சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் சே
சேய்     சேற்று     சே     சேர்ந்திருந்     சேவடி     சேருறு     சேவிக்கும்     சேர்ந்த     சேவிப்     சேர்ந்தவர்     சேயன்     சேருஞ்     சேனா     சேரும்     சேர்வும்     சேர்கின்ற     சேய்தந்த     சேண்தில்லை     சேரற்குத்     சேதிநன்     சேணார்     சேட்டாருங்     சேனையும்     சேறணிதண்     சேவடியில்     சேணிலவு     சேர்ந்து     சேணுயர்     சேர்த்தும்     சேதுவின்கண்     சேணுயர்ந்த     சேணுயரும்     சேயிழையார்     சேரர்     சேவித்     சேரமான்     சேர     சேம     சேர்த்தானே!     சேலின்     சேடு     சேர்ப்பது     சேடர்     சேறு     சேண்     சேற்றின்     சேய     சேடனார்     சேந்தர்     சேவகன்     சேரக்     சேணிற்     சேணுந்     சேயே     சேறான்     சேவேந்து     சேர்வன்கொ     சேயிழை     சேலு     சேவிக்க     சேலும்    
1.048   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சேய் அடைந்த சேய்ஞலூரில் செல்வன சீர் பரவி,
தோய் அடைந்த தண்வயல் சூழ் தோணி புரத் தலைவன்-
சாய் அடைந்த ஞானம் மல்கு சம்பந்தன்-இன் உரைகள்
வாய் அடைந்து பாட வல்லார் வான் உலகு ஆள்பவரே.

1.060   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சேற்று எழுந்த மலர்க்கமலச் செஞ்சாலிக் கதிர் வீச,
வீற்றிருந்த அன்னங்காள்! விண்ணோடு மண் மறைகள்
தோற்றுவித்த திருத் தோணிபுரத்து ஈசன், துளங்காத
கூற்று உதைத்த, திருவடியே கூடுமா கூறீரே!

1.129   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சே உயரும் திண் கொடியான் திருவடியே
சரண் என்று சிறந்த அவன்பால்
நா இயலும் மங்கையொடு நான்முகன்
தான் வழிபட்ட நலம் கொள் கோயில்
வாவிதொறும் வண்கமலம் முகம் காட்ட,
செங்குமுதம் வாய்கள் காட்ட,
காவி இருங்கருங்குவளை கரு நெய்தல்
கண் காட்டும் கழுமலமே.

2.001   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சேம வல் மதில் பொன் அணி மாளிகை சேண் உயர்
பூ மணம் கமழும் பொழில் சூழ்தரு பூந்தராய்,
சோமனும் அரவும் தொடர் செஞ்சடையீர்! சொலீர்
காமன் வெண்பொடிஆகக் கடைக்கண் சிவந்ததே?

2.015   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சேர்த்தானே! தீவினை தேய்ந்து அறத் தேவர்கள்
ஏத்தானே! ஏத்தும் நல் மா முனிவர்க்கு இடர்
காத்தானே! கார் வயல் சூழ் திருக்காறாயில்
ஆர்த்தானே! என்பவர்மேல் இடர் அடராவே.

2.050   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சேலின் நேரன கண்ணி வெண் நகை மான்விழித் திருமாதைப் பாகம் வைத்து
ஏல மா தவம் நீ முயல்கின்ற வேடம் இது என்?
பாலின் நேர் மொழி மங்கைமார் நடம் ஆடி, இன் இசை
பாட, நீள் பதி
ஆலை சூழ் கழனி ஆமாத்தூர் அம்மானே!

2.105   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சேடு உலாவிய கங்கையைச் சடை இடைத் தொங்கவைத்து
அழகு ஆக
நாடு உலாவிய பலி கொளும் நாதனார், நலம் மிகு
கீழ்வேளூர்ப்
பீடு உலாவிய பெருமையர், பெருந்திருக்கோயிலுள் பிரியாது
நீடு உலாவிய நிமலனைப் பணிபவர் நிலை மிகப்
பெறுவாரே.

3.007   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சேர்ப்பது திண் சிலை மேவினானும், திகழ் பாலன்மேல்
வேர்ப்பது செய்த வெங்கூற்று உதைத்தானும் வேள்விப்புகை
போர்ப்பது செய்து அணி மாடம் ஓங்கும் புகலி(ந்) நகர்,
பார்ப்பதியோடு உடன் வீற்றிருந்த பரமன் அன்றே!

