்தவனே!
மலை மேல் மா மருந்தே! மட மாது இடம் கொண்டவனே!
கலை சேர் கையினனே! திருக்கற்குடி மன்னி நின்ற
அலை சேர் செஞ்சடையாய்! அடியேனையும், அஞ்சல்! என்னே!.

7.036   7 st/nd Thirumurai   Song # 2   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
சிலைத்து நோக்கும், வெள் ஏறு; செந்தழல் வாய பாம்பு அது மூசெனும்;
பலிக்கு நீர் வரும்போது நும் கையில் பாம்பு வேண்டா, பிரானிரே!
மலைத்த சந்தொடு, வேங்கை, கோங்கமும், மன்னு கார் அகில், சண்பகம்,
அலைக்கும் பைம் புனல் சூழ் பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரே!

8.212   8 st/nd Thirumurai   Song # 12   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
சிலையொன்று வாணுதல் பங்கன்சிற்
   றம்பல வன்கயிலை
மலையொன்று மாமுகத் தெம்மையர்
   எய்கணை மண்குளிக்குங்
கலையொன்று வெங்கணை யோடு
   கடுகிட்ட தென்னிற்கெட்டேன்
கொலையொன்று திண்ணிய வாறையர்
   கையிற் கொடுஞ்சிலையே.

8.225   8 st/nd Thirumurai   Song # 46   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
சிலைமலி வாணுத லெங்கைய
   தாக மெனச்செழும்பூண்
மலைமலி மார்பி னுதைப்பத்தந்
   தான்றலை மன்னர்தில்லை
உலைமலி வேற்படை யூரனிற்
   கள்வரில் என்னவுன்னிக்
கலைமலி காரிகை கண்முத்த
   மாலை கலுழ்ந்தனவே.

12.100   12 st/nd Thirumurai   Song # 33   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
சிலையினைக் காப்புக் கட்டும்
திண்புலி நரம்பிற் செய்த
நலமிகு காப்பு நன்னாள்
நாகனார் பயந்த நாகர்
குலம்விளங் கரிய குன்றின்
கோலமுன் கையிற் சேர்த்தி
மலையுறை மாக்க ளெல்லாம்
வாழ்த்தெடுத் தியம்பி னார்கள்.
12.100   12 st/nd Thirumurai   Song # 47   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
சிலைமறவ ருரைசெய்ய நாகன் தானும்
திண்ணனைமுன் கொண்டுவரச் செப்பி விட்டு
மலைமருவு நெடுங்கானிற் கன்னி வேட்டை
மகன்போகக் காடுபலி மகிழ வூட்டத்
தலைமரபின் வழிவந்த தேவ ராட்டி
தனையழைமின் என அங்குச் சார்ந்தோர் சென்று
நிலைமையவள் தனக்குரைப்ப நரைமூ தாட்டி
நெடிதுவந்து விருப்பினொடுங் கடிது வந்தாள்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list