சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter: ( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் சோதி
சோதித்த
சோதி
சோதித்
சோதிமணி
சோதியை,
சோதியாய்த்
சோதியே!
2.014
2 st/nd Thirumurai
Song # 2
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சோதியை, சுண்ணவெண்நீறு அணிந்திட்ட எம்
ஆதியை, ஆதியும் அந்தமும் இல்லாத
வேதியை, வேதியர்தாம் தொழும் வெண்ணியில்
நீதியை, நினைய வல்லார் வினை நில்லாவே.
3.077
3 st/nd Thirumurai
Song # 2
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சோதி மிகு நீறு அது மெய் பூசி, ஒரு தோல் உடை புனைந்து, தெருவே
மாதர் மனைதோறும் இசை பாடி, வசி பேசும் அரனார் மகிழ்வு இடம்
தாது மலி தாமரை மணம் கமழ, வண்டு முரல் தண் பழனம் மிக்கு
ஓதம் மலி வேலை புடை சூழ் உலகில் நீடு உதவி
மாணிகுழியே.
4.037
4 st/nd Thirumurai
Song # 9
திருநாவுக்கரசர்
தேவாரம்
சோதி ஆய்ச் சுடரும் ஆனார்; சுண்ணவெண்சாந்து பூசி
ஓதி வாய் உலகம் ஏத்த, உகந்து தாம் அருள்கள் செய்வார்
ஆதி ஆய் அந்தம் ஆனார்-யாவரும் இறைஞ்சி ஏத்த,
நீதி ஆய் நியமம் ஆகி, நின்ற நெய்த்தானனாரே.
8.122
8 st/nd Thirumurai
Song # 9
மாணிக்க வாசகர்
திருவாசகம்
சோதியாய்த் தோன்றும் உருவமே! அரு ஆம் ஒருவனே! சொல்லுதற்கு அரிய
ஆதியே! நடுவே! அந்தமே! பந்தம் அறுக்கும் ஆனந்த மா கடலே!
தீது இலா நன்மைத் திருவருள் குன்றே! திருப்பெருந்துறை உறை சிவனே!
யாது நீ போவது ஓர் வகை? எனக்கு அருளாய் வந்து நின் இணை அடி தந்தே.
8.129
8 st/nd Thirumurai
Song # 1
மாணிக்க வாசகர்
திருவாசகம்
சோதியே! சுடரே! சூழ் ஒளி விளக்கே! சுரி குழல், பணை முலை மடந்தை
பாதியே! பரனே! பால் கொள் வெள் நீற்றாய்! பங்கயத்து அயனும், மால், அறியா
நீதியே! செல்வத் திருப்பெருந்துறையில் நிறை மலர்க் குருந்தம் மேவிய சீர்
ஆதியே! அடியேன் ஆதரித்து அழைத்தால், அதெந்துவே?' என்று, அருளாயே!
10.101
10 st/nd Thirumurai
Song # 54
திருமூலர்
திருமந்திரம்
சோதித்த பேரொளி மூன்றைந் தெனநின்ற
ஆதிக்கண் ஆவ தறிகிலர் ஆதர்கள்
நீதிக்கண் ஈசன் நெடுமால் அயன்என்று
பேதித் தவரைப் பிதற்றுகின் றாரே.
10.306
10 st/nd Thirumurai
Song # 5
திருமூலர்
திருமந்திரம்
சோதி இரேகைச் சுடரொளி தோன்றிடிற்
கோதில் பரானந்தம் என்றே குறிக்கொண்மின்
நேர்திகழ் கண்டத்தே நிலவொளி எய்தினால்
ஓதுவ தும்முடல் உன்மத்த மாமே.
10.309
10 st/nd Thirumurai
Song # 12
திருமூலர்
திருமந்திரம்
சோதித் தனிச்சுட ராய்நின்ற தேவனும்
ஆதியும் உள்நின்ற சீவனு மாகுமால்
ஆதிப் பிரமன் பெருங்கடல் வண்ணனும்
ஆதி அடிபணிந் தன்புறு வாரே.
10.614
10 st/nd Thirumurai
Song # 5
திருமூலர்
திருமந்திரம்
சோதி விசாகம் தொடர்ந்திரு தேள்நண்டு
ஓதிய நாளே உணர்வது தான் என்று
நீதியுள் நீர்மை நினைந்தவர்க் கல்லது.
ஆதியும் ஏதும் அறியகில் லானே.
12.000
12 st/nd Thirumurai
Song # 254
சேக்கிழார்
திருமலைச் சருக்கம்
சோதிமணி வேதிகைகள்
தூநறுஞ்சாந் தணிநீவிக்
கோதில்பொரி பொற்சுண்ணங்
குளிர்தரள மணிபரப்பித்
தாதவிழ்பூந் தொடைமாலைத்
தண்பந்தர் களுஞ்சமைத்து
வீதிகள்நுண் துகள்அடங்க
விரைப்பனிநீர் மிகத்தெளித்தார்.
12.270
12 st/nd Thirumurai
Song # 14
சேக்கிழார்
திருநின்ற சருக்கம்
சோதி விளக்கொன் றேற்றுதலும்
சுடர்விட் டெழுந்த ததுநோக்கி
ஆதி முதல்வர் அரனெறியார்
கோயில் அடைய விளக்கேற்றி
ஏதம் நினைந்த அருகந்தர்
எதிரே முதிருங் களிப்பினுடன்
நாதர் அருளால் திருவிளக்கு
நீரால் எரித்தார் நாடறிய.
12.280
12 st/nd Thirumurai
Song # 216
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
சோதி முத்தின் சிவிகைசூழ் வந்துபார்
மீது தாழ்ந்துவெண் ணீற்றொளி போற்றிநின்
றாதி யார்அரு ளாதலின் அஞ்செழுத்
தோதி யேறினார் உய்ய வுலகெலாம்.
12.370
12 st/nd Thirumurai
Song # 71
சேக்கிழார்
வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
சோதி மணிமா ளிகையின்கண்
சுடரும் பசும்பொற் கால்அமளி
மீது பெருமாள் தமையிருத்தி
நம்பி மேவி யுடனிருப்பக்
கோதில் குணத்துப் பரவையார்
கொழுந னார்க்குந் தோழர்க்கும்
நீதி வழுவா ஒழுக்கத்து
நிறைபூ சனைகள் முறையளித்தார்.
This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list