சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் திரியும்
திரியும்    
2.122   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
திரியும் மூன்று புரமும்(ம்) எரித்து, திகழ் வானவர்க்கு
அரிய பெம்மான், அரவக் குழையார்க்கு இடம் ஆவது
பெரிய மாடத்து உயரும் கொடியின் மிடைவால், வெயில்
புரிவு இலாத தடம் பூம்பொழில் சூழ் தண் புகலியே.

4.020   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
திரியும் மூ எயில் தீ எழச் சிலை வாங்கி நின்றவனே! என் சிந்தையுள
பிரியும் ஆறு எங்ஙனே? பிழைத்தேயும் போகல் ஒட்டேன்
பெரிய செந்நெல், பிரம்புரி, கெந்தசாலி, திப்பியம் என்று இவை அகத்து
அரியும் தண் கழனி அணி ஆரூர் அம்மானே!

5.025   5 st/nd Thirumurai   Song # 11   திருநாவுக்கரசர்   தேவாரம்  
திரியும் மூஎயில் செங்கணை ஒன்றினால்
எரிய எய்தனரேனும், இலங்கைக் கோன்
நெரிய ஊன்றியிட்டார், விரல் ஒன்றினால்;
பரியர்; நுண்ணியர்-பாசூர் அடிகளே.

5.036   5 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
திரியும் மும்மதில் செங் கணை ஒன்றினால்
எரிய எய்து, அனல் ஓட்டி, இலங்கைக் கோன்
நெரிய ஊன்றியிட்டார்-செம்பொன்பள்ளியார்;
அரிய வானம் அவர் அருள்செய்வரே.

7.061   7 st/nd Thirumurai   Song # 3   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
திரியும் முப்புரம் தீப்பிழம்பு ஆகச் செங்கண் மால் விடைமேல்-திகழ்வானை,
கரியின் ஈர் உரி போர்த்து உகந்தானை, காமனைக் கனலா விழித்தானை,
வரி கொள் வெள்வளையாள் உமை நங்கை மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
பெரிய கம்பனை, எங்கள் பிரானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .

7.067   7 st/nd Thirumurai   Song # 9   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
திரியும் முப்புரம் செற்றதும், குற்றத் திறல் அரக்கனைச் செறுத்ததும், மற்றைப்
பெரிய நஞ்சு அமுது உண்டதும், முற்றும் பின்னை ஆய் முன்னமே முளைத்தானை;
அரிய நால் மறை அந்தணர் ஓவாது அடி பணிந்து அறிதற்கு அரியானை;
வரையின் பாவை மணாளன், எம்மானை; வலி வலம் தனில் வந்து கண்டேனே.

7.079   7 st/nd Thirumurai   Song # 8   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
திரியும் புரம் நீறு ஆக்கிய செல்வன் தன கழலை
அரிய திருமாலோடு அயன் தானும்(ம்) அவர் அறியார்;
கரியின்(ன்) இனமோடும் பிடி தேன் உண்டு அவை களித்துத்
திரி தந்தவை, திகழ்வால் பொலி சீ பர்ப்பத மலையே.

11.023   11 st/nd Thirumurai   Song # 13   பரணதேவ நாயனார்   சிவபெருமான் திருவந்தாதி  
திரியும் புரம்எரித்த சேவகனார் செவ்வே
திரியும் புரம்எரியச் செய்தார் திரியும்
அரிஆன் திருக்கயிலை என்னாதார் மேனி
அரிஆன் றிருக்கயிலை யாம்.


This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list