3.009   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சேடர் விண்ணோர்கட்கு, தேவர், நல் மூஇருதொல்-நூலர்,
வீடர், முத்தீயர், நால்வேதத்தர் வீழிமிழலையார்;
காடு அரங்கா, உமை காண, அண்டத்து இமையோர் தொழ,
நாடகம் ஆடியை ஏத்த வல்லார் வினை நாசமே.

3.025   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சேடர் தேவன்குடித் தேவர் தேவன்தனை,
மாடம் ஓங்கும் பொழில் மல்கு தண் காழியான்-
நாட வல்ல தமிழ் ஞானசம்பந்தன
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை ஆம், பாவமே.

3.053   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சேறு பட்ட தண்வயல் சென்றுசென்று, சேண் உலாவு
ஆறு பட்ட நுண் துறை ஆனைக்காவில் அண்ணலார்
நீறு பட்ட மேனியார், நிகர் இல் பாதம் ஏத்துவார்
வேறுபட்ட சிந்தையார்; விண்ணில் எண்ண வல்லரே.

3.064   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சேண் இயலும் நெடுமாலும் திசைமுகனும் செரு எய்தி,
காண் இயல்பை அறிவு இலராய், கனல் வண்ணர் அடி இணைக்கீழ்
நாணி அவர் தொழுது ஏத்த, நாணாமே அருள் செய்து
பேணிய எம்பெருமானார் பெருவேளூர் பிரியாரே.

3.110   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சேண் உலாம் மதில் வேணு மண் உளோர் காண மன்றில்
ஆர் வேணுநல்புரத்
தாணுவின் கழல் பேணுகின்றவர் ஆணி ஒத்தவரே.

3.121   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சேற்றின் ஆர் பொய்கைத் தாமரையானும், செங்கண்மால், இவர் இருகூறாத்
தோற்றினார், தோற்றத் தொன்மையை அறியார், துணைமையும்
பெருமையும் தம்மில்
சாற்றினார், சாற்றி, ஆற்றலோம் என்ன, சரண் கொடுத்து, அவர் செய்த பாவம்
பாற்றினார்போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே.

4.019   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சேய உலகமும் செல் சார்வும் ஆனானை,
மாயப் போர் வல்லானை, மாலை தாழ் மார்பானை,
வேய் ஒத்த தோளியர் தம் மென் முலை மேல்-தண் சாந்தின்
ஆயத்து இடையானை,-நான் கண்டது ஆரூரே.

4.031   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சேலின் நேர்-அனைய கண்ணார் திறம் விட்டு, சிவனுக்கு அன்பு ஆய்,
பாலும் நல்-தயிர் நெய்யோடு பலபல ஆட்டி, என்றும்
மாலினைத் தவிர நின்ற மார்க்கண்டற்கு ஆக அன்று
காலனை உதைப்பர் போலும்-கடவூர்வீரட்டனாரே.

5.042   5 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சேடனார் உறையும் செழு மாமலை
ஓடி அங்கு எடுத்தான் முடிபத்து இற
வாட ஊன்றி, மலர் அடி வாங்கிய
வேடனார் உறை வேட்களம் சேர்மினே!

6.088   6 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சேர்ந்து ஓடும் மணிக் கங்கை சூடினானை, செழு மதியும் பட அரவும் உடன் வைத்தானை,
சார்ந்தோர்கட்கு இனியானை, தன் ஒப்பு இல்லாத் தழல்   உருவை, தலைமகனை, தகை நால்வேதம்
ஓர்ந்து ஓதிப் பயில்வார் வாழ்தரும் ஓமாம்புலியூர் உள்ளானை, கள்ளாத அடியார் நெஞ்சில்
சேர்ந்தானை, வடதளி எம் செல்வன் தன்னை, சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே!.

7.019   7 st/nd Thirumurai   Song # 11   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
சேரும் புகழ்த் தொண்டர் செய்கை அறாத் திரு நின்றியூரில்
சீரும் சிவகதி ஆய் இருந்தானைத் திரு நாவல் ஆ-
ரூரன் உரைத்த உறு தமிழ் பத்தும் வல்லார் வினை போய்,
பாரும் விசும்பும் தொழ, பரமன்(ன்) அடி கூடுவரே .

