சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் சீ
சீலம்     சீர்     சீக்கை     சீராரும்     சீர்நந்தி     சீவன்     சீவன்றன்     சீவ     சீய     சீரார்ந்த     சீரார்     சீறடிமேல்     சீரின்     சீர்மன்னு     சீரேறும்     சீதமலி     சீர்நிலவு     சீர்தரு     சீர்மன்னுந்     சீர்வளரு     சீர்திகழும்     சீல     சீர்மறையோர்     சீரினில்     சீர்வளர்     சீர்மலி     சீருடைப்     சீர்கெழு     சீரணி     சீர்பெருகு     சீர்வளருந்     சீர்கொள்     சீர்பெருகுந்     சீருந்     சீதமதி     சீலமில     சீறு     சீர்மை     சீர்த்த     சீரால்     சீர்த்தானை,     சீர்த்தானை;     சீ     சீரியல்     சீரள     சீர்த்ததிண்     சீரால்மல்கு     சீரும்    
1.017   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சீலம் மிகு சித்தத்தவர் சிந்தித்து எழும் எந்தை,
ஞாலம் மிகு கடல் சூழ் தரும் உலகத்தவர் நலம் ஆர்,
கோலம் மிகு மலர் மென் முலை மடவார் மிகு, குன்றில்
ஏலம் கமழ் பொழில் சூழ் தரும் இடும்பாவனம் இதுவே.

1.041   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சீர் அணி திகழ் திருமார்பில் வெண்நூலர், திரிபுரம் எரிசெய்த செல்வர்,
வார் அணி வனமுலை மங்கை ஓர் பங்கர், மான்மறி ஏந்திய மைந்தர்,
கார் அணி மணி திகழ் மிடறு உடை அண்ணல், கண்ணுதல், விண்ணவர் ஏத்தும்
பார் அணி திகழ் தரு நால்மறையாளர் பாம்புர நன்நகராரே.

1.091   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சீர் ஊர் சம்பந்தன் ஆரூரைச் சொன்ன
பார் ஊர் பாடலார் பேரார், இன்பமே.

1.118   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சீர் கெழு சிறப்பு ஓவாச் செய்தவ நெறி வேண்டில்,
ஏர் கெழு மட நெஞ்சே! இரண்டு உற மனம் வையேல்!
கார் கெழு நறுங்கொன்றைக் கடவுளது இடம், வகையால்
பார் கெழு புகழ் ஓவா, பருப்பதம் பரவுதுமே.

2.010   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சீரின் ஆர் மணியும்(ம்) அகில் சந்தும் செறி வரை
வாரி நீர் வரு பொன்னி வடமங்கலக்குடி
நீரின் மா முனிவன் நெடுங்கைகொடு நீர்தனைப்
பூரித்து ஆட்டி அர்ச்சிக்க இருந்த புராணனே.

2.036   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சீர் ஆர் கழலே தொழுவீர்! இது செப்பீர்
வார் ஆர் முலை மங்கையொடும் உடன் ஆகி,
ஏர் ஆர் இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
கார் ஆர் கடல்நஞ்சு அமுதுஉண்ட கருத்தே?

2.055   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சீர் கொண்ட பாடலீர்! செங்கண் வெள் ஏற்று ஊர்தியீர்!
நீர் கொண்டும் பூக் கொண்டும் நீங்காத் தொண்டர் நின்று ஏத்த,
தார் கொண்ட நூல் மார்பர் தக்கோர் வாழும்
தலைச்சங்கை,
ஏர் கொண்ட கோயிலே கோயில் ஆக இருந்தீரே.

2.067   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சீர் உடையார்; அடியார்கள் சேடர்; ஒப்பார்; சடை சேரும்
நீர் உடையார்; பொடிப் பூசும் நினைப்பு உடையார்;
விரிகொன்றைத்
தார் உடையார்; விடை ஊர்வார்; தலைவர்; ஐந் நூற்றுப்
பத்து ஆய
பேர் உடையார்; பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே.

2.070   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சீர் ஆர் சிரபுரமும், கொச்சை வயம், சண்பையொடு,
புறவம், நல்ல
ஆராத் தராய், பிரமன் ஊர், புகலி, வெங்குருவொடு, அம்
தண் காழி,
ஏர் ஆர் கழுமலமும், வேணுபுரம், தோணிபுரம், என்று
என்று உள்கி,
பேரால் நெடியவனும் நான்முகனும் காண்பு அரிய
பெருமான் ஊரே.

