சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் ஞான
ஞானத்திரள்     ஞானத்     ஞானமி     ஞானியை     ஞானம்     ஞானி     ஞானத்தின்     ஞானிக்     ஞானத்தில்     ஞானச்     ஞானமில்     ஞான     ஞானிக்குச்     ஞானத்தி     ஞானிக்குக்     ஞானம்தன்     ஞான்ற     ஞானக்     ஞானவா     ஞானந்     ஞானமே     ஞானச்செய்     ஞானசம்     ஞானபோனகர்     ஞானஆ     ஞானபோ     ஞானமெய்ந்     ஞானத்தால்-தொழுவார்,    
1.069   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஞானத்திரள் ஆய் நின்ற பெருமான்-நல்ல அடியார் மேல்
ஊனத்திரளை நீக்குமதுவும் உண்மைப் பொருள் போலும்
ஏனத்திரளோடு இனமான் கரடி இழியும் இரவின்கண்
ஆனைத்திரள் வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே.

2.060   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஞானம் உணர்வான் காழி ஞானசம்பந்தன்
தேனும் வண்டும் இன் இசை பாடும் திருப் பாசூர்க்
கானம் உறைவார் கழல் சேர் பாடல் இவை வல்லார்,
ஊனம் இலராய், உம்பர் வானத்து உறைவாரே.

5.026   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஞானம் காட்டுவர்; நன்நெறி காட்டுவர்;
தானம் காட்டுவர், தம் அடைந்தார்க்கு எலாம்;
தானம் காட்டி, தம் தாள் அடைந்தார்கட்கு
வானம் காட்டுவர்போல்-வன்னியூரரே.

5.037   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஞானம் ஆகிய நன்கு உணர் ஆனையார்;
ஊனை வேவ உருக்கிய ஆனையார்;
வேனல் ஆனை உரித்து உமை அஞ்சவே,
கான ஆனைகண்டீர்-கடவூரரே.

5.091   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஞானத்தால்-தொழுவார், சிலஞானிகள்;
ஞானத்தால்-தொழுவேன், உனை நான், அலேன்;
ஞானத்தால்-தொழுவார்கள் தொழ, கண்டு,
ஞானத்தால் உனை, நானும் தொழுவனே.

8.109   8 st/nd Thirumurai   Song # 15   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
ஞானக் கரும்பின் தெளியை, பாகை, நாடற்கு அரிய நலத்தை, நந்தாத்
தேனை, பழச் சுவை ஆயினானை, சித்தம் புகுந்து தித்திக்க வல்ல
கோனை, பிறப்பு அறுத்து, ஆண்டுகொண்ட கூத்தனை; நாத் தழும்பு ஏற வாழ்த்தி,
பானல் தடம் கண் மடந்தை நல்லீர்! பாடி, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!

8.146   8 st/nd Thirumurai   Song # 1   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
ஞான வாள் ஏந்தும் ஐயர் நாதப் பறை அறைமின்;
மான மா ஏறும் ஐயர் மதி வெண் குடை கவிமின்;
ஆன நீற்றுக் கவசம் அடையப் புகுமின்கள்;
வான ஊர் கொள்வோம் நாம் மாயப் படை வாராமே.

10.100   10 st/nd Thirumurai   Song # 21   திருமூலர்   திருமந்திரம்  
ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு
ஊனமில் ஒன்பது கோடி யுகந்தன்னுள்
ஞானப்பா லாட்டி நாதனை அர்ச்சித்து
நானும் இருந்தேன்நற் போதியின் கீழே.

10.116   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
ஞானமி லாதார் சடைசிகை நூல்நண்ணி
ஞானிகள் போல நடிக்கின் றவர்தம்மை
ஞானிக ளாலே நரபதி சோதித்து
ஞானமுண் டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே.

10.223   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
ஞானியை நிந்திப் பவனும் நலனென்றே
ஞானியை வந்திப் பவனுமே நல்வினை
யான கொடுவினை தீர்வா ரவன்வயம்
போன போழுதே புகுஞ்சிவ போகமே. 

10.223   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
ஞானம் விளைந்தவர் நம்பிட மன்னவர்
சேனை வளைந்து திசைதொறுங் கைதொழ
ஊனை விளைத்திடும் உம்பர்தம் ஆதியை
ஏனை விளைந்தருள் எட்டலு மாமே. 24,

10.502   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
ஞானி புவியெழு நன்னூ லனைத்துடன்
மோன திசையும் முழுஎண்ணெண் சித்தியும்
ஏனை நிலமும் எழுதா மறையீறும்
கோனொடு தன்னையும் காணும் குணத்தனே. 3,

10.508   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை
ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று
ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவாம்
ஞானத்தின் மிக்கார் நரரின்மிக் காரே.

10.508   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
ஞானம் விழைந்தெழு கின்றதோர் சிந்தையுள்
யானம் விழைந்தெதி ரேகாண் வழிதொறும்
கூனல் மதிமண் டலத்தெதிர் நீர்கண்டு
ஊனம் அறுத்துநின் றொண்சுட ராகுமே.