7.038   7 st/nd Thirumurai   Song # 5   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
சேந்தர் தாய் மலைமங்கை திருநிறமும் பரிவும் உடையானை, அதிகை மா நகருள்   வாழ்பவனை,
கூந்தல் தாழ் புனல் மங்கை குயில் அன்ன மொழியாள் சடை இடையில் கயல் இனங்கள்   குதி கொள்ளக் குலாவி,
வாய்ந்த நீர் வர உந்தி மராமரங்கள் வணக்கி, மறிகடலை இடம் கொள்வான் மலை ஆரம் வாரி
ஏந்து நீர் எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை, இறைபோதும் இகழ்வன் போல் யானே! .

8.102   8 st/nd Thirumurai   Song # 17   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
சேவகன் ஆகி, திண் சிலை ஏந்தி,
பாவகம் பல பல காட்டிய பரிசும்;
கடம்பூர் தன்னில் இடம் பெற இருந்தும்;
ஈங்கோய் மலையில் எழில் அது காட்டியும்;
ஐயாறு அதனில் சைவன் ஆகியும்;

8.145   8 st/nd Thirumurai   Song # 9   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
சேரக் கருதி, சிந்தனையைத் திருந்த வைத்து, சிந்திமின்;
போரில் பொலியும் வேல் கண்ணாள் பங்கன், புயங்கன், அருள் அமுதம்
ஆரப் பருகி, ஆராத ஆர்வம் கூர அழுந்துவீர்!
போரப் புரிமின் சிவன் கழற்கே, பொய்யில் கிடந்து புரளாதே.

8.202   8 st/nd Thirumurai   Song # 5   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
சேணிற் பொலிசெம்பொன் மாளிகைத்
   தில்லைச்சிற் றம்பலத்து
மாணிக்கக் கூத்தன் வடவான்
   கயிலை மயிலைமன்னும்
பூணிற் பொலிகொங்கை யாவியை
   யோவியப் பொற்கொழுந்தைக்
காணிற் கழறலை கண்டிலை
   மென்றோட் கரும்பினையே.

8.224   8 st/nd Thirumurai   Song # 10   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
சேணுந் திகழ்மதிற் சிற்றம்
   பலவன்தெண் ணீர்க்கடல்நஞ்
சூணுந் திருத்து மொருவன்
   திருத்தும் உலகினெல்லாங்
காணுந் திசைதொறுங் கார்க்கய
   லுஞ்செங் கனியொடுபைம்
பூணும் புணர்முலை யுங்கொண்டு
   தோன்றுமொர் பூங்கொடியே.

8.225   8 st/nd Thirumurai   Song # 19   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
சேயே யெனமன்னு தீம்புன
   லூரன்திண் டோளிணைகள்
தோயீர் புணர்தவந் தொன்மைசெய்
   தீர்சுடர் கின்றகொலந்
தீயே யெனமன்னு சிற்றம்
   பலவர்தில் லைந்நகர்வாய்
வீயே யெனஅடி யீர்நெடுந்
   தேர்வந்து மேவினதே.

8.225   8 st/nd Thirumurai   Song # 39   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
சேறான் திகழ்வயற் சிற்றம்
   பலவர்தில் லைநகர்வாய்
வேறான் திகழ்கண் இளையார்
   வெகுள்வர்மெய்ப் பாலன்செய்த
பாறான் திகழும் பரிசினம்
   மேவும் படிறுவவேங்
காறான் தொடல்தொட ரேல்விடு
   தீண்டலெங் கைத்தலமே.

9.003   9 st/nd Thirumurai   Song # 8   திருமாளிகைத் தேவர்   திருவிசைப்பா  
சேவேந்து வெல்கொடி யானே என்னும்
   சிவனே என்சேமத் துணையே என்னும்மாவேந்து சாரல் மகேந்திரத்தின்
   வளர்நாய கா இங்கே வாராய் என்னும்
பூவேந்தி மூவா யிரவர் தொழப்
   புகழேந்து மன்று பொலிய நின்ற
கோவே என் னும் குணக் குன்றே என்னும்
   குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.
 

9.019   9 st/nd Thirumurai   Song # 10   பூந்துருத்தி நம்பி காடநம்பி   திருவிசைப்பா  
சேடர் உறைதில்லைச் சிற்றம்
   பலத்தான்றன்
ஆடல் அதிசயத்தை ஆங்கறிந்து
   பூந்துருத்திக்
காடன் தமிழ்மாலை பத்துங்
   கருத்தறிந்து
பாடும் இவைவல்லார் பற்றுநிலை
   பற்றுவரே. 