2.089   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சீர் கொள் மா மலரானும் செங்கண்மால் என்று இவர்
ஏத்த,
ஏர் கொள் வெவ் அழல் ஆகி எங்கும் உற நிமிர்ந்தாரும்;
பார், கொள் விண், அழல், கால், நீர், பண்பினர்
பால்மொழியோடும்,
கூர் கொள் வேல் வலன் ஏந்தி, கொச்சைவயம்
அமர்ந்தாரே.

2.092   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சீர் அணங்கு உற நின்ற செரு உறு திசைமுகனோடு
நாரணன் கருத்து அழிய நகை செய்த சடை முடி நம்பர்;
ஆர் அணங்கு உறும் உமையை அஞ்சுவித்து, அருளுதல்
பொருட்டால்,
வாரணத்து உரி போர்த்தார் வர்த்தமானீச்சுரத்தாரே.

2.105   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சீறு உலாவிய தலையினர் நிலை இலா அமணர்கள்,
சீவரத்தார்,
வீறு இலாத வெஞ்சொல் பல விரும்பன் மின்! சுரும்பு
அமர் கீழ்வேளூர்
ஏறு உலாவிய கொடியனை ஏதம் இல் பெருந்திருக்கோயில்
மன்னு
பேறு உலாவிய பெருமையன் திருவடி பேணுமின்! தவம்
ஆமே.

3.023   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சீர்மை இல் சமணொடு, சீவரக் கையர்
நீர்மை இல் உரைகள் கொள்ளாது, நேசர்க்கு
பார் மலி பெருஞ் செல்வம் பரிந்து நல்கிடும்
சீர்மையினான் இடம் திரு விற்கோலமே.

3.080   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சீர் மருவு தேசினொடு தேசம் மலி செல்வ மறையோர்கள் பணிய,
தார் மருவு கொன்றை அணி தாழ்சடையினான் அமர் சயம் கொள் பதிதான்-
பார் மருவு பங்கயம் உயர்ந்த வயல் சூழ் பழனம் நீட, அருகே
கார் மருவு வெண்களப மாளிகை கவின் பெருகு வீழிநகரே.

3.118   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சீர் உறு தொண்டர், கொண்டு அடி போற்ற, செழு மலர்
புனலொடு தூபம்;
தார் உறு கொன்றை தம் முடி வைத்த சைவனார் தங்கு இடம் எங்கும்
ஊர் உறு பதிகள் உலகு உடன் பொங்கி ஒலிபுனல்
கொள, உடன்மிதந்த,
கார் உறு செம்மை நன்மையால் மிக்க கழுமலநகர் எனல்
ஆமே.

4.103   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சீர் மலி செல்வம் பெரிது உடைய செம்பொன் மா மலையே!
கார் மலி சோலை சுலவு கடல் நாகைக்காரோணனே!-
வார் மலி மென் முலையார் பலி வந்து இடச் சென்று இரந்து,
ஊர் மலி பிச்சை கொண்டு உண்பது மாதிமையோ? உரையே!

5.056   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சீர்த்த நல் மனையாளும் சிறுவரும்
ஆர்த்த சுற்றமும் பற்று இலை ஆதலால்,
கூத்தனார் உறையும் திருக்கோளிலி
ஏத்தி, நீர், தொழுமின்(ன்)! இடர் தீருமே.

6.007   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சீர் ஆர் புனல் கெடில வீரட்ட(ம்)மும்,
  திருக்காட்டுப்பள்ளி, திரு வெண்காடும்,
பாரார் பரவும் சீர்ப் பைஞ்ஞீலியும்,
  பந்தணைநல்லூரும், பாசூர், நல்லம்,
நீர் ஆர் நிறை வயல் சூழ் நின்றியூரும்,
 நெடுங்களமும், நெல்வெண்ணெய், நெல்வாயி(ல்)லும்,
கார் ஆர் கமழ் கொன்றைத்தாரார்க்கு 
என்றும்-கடவூரில் வீரட்டம்-காப்புக்களே.

6.029   6 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சீர் ஆர் முடிபத்து உடையான்தன்னைத் தேசு அழியத் திருவிரலால் சிதைய நூக்கிப்
பேர் ஆர் பெருமை கொடுத்தான்தன்னை, பெண் இரண்டும் ஆணும் ஆய் நின்றான் தன்னை,
போர் ஆர் புரங்கள் புரள நூறும் புண்ணியனை, வெண்நீறு அணிந்தான்தன்னை,
ஆரானை, ஆரூரில் அம்மான்தன்னை,-அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!.

