சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் செங்கண்
செங்கண்     செங்கண்வயக்     செங்கண்வெள்     செங்கண்மால்    
1.074   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செங்கண் அரவும், நகுவெண்தலையும், முகிழ் வெண் திங்களும்,
தங்கு சடையன்; விடையன்; உடையன், சரி கோவண ஆடை;
பொங்கு திரை வண் கடல் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதி ஆக,
எங்கும் பரவி இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

2.023   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செங்கண் பெயர் கொண்டவன் செம்பியர்கோன்
அம் கண் கருணை பெரிது ஆயவனே!
வெங் கண் விடையாய்! எம் வெண்நாவல் உளாய்!
அங்கத்து அயர்வு ஆயினள், ஆயிழையே.

2.108   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செங்கண் மாலொடு நான்முகன் தேடியும் திருவடி
அறியாமை
எங்கும் ஆர் எரி ஆகிய இறைவனை அறைபுனல் முடி
ஆர்ந்த,
வெங் கண் மால்வரைக்கரி உரித்து உகந்தவன் விற்குடி
வீரட்டம்
தம் கையால் தொழுது ஏத்த வல்லார் அவர் தவம் மல்கு
குணத்தாரே.

3.029   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செங்கண் மால், திகழ்தரு மலர் உறை திசைமுகன்,
தம் கையால்-தொழுது எழ, தழல் உரு ஆயினான்-
கங்கை ஆர் சடையினான்-கருது காட்டுப்பள்
அம் கையால் தொழுமவர்க்கு, அல்லல் ஒன்று இல்லையே.

3.051   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செங்கண் வெள்விடையாய்! திரு ஆலவாய்
அங்கணா! அஞ்சல்! என்று அருள் செய், எனை;
கங்குலார் அமண்கையர் இடும் கனல்,
பங்கம் இல் தென்னன் பாண்டியற்கு ஆகவே!

5.026   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
செங்கண் நாகம் அரையது; தீத்திரள்
அங்கை ஏந்தி நின்றார்; எரி ஆடுவர்;
கங்கை வார்சடைமேல் இடம் கொண்டவர்;
மங்கை பாகம் வைத்தார்-வன்னியூரரே.

5.053   5 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
செங்கண் மால்விடை ஏறிய செல்வனார்,
பைங்கண் ஆனையின் ஈர் உரி போர்த்தவர்,
அம் கண் ஞாலம் அது ஆகிய, வீரட்டம்,
கங்குல் ஆக, என் கண் துயில் கொள்ளுமே?

5.079   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
செங்கண்மால் பிரமற்கும் அறிவு ஒணா
அங்கியின்(ன்) உரு ஆகி, அழல்வது ஓர்
பொங்கு அர(வ்)வனை, புள்ளிருக்கு வேளூர்
மங்கைபாகனை, வாழ்த்த, வரும், இன்பே.

6.058   6 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
செங்கண் மால் சிலை பிடித்து, சேனையோடும் சேதுபந்தனம் செய்து, சென்று புக்கு,
பொங்கு போர் பல செய்து, புகலால் வென்ற போர் அரக்கன் நெடு முடிகள் பொடி ஆய் வீழ,
அங்கு ஒரு தம் திரு விரலால் இறையே ஊன்றி,
அடர்த்து, அவற்கே அருள் புரிந்த அடிகள், இந் நாள்
வங்கம் மலி கடல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே.

7.087   7 st/nd Thirumurai   Song # 3   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
செங்கண் மேதிகள் சேடு எறிந்து தடம் படிதலின் சேல் இனத்தொடு
பைங்கண் வாளைகள் பாய் பழனத் திருப் பனையூர்,
திங்கள் சூடிய செல்வனார், அடியார் தம்மேல் வினை தீர்ப்பராய் விடில்
அங்கு இருந்து உறைவார் அவரே அழகியரே.

11.008   11 st/nd Thirumurai   Song # 10   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
செங்கண் அமரர் புறங்கடைக்கண் சென்றீண்டி
எங்கட்குக் காட்சிஅருள் என்றிரப்ப அங்கொருநாள்

