சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter: ( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் தரு
தரு
தருக்கின
தரும்
தருக்கின்
தருவழி
தருமருட்
தருக்கவற்
தரும
தருதொ
தருமபுரம்
தருக்கிய
தருக்கு
தருக்கிச்
தருக்கி
தருமம்
தருணேந்து
1.101
1 st/nd Thirumurai
Song # 4
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தரு வளர் கானம் தங்கிய துங்கப் பெருவேழம்,
மருவளர் கோதை அஞ்ச, உரித்து, மறை நால்வர்க்கு
உரு வளர் ஆல் நீழல் அமர்ந்து ஈங்கு உரை செய்தார்
கரு வளர் கண்ணார் கோயில் அடைந்தோர் கற்றோரே.
1.110
1 st/nd Thirumurai
Song # 8
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தருக்கின அரக்கன தாளும் தோளும்
நெரித்தவன், நெடுங்கை மா மதகரி அன்று
உரித்தவன், ஒன்னலர் புரங்கள் மூன்றும்
எரித்தவன், வள நகர் இடைமருதே.
1.129
1 st/nd Thirumurai
Song # 6
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தரும் சரதம் தந்தருள்! என்று அடி நினைந்து,
தழல் அணைந்து, தவங்கள் செய்த
பெருஞ் சதுரர் பெயலர்க்கும் பீடு ஆர்
தோழமை அளித்த பெருமான் கோயில்
அரிந்த வயல் அரவிந்தம் மது உகுப்ப,
அது குடித்துக் களித்து வாளை,
கருஞ் சகடம் இளக வளர் கரும்பு இரிய,
அகம் பாயும் கழுமலமே.
1.135
1 st/nd Thirumurai
Song # 8
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தருக்கின் மிக்க தசக்கிரிவன் தனை
நெருக்கினார், விரல் ஒன்றினால்;
பருக்கினார் அவர் போலும் பராய்த்துறை
அருக்கன் தன்னை, அடிகளே.
2.082
2 st/nd Thirumurai
Song # 8
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தரு உயர்ந்த வெற்பு எடுத்த அத் தசமுகன் நெரிந்து
வெருவும் ஊன்றிய திருவிரல் நெகிழ்ந்து, வாள் பணித்தான்
தெருவு தோறும் நல் தென்றல் வந்து உலவிய தேவூர்
அரவு சூடியை அடைந்தனம்; அல்லல் ஒன்று இலமே.
3.013
3 st/nd Thirumurai
Song # 3
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தருக்கிய திரிபுரத்தவர்கள் தாம் உக,
பெருக்கிய சிலைதனைப் பிடித்த பெற்றியர்
பொரு(க்) கடல் புடை தரு பூந்தராய் நகர்
கரு(க்)கிய குழல் உமை கணவர்; காண்மினே!
3.125
3 st/nd Thirumurai
Song # 2
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தரு மணல் ஓதம் சேர் தண்கடல் நித்திலம்
பரு மணலாக் கொண்டு, பாவை நல்லார்கள்,
வரும் மணம் கூட்டி, மணம் செயும் நல்லூர்ப்-
பெருமணத்தான் பெண் ஓர்பாகம் கொண்டானே!
4.044
4 st/nd Thirumurai
Song # 6
திருநாவுக்கரசர்
தேவாரம்
தரு வினை மருவும் கங்கை தங்கிய சடையன், எங்கள்
அரு வினை அகல நல்கும் அண்ணலை, அமரர் போற்றும்
திரு வினை, திரு ஏகம்பம் செப்பட உறைய வல்ல
உரு வினை, உருகி ஆங்கே உள்ளத்தால் உகக்கின்றேனே.!
4.064
4 st/nd Thirumurai
Song # 10
திருநாவுக்கரசர்
தேவாரம்
தருக்கின அரக்கன் தேர் ஊர் சாரதி தடை நிலாது
பொருப்பினை எடுத்த தோளும் பொன் முடி பத்தும் புண் ஆய்
நெரிப்புண்டு அங்கு அலறி மீண்டு நினைந்து அடி பரவ, தம் வாள
விருப்பொடும் கொடுப்பர் வீழிமிழலையுள் விகிர்தனாரே.
4.080
4 st/nd Thirumurai
Song # 10
திருநாவுக்கரசர்
தேவாரம்
தருக்கு மிகுத்துத் தன் தோள்வலி உன்னித் தடவரையை
வரைக் கைகளால் எடுத்து ஆர்ப்ப, மலைமகள் கோன் சிரித்து,
அரக்கன் மணி முடி பத்தும்-அணி தில்லை அம்பலவன்
நெருக்கி மிதித்த விரல் கண்ட கண் கொண்டு காண்பது என்னே?
4.086
4 st/nd Thirumurai
Song # 11
திருநாவுக்கரசர்
தேவாரம்
தருக்கின வாள் அரக்கன் முடி பத்து இறப் பாதம் தன்னால்
ஒருக்கின ஆறு அடியேனைப் பிறப்பு அறுத்து ஆள வல்லான்,
நெருக்கின வானவர் தானவர் கூடிக் கடைந்த நஞ்சைப்
பரு(க்)கின ஆறு என் செய்கேன்?-ஒற்றியூர் உறை பண்டங்கனே!
4.091
4 st/nd Thirumurai
Song # 4
திருநாவுக்கரசர்
தேவாரம்
தருக்கின நான் தகவு இன்றியும் ஓடச் சலம் அதனால்
நெருக்கினவா! நெடு நீரின் நின்று ஏற நினைந்து அருளி
உருக்கின ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே!