6.036   6 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சீரால் வணங்கப்படுவார் தாமே; திசைக்கு எல்லாம் தேவு ஆகி நின்றார் தாமே;
ஆரா அமுதம் ஆனார் தாமே; அளவு இல் பெருமை உடையார் தாமே;
நீர் ஆர் நியமம் உடையார் தாமே; நீள்வரை வில் ஆக வளைத்தார் தாமே;
பாரார் பரவப்படுவார் தாமே பழனநகர் எம்பிரானார் தாமே.

6.054   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சீர்த்தானை, சிறந்து அடியேன் சிந்தையுள்ளே திகழ்ந்தானை, சிவன் தன்னை, தேவ தேவை,
கூர்த்தானை, கொடு நெடுவேல் கூற்றம் தன்னைக் குரை கழலால் குமைத்து முனி கொண்ட அச்சம்
பேர்த்தானை, பிறப்பு இலியை, இறப்பு ஒன்று இல்லாப் பெம்மானை, கைம்மாவின் உரிவை பேணிப்
போர்த்தானை, புள்ளிருக்கு வேளூரானை, போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!.

6.066   6 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சீர்த்தானை; உலகு ஏழும் சிறந்து போற்றச் சிறந்தானை; நிறைந்து ஓங்கு செல்வன் தன்னை;
பார்த்தானை, மதனவேள் பொடி ஆய் வீழ; பனிமதி அம் சடையானை; புனிதன் தன்னை;
ஆர்த்து ஓடி மலை எடுத்த அரக்கன் அஞ்ச
அருவிரலால் அடர்த்தானை; அடைந்தோர் பாவம்
தீர்த்தானை; திரு நாகேச்சுரத்து உளானை; சேராதார் நன்நெறிக்கண் சேராதாரே.

7.011   7 st/nd Thirumurai   Song # 8   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
சீரின் மிகப் பொலியும் திருப்பூவணம்
ஆர இருப்பு இடமா உறைவான் தனை
ஊரன் உரைத்த சொல் மாலைகள் பத்து இவை
பாரில் உரைப்பவர் பாவம் அறுப்பரே .

8.113   8 st/nd Thirumurai   Song # 18   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
சீர் ஆர் திருவடித் திண் சிலம்பு சிலம்பு ஒலிக்கே
ஆராத ஆசை அது ஆய், அடியேன் அகம் மகிழ,
தேர் ஆர்ந்த வீதிப் பெருந்துறையான் திரு நடம் செய்
பேரானந்தம் பாடி பூவல்லி கொய்யாமோ!

8.116   8 st/nd Thirumurai   Song # 1   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
சீர் ஆர் பவளம் கால், முத்தம் கயிறு, ஆக;
ஏர் ஆரும் பொன் பலகை ஏறி, இனிது அமர்ந்து;
நாராயணன் அறியா நாள் மலர்த் தாள், நாய் அடியேற்கு
ஊர் ஆகத் தந்தருளும் உத்தரகோசமங்கை
ஆரா அமுதின் அருள் தாள் இணை பாடி,
போர் ஆர் வேல் கண் மடவீர்! பொன் ஊசல் ஆடாமோ.

8.125   8 st/nd Thirumurai   Song # 3   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
சீ வார்ந்து, ஈ மொய்த்து, அழுக்கொடு திரியும் சிறு குடில் இது சிதையக்
கூவாய்; கோவே! கூத்தா! காத்து ஆட்கொள்ளும் குரு மணியே!
தேவா! தேவர்க்கு அரியானே! சிவனே! சிறிது என் முகம் நோக்கி,
ஆ! ஆ!' என்ன, ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!

8.150   8 st/nd Thirumurai   Song # 3   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
சீலம் இன்றி, நோன்பு இன்றி, செறிவே இன்றி, அறிவு இன்றி,
தோலின் பாவைக் கூத்தாட்டு ஆய், சுழன்று, விழுந்து, கிடப்பேனை
மாலும் காட்டி, வழி காட்டி, வாரா உலக நெறி ஏற,
கோலம் காட்டி, ஆண்டானை, கொடியேன் என்றோ கூடுவதே?

8.219   8 st/nd Thirumurai   Song # 3   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
சீரியல் ஆவியும் யாக்கையும்
   என்னச் சிறந்தமையாற்
காரியல் வாட்கண்ணி எண்ணக
   லார்கம லங்கலந்த
வேரியுஞ் சந்தும் வியல்தந்
   தெனக்கற்பின் நிற்பரன்னே
காரியல் கண்டர்வண் தில்லை
   வணங்குமெங் காவலரே.

8.220   8 st/nd Thirumurai   Song # 1   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
சீரள வில்லாத் திகழ்தரு
   கல்விச்செம் பொன்வரையின்
ஆரள வில்லா அளவுசென்
   றாரம் பலத்துள்நின்ற
ஓரள வில்லா ஒருவன்
   இருங்கழ லுன்னினர்போல்
ஏரள வில்லா அளவின
   ராகுவ ரேந்திழையே.

