சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter: ( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் தந்த
தந்தைபி
தந்தளிர்போற்
தந்தையார்
தந்தி
தந்ததுமுன்
தந்த
தந்திரத்
தந்தையும்
தந்தைநிலை
தந்தருளும்
தந்திருமா
தந்தை
தந்தமர்கள்
தந்தத்திந்தத்தடம்
தந்தை,
தந்தையாய்,
தந்தையாரும்
தந்தது,
2.005
2 st/nd Thirumurai
Song # 4
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தந்தத்திந்தத்தடம் என்ற அருவித்திரள் பாய்ந்து போய்ச்
சிந்த வெந்த கதிரோனொடு மாசு அறு திங்கள் ஆர்
அந்தம் இல்ல அளவு இல்ல, அனேகதங்காவதம்
எந்தை வெந்தபொடி நீறு அணிவார்க்கு இடம் ஆவதே.
2.079
2 st/nd Thirumurai
Song # 2
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தந்தையார் போயினார்; தாயரும் போயினார்; தாமும்
போவார்;
கொந்த வேல் கொண்டு ஒரு கூற்றத்தார் பார்க்கின்றார்,
கொண்டு போவார்;
எந்த நாள் வாழ்வதற்கே மனம் வைத்தியால்? ஏழை
நெஞ்சே!
அம் தண் ஆருர் தொழுது உய்யல் ஆம்; மையல்
கொண்டு அஞ்சல், நெஞ்சே!
2.079
2 st/nd Thirumurai
Song # 9
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தந்தை, தாய், தன்னுடன் தோன்றினார், புத்திரர், தாரம்,
என்னும்
பந்தம் நீங்காதவர்க்கு, உய்ந்துபோக்கு இல் எனப்
பற்றினாயே?
வெந்த நீறு ஆடியார், ஆதியார், சோதியார், வேத கீதர்,
எந்தை ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு
அஞ்சல், நெஞ்சே!
4.029
4 st/nd Thirumurai
Song # 4
திருநாவுக்கரசர்
தேவாரம்
தந்தையும் தாயும் ஆகித் தானவன்; ஞானமூர்த்தி;
முந்திய தேவர் கூடி முறை முறை இருக்குச் சொல்லி,
எந்தை, நீ சரணம்! என்று அங்கு இமையவர் பரவி ஏத்தச்
சிந்தையுள் சிவம் அது ஆனார்-திருச் செம்பொன்பள்ளியாரே.
4.032
4 st/nd Thirumurai
Song # 8
திருநாவுக்கரசர்
தேவாரம்
தந்தையாய், தாயும் ஆகி, தரணி ஆய், தரணி உள்ளார்க்கு
எந்தையும் என்ன நின்ற ஏழ் உலகு உடனும் ஆகி,
எந்தை! எம்பிரானே! என்று என்று உள்குவார் உள்ளத்து என்றும்
சிந்தையும் சிவமும் ஆவார்- திருப் பயற்றூரனாரே.
5.070
5 st/nd Thirumurai
Song # 4
திருநாவுக்கரசர்
தேவாரம்
தந்தை, தாயொடு, தாரம், எனும் தளை-
பந்தம் ஆங்கு அறுத்து, பயில்வு எய்திய
கொந்து அவிழ் பொழில் கொண்டீச்சுரவனைச்
சிந்தை செய்ம்மின்கள், சேவடி சேரவே!
6.041
6 st/nd Thirumurai
Song # 9
திருநாவுக்கரசர்
தேவாரம்
தந்தை தாய் இல்லாதாய் நீயே என்றும், தலை
ஆர் கயிலாயன் நீயே என்றும்,
எம் தாய் எம்பிரான் ஆனாய் நீயே என்றும்,
ஏகம்பத்து என் ஈசன் நீயே என்றும்,
முந்திய முக்கணாய் நீயே என்றும், மூவலூர்
மேவினாய் நீயே என்றும்,
சிந்தையாய், தேனூராய் நீயே என்றும், நின்ற
நெய்த்தானா! என் நெஞ்சு உளாயே.
6.049
6 st/nd Thirumurai
Song # 2
திருநாவுக்கரசர்
தேவாரம்
தந்த வ(அ)த்தன் தன் தலையைத் தாங்கினான் காண்; சாரணன் காண்; சார்ந்தார்க்கு இன் அமுது ஆனான் காண்;
கெந்தத்தன் காண்; கெடில வீரட்டன் காண்; கேடு இலி காண்; கெடுப்பார் மற்று இல்லாதான் காண்;
வெந்து ஒத்த நீறு மெய் பூசினான் காண்; வீரன் காண்; வியன் கயிலை மேவினான் காண்;
வந்து ஒத்த நெடுமாற்கும் அறிவு ஒணான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே.
6.093
6 st/nd Thirumurai
Song # 10
திருநாவுக்கரசர்
தேவாரம்
தந்தை யார்? தாய் யார்? உடன் பிறந்தார், தாரம், ஆர்? புத்திரர் ஆர்? தாம் தாம் ஆரே?