பெருக்கினவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே!
4.100
4 st/nd Thirumurai
Song # 10
திருநாவுக்கரசர்
தேவாரம்
தருக்கிய தக்கன்தன் வேள்வி தகர்த்தன; தாமரைப்போது,
உருக்கிய செம்பொன், உவமன் இலாதன; ஒண் கயிலை
நெருக்கிய வாள் அரக்கன் தலைபத்தும் நெரித்து, அவன்தன்
இருக்கு இயல்பு ஆயின-இன்னம்பரான்தன் இணை அடியே.
5.041
5 st/nd Thirumurai
Song # 10
திருநாவுக்கரசர்
தேவாரம்
தருக்கிச் சென்று தடவரை பற்றலும்
நெருக்கி ஊன்ற நினைந்து, சிவனையே
அரக்கன் பாட, அருளும் எம்மான் இடம்,
இருக்கை ஞீலி என்பார்க்கு இடர் இல்லையே.
5.072
5 st/nd Thirumurai
Song # 10
திருநாவுக்கரசர்
தேவாரம்
தருக்கி வெற்பு அது தாங்கிய வீங்கு தோள்
அரக்கனார் உடல் ஆங்கு ஓர் விரலினால்
நெரித்து, நீலக்குடி அரன், பின்னையும்
இரக்கம் ஆய், அருள் செய்தனன் என்பரே.
5.097
5 st/nd Thirumurai
Song # 21
திருநாவுக்கரசர்
தேவாரம்
தருமம் தான், தவம் தான், தவத்தால் வரும்
கருமம் தான் கருமான்மறிக் கையினான்;
அருமந்தன்ன அதிர்கழல் சேர்மினோ!-
சிரமம் சேர் அழல்-தீவினையாளரே!
9.006
9 st/nd Thirumurai
Song # 4
சேந்தனார்
திருவிசைப்பா
தருணேந்து சேகர னேயெனுந்
தடம்பொன்னித் தென்கரைச் சாந்தையூர்ப்
பொருணேர்ந்த சிந்தை யவர்தொழப்
புகழ்செல்வ மல்குபொற் கோயிலுள்
அருணேர்ந் தமர்திரு வாவடு
துறையாண்ட ஆண்டகை யம்மானே
தெருணேர்ந்த சித்தம் வலியவா
திலக நுதலி திறத்திலே.
10.413
10 st/nd Thirumurai
Song # 56
திருமூலர்
திருமந்திரம்
தருவழி யாகிய தத்துவ ஞானம்
குருவழி யாகுங் குணங்களுள் நின்று
கருவழி யாகுங் கணக்கை அறுத்துப்
பெருவழி ஆக்குமப் பேரொளி தானே.
11.029
11 st/nd Thirumurai
Song # 39
பட்டினத்துப் பிள்ளையார்
திருஏகம்பமுடையார் திருவந்தாதி
தருமருட் டன்மை வலப்பாற்
கமலக்கண் நெற்றியின்மேல்
திருமலர்க் கண்பிள விற்றிக
ழுந்தழல் செல்வக்கம்பர்
கருமலர்க் கண்ணிடப் பாலது
நீலங் கனிமதத்து
வருநுதற் பொட்டணங் குக்குயர்ந்
தோங்கும் மலர்க்குழலே.
11.029
11 st/nd Thirumurai
Song # 45
பட்டினத்துப் பிள்ளையார்
திருஏகம்பமுடையார் திருவந்தாதி
தருக்கவற் றான் மிக்க முப்புரம்
எய்தயன் தன்தலையை
நெருக்கவற் றோட மழுவாள்
விசைத்தது நெற்களென்றும்
பருக்கவற் றாங்கச்சி ஏகம்பர்
அத்தர்தம் பாம்புகளின்
திருக்கவற் றாலிட் டருளும்
கடகத் திருக்கரமே.
12.210
12 st/nd Thirumurai
Song # 80
சேக்கிழார்
திருநின்ற சருக்கம்
தரும சேனர்க்கு வந்தஅத்
தடுப்பருஞ் சூலை
ஒருவ ராலும்இங் கொழிந்திடா
மையின்அவர் உயப்போய்ப்
பெருகு சைவராய்ப் பெயர்ந்துதம்
பிணியொழித் துய்ந்தார்
மருவு நம்பெருஞ் சமயம்வீழ்ந்
ததுவென மருள்வார்.
12.260
12 st/nd Thirumurai
Song # 38
சேக்கிழார்
திருநின்ற சருக்கம்
தருதொ ழில்திரு மறையவர்
சாத்தமங் கையினில்
வருமு தற்பெருந் திருநீல
நக்கர்தாள் வணங்கி
இருபி றப்புடை அந்தணர்
ஏறுயர்த் தவர்பால்
ஒருமை உய்த்துணர் நமிநந்தி
யார்தொழில் உரைப்பாம்.
12.280
12 st/nd Thirumurai
Song # 444
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
தருமபுரம் பெரும்பாணர் திருத்தாயர்
பிறப்பிடமாம் அதனாற் சார
வருமவர்தஞ் சுற்றத்தார் வந்தெதிர்கொண்
டடிவணங்கி வாழ்த்தக் கண்டு
பெருமையுடைப் பெரும்பாணர் அவர்க்குரைப்பார்
பிள்ளையா ரருளிச் செய்த
அருமையுடைப் பதிகந்தாம் யாழினால்
பயிற்றும்பே றருளிச் செய்தார்.
This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list