9.008   9 st/nd Thirumurai   Song # 8   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
சீர்த்ததிண் புவனம் முழுவதும் ஏனைத்
   திசைகளோ டண்டங்க ளனைத்தும்
போர்த்ததம் பெருமை சிறுமைபுக் கொடுங்கும்
   புணர்ப்புடை அடிகள்தங் கோயில்
ஆர்த்துவந் தமரித் தமரரும் பிறரும்
   அலைகடல் இடுதிரைப் புனிதத்
தீர்த்தநீர் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
   திருவளர் திருச்சிற்றம் பலமே.

9.020   9 st/nd Thirumurai   Song # 10   கண்டராதித்தர்   திருவிசைப்பா  
சீரால்மல்கு தில்லைச் செம்பொன்
   அம்பலத் தாடிதன்னைக்
காரார் சோலைக் கோழி வேந்தன்
   தஞ்சையர் கோன்கலந்த
ஆராஇன்சொற் கண்டரா தித்தன்
   அருந்தமிழ் மாலைவல்லார்
பேரா உலகில் பெருமை யோடும்
   பேரின்பம் எய்துவரே. 

9.029   9 st/nd Thirumurai   Song # 7   சேந்தனார்   திருப்பல்லாண்டு  
சீரும் திருவும் பொலியச் சிவலோக
   நாயகன் சேவடிக்கீழ்
ஆரும் பெறாத அறிவுபெற் றேன்பெற்ற
   தார்பெறு வார்உலகில்
ஊரும் உலகும் கழற உழறி
   உமைமண வாளனுக்காட்
பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம்
   பல்லாண்டு கூறுதுமே.

10.105   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
சீக்கை விளைந்தது செய்வினை மூட்டிற்ற
ஆக்கை பிரிந்த தலகு பழுத்தது
மூக்கினிற் கைவைத்து மூடிட்டுக் கொண்டுபோய்க்
காக்கைக்கு வுண்பலி காட்டிய வாறே. 

10.614   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
சீராரும் ஞானத்தின் இச்சை செலச்செல
ஆராத காதல் குருபரன் பால் ஆகச்
சாராத சாதகம் நான்கும்தன் பால்உற்றோன்
ஆராயும் ஞானத்த னாம்அடி வைக்கவே.

10.711   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
சீர்நந்தி கொண்டு திருமுக மாய்விட்ட
பேர்நந்தி என்னும் பிறங்கு சடையனை
நாநொந்து நொந்து வருமளவும் சொல்லப்
பேர்நந்தி யென்னும் பிதற்றொழி யேனே.

10.731   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
சீவன் எனச்சிவன் என்னவெவ் வேறில்லை
சீவ னார்சிவ னாரை யறிகிலர்
சீவ னார்சிவ னாரை அறிந்தபின்
சீவ னார்சிவ னாயிட் டிருப்பரே.

10.808   10 st/nd Thirumurai   Song # 15   திருமூலர்   திருமந்திரம்  
சீவன் துரியம் முதலாகச் சீராக
ஆவ சிவன்துரி யாந்தம் அவத்தைபத்(து)
ஓவும் பரானந்தி உண்மைக்குள் வைகியே
மேவிய நாலேழ் விடுத்துநின் றானே.

10.823   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
சீவன்றன் முத்தி அதீதம் பரமுத்தி
ஓவுப சாந்தம் சிவமுத்தி ஆனந்தம்
மூவயின் முச்சொரூப முத்திமுப் பாலதாம்
ஓவுறு தாரத்தில் உள்ளும்நா தாந்தமே.

10.836   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
சீவ துரியத்துத் தொம்பதம் சீவனார்
பாவு பரதுரி யத்தினில் தற்பதம்
மேவு சிவதுரி யத்(து)அசி மெய்ப்பதம்
ஓவி விடும்தத் துவமசி உண்மையே.

10.915   10 st/nd Thirumurai   Song # 41   திருமூலர்   திருமந்திரம்  
சீய குருநந்தி திருவம் பலத்திலே
ஆயுறு மேனி யாரும் அறிகிலர்
தீயுறு செம்மை வெளுப்போடும் அத்தன்மை
ஆயுறு மேனி அணைபுக லாமே.