வந்த ஆறு எங்ஙனே? போம் ஆறு ஏதோ? மாயம் ஆம்; இதற்கு ஏதும் மகிழ வேண்டா!
சிந்தையீர்! உமக்கு ஒன்று சொல்லக் கேண்மின்: திகழ் மதியும் வாள் அரவும் திளைக்கும் சென்னி
எந்தையார் திருநாமம் நமச்சிவாய என்று எழுவார்க்கு இரு விசும்பில் இருக்கல் ஆமே.
7.007
7 st/nd Thirumurai
Song # 9
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
தந்தையாரும் தவ்வையாரும் எள்-தனைச் சார்வு ஆகார்;
வந்து நம்மோடு உள் அளாவி வானநெறி காட்டும்
சிந்தையீரே! நெஞ்சினீரே! திகழ் மதியம் சூடும்
எந்தை கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே .
7.075
7 st/nd Thirumurai
Song # 4
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
தந்தை தாய், உலகுக்கு; ஓர் தத்துவன்; மெய்த் தவத்தோர்க்கு;
பந்தம் ஆயின பெருமான்; பரிசு உடையவர் திரு அடிகள்;
அம் தண் பூம்புனல் ஆனைக்கா உடை ஆதியை; நாளும்
எந்தை என்று அடி சேர்வார் எம்மையும் ஆள் உடையாரே.
8.122
8 st/nd Thirumurai
Song # 10
மாணிக்க வாசகர்
திருவாசகம்
தந்தது, உன் தன்னை; கொண்டது, என் தன்னை; சங்கரா! ஆர் கொலோ, சதுரர்?
அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன்; யாது நீ பெற்றது ஒன்று, என்பால்?
சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்! திருப்பெருந்துறை உறை சிவனே!
எந்தையே! ஈசா! உடல் இடம் கொண்டாய்; யான் இதற்கு இலன், ஓர் கைம்மாறே!
10.204
10 st/nd Thirumurai
Song # 1
திருமூலர்
திருமந்திரம்
தந்தைபி ரான்வெகுண் டான்தக்கன் வேள்வியை
வெந்தழல் ஊடே புறப்பட விண்ணவர்
முந்திய பூசை முடியார் முறைகெட்டுச்
சிந்தினர் அண்ணல் சினஞ்செய்த போதே.
11.008
11 st/nd Thirumurai
Song # 152
சேரமான் பெருமாள் நாயனார்
திருக்கயிலாய ஞான உலா
தந்தளிர்போற் சேவடியும் அங்கையும் செம்மையால்
அந்திவான் காட்டும் அழகினாள் அந்தமில்
12.000
12 st/nd Thirumurai
Song # 142
சேக்கிழார்
திருமலைச் சருக்கம்
தந்தையார் சடைய னார்தம்
தனித்திரு மகற்குச் சைவ
அந்தணர் குலத்துள் தங்கள்
அரும்பெரும் மரபுக் கேற்ப
வந்ததொல் சிறப்பில் புத்தூர்ச்
சடங்கவி மறையோன் தன்பால்
செந்திரு வனைய கன்னி
மணத்திறஞ் செப்பி விட்டார்.
12.000
12 st/nd Thirumurai
Song # 297
சேக்கிழார்
திருமலைச் சருக்கம்
தந்தி ருக்கண் எரிதழ லிற்பட்டு
வெந்த காமன் வெளியே உருச்செய்து
வந்தென் முன்னின்று வாளி தொடுப்பதே
எந்தை யார்அருள் இவ்வண்ண மோவென்பார்.
12.020
12 st/nd Thirumurai
Song # 30
சேக்கிழார்
தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
தந்ததுமுன் தாராதே
கொள்ளாமைக் குன்மனைவி
அந்தளிர்ச்செங் கைப்பற்றி
அலைபுனலின் மூழ்காதே
சிந்தைவலித் திருக்கின்றாய்
தில்லைவா ழந்தணர்கள்
வந்திருந்த பேரவையில்
மன்னுவன்யா னெனச்சொன்னார்.
12.070
12 st/nd Thirumurai
Song # 16
சேக்கிழார்
தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
தந்த கோவணம் வாங்கிய தனிப்பெருந் தொண்டர்
முந்தை அந்தணர் மொழிகொண்டு முன்புதாம் கொடுக்கும்
கந்தை கீளுடை கோவண மன்றியோர் காப்புச்
சிந்தை செய்துவே றிடத்தொரு சேமத்தின் வைத்தார்.
12.080
12 st/nd Thirumurai
Song # 29
சேக்கிழார்
இலை மலிந்த சருக்கம்
தந்திரத் தலைவர் தாமும்
தலைவன்தன் நிலைமை கண்டு
வந்துறச் சேனை தன்னை
வல்விரைந் தெழமுன் சாற்ற
அந்தரத் தகல மெல்லாம்
அணிதுகிற் பதாகை தூர்ப்ப
எந்திரத் தேரு மாவும்
இடையிடை களிறு மாகி.