9.025   9 st/nd Thirumurai   Song # 8   திருவாலியமுதனார்   திருவிசைப்பா  
சேர்வன்கொ லோஅன்னைமீர் திக
   ழும்மலர்ப் பாதங்களை
ஆர்வங் கொளத்தழுவி அணி
   நீறென் முலைக்கணியச்
சீர்வங்கம் வந்தணவுந் தில்லை
   மாநகர்ச் சிற்றம்பலத்
தேர்வங்கை மான்மறியன் எம்
   பிரான்போல் நேசனையே.

9.026   9 st/nd Thirumurai   Song # 8   புருடோத்தம நம்பி   திருவிசைப்பா  
சேயிழை யார்க்கினி வாழ்வரிது
   திருச்சிற்றம் பலத்தெங்கள் செல்வ னேநீ
தாயினும் மிகநல்லை யென்ற டைந்தேன்
   தனிமையை நினைகிலை சங்க ராஉன்
பாயிரும் புலியத ளின்னு டையும்
   பையமே லெடுத்தபொற் பாத முங்கண்
டேயிவள் இழந்தது சங்கம் ஆவா
   எங்களை ஆளுடை ஈசனேயோ. 

9.028   9 st/nd Thirumurai   Song # 1   சேதிராயர்   திருவிசைப்பா  
சேலு லாம்வயல் தில்லையு ளீர்உமைச்
சால நாள் அயற் சார்வதி னால்இவள்
வேலை யார்விட முண்டுகந் தீரென்று
மால தாகுமென் வாணுதலே.

9.029   9 st/nd Thirumurai   Song # 6   சேந்தனார்   திருப்பல்லாண்டு  
சேவிக்க வந்தயன் இந்திரன் செங்கண்மால்
   எங்குந் திசைதிசையன
கூவிக் கவர்ந்து நெருங்கிக் குழாங்குழா
   மாய்நின்று கூத்தாடும்
ஆவிக் கமுதைஎன் ஆர்வத் தனத்தினை
   அப்பனை ஒப்பமரர்
பாவிக்கும் பாவகத் தப்புறத் தானுக்கே
   பல்லாண்டு கூறுதுமே.

9.029   9 st/nd Thirumurai   Song # 8   சேந்தனார்   திருப்பல்லாண்டு  
சேலும் கயலும் திளைக்குங்கண் ணார்இளங்
   கொங்கையிற் செங்குங்குமம்
போலும் பொடியணி மார்பிலங் கும்மென்று
   புண்ணியர் போற்றிசைப்ப
மாலும் அயனும் அறியா நெறிதந்து
   வந்தென் மனத்தகத்தே
பாலும் அமுதமும் ஒத்துநின் றானுக்கே
   பல்லாண்டு கூறுதுமே.

10.100   10 st/nd Thirumurai   Song # 18   திருமூலர்   திருமந்திரம்  
சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச்
சேர்ந்திருந் தேன்சிவன் ஆவடு தண்டுறை
சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலில்
சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே.

10.208   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
சேவடி ஏத்துஞ் செறிவுடை வானவர்
மூவடி தாவென் றவனும் முனிவரும்
பாவடி யாலே பதஞ்செய் பிரமனும்
தாவடி யிட்டுத் தலைப்பெய்யு மாறே. 

10.310   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
சேருறு காலந் திசைநின்ற தேவர்கள்
ஆரிவன் என்ன அரனாம் இவனென்ன
ஏருறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ளக்
காருறு கண்டனை மெய்கண்ட வாறே.

10.402   10 st/nd Thirumurai   Song # 46   திருமூலர்   திருமந்திரம்  
சேவிக்கும் மந்திரம் செல்லும் திசைபெற
ஆவிக்குள் மந்திரம் ஆதார மாவன
பூவுக்குள் மந்திரம் போக்கற நோக்கிடில்
ஆவிக்குள் மந்திரம் அங்குச மாமே.

10.404   10 st/nd Thirumurai   Song # 22   திருமூலர்   திருமந்திரம்  
சேர்ந்த கலைகளும் சேரும்இக் குண்டமும்
ஆர்ந்த திசைகளும் அங்கே அமர்ந்திடும்
பாய்ந்தஐம் பூதமும் பார்க்கின்ற வன்னியைக்
காய்ந்தவர் என்றும் கலந்தவர் தாமே.