11.004   11 st/nd Thirumurai   Song # 53   காரைக்கால் அம்மையார்    அற்புதத் திருவந்தாதி  
சீரார்ந்த கொன்றை மலர்தழைப்பச் சேணுலவி
நீரார்ந்த பேர்யாறு நீத்தமாய்ப் - போரார்ந்த
நாண்பாம்பு கொண்டசைத்த நம்மீசன் பொன்முடிதான்
காண்பார்க்குச் செவ்வேயோர் கார்.

11.008   11 st/nd Thirumurai   Song # 9   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
சீரார் சிவலோகந் தன்னுள் சிவபுரத்தில்
ஏரார் திருக்கோயி லுள்ளிருப்ப ஆராய்ந்து

11.008   11 st/nd Thirumurai   Song # 153   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
சீரார் முகம்மதியம் ஆதலால் சேயிழையாள்
ஏரார் இரவின் எழில்கொண்டாள் சீராரும்

11.008   11 st/nd Thirumurai   Song # 157   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
சீரார் திருந்தடிமேல் சேர்த்தினாள் தேர்அல்குல்
ஓரா தகலல் உறாதென்று சீராலே

12.000   12 st/nd Thirumurai   Song # 303   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
சீறடிமேல் நூபுரங்கள் அறிந்தனபோல்
சிறிதளவே யொலிப்ப முன்னர்
வேறொருவ ருடன் பேசாள் மெல்லவடி
யொதுங்கிமா ளிகையின் மேலால்
ஏறிமர கதத்தூணத் திலங்குமணி
வேதிகையில் நலங்கொள் பொற்கால்
மாறின்மலர்ச் சேக்கைமிசை மணிநிலா
முன்றின்மருங் கிருந்தாள் வந்து.
12.070   12 st/nd Thirumurai   Song # 1   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
சீரின் நீடிய செம்பியர் பொன்னிநன் னாட்டுக்
காரின் நீடிய களியளி மலர்ப்பொழில் சூழ்ந்து
தேரின் மேவிய செழுமணி வீதிகள் சிறந்து
பாரில் நீடிய பெருமைசேர் பதிபழை யாறை.
12.150   12 st/nd Thirumurai   Song # 1   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
சீர்மன்னு செல்வக் குடிமல்கு
சிறப்பின் ஓங்கும்
கார்மன்னு சென்னிக் கதிர்மாமணி
மாட வைப்பு
நார்மன்னு சிந்தைப் பலநற்றுறை
மாந்தர் போற்றும்
பார்மன்னு தொன்மைப் புகழ்பூண்டது
பாண்டி நாடு.
12.180   12 st/nd Thirumurai   Song # 17   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
சீரேறும் இசைபாடித்
திருத்தொண்டர் திருவாயில்
நேரேகும் பிடவேண்டும்
எனநினைந்தார்க் கதுநேர்வார்
காரேறும் எயிற்புன்கூர்க்
கண்ணுதலார் திருமுன்பு
போரேற்றை விலங்கஅருள்
புரிந்தருளிப் புலப்படுத்தார்.
12.190   12 st/nd Thirumurai   Song # 116   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
சீதமலி காலத்துத்
திருக்குறிப்புத் தொண்டர்பால்
ஆதுலராய் மெலிந்துமிக
அழுக்கடைந்த கந்தையுடன்
மாதவவே டந்தாங்கி
மாலறியா மலரடிகள்
கோதடையா மனத்தவர்முன்
குறுநடைகள் கொளக்குறுகி.
12.190   12 st/nd Thirumurai   Song # 128   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
சீர்நிலவு திருக்குறிப்புத்
தொண்டர்திருத் தொழில்போற்றிப்
பார்குலவத் தந்தைதாள்
அறஎறிந்தார் பரிசுரைக்கேன்
பேரருளின் மெய்த்தொண்டர்
பித்தனெனப் பிதற்றுதலால்
ஆருலகில் இதனுண்மை
அறிந்துரைக்க இசைந்தெழுவார்.
12.200   12 st/nd Thirumurai   Song # 21   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
சீலம் உடைய கோக்குலங்கள்
சிறக்குந் தகைமைத் தேவருடன்
கால முழுதும் உலகனைத்தும்
காக்கும் முதற்கா ரணராகும்
நீல கண்டர் செய்யசடை
நிருத்தர் சாத்து நீறுதரும்
மூலம் அவதா ரஞ்செய்யும்
மூர்த்தம் என்றால் முடிவென்னோ.
12.210   12 st/nd Thirumurai   Song # 240   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
சீர்தரு செங்காட் டங்குடி
நீடுந் திருநள்ளா
றார்தரு சோலை சூழ்தரு
சாந்தை அயவந்தி
வார்திகழ் மென்முலை யாளொரு
பாகன் திருமருகல்
ஏர்தரும் அன்பால் சென்று
வணங்கி இன்புற்றார்.

