சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter: ( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் ஞாலம
ஞாலம்
ஞாலம
ஞாலம்வியப்
ஞாலமும்
ஞாலமே!
ஞாலம்,
1.053
1 st/nd Thirumurai
Song # 8
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஞாலம் உண்ட மாலும் மற்றை நான்முகனும்(ம்) அறியாக்
கோலம் அண்டர் சிந்தைகொள்ளார் ஆயினும், கொய் மலரால்
ஏல இண்டை கட்டி, நாமம் இசைய எப்போதும் ஏத்தும்
மூல முண்ட நீற்றர் வாயான் மேயது முதுகுன்றே.
1.094
1 st/nd Thirumurai
Song # 2
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஞாலம் ஏழும் ஆம் ஆலவாயிலார்
சீலமே சொலீர், காலன் வீடவே!
2.010
2 st/nd Thirumurai
Song # 9
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஞாலம் முன் படைத்தான் நளிர்மாமலர்மேல் அயன்,
மாலும், காண ஒணா எரியான்; மங்கலக்குடி
ஏல வார்குழலாள் ஒருபாகம் இடம்கொடு
கோலம் ஆகி நின்றான்; குணம் கூறும்! குணம் அதே.
2.046
2 st/nd Thirumurai
Song # 11
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஞாலம் புகழ் காழி ஞானசம்பந்தன்தான்
நாலுமறை ஓதும் நாலூர்மயானத்தைச்
சீலம் புகழால் சிறந்து ஏத்த வல்லாருக்கு
ஏலும், புகழ்; வானத்து இன்பு ஆய் இருப்பாரே.
2.076
2 st/nd Thirumurai
Song # 11
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஞாலம் மல்கும் தமிழ் ஞானசம்பந்தன், மா மயில்
ஆலும் சோலை புடை சூழ் அகத்தியான் பள்
சூலம் நல்ல படையான் அடி தொழுது ஏத்திய
மாலை வல்லார் அவர் தங்கள் மேல் வினை மாயுமே.
3.056
3 st/nd Thirumurai
Song # 9
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஞாலம் அளித்தவனும்(ம்) அரியும்(ம்), அடியோடு முடி
காலம்பல செலவும், கண்டிலாமையினால் கதறி
ஓலம் இட, அருளி, உமை நங்கையொடும்(ம்) உடன் ஆய்
ஏல இருந்த பிரான் பிரமாபுரம் ஏத்துமினே!
4.029
4 st/nd Thirumurai
Song # 6
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஞாலமும் அறிய வேண்டின்,நன்று என வாழல் உற்றீர்
காலமும் கழியல் ஆன கள்ளத்தை ஒழிய கில்லீர்
கோலமும் வேண்டா; ஆர்வச் செற்றங்கள் குரோதம் நீக்கில்
சீலமும் நோன்பும் ஆவார், திருச் செம்பொன்பள்ளியாரே.
5.013
5 st/nd Thirumurai
Song # 3
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஞாலமே! விசும்பே! நலம் தீமையே!
காலமே! கருத்தே! கருத்தால்-தொழும்
சீலமே! திரு வீழிமிழலையுள்
கோலமே!-அடியேனைக் குறிக்கொளே!
5.069
5 st/nd Thirumurai
Song # 2
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஞாலம் மல்கு மனிதர்காள்! நாள்தொறும்
ஏல மா மலரோடு இலை கொண்டு, நீர்,
காலனார் வருதல் முன், கருவிலி,
கோல வார் பொழில், கொட்டிட்டை சேர்மினே!
8.123
8 st/nd Thirumurai
Song # 9
மாணிக்க வாசகர்
திருவாசகம்
ஞாலம், இந்திரன், நான்முகன், வானோர், நிற்க, மற்று எனை நயந்து, இனிது ஆண்டாய்;
காலன் ஆர் உயிர் கொண்ட பூம் கழலாய்! கங்கையாய்! அங்கி தங்கிய கையாய்!
மாலும் ஓலம் இட்டு அலறும் அம் மலர்க்கே, மரக்கணேனையும் வந்திடப் பணியாய்;
சேலும், நீலமும், நிலவிய வயல் சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே!
10.409
10 st/nd Thirumurai
Song # 5
திருமூலர்
திருமந்திரம்
ஞாலம தாக விரிந்தது சக்கரம்
ஞாலம தாயிடும் விந்துவும் நாதமும்
ஞாலம தாயிடும் அப்பதி யோசனை
ஞாலம தாக விரிந்த எழுத்தே.
12.200
12 st/nd Thirumurai
Song # 58
சேக்கிழார்
மும்மையால் உலகாண்ட சருக்கம்
ஞாலம் அறியப் பிழைபுரிந்து
நம்பர் அருளால் நான்மறையின்
சீலந் திகழுஞ் சேய்ஞலூர்ப்
பிள்ளை யார்தந் திருக்கையில்
கோல மழுவால் ஏறுண்டு
குற்றம் நீங்கிச் சுற்றமுடன்
மூல முதல்வர் சிவலோகம்
எய்தப் பெற்றான் முதுமறையோன்.
12.210
12 st/nd Thirumurai
Song # 318
சேக்கிழார்
திருநின்ற சருக்கம்
ஞாலம் உய்யத் திருவதிகை
நம்பர் தம்பேர் அருளினால்
சூலை மடுத்து முன்னாண்ட
தொண்டர் வரப்பெற் றோமென்று
காலை மலருங் கமலம்போற்
காஞ்சி வாணர் முகமெல்லாம்
சால மலர்ந்து களிசிறப்பத்
தழைத்த மனங்கள் தாங்குவார்.
12.280
12 st/nd Thirumurai
Song # 151
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
ஞாலம் உய்ந்திட ஞானமுண்
டவர்எழுந் தருளும்அந் நலங்கண்டு
சேல லம்புதண் புனல்தடம்
படிந்தணை சீதமா ருதம்வீசச்
சால வும்பல கண்பெறும்
பயன்பெறுந் தன்மையிற் களிகூர்வ
போல சைந்திரு புடைமிடைந்
தாடின புறம்பணை நறும்பூகம்.
12.290
12 st/nd Thirumurai
Song # 136
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
ஞாலம்வியப் பெய்தவரு
நற்கனகம் இடையெடுத்து
மூலமெனக் கொடுபோந்த
ஆணியின்முன் னுரைப்பிக்க
நீலமிடற் றவரருளால்
உரைதாழப் பின்னும் நெடு
மாலயனுக் கரியகழல்
வழுத்தினார் வன்றொண்டர்.
12.290
12 st/nd Thirumurai
Song # 337
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
ஞாலம் உய்ய எழுந்தருளும்
நம்பி தூதர் பரவையார்
கோல மணிமா ளிகைவாயில்
குறுகு வார்முன் கூடத்தம்
பால்அங் கணைந்தார் புறநிற்பப்
பண்டே தம்மை யர்ச்சிக்கும்
சீல முடைய மறைமுனிவர்
ஆகித் தனியே சென்றணைந்தார்.
This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list