10.412   10 st/nd Thirumurai   Song # 12   திருமூலர்   திருமந்திரம்  
சேவிப் பதன்முன்னே தேவியைஉத் வாபனத்தால்
பாவித் திதய கமலம் பதிவித்தங்
கியாவர்க்கு மெட்டா இயந்திர ராசனை
நீவைத்துச் சேமி நினைந்த தருமே.13,

10.413   10 st/nd Thirumurai   Song # 15   திருமூலர்   திருமந்திரம்  
சேவடி சேர்ந்து செறிய இருந்தவர்
நாவடி யுள்ளே நவின்றுநின் றேத்துவர்
பூவடி இட்டுப் பொலிய இருந்தவர்
மாவடி காணும் வகையறி வாரே.

10.413   10 st/nd Thirumurai   Song # 30   திருமூலர்   திருமந்திரம்  
சேர்ந்தவர் என்றும் திசையொளி யானவர்
காய்ந்தெழும் மேல்வினை காணகி லாதவர்
பாய்ந்தெழும் உள்ளொளி பாரிற் பரந்தது
மாய்ந்தது காரிருள் மாறொளி தானே.

10.517   10 st/nd Thirumurai   Song # 11   திருமூலர்   திருமந்திரம்  
சேயன் அணியன் பிணிஇலன் பேர்நந்தி
தூயன் துளக்கற நோக்கவல் லார்கட்கு
மாயன் மயக்கிய மானுட ராம்அவர்
காயம் விளைக்கும் கருத்தறி யார்களே.

10.813   10 st/nd Thirumurai   Song # 34   திருமூலர்   திருமந்திரம்  
சேருஞ் சிவம்ஆனார் ஐம்மலம் தீர்ந்தவர்
ஓரொன் றிலார்ஐம் மலஇருள் உற்றவர்
பாரின்கண் விண்நர கம்புகும் பான்மையர்
ஆரும்கண்(டு) ஓரார் அவைஅருள் அன்றே.

11.008   11 st/nd Thirumurai   Song # 36   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
சேனா பதிமயில்மேல் முன்செல்ல யானைமேல்
ஆனாப்போர் இந்திரன் பின்படர ஆனாத

11.016   11 st/nd Thirumurai   Song # 32   நக்கீரதேவ நாயனார்   போற்றித் திருக்கலி வெண்பா  
சேனா பதியாகச் செம்பொன் முடிகவித்து
வானாள வைத்த வரம்போற்றி மேனாள்

11.023   11 st/nd Thirumurai   Song # 64   பரணதேவ நாயனார்   சிவபெருமான் திருவந்தாதி  
சேரும் பிரான்நாமம் சிந்திக்க வல்லீரேல்
சேரும் பிரான்நாமஞ் சிந்திக்கச் சேரும்
மலையான் மகளை மகிழ்ந்தாரூர் நின்றான்
மலையான் மகளை மகிழ்ந்து.

11.023   11 st/nd Thirumurai   Song # 92   பரணதேவ நாயனார்   சிவபெருமான் திருவந்தாதி  
சேர்வும் உடையார் செழுங்கொன்றைத் தாரார்நஞ்
சேர்வும் உடையர் உரவடையர் சேரும்
திருச்சாய்க்காட் டாடுவரேல் செய்தக்க என்றும்
திருச்சாய்க்காட் டேநின் உருவு.

11.023   11 st/nd Thirumurai   Song # 99   பரணதேவ நாயனார்   சிவபெருமான் திருவந்தாதி  
சேர்கின்ற சிந்தை சிதையாமல் செய்வானே
சேர்கின்ற சிந்தை சிதையாமல் சேர்கின்றோம்
ஒற்றியூ ரானே உறவாரும் இல்லைஇனி
ஒற்றியூ ரானே உறும்.

11.029   11 st/nd Thirumurai   Song # 20   பட்டினத்துப் பிள்ளையார்   திருஏகம்பமுடையார் திருவந்தாதி  
சேய்தந்த அம்மை உமைகண
வன்திரு ஏகம்பத்தான்
தாய்தந்தை யாயுயிர் காப்போன்
கயிலைத் தயங்கிருள்வாய்
வேய்தந்த தோளிநம் ஊச
லொடும்விரை வேங்கைதன்னைப்
பாய்தந்து பூசலுண் டாங்கொண்ட
தோசைப் பகடுவந்தே.