12.210   12 st/nd Thirumurai   Song # 248   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
சீர்மன்னுந் திருக்கடவூர்த்
திருமயா னமும்வணங்கி
ஏர்மன்னும் இன்னிசைப்பாப்
பலபாடி இனிதமர்ந்து
கார்மன்னுங் கறைக்கண்டர்
கழலிணைகள் தொழுதகன்று
தேர்மன்னும் மணிவீதித்
திருவாக்கூர் சென்றணைந்தார்.

12.210   12 st/nd Thirumurai   Song # 255   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
சீரின் விளங்குந் திருத்தொண்டர்
இருந்து சிலநாள் சென்றதற்பின்
மாரி சுருங்கி வளம்பொன்னி
நதியும் பருவம் மாறுதலும்
நீரின் இயன்ற உணவருகி
நிலவும் பலமன் னுயிர்களெலாம்
பாரின் மலிந்த இலம்பாட்டில்
படர்கூர் வறுமை பரந்ததால்.
12.210   12 st/nd Thirumurai   Song # 278   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
சீரார் பதியி னின்றெழுந்து
செல்லுந் திருநா வுக்கரசர்
ஆரா அன்பில் ஆரமுதம்
உண்ண எய்தா வாறேபோல்
நீரார் சடையார் எழுந்தருள
நெடிது பின்பு செல்லுமவர்
பேரா ளரைமுன் தொடர்ந்தணையப்
பெறுவார் எய்தப் பெற்றிலரால்.
12.210   12 st/nd Thirumurai   Song # 326   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
சீர்வளரு மதில்கச்சி
நகர்த்திருமேற் றளிமுதலா
நீர்வளருஞ் சடைமுடியார்
நிலவியுறை ஆலயங்கள்
ஆர்வமுறப் பணிந்தேத்தி
ஆய்ந்ததமிழ்ச் சொல்மலரால்
சார்வுறுமா லைகள்சாத்தித்
தகுந்தொண்டு செய்திருந்தார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 405   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
சீர்திகழும் பாண்டிமா
தேவியார் திருநீற்றின்
சார்வடைய கூன்நிமிர்ந்த
தென்னவனார் தம்முடனே
பார்பரவுங் குலச்சிறையார்
வாகீசர் தமைப்பணிவுற்
றாரகிலாக் காதல்மிக
அடிபோற்ற அங்கிருந்தார்.
12.260   12 st/nd Thirumurai   Song # 4   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
சீலம் உய்த்தவத் திருமறை
யோர்செழு மூதூர்
ஞாலம் மிக்கநான் மறைப்பொருள்
விளக்கிய நலத்தார்
ஆலம் வைத்தகண் டத்தவர்
தொண்டராம் அன்பர்
நீல நக்கனார் என்பவர்
நிகழ்ந்துளார் ஆனார்.
12.260   12 st/nd Thirumurai   Song # 29   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
சீல மெய்த்திருத் தொண்டரோ
டமுதுசெய் தருளி
ஞாலம் உய்ந்திட நாயகி
யுடன்நம்பர் நண்ணும்
காலம் முற்பெற அழுதவர்
அழைத்திடக் கடிது
நீல நக்கனார் வந்தடி
பணிந்துமுன் நின்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 72   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சீர்மறையோர் சிவபாத
இருதயரும் சிறுபொழுதில்
நீர்மருவித் தாஞ்செய்யும்
நியமங்கள் முடித்தேறிப்
பேருணர்விற் பொலிகின்ற
பிள்ளையார் தமைநோக்கி
யார்அளித்த பாலடிசில்
உண்டதுநீ எனவெகுளா.
12.280   12 st/nd Thirumurai   Song # 123   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சீரினில் திகழ்ந்த பாடல்
திருக்கடைக் காப்புப் போற்றிப்
பாரினில் பொலிந்த தொண்டர்
போற்றிடப் பயில்வார் பின்னும்
ஏரிசைப் பதிகம் பாடி
ஏத்திப்போந் திறைவர் வெண்கா
டாருமெய்க் காத லோடும்
பணிவதற் கணைந்தா ரன்றே.
12.280   12 st/nd Thirumurai   Song # 252   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சீர்வளர் கோயிலை அணைந்து தேமலர்க்
கார்வளர் கண்டர்தாள் பணிந்து காண்பவர்
பார்புகழ் பதிகங்கள் பாடி நீடுவார்
வார்புகழ்க் கடம்பையும் வணங்கி வாழ்ந்தனர்.
12.280   12 st/nd Thirumurai   Song # 488   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சீரின் மலிந்த சிறப்பின் மேவும்
சிறுத்தொண்டர் நண்புடன் செல்ல நல்ல