10.508   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
ஞானிக் குடன்குணம் ஞானத்தில் நான்குமாம்
மோனிக் கிவைஒன்றும் கூடா முன் மோகித்து
மேனிற்ற லால்சத்தி வித்தை விளைத்திடும்
தானிக் குலத்தோர் சரியை கிரியையே.

10.508   10 st/nd Thirumurai   Song # 8   திருமூலர்   திருமந்திரம்  
ஞானத்தில் ஞானாதி நான்குமாம் ஞானிக்கு
ஞானத்தில் ஞானமே நான்என தென்னாமை
ஞானத்தில் யோகமே நாதாந்த நல்லொளி
ஞானக் கிரியையே நன்முத்தி நாடலே.

10.508   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
ஞானச் சமயமே நாடுந் தனைக்காண்டல்
ஞான விசேடமே நாடு பரோதயம்
ஞானநிர் வாணமே நன்றறி வானருள்
ஞானாபி டேகமே நற்குரு பாதமே. 9,

10.608   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
ஞானமில் லார்வேடம் பூண்டிந்த நாட்டிடை
ஈனம தேசெய் திரந்துண் டிருப்பினும்
ஆன நலங்கெடும் அப்புவி ஆதலால்
ஈனவர் வேடம் கழிப்பித்தல் இன்பமே.

10.611   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
ஞான மிலார் வேடம் பூண்டும் நரகத்தார்
ஞானமுள் ளோர்வேடம் இன்றெனில் நன்முத்தர்
ஞான முளதாக வேண்டுவார் நக்கன்போல்
ஞான முளவேடம் நண்ணிநிற் பாரே.

10.611   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
ஞானிக்குச் சுந்தர வேடமும் நல்லவாம்
தானுற்ற வேடமும் தற்சிவ யோகமே
ஆனஅவ் வேடம் அருள்ஞான சாதனம்
ஆனது மாமொன்றும் ஆகா தவனுக்கே.

10.611   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
ஞானத்தி னாற்பதம் நண்ணும் சிவஞானி
தானத்தில் வைத்த தனிஆ லயத்தனாம்
மோனத்தின் ஆதலின் முத்தனாம் சித்தனாம்
ஏனைத் தவசி இவனென லாகுமே

10.801   10 st/nd Thirumurai   Song # 15   திருமூலர்   திருமந்திரம்  
ஞானிக்குக் காயம் சிவமேய் தனுவாம் அஞ்
ஞானிக்கூன் நிற்கு முடம்பே யதுவாகும்
மேனிற்கும் யோகிக்கு விந்துவும் நாதமும்
மோனிக்குக் காயம்முப் பாழ்கெட்ட முத்தியே.

10.813   10 st/nd Thirumurai   Song # 29   திருமூலர்   திருமந்திரம்  
ஞானம்தன் மேனி கிரியை நடுஅங்கம்
தானுறும் இச்சை உயிராகத் தற்பரன்
மேனிகொண்(டு) ஐங்கரு மத்துவித் தாதலால்
மோனிகள் ஞானத்து முத்திரைபெற் றார்களே.

10.917   10 st/nd Thirumurai   Song # 8   திருமூலர்   திருமந்திரம்  
ஞானத்தின் நன்னெறி நாதந்த நன்னெறி
ஞானத்தின் நன்னெறி நான்அறி வென்றோர்தல்
ஞானத்தின் நல்யோகம் நன்னிலை யேநிற்றல்
ஞானத்தின் நன்மோனம் நாதாந்த வேதமே.

11.004   11 st/nd Thirumurai   Song # 26   காரைக்கால் அம்மையார்    அற்புதத் திருவந்தாதி  
ஞான்ற குழற்சடைகள் பொன்வரைபோல் மின்னுவன
போன்ற கறைமிடற்றான் பொன்மார்பின் - ஞான்றெங்கும்
மிக்கயலே தோன்ற விளங்கி மிளிருமே
அக்கயலே வைத்த அரவு.

11.008   11 st/nd Thirumurai   Song # 12   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
ஞானக் கொழுந்து நகராசன் தன்மடந்தை
தேன்மொய்த்த குஞ்சியின்மேல் சித்திரிப்ப ஊனமில்சீர்

11.024   11 st/nd Thirumurai   Song # 17   இளம்பெருமான் அடிகள்   சிவபெருமான் திருமும்மணிக்கோவை  
ஞான்ற புனமாலை தோளலைப்ப நாண்மதியம்
ஈன்ற நிலவோடும் இவ்வருவான் மூன்றியங்கு
மூதூர் வியன்மாடம் முன்னொருகால் துன்னருந்தீ
மீதூரக் கண்சிவந்த வேந்து.

11.033   11 st/nd Thirumurai   Song # 87   நம்பியாண்டார் நம்பி   திருத்தொண்டர் திருவந்தாதி  
ஞானவா ரூரரைச் சேரரை
யல்லது நாமறியோம்
மானவ வாக்கை யொடும்புக்
கவரை வளரொளிப்பூண்
வானவ ராலும் மருவற்
கரிய வடகயிலைக்
கோனவன் கோயில் பெருந்தவத்
தோர்தங்கள் கூட்டத்திலே.