11.032   11 st/nd Thirumurai   Song # 48   நம்பியாண்டார் நம்பி   கோயில் திருப்பண்ணியர் விருத்தம்  
சேண்தில்லை மாநகர்த் திப்பியக்
கூத்தனைக் கண்டுமன்பு
பூண்டிலை நின்னை மறந்திலை
யாங்கவன் பூங்கழற்கே
மாண்டிலை யின்னம் புலன்வழி
யேவந்து வாழ்ந்திடுவான்
மீண்டனை யென்னையென் செய்திட
வோசிந்தை நீவிளம்பே.

11.033   11 st/nd Thirumurai   Song # 46   நம்பியாண்டார் நம்பி   திருத்தொண்டர் திருவந்தாதி  
சேரற்குத் தென்னா வலர்பெரு
மாற்குச் சிவனளித்த
வீரக் கடகரி முன்புதன்
பந்தி யிவுளிவைத்த
வீரற்கு வென்றிக் கருப்புவில்
வீரனை வெற்றிகொண்ட
சூரற் கெனதுள்ளம் நன்றுசெய்
தாயின்று தொண்டுபட்டே.

11.034   11 st/nd Thirumurai   Song # 99   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி  
சேரும் புகழ்த்திரு ஞானசம்
பந்தனை யானுரைத்த
பேருந் தமிழ்ப்பா வினவவல்
லவர்பெற்ற வின்புலகங்
காருந் திருமுடற் ராயரு
ளாயென்று கைதொழுவர்
நீரும் மலரும் கொளாநெடு
மாலும் பிரமனுமே.

