சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter: ( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் செறி
செறி
செறியுங்
செறிவளை
செறிந்தவர்
செறிவலித்திண்
செறிபுன்
செறிவுண்டென்று
செறிவு
செறிந்த
செறியும்
1.004
1 st/nd Thirumurai
Song # 9
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
செறி முளரித்தவிசு ஏறி ஆறும் செற்று அதில் வீற்றிருந் தானும், மற்றைப்
பொறி அரவத்து அணையானும், காணாப் புகலி நிலாவிய புண்ணியனே!
எறி மழுவோடு இளமான் கை இன்றி இருந்த பிரான்! இது என்கொல் சொல்லாய்
வெறி கமழ் பூம்பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?
1.016
1 st/nd Thirumurai
Song # 9
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
செறி ஆர்தரு வெள்ளைத் திரு நீற்றின் திருமுண்டப்
பொறி ஆர்தரு புரிநூல் வரை மார்பன் புளமங்கை,
வெறி ஆர்தரு கமலத்து அயன் மாலும், தனை நாடி
அறியா வகை நின்றான் இடம் ஆலந்துறை அதுவே.
1.035
1 st/nd Thirumurai
Song # 7
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
செறி ஆர் கழலும் சிலம்பு ஆர்க்க
நெறி ஆர் குழலாளொடு நின்றான்,
வெறி ஆர் பொழில், வீழி மிழலை
அறிவார் அவலம் அறியாரே.
3.097
3 st/nd Thirumurai
Song # 7
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
செறி பொழில் தழுவிய சிறுகுடி மேவிய
வெறி கமழ் சடைமுடியீரே;
வெறி கமழ் சடைமுடியீர்! உமை விரும்பி மெய்ந்-
நெறி உணர்வோர் உயர்ந்தோரே.
4.057
4 st/nd Thirumurai
Song # 7
திருநாவுக்கரசர்
தேவாரம்
செறிவு இலேன்; சிந்தையுள்ளே சிவன் அடி தெரிய மாட்டேன்;
குறி இலேன்; குணம் ஒன்று இல்லேன்; கூறுமா கூற மாட்டேன்;
நெறி படு மதி ஒன்று இல்லேன்; நினையுமா நினைய மாட்டேன்;
அறிவு இலேன்; அயர்த்துப் போனேன்-ஆவடுதுறை உளானே!
6.018
6 st/nd Thirumurai
Song # 8
திருநாவுக்கரசர்
தேவாரம்
செறி கழலும் திருவடியும் தோன்றும் தோன்றும்;
திரிபுரத்தை எரிசெய்த சிலையும் தோன்றும்;
நெறி அதனை விரித்து உரைத்த நேர்மை தோன்றும்;
நெற்றிமேல் கண் தோன்றும்; பெற்றம் தோன்றும்;
மறுபிறவி அறுத்து அருளும் வகையும் தோன்றும்;
மலைமகளும் சலமகளும் மலிந்து தோன்றும்;
பொறி அரவும் இளமதியும் பொலிந்து தோன்றும்-
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
6.075
6 st/nd Thirumurai
Song # 11
திருநாவுக்கரசர்
தேவாரம்
செறி கொண்ட சிந்தை தனுள் தெளிந்து தேறித் தித்திக்கும் சிவபுவனத்து அமுதம் போலும்;
நெறி கொண்ட குழலி உமை பாகம் ஆக, நிறைந்து அமரர் கணம் வணங்க நின்றார் போலும்;
மறி கொண்ட கரதலத்து எம் மைந்தர் போலும்;
மதில் இலங்கைக் கோன் மலங்க, வரைக்கீழ் இட்டு,
குறி கொண்ட இன் இசை கேட்டு, உகந்தார் போலும் குடந்தைக் கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே.
7.059
7 st/nd Thirumurai
Song # 5
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
செறிவு உண்டேல், மனத்தால்-தெளிவு உண்டேல், தேற்றத்தால் வரும் சிக்கனவு உண்டேல்,
மறிவு உண்டேல், மறுமைப் பிறப்பு உண்டேல், வாழ்நாள் மேல் செல்லும் வஞ்சனை உண்டேல்,
பொறிவண்டு யாழ் செய்யும் பொன்மலர்க் கொன்றை பொன் போலும் சடைமேல் புனைந்தானை
அறிவு உண்டே; உடலத்து உயிர் உண்டே; ஆரூரானை மறக்கலும் ஆமே? .