11.036   11 st/nd Thirumurai   Song # 12   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை  
ஞானந் திரளையி லேயுண்
டனையென்று நாடறியச்
சோனந் தருகுழ லார்சொல்
லிடாமுன் சுரும்புகட்குப்
பானந் தருபங்க யத்தார்
கொடுபடைச் சால்வழியே
கூனந் துருள்வயல் சூழ்காழி
மேவிய கொற்றவனே.

11.037   11 st/nd Thirumurai   Song # 64   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை  
ஞானச் சுடர்விளக்கை நற்றவத்தோர் கற்பகத்தை
மான மறைஅவற்றின் வான்பொருளை - ஆனசீர்த்

12.010   12 st/nd Thirumurai   Song # 7   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
ஞானமே முதலா நான்கும்
நவையறத் தெரிந்து மிக்கார்
தானமுந் தவமும் வல்லார்
தகுதியின் பகுதி சார்ந்தார்
ஊனமேல் ஒன்றும் இல்லார்
உலகெலாம் புகழ்ந்து போற்றும்
மானமும் பொறையுந் தாங்கி  
மனையறம் புரிந்து வாழ்வார்.
12.120   12 st/nd Thirumurai   Song # 28   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
ஞானச்செய் தவரடிமேற்
பணிந்துமனை யகம்நண்ணி
மானக்கஞ் சாறனார்
மணக்கோலம் புனைந்திருந்த
தேனக்க மலர்க்கூந்தல்
திருமகளைக் கொண்டணைந்து
பானற்கந் தரமறைத்து
வருமவரைப் பணிவித்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 197   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஞான சம்பந்தன் நம்பால் அணைகின்றான்
மான முத்தின் சிவிகை மணிக்குடை
ஆன சின்னம்நம் பாற்கொண் டருங்கலைக்
கோன வன்பா லணைந்து கொடும்என.
12.280   12 st/nd Thirumurai   Song # 244   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஞானசம் பந்தரும் நாய னார்சடைத்
தூநறுந் தொடையல்முன் சூட்டும் பிள்ளையார்
பான்மையில் வரும்பதி என்று நித்தில
யானமுன் இழிந்தெதிர் இறைஞ்சி எய்தினார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 382   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஞானபோனகர் நம்பர்முன்
தொழுதெழு விருப்பால்
ஆனகாதலில் அங்கண
ரவர்தமை வினவும்
ஊனமில்இசை யுடன்விளங்
கியதிருப் பதிகம்
பானலார்மணி கண்டரைப்
பாடினார் பரவி.
12.280   12 st/nd Thirumurai   Song # 672   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஞான போனகர் எதிர்தொழு
தெழுந்தநற் றவத்து
மானி யார்மனக் கருத்துமுற்
றியதென மதித்தே
பான லங்கண்கள் நீர்மல்கப்
பவளவாய் குழறி
யானும் என்பதி யுஞ்செய்த
தவமென்கொல் என்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 728   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஞானத்தின் திருவுருவை
நான்மறையின் தனித்துணையை
வானத்தின் மிசையன்றி
மண்ணில்வளர் மதிக்கொழுந்தைத்
தேனக்கமலர்க் கொன்றைச்
செஞ்சடையார் சீர்தொடுக்கும்
கானத்தின் எழுபிறப்பைக்
கண்களிப்பக் கண்டார்கள்.
12.280   12 st/nd Thirumurai   Song # 760   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஞானஆ ரமுத முண்டார்
நற்றவத் திருவை நோக்கி
மானினேர் விழியி னாய்கேள்
மற்றெனைப் பால னென்று
நீநனி அஞ்சவேண்டா
நிலையிலா அமணர்க் கென்றும்
யான்எளி யேன லேன்என்
றெழுந்திருப் பதிகம் பாடி.
12.280   12 st/nd Thirumurai   Song # 1166   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஞானபோ னகருக்கு
நற்றவத்தின் ஒழுக்கத்தால்
ஊனமில்சீ லத்தும்பால்
மகட்பேச வந்ததென
ஆனபே றந்தணர்பால்
அருளுடைமை யாம்என்று
வானளவு நிறைந்தபெரு
மனமகிழ்ச்சி யொடுமொழிவார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1247   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஞானமெய்ந் நெறிதான் யார்க்கும்
நமச்சிவா யச்சொ லாம்என்
றானசீர் நமச்சி வாயத்
திருப்பதி கத்தை அங்கண்
வானமும் நிலனும் கேட்க
அருள்செய் திம்மணத்தில் வந்தோர்
ஈனமாம் பிறவி தீர
யாவரும் புகுக என்ன.
12.690   12 st/nd Thirumurai   Song # 11   சேக்கிழார்   மன்னிய சீர்ச் சருக்கம்  
ஞானம் உண்டார் கேட்டருளி
நல்ல இசையாழ்ப் பெரும்பாணர்க்
கான படியால் சிறப்பருளி
அமரு நாளில் அவர்பாடும்
மேன்மைப் பதிகத் திசையாழில்
இடப்பெற் றுடனே மேவியபின்
பானற் களத்தார் பெருமணத்தில்
உடனே பரமர் தாளடைந்தார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list