சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் சீரின்
சீரின்    
2.010   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சீரின் ஆர் மணியும்(ம்) அகில் சந்தும் செறி வரை
வாரி நீர் வரு பொன்னி வடமங்கலக்குடி
நீரின் மா முனிவன் நெடுங்கைகொடு நீர்தனைப்
பூரித்து ஆட்டி அர்ச்சிக்க இருந்த புராணனே.

7.011   7 st/nd Thirumurai   Song # 8   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
சீரின் மிகப் பொலியும் திருப்பூவணம்
ஆர இருப்பு இடமா உறைவான் தனை
ஊரன் உரைத்த சொல் மாலைகள் பத்து இவை
பாரில் உரைப்பவர் பாவம் அறுப்பரே .

12.070   12 st/nd Thirumurai   Song # 1   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
சீரின் நீடிய செம்பியர் பொன்னிநன் னாட்டுக்
காரின் நீடிய களியளி மலர்ப்பொழில் சூழ்ந்து
தேரின் மேவிய செழுமணி வீதிகள் சிறந்து
பாரில் நீடிய பெருமைசேர் பதிபழை யாறை.
12.210   12 st/nd Thirumurai   Song # 255   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
சீரின் விளங்குந் திருத்தொண்டர்
இருந்து சிலநாள் சென்றதற்பின்
மாரி சுருங்கி வளம்பொன்னி
நதியும் பருவம் மாறுதலும்
நீரின் இயன்ற உணவருகி
நிலவும் பலமன் னுயிர்களெலாம்
பாரின் மலிந்த இலம்பாட்டில்
படர்கூர் வறுமை பரந்ததால்.
12.280   12 st/nd Thirumurai   Song # 488   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சீரின் மலிந்த சிறப்பின் மேவும்
சிறுத்தொண்டர் நண்புடன் செல்ல நல்ல
வேரி நறுந்தொங் கல்மற் றவரும்
விடையரு ளப்பெற்று மீண்ட பின்பு
நீரின் மலிந்த சடையர் மேவி
நிகழும் பதிகள் பலப ணிந்து
பாரின் மலிந்து நிறைந்த செல்வம்
பயில்புக லூர்நகர்ப் பாங்க ணைந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 955   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சீரின் மல்கிய திருப்பதி
கத்தினில் திருக்கடைக் காப்பேற்றி
வாரின் மல்கிய வனமுலை
யாளுடன் மன்னினார் தமைப்போற்றி
ஆரும் இன்னருள் பெற்றுமீண்
டணைபவர் அங்கையால் தொழுதேத்தி
ஏரின் மல்கிய கோயில்முன்
பணிந்துபோந் திறைஞ்சினர் மணிவாயில்.
12.280   12 st/nd Thirumurai   Song # 969   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சீரின் மன்னிய பதிகம்முன்
பாடிஅத் திருவறை யணிநல்லூர்
வாரின் மல்கிய கொங்கையாள்
பங்கர்தம் மலைமிசை வலங்கொள்வார்
பாரின் மல்கிய தொண்டர்கள்
இமையவர் நாடொறும் பணிந்தேத்துங்
காரின் மல்கிய சோலைஅண்
ணாமலை அன்பர்காட் டிடக்கண்டார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 981   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சீரின் மன்னும் திருக்கடைக்காப்
பேற்றிச் சிவனா ரருள்பெற்றுப்
பாரில் நீடும் ஆண்பனைமுன்
காய்த்துப் பழுக்கும் பண்பினால்
நேரும் அன்பர் தங்கருத்து
நேரே முடித்துக் கொடுத்தருளி
ஆரும் உவகைத் திருத்தொண்டர்
போற்ற அங்கண் இனிதமர்ந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1065   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சீரின் மன்னிய சிவநேசர்
கண்டுளம் மயங்கிக்
காரின் மல்கிய சோலைசூழ்
கழுமலத் தலைவர்
சாரும் அவ்வள வும்முடல்
தழலிடை யடக்கிச்
சேர என்பொடு சாம்பல்சே
மிப்பது தெளிவார்.
12.550   12 st/nd Thirumurai   Song # 2   சேக்கிழார்   கடல் சூழ்ந்த சருக்கம்  
சீரின் விளங்கும் அப்பதியில்
திருந்து வேளாண் குடிமுதல்வர்
நீரின் மலிந்த செய்யசடை
நீற்றர் கூற்றின் நெஞ்சிடித்த
வேரி மலர்ந்த பூங்கழல்சூழ்
மெய்யன் புடைய சைவரெனப்
பாரில் நிகழ்ந்த செருத்துணையார்
பரவுந் தொண்டின் நெறிநின்றார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list