சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் செஞ்
செஞ்சுட     செஞ்சுடர்     செஞ்சொற்     செஞ்சடைவெண்     செஞ்சடைக்     செஞ்சொல்     செஞ்சடையார்     செஞ்     செஞ்சுடர்ச்     செஞ்சடைக்கு     செஞ்சேல்    
4.022   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
செஞ் சடைக்கற்றை முற்றத்து இளநிலா எறிக்கும் சென்னி
நஞ்சு அடை கண்டனாரைக் காணல் ஆம்; நறவம் நாறும்
மஞ்சு அடை சோலைத் தில்லை மல்கு சிற்றம்பலத்தே
துஞ்சு அடை இருள் கிழியத் துளங்கு எரி ஆடும் ஆறே!

4.097   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
செஞ்சுடர்ச் சோதிப் பவளத்திரள் திகழ் முத்து அனைய,
நஞ்சு அணி கண்டன், நல்லூர் உறை நம்பனை, நான் ஒரு கால்
துஞ்சு இடைக் கண்டு கனவின் தலைத் தொழுதேற்கு அவன் தான்
நெஞ்சு இடை நின்று அகலான், பலகாலமும் நின்றனனே.

6.059   6 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
செஞ்சடைக்கு ஓர் வெண்திங்கள் சூடினாரும், திரு ஆலவாய் உறையும் செல்வனாரும்,
அஞ்சனக் கண் அரிவை ஒருபாகத்தாரும், ஆறு அங்கம் நால் வேதம் ஆய் நின்றாரும்,
மஞ்சு அடுத்த நீள் சோலை மாட வீதி மதில் ஆரூர் புக்கு அங்கே மன்னினாரும்,
வெஞ்சினத்த வேழம் அது உரி செய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.

7.026   7 st/nd Thirumurai   Song # 5   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
செஞ்சேல் அன்ன கண்ணார் திறத்தே கிடந்து உற்று அலறி,
நஞ்சேன், நான் அடியேன், நலம் ஒன்று அறியாமையினால்,
துஞ்சேன்; நான் ஒரு கால்-தொழுதேன்; திருக்காளத்தியாய்!
அஞ்சாது உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே.

10.722   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
செஞ்சுட ரோன்முத லாகிய தேவர்கள்
மஞ்சுடை மேரு வலம்வரு காரணம்
எஞ்சுடர் ஈசன் இறைவன் இணையடி
தஞ்சுட ராக வணங்கு தவமே.

10.908   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
செஞ்சுடர் ண்டலத் தூடுசென் றப்புறம்
மஞ்சண வும்முறை ஏறி வழிக்கொண்டு
துஞ்சு மவன்சொன்ன காலத் திறைவனை
நெஞ்சென நீங்கா நிலைபெற லாகுமே. 9,

11.037   11 st/nd Thirumurai   Song # 66   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை  
செஞ்சொற் பொருள்பயந்த சிங்கத்தைத் தெவ்வருயிர்
அஞ்சத் திகழ்ந்த அடலுருமை எஞ்சாமை

11.038   11 st/nd Thirumurai   Song # 2   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்  
செஞ்சடைவெண் மதியணிந்த
  சிவன்எந்தை திருவருளால்
வஞ்சியன நுண்ணிடையாள்
  மலையரையன் மடப்பாவை
நற்கண்ணி அளவிறந்த
  ஞானத்தை அமிர்தாக்கிப்
பொற்கிண்ணத் தருள்புரிந்த
  போனகமுன் நுகர்ந்தனையே.

12.210   12 st/nd Thirumurai   Song # 176   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
செஞ்சடைக் கற்றைமுற்றத் திளநிலா
எறிக்குமெனுஞ் சிறந்த வாய்மை
அஞ்சொல்வளத் தமிழ்மாலை அதிசயமாம்
படிபாடி அன்பு சூழ்ந்த
நெஞ்சுருகப் பொழிபுனல்வார் கண்ணிணையும்
பரவியசொல் நிறைந்த வாயும்
தஞ்செயலியன் ஒழியாத திருப்பணியும்
மாறாது சாரும் நாளில்.
12.280   12 st/nd Thirumurai   Song # 512   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செஞ்சொல் வண்தமிழ்த் திருப்பதி
கத்திசை யெடுத்து
நஞ்சு போனகம் ஆக்கிய
நம்பர்முன் பாடி
மஞ்சு சூழ்திரு மாளிகை
வாயிலின் புறம்போந்
தஞ்செ ழுத்தின்மெய் யுணர்ந்தவர்
திருமடத் தணைந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 558   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செஞ்சொல் மலர்ந்த திருப்ப திகம்
பாடித் திருக்கடைக் காப்புச் சாத்தி
அஞ்சலி கூப்பி விழுந்தெ ழுவார்
ஆனந்த வெள்ளம் அலைப்பப் போந்து
மஞ்சிவர் சோலைப்புகலி மேவும்
மாமறை யோர்தமை நோக்கி வாய்மை
நெஞ்சில் நிறைந்த குறிப்பில் வந்த
நீர்மைத் திறத்தை அருள்செய் கின்றார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 101   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
செஞ்சடையார் திருவாப்ப
னூர்திருவே டகம்முதலாம்
நஞ்சணியுங் கண்டரவர்
நயந்தபதி நண்ணியே
எஞ்சலிலாக் காதலினால்
இனிதிறைஞ்சி மீண்டணைந்து
மஞ்சணையும் மதில்மதுரை
மாநகரின் மகிழ்ந்திருந்தார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 138   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
செஞ்சொல் தமிழ்நா வலர்கோனும்
சேரர் பிரானும் தம்பெருமான்
எஞ்ச லில்லா நிறைஆற்றின்
இடையே யளித்த மணல்வழியில்
தஞ்ச முடைய பரிசனமும்
தாமும் ஏறித் தலைச்சென்று
பஞ்ச நதிவா ணரைப்பணிந்து
விழுந்தார் எழுந்தார் பரவினார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list