12.050   12 st/nd Thirumurai   Song # 1   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
சேதிநன் னாட்டு நீடு
திருக்கோவ லூரின் மன்னி
மாதொரு பாகர் அன்பின்
வழிவரு மலாடர் கோமான்
வேதநன் னெறியின் வாய்மை
விளங்கிட மேன்மை பூண்டு
காதலால் ஈசர்க் கன்பர்
கருத்தறிந் தேவல் செய்வார்.
12.060   12 st/nd Thirumurai   Song # 8   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
சேணார் மேருச் சிலைவளைத்த
சிவனா ரடியார் திருக்கூட்டம்
பேணா தேகும் ஊரனுக்கும்
பிரானாந் தன்மைப் பிறைசூடிப்
பூணா ரரவம் புனைந்தார்க்கும்
புறகென் றுரைக்க மற்றவர்பாற்
கோணா வருளைப் பெற்றார்மற்
றினியார் பெருமை கூறுவார்.
12.090   12 st/nd Thirumurai   Song # 31   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
சேட்டாருங் கங்குல்
புலர்காலைத் தீயோனும்
நாட்டாரைக் கொல்லாதே
நாமிருவேம் வேறிடத்து
வாட்டாயங் கொள்போர்
மலைக்க வருகவெனத்
தோட்டார்பூந் தாரார்க்குச்
சொல்லி வரவிட்டான்.
12.110   12 st/nd Thirumurai   Song # 27   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
சேனையும் ஆனை பூண்ட
திரளுமெய்த் தெழாமை நோக்கி
யானுமிவ் விளைப்புற் றெய்க்கும்
இதுபெற வேண்டு மென்று
தேனலர் கொன்றை யார்தம்
திருமேனிப் பூங்கச் சேய்ந்த
மானவன் கயிறு பூண்டு
கழுத்தினால் வருந்த லுற்றார்.
12.120   12 st/nd Thirumurai   Song # 4   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
சேறணிதண் பழனவயல்
செழுநெல்லின் கொழுங்கதிர்போய்
வேறருகு மிடைவேலிப்
பைங்கமுகின் மிடறுரிஞ்சி
மாறெழுதிண் குலைவளைப்ப
வண்டலைதண் டலையுழவர்
தாறரியும் நெடுங்கொடுவாள்
அனையவுள தனியிடங்கள்.
12.140   12 st/nd Thirumurai   Song # 18   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
சேவடியில் தொடுதோலும்
செங்கையினில் வெண்கோலும்
மேவுமிசை வேய்ங்குழலும்
மிகவிளங்க வினைசெய்யும்
காவல்புரி வல்லாயர்
கன்றுடைஆன் நிரைசூழப்
பூவலர்தார்க் கோவலனார்
நிரைகாக்கப் புறம்போந்தார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 347   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
சேணிலவு திருமலையில்
திருப்பணியா யினசெய்து
தாணுவினை அம்மலைமேல்
தாள்பணிந்த குறிப்பினால்
பேணுதிருக் கயிலைமலை
வீற்றிருந்த பெருங்கோலம்
காணுமது காதலித்தார்
கலைவாய்மைக் காவலனார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 387   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
சேர்ந்து விருப்பொடும் புக்குத்
திருநட மாளிகை முன்னர்ச்
சார்ந்து வலங்கொண் டிறைஞ்சித்
தம்பெரு மான்திரு முன்பு
நேர்ந்த பரிவொடுந் தாழ்ந்து
நிறைந்தொழி யாஅன்பு பொங்க
ஆர்ந்தகண் ணீர்மழை தூங்க
அயர்வுறுந் தன்மைய ரானார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 550   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சேணுயர் மாடப் புகலி யுள்ளார்
திருஞான சம்பந்தப் பிள்ளை யாரைக்
காணும் விருப்பிற் பெருகு மாசை
கைம்மிகு காதல் கரை யிகப்பப்
பூணும் மனத்தொடு தோணி மேவும்
பொருவிடை யார்மலர்ப் பாதம் போற்றி
வேணு புரத்தை யகன்று போந்து
வீழி மிழலையில் வந்த ணைந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 668   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சேர்த்தும் இன்னிசைப் பதிகமுந்
திருக்கடைக் காப்புச்
சார்த்தி நல்லிசைத் தண்தமிழ்ச்
சொல்மலர் மாலை
பேர்த்தும் இன்புறப் பாடிவெண்
பிறையணி சென்னி
மூர்த்தி யார்கழல் பரவியே
திருமுன்றில் அணைய.
12.280   12 st/nd Thirumurai   Song # 889   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சேதுவின்கண் செங்கண்மால் பூசை செய்த
சிவபெருமான் தனைப்பாடிப் பணிந்து போந்து
காதலுடன் அந்நகரில் இனிது மேவிக்
கண்ணுதலான் திருத்தொண்டர் ஆனார்க் கெல்லாம்
கோதில்புகழ்ப் பாண்டிமா தேவி யார்மெய்க்
குலச்சிறையார் குறைவறுத்துப் போற்றிச் செல்ல
நாதர்தமை நாள்தோறும் வணங்கி ஏத்தி
நளிர்வேலைக் கரையில்நயந் திருந்தா ரன்றே.
12.280   12 st/nd Thirumurai   Song # 990   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சேணுயர்ந்த வாயில்நீடு
சீர்சொள்சண்பை மன்னனார்
வாண்நிலாவு நீற்றணி
விளங்கிட மனத்தினில்
பூணுமன்பர் தம்முடன்
புகுந்திடப் புறத்துளோர்
காணும்ஆசை யிற்குவித்த
கைந்நிரை யெடுத்தனர்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1149   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சேணுயர்ந்த திருத்தோணி
வீற்றிருந்த சிவபெருமான்
தாள்நினைந்த ஆதரவின்