வேரி நறுந்தொங் கல்மற் றவரும்
விடையரு ளப்பெற்று மீண்ட பின்பு
நீரின் மலிந்த சடையர் மேவி
நிகழும் பதிகள் பலப ணிந்து
பாரின் மலிந்து நிறைந்த செல்வம்
பயில்புக லூர்நகர்ப் பாங்க ணைந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 637   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சீர்மலி அசோகு தன்கீழ்
இருந்தநந் தேவர் மேலே
வேரொடு சாய்ந்து வீழக்
கண்டனம் அதன்பின் னாக
ஏர்கொள்முக் குடையுந் தாமும்
எழுந்துகை நாற்றிப் போக
ஊருளோர் ஓடிக் காணக்
கண்டனம் என்று ரைப்பார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 868   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சீருடைப் பிள்ளை யாரும்
சிறப்புடை அடியா ரோடும்
காரினிற் பொலிந்த கண்டத்
திறைவர்தாள் வணங்கிக் காதல்
ஆரருள் பெற்றுப் போற்றி
அங்குநின் றரிது நீங்கி
ஏரியல் மடத்தின் உள்ளால்
இனிதெழுந் தருளிப் புக்கார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 904   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சீர்நிலவு திருத்தெளிச்சே ரியினைச் சேர்ந்து
சிவபெருமான் தனைப்பரவிச் செல்லும் போது
சார்வறியாச் சாக்கியர்தம் போதி மங்கை
சார்தலும்மற் றதுஅறிந்த சைவ ரெல்லாம்
ஆர்கலியின் கிளர்ச்சியெனச் சங்கு தாரை
அளவிறந்த பல்லியங்கள் முழக்கி ஆர்த்துப்
பார்குலவு தனிக்காளஞ் சின்ன மெல்லாம்
பரசமய கோளரிவந் தான்என் றூத.
12.280   12 st/nd Thirumurai   Song # 955   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சீரின் மல்கிய திருப்பதி
கத்தினில் திருக்கடைக் காப்பேற்றி
வாரின் மல்கிய வனமுலை
யாளுடன் மன்னினார் தமைப்போற்றி
ஆரும் இன்னருள் பெற்றுமீண்
டணைபவர் அங்கையால் தொழுதேத்தி
ஏரின் மல்கிய கோயில்முன்
பணிந்துபோந் திறைஞ்சினர் மணிவாயில்.
12.280   12 st/nd Thirumurai   Song # 969   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சீரின் மன்னிய பதிகம்முன்
பாடிஅத் திருவறை யணிநல்லூர்
வாரின் மல்கிய கொங்கையாள்
பங்கர்தம் மலைமிசை வலங்கொள்வார்
பாரின் மல்கிய தொண்டர்கள்
இமையவர் நாடொறும் பணிந்தேத்துங்
காரின் மல்கிய சோலைஅண்
ணாமலை அன்பர்காட் டிடக்கண்டார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 981   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சீரின் மன்னும் திருக்கடைக்காப்
பேற்றிச் சிவனா ரருள்பெற்றுப்
பாரில் நீடும் ஆண்பனைமுன்
காய்த்துப் பழுக்கும் பண்பினால்
நேரும் அன்பர் தங்கருத்து
நேரே முடித்துக் கொடுத்தருளி
ஆரும் உவகைத் திருத்தொண்டர்
போற்ற அங்கண் இனிதமர்ந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1065   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சீரின் மன்னிய சிவநேசர்
கண்டுளம் மயங்கிக்
காரின் மல்கிய சோலைசூழ்
கழுமலத் தலைவர்
சாரும் அவ்வள வும்முடல்
தழலிடை யடக்கிச்
சேர என்பொடு சாம்பல்சே
மிப்பது தெளிவார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1112   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சீர்கெழு சிவநேசர் தம்மை முன்னமே
கார்கெழு சோலைசூழ் காழி மன்னவர்
ஏர்கெழு சிறப்பில்நும் மகளைக் கொண்டினிப்
பார்கெழு மனையினிற் படர்மின் என்றலும்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1220   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சீரணி தெருவி னூடு
திருமணம் செல்ல முத்தின்
ஏரணி காளம் சின்னம்
இலங்கொளித் தாரை யெல்லாம்
பேரொலி பெருக முன்னே
பிடித்தன மறைக ளோடு
தாரணி உய்ய ஞான
சம்பந்தர் வந்தா ரென்று.