12.100
12 st/nd Thirumurai
Song # 28
சேக்கிழார்
இலை மலிந்த சருக்கம்
தந்தையும் மைந்த னாரை
நோக்கித்தன் தடித்த தோளால்
சிந்தையுள் மகிழப் புல்லிச்
சிலைத்தொழில் பயிற்ற வேண்டி
முந்தையத் துறையின் மிக்க
முதியரை அழைத்துக் கூட்டி
வந்தநாட் குறித்த தெல்லாம்
மறவர்க்குச் சொல்லி விட்டான்.
12.100
12 st/nd Thirumurai
Song # 54
சேக்கிழார்
இலை மலிந்த சருக்கம்
தந்தைநிலை உட்கொண்டு தளர்வு கொண்டு
தங்கள்குலத் தலைமைக்குச் சார்வு தோன்ற
வந்தகுறை பாடதனை நிரப்பு மாறு
மனங்கொண்ட குறிப்பினால் மறாமை கொண்டு
முந்தையவன் கழல்வணங்கி முறைமை தந்த
முதற்சுரிகை உடைதோலும் வாங்கிக் கொண்டு
சிந்தைபரங் கொளநின்ற திண்ண னார்க்குத்
திருத்தாதை முகமலர்ந்து செப்பு கின்றான்.
12.190
12 st/nd Thirumurai
Song # 120
சேக்கிழார்
மும்மையால் உலகாண்ட சருக்கம்
தந்தருளும் இக்கந்தை
தாழாதே ஒலித்துமக்கின்
றந்திபடு வதன்முன்னம்
தருகின்றேன் எனஅவரும்
கந்தையிது ஒலித்துணக்கிக்
கடிதின்றே தாரீரேல்
இந்தவுடற் கிடர்செய்தீர்
என்றுகொடுத் தேகினார்.
12.210
12 st/nd Thirumurai
Song # 21
சேக்கிழார்
திருநின்ற சருக்கம்
தந்தையார் களிமகிழ்ச்சி
தலைசிறக்கும் முறைமையினால்
சிந்தைமலர்ந் தெழும்உணர்வில்
செழுங்கலையின் திறங்களெல்லாம்
முந்தைமுறை மையிற்பயின்று
முதிரஅறி வெதிரும்வகை
மைந்தனார் மறுவொழித்த
இளம்பிறைபோல் வளர்கின்றார்.
12.280
12 st/nd Thirumurai
Song # 98
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
தந்திருமா ளிகையின்கண் எழுந்தருளிப்
புகும்பொழுது சங்க நாதம்
அந்தரதுந் துபிமுதலா அளவில்பெரு
கொலிதழைப்ப அணைந்து புக்கார்
சுந்தரப்பொற் றோணிமிசை இருந்தபிரான்
உடன்அமர்ந்த துணைவி யாகும்
பைந்தொடியாள் திருமுலையின் பாலறா
மதுரமொழிப் பவள வாயார்.
12.280
12 st/nd Thirumurai
Song # 423
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
தந்தை யார்மொழி கேட்டலும்
புகலியார் தலைவர்
முந்தை நாளிலே மொழிந்தமை
நினைந்தருள் முன்னி
அந்த மில்பொரு ளாவன
ஆவடு துறையுள்
எந்தை யார்அடித் தலங்கள்
அன்றோஎன எழுந்தார்.
12.280
12 st/nd Thirumurai
Song # 1049
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
தந்தை யாரும்அத் தளிரிளம்
கொம்பனாள் தகைமை
இந்த வையகத் தின்மையால்
இன்புறு களிப்பு
வந்த சிந்தையின் மகிழ்ந்துமற்
றிவள்மணம் பெறுவான்
அந்த மில்லென தருநிதிக்
குரியனென்று அறைந்தார்.
12.570
12 st/nd Thirumurai
Song # 4
சேக்கிழார்
கடல் சூழ்ந்த சருக்கம்
தந்தமர்கள் ஆயினார்
தமக்கெல்லாந் தனித்தனியே
எந்தையார்க் கமுதுபடிக்கு
ஏற்றியநெல் இவையழிக்கச்
சிந்தையால் தாம்நினைவார்
திருவிரையாக் கலியென்று
வந்தனையால் உரைத்தகன்றார்
மன்னவன்மாற் றார்முனைமேல்.
12.570
12 st/nd Thirumurai
Song # 9
சேக்கிழார்
கடல் சூழ்ந்த சருக்கம்
தந்தையார் தாயார்மற்
றுடன்பிறந்தார் தாரங்கள்
பந்தமார் சுற்றத்தார்
பதியடியார் மதியணியும்
எந்தையார் திருப்படிமற்று
உண்ணவிசைந் தார்களையும்
சிந்தவாள் கொடுதுணித்தார்
தீவினையின்பயன் துணிப்பார்.
This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list