12.000   12 st/nd Thirumurai   Song # 82   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
செங்கண் மாதர் தெருவில் தெளித்தசெங்
குங்கு மத்தின் குழம்பை அவர்குழல்
பொங்கு கோதையின் பூந்துகள் வீழ்ந்துடன்
அங்கண் மேவி யளறு புலர்த்துமால்.
12.100   12 st/nd Thirumurai   Song # 56   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
செங்கண்வயக் கோளரியே றன்ன திண்மைத்
திண்ணனார் செய்தவத்தின் பெருமை பெற்ற
வெங்கண்விறல் தாதைகழல் வணங்கி நின்று
விடைகொண்டு புறம்போந்து வேட ரோடும்
மங்கலநீர்ச் சுனைபடிந்து மனையின் வைகி
வைகிருளின் புலர்காலை வரிவிற் சாலைப்
பொங்குசிலை அடல்வேட்டைக் கோலங் கொள்ளப்
புனைதொழிற்கை வினைஞருடன் பொலிந்து புக்கார்.
12.100   12 st/nd Thirumurai   Song # 178   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
செங்கண்வெள் விடையின் பாகர்
திண்ணனார் தம்மை ஆண்ட
அங்கணர் திருக்கா ளத்தி  
அற்புதர் திருக்கை யன்பர்
தங்கண்முன் னிடக்குங் கையைத்  
தடுக்கமூன் றடுக்கு நாக
கங்கணர் அமுத வாக்குக்  
கண்ணப்ப நிற்க வென்றே.
12.110   12 st/nd Thirumurai   Song # 23   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
செங்கண்வெள் ளேற்றின் பாகன்
திருப்பனந் தாளின் மேவும்
அங்கணன் செம்மை கண்டு
கும்பிட அரசன் ஆர்வம்
பொங்கித்தன் வேழம் எல்லாம்
பூட்டவும் நேர்நில் லாமைக்
கங்குலும் பகலும் தீராக்
கவலையுற் றழுங்கிச் செல்ல.
12.200   12 st/nd Thirumurai   Song # 55   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
செங்கண் விடையார் திருமலர்க்கை
தீண்டப் பெற்ற சிறுவனார்
அங்கண் மாயை யாக்கையின்மேல்
அளவின் றுயர்ந்த சிவமயமாய்ப்
பொங்கி யெழுந்த திருவருளின்
மூழ்கிப் பூமேல் அயன்முதலாம்
துங்க அமரர் துதிசெய்யச்
சூழ்ந்த ஒளியில் தோன்றினார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 312   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
செங்கண் விடையார் திருவண்ணா
மலையைத் தொழுது வலங்கொண்டு
துங்க வரையின் மிசையேறித்
தொண்டர் தொழும்புக் கெதிர்நிற்கும்
அங்கன் அரசைப் பணிந்தெழுந்து
திளைத்துத் திருநா வுக்கரசர்
தங்கு பிறப்பே வீட்டினுக்கு
மேலாம் பெருமை சாதித்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 148   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செங்கண் ஏற்றவர் தில்லையே
நோக்கிஇத் திருந்துல கினிற்கெல்லாம்
மங்க லந்தரு மழவிளம்
போதகம் வரும்இரு மருங்கெங்கும்
தங்கு புள்ளொலி வாழ்த்துரை
எடுத்துமுன் தாமரை மதுவாசப்
பொங்கு செம்முகை கரங்குவித்
தலர்முகங் காட்டின புனற்பொய்கை.
12.280   12 st/nd Thirumurai   Song # 781   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செங்கண் ஏற்றவ ரேபொருள்
என்றுதாம் தெரித்த
பொங்கி சைத்திருப் பதிகநன்
முறையினைப் போற்றி
எங்கள் நாதனே பரம்பொருள்
எனத்தொழு தெடுத்தே
அங்கை யால்முடி மிசைக்கொண்டு
காப்புநாண் அவிழ்த்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 888   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செங்கண்மால் வழிபட்ட கோயில் நண்ணித்
திருமுன்பு தாழ்ந்தெழுந்து தென்ன னோடும்
மங்கையர்க்கு நாயகியார் தாமும் மெய்ம்மை
மந்திரியா ரும்சூழ மணிநீள் வாயில்
பொங்கியெழும் விருப்பினால் உடனே புக்குப்
புடைவலங்கொண் டுள்ளணைவார் போற்றி செய்து
பங்கயச் செங் கைகுவித்துப் பணிந்து நின்று
பாடினார் மன்னவனும் பரவி யேத்த.
12.280   12 st/nd Thirumurai   Song # 950   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செங்கண் விடையார்
திருப்பழனஞ் சேர்ந்திறைஞ்சிப்
பொங்கிய காதலின்முன்
போற்றும் பதிபிறவும்
தங்கிப்போய்ச் சண்பைநகர்
சார்ந்தார் தனிப்பொருப்பின்
மங்கை திருமுலைப்பால்
உண்டருளும் வள்ளலார்.
12.310   12 st/nd Thirumurai   Song # 4   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செங்கண் விடையார் திருக்கோயில்
குடபால் தீர்த்தக் குளத்தின்பாங்
கெங்கும் அமணர் பாழிகளாய்
இடத்தாற் குறைபா டெய்துதலால்
அங்கந் நிலைமை தனைத்தண்டி
யடிகள் அறிந்தே ஆதரவால்
இங்கு நான்இக் குளம்பெருகக்
கல்ல வேண்டும் என்றெழுந்தார்.
12.550   12 st/nd Thirumurai   Song # 7   சேக்கிழார்   கடல் சூழ்ந்த சருக்கம்  
செங்கண் விடையார் திருமுன்றில்
விழுந்த திருப்பள் ளித்தாமம்
அங்கண் எடுத்து மோந்ததற்கு
அரசன் உரிமைப் பெருந்தேவி
துங்க மணிமூக் கரிந்தசெருத்
துணையார் தூய கழல்இறைஞ்சி
எங்கும் நிகழ்ந்த புகழ்த்துணையார்
உரிமை அடிமை யெடுத்துரைப்பாம்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list