12.280   12 st/nd Thirumurai   Song # 1249   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சீர்பெருகு நீலநக்கர்
திருமுருகர் முதல்தொண்டர்
ஏர்கெழுவு சிவபாத
இருதயர்நம் பாண்டார்சீர்
ஆர்திருமெய்ப் பெரும்பாணர்
மற்றேனையோர் அணைந்துளோர்
பார்நிலவு கிளைசூழப்
பன்னிகளோ டுடன்புக்கார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 167   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சீர்வளருந் திருத்தில்லைத்
திருவீதி பணிந்துபுகுந்
தேர்வளர்பொன் திருமன்றுள்
எடுத்தசே வடியிறைஞ்சிப்
பார்வளர மறைவளர்க்கும்
பதியதனில் பணிந்துறைவார்
போர்வளர்மே ருச்சிலையார்
திருத்தினைமா நகர்புகுந்தார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 190   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சீரார் காஞ்சி மன்னுதிருக்
காமக் கோட்டம் சென்றிறைஞ்சி
நீரார் சடையா ரமர்ந்தருளும்
நீடு திருமேற் றளிமேவி
ஆரா அன்பிற் பணிந்தேத்து
மளவில்நுந்தா வொண்சுடராம்
பாரார் பெருமைத் திருப்பதிகம்
பாடி மகிழ்ந்து பரவினார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 209   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சீர்கொள் மரபில் வருஞ்செயலே
யன்றித் தெய்வ நிகழ்தன்மை
பாரில் எவரும் அதிசயிக்கும்
பண்பில் வளரும் பைந்தொடியார்
வாரும் அணிய அணியவாம்
வளர்மென் முலைகள் இடைவருத்தச்
சாரும் பதத்தில் தந்தையார்
தங்கள் மனைவி யார்க்குரைப்பார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 306   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சீர்பெருகுந் திருத்தேவா
சிரியன்முன் சென்றிறைஞ்சிக்
கார்விரவு கோபுரத்தைக்
கைதொழுதே உட்புகுந்து
தார்பெருகு பூங்கோயில்
தனைவணங்கிச் சார்ந்தணைவார்
ஆர்வமிகு பெருங்காத
லால்அவனி மேல்வீழ்ந்தார்.
12.330   12 st/nd Thirumurai   Song # 4   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சீருந் திருவும் பொலியுந்திரு வாரூர் எய்தி
ஆரந் திகழ்மார்பின் அணுக்கவன் தொண்டர்க் கன்பால்
சாரும் பெருநண்பு சிறப்ப அடைந்து தங்கிப்
பாரும் விசும்பும் பணியும்பதம் பற்றி யுள்ளார்.
12.360   12 st/nd Thirumurai   Song # 15   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
சீதமதி அரவினுடன்
செஞ்சடைமேற் செறிவித்த
நாதன்அடி யார்தம்மை
நயப்பாட்டு வழிபாட்டால்
மேதகையார் அவர்முன்பு
மிகச்சிறிய ராய்அடைந்தார்
ஆதலினால் சிறுத்தொண்டர்
எனநிகழ்ந்தார் அவனியின்மேல்.
12.420   12 st/nd Thirumurai   Song # 7   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
சீலமில ரேயெனினும்
திருநீறு சேர்ந்தாரை
ஞாலம்இகழ்ந் தருநரகம்
நண்ணாமல் எண்ணுவார்
பாலணைந்தார் தமக்களித்த
படியிரட்டிப் பொன்கொடுத்து
மேலவரைத் தொழுதினிய
மொழிவிளம்பி விடைகொடுத்தார்.
12.550   12 st/nd Thirumurai   Song # 2   சேக்கிழார்   கடல் சூழ்ந்த சருக்கம்  
சீரின் விளங்கும் அப்பதியில்
திருந்து வேளாண் குடிமுதல்வர்
நீரின் மலிந்த செய்யசடை
நீற்றர் கூற்றின் நெஞ்சிடித்த
வேரி மலர்ந்த பூங்கழல்சூழ்
மெய்யன் புடைய சைவரெனப்
பாரில் நிகழ்ந்த செருத்துணையார்
பரவுந் தொண்டின் நெறிநின்றார்.
12.670   12 st/nd Thirumurai   Song # 1   சேக்கிழார்   மன்னிய சீர்ச் சருக்கம்  
சீர்வளர் சிறப்பின் மிக்க
செயல்முறை ஒழுக்கம் குன்றா
நார்வளர் சிந்தை வாய்மை
நன்மையார் மன்னி வாழும்
பார்வளர் புகழின் மிக்க
பழம்பதி மதிதோய் நெற்றிக்
கார்வளர் சிகர மாடக்
காம்பீலி என்ப தாகும்.


This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list