தலைப்பாடு தனையுன்னி
நீள்நிலைக்கோ புரம்அணைந்து
நேரிறைஞ்சிப் புக்கருளி
வாள்நிலவு பெருங்கோயில்
வலங்கொண்டு முன்பணிந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1173   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சேணுயரும் மாடங்கள்
திருப்பெருகு மண்டபங்கள்
நீணிலைய மாளிகைகள்
நிகரில்அணி பெறவிளக்கிக்
காணவரு கைவண்ணம்
கவின்ஓங்கும் படியெழுதி
வாணிலவு மணிக்கடைக்கண்
மங்கலக்கோ லம்புனைந்து.
12.290   12 st/nd Thirumurai   Song # 255   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சேயிழையார் திருப்பள்ளி
யெழுச்சிக்கு மலர்தொடுக்கும்
தூயபணிப் பொழுதாகத்
தொழில்புரிவா ருடன்போதத்
கோயிலின்முன் காலமது
வாகவே குறித்தணைந்தார்
ஆயசப தஞ்செய்ய
வரவுபார்த் தாரூரர்.
12.370   12 st/nd Thirumurai   Song # 19   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
சேரர் பெருமான் தொழக்கண்டு
சிந்தை கலங்கி முன்வணங்கி
யார்என் றடியே னைக்கொண்ட
தடியேன் அடிவண் ணானென்னச்
சேரர் பிரானு மடிச்சேரன்
அடியேன் என்று திருநீற்றின்
வார வேடம் நினைப்பித்தீர்
வருந்தா தேகும் எனமொழிந்தார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 34   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
சேரர் பெருமான் அருள்செய்யத்
திருந்து மதிநூல் மந்திரிகள்
சாரு மணிமா ளிகையுள்ளால்
தனங்கள் எல்லாம் நிறைந்தபெரும்
சீர்கொள் நிதிய மெண்ணிறந்த
வெல்லாம் பொதிசெய் தாளின்மேல்
பாரில் நெருங்க மிசையேற்றிக்
கொண்டு வந்து பணிந்தார்கள்.
12.370   12 st/nd Thirumurai   Song # 74   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
சேரர் பெருமான் எழுந்தருளி
அமுது செய்யச் செய்தவத்தால்
தாரின் மலிபூங் குழல்மடவாய்
தாழா தமுது செய்வியெனப்
பாரின் மலிசீர் வன்றொண்டர்
அருளிச் செய்யப் பரிகலங்கள்
ஏரின் விளங்கத் திருக்கரத்தில்
இரண்டு படியா ஏற்றுதலும்.
12.370   12 st/nd Thirumurai   Song # 82   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
சேரர் பிரானும் ஆரூரர்
தம்மைப் பிரியாச் சிறப்பாலும்
வாரம் பெருகத் தமக்கன்று
மதுரை யால வாயமர்ந்த
வீரர் அளித்த திருமுகத்தால்
விரும்பும் அன்பில் வணங்குதற்குச்
சார வெழுந்த குறிப்பாலுந்
தாமும் உடனே செலத்துணிந்தார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 84   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
சேவித் தணையும் பரிசனங்கள்
சூழத் திருவா ரூர்இறைஞ்சிக்
காவிற் பயிலும் புறம்பணையைக்
கடந்து போந்து கீழ்வேளூர்
மேவிப் பரமர் கழல்வணங்கிப்
போந்து வேலைக் கழிக்கானல்
பூவில் திகழும் பொழில்நாகை
புகுந்து காரோ ணம்பணிந்தார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 91   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
சேரமான் தோழரும்அச்
சேரர்பிரா னும்பணிப்பூண்
ஆரமார் பரைமதுரை
ஆலவா யினில்வணங்க
வாரமா வந்தணைய
வழுதியார் மனக்காதல்
கூரமா நகர்கோடித்
தெதிர்கொண்டு கொடுபுக்கார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 153   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
சேர ருடனே திருவமுது
செய்த பின்பு கைகோட்டி
ஆரம் நறுமென் கலவைமான்
மதச்சாந் தாடை யணிமணிப்பூண்
ஈர விரைமென் மலர்ப்பணிகள்
இனைய முதலா யினவருக்கம்
சார வெடுத்து வன்தொண்டர்ச்
சாத்தி மிக்க தமக்காக்கி.
12.720   12 st/nd Thirumurai   Song # 35   சேக்கிழார்   வெள்ளானைச் சருக்கம்  
சேரர் தம்பிரான் தம்பிரான்
தோழர்தஞ் செயலறிந் தப்போதே
சார நின்றதோர் பரியினை
மிசைக்கொண்டு திருவஞ்சைக் களஞ்சார்வார்
வீர வெண்களிறு உகைத்துவிண்
மேற்செலும் மெய்த்தொண்டர் தமைக்கண்டார்
பாரில் நின்றிலர் சென்றதம்
மனத்தொடு பரியும்முன் செலவிட்டார்.
12.720   12 st/nd Thirumurai   Song # 48   சேக்கிழார்   வெள்ளானைச் சருக்கம்  
சேரர் காவலர் பரிவுடன்
கேட்பித்த திருவுலாப் புறங்கொண்டு
நாரி பாகரும் நலம்மிகு
திருவருள் நயப்புடன் அருள்செய்வார்
ஊர னாகிய ஆலால
சுந்தரன் உடனமர்ந் திருவீரும்
சார நங்கண நாதராம்
தலைமையில் தங்கும் என் றருள்செய்தார்.
12.720   12 st/nd Thirumurai   Song # 52   சேக்கிழார்   வெள்ளானைச் சருக்கம்  
சேரர் காவலர் விண்ணப்பம்
செய்யஅத் திருவுலாப் புறம்அன்று
சாரல் வெள்ளியங் கயிலையில்
கேட்டமா சாத்தனார் தரித்துஇந்தப்
பாரில் வேதியர் திருப்பிட
வூர்தனில் வெளிப்படப் பகர்ந்தெங்கும்
நார வேலைசூழ உலகினில்
விளங்கிட நாட்டினர் நலத்தாலே.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list