7.068
7 st/nd Thirumurai
Song # 10
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
செறிந்த சோலைகள் சூழ்ந்த நள்ளாற்று எம் சிவனை, நாவலூர்ச் சிங்கடி தந்தை,
மறந்தும் நான் மற்றும் நினைப்பது ஏது? என்று வனப் பகை அப்பன், ஊரன், வன்தொண்டன்-
சிறந்த மாலைகள் அஞ்சினோடு அஞ்சும் சிந்தையுள் உருகிச் செப்ப வல்லார்க்கு
இறந்து போக்கு இல்லை, வரவு இல்லை ஆகி இன்ப வெள்ளத்துள் இருப்பர்கள், இனிதே .
8.136
8 st/nd Thirumurai
Song # 4
மாணிக்க வாசகர்
திருவாசகம்
செறியும் பிறவிக்கு நல்லவர் செல்லல்மின்; தென்னன், நல் நாட்டு
இறைவன், கிளர்கின்ற காலம் இக் காலம், எக் காலத்துள்ளும்;
அறிவு ஒண் கதிர் வாள் உறை கழித்து, ஆனந்த மாக் கடவி,
எறியும் பிறப்பை, எதிர்ந்தார் புரள, இரு நிலத்தே.
8.141
8 st/nd Thirumurai
Song # 10
மாணிக்க வாசகர்
திருவாசகம்
செறியும் இப் பிறப்பு, இறப்பு, இவை நினையாது, செறி குழலார் செய்யும்
கிறியும், கீழ்மையும், கெண்டை அம் கண்களும், உன்னியே கிடப்பேனை,
இறைவன், எம்பிரான், எல்லை இல்லாத தன் இணை மலர்க் கழல் காட்டி,
அறிவு தந்து, எனை ஆண்டுகொண்டு, அருளிய அற்புதம் அறியேனே!
10.806
10 st/nd Thirumurai
Song # 3
திருமூலர்
திருமந்திரம்
செறியுங் கிரியை சிவதத் துவமாம்
பிறிவில் சுகயோகம் பேரருள் கல்வி
குறிதற் றிருமேனி குணம்பல ஆகும்
அறிவில் சராசரம் அண்டத் தளவே.
11.006
11 st/nd Thirumurai
Song # 85
சேரமான் பெருமாள் நாயனார்
பொன்வண்ணத்தந்தாதி
செறிவளை யாய்நீ வரையல்
குலநலம் கல்விமெய்யாம்
இறையவன் தாமரைச் சேவடிப்
போதென்றெல் லோருமேத்தும்
நிறையுடை நெஞ்சிது வேண்டிற்று
வேண்டிய நீசர்தம்பால்
கறைவளர் கண்டனைக் காணப்
பெரிதுங் கலங்கியதே.
12.080
12 st/nd Thirumurai
Song # 39
சேக்கிழார்
இலை மலிந்த சருக்கம்
செறிந்தவர் தம்மை நீக்கி
அன்பர்முன் தொழுது சென்றீது
அறிந்திலே னடியேன் அங்குக்
கேட்டதொன் றதுதா னிற்க
மறிந்தஇக் களிற்றின் குற்றம்
பாகரோ டிதனை மாள
எறிந்ததே போது மோதான்
அருள்செயு மென்று நின்றார்.
12.180
12 st/nd Thirumurai
Song # 9
சேக்கிழார்
மும்மையால் உலகாண்ட சருக்கம்
செறிவலித்திண் கடைஞர்வினைச்
செயல்புரிவை கறையாமக்
குறியளக்க அழைக்குஞ்செங்
குடுமிவா ரணச்சேக்கை
வெறிமலர்த்தண் சினைக்காஞ்சி
விரிநீழல் மருங்கெல்லாம்
நெறிகுழற்புன் புலைமகளிர்
நெற்குறுபாட் டொலிபரக்கும்.
12.290
12 st/nd Thirumurai
Song # 46
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
செறிபுன் சடையார் திருவாரூர்த்
திருப்பங் குனிஉத் திரத்திருநாள்
குறுக வரலும் பரவையார்
கொடைக்கு விழாவிற் குறைவறுக்க
நிறையும் பொன்கொண் டணைவதற்கு
நினைந்து நம்பி திருப்புகலூர்
இறைவர் பாதம் பணியவெழுந்
தருளிச் சென்றங் கெய்தினார்.
12.520
12 st/nd Thirumurai
Song # 7
சேக்கிழார்
கறைக் கண்டன் சருக்கம்
செறிவுண்டென்று திருத்தொண்டில் சிந்தை செல்லும் பயனுக்குக் குறியுண்டு ஒன்றாகிலும் குறையொன் றில்லோம் நிரையும் கருணையினால் வெறியுண் சோலைத் திருமுருகன் பூண்டி வேடர் வழி பறிக்கப் பறியுண்டவர்எம் பழவினை வேர் பறிப்பார் என்னும் பற்றாலே.
This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list