சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் திரை
திரைகள்     திரை     திரைமருவு     திரைக்கெடில     திரைத்த     திரைசெய்கட     திரைவாய்ப்     திரையானும்     திரையின்    
1.005   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
திரைகள் எல்லா மலரும் சுமந்து, செழுமணி முத்தொடு பொன் வரன்றி,
கரைகள் எல்லாம் அணி சேர்ந்து உரிஞ்சி, காவிரி கால் பொரு காட்டுப் பள்ளி,
உரைகள் எல்லாம் உணர்வு எய்தி நல்ல உத்தமராய் உயர்ந்தார் உலகில்,
அரவம் எல்லாம் அரை ஆர்த்த செல்வர்க்கு ஆட்செய, அல்லல் அறுக்கல் ஆமே.

1.034   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
திரை ஆர் புனல் சூடிய செல்வன்,
வரையார் மகளோடு மகிழ்ந்தான்,
கரை ஆர் புனல் சூழ்தரு, காழி
நிரை ஆர் மலர் தூவுமின், நின்றே!

1.083   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
திரை ஆர் புனலோடு செல்வமதி சூடி,
விரை ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய,
நரை ஆர் விடை ஊரும், நம்பான் கழல் நாளும்
உரையாதவர்கள்மேல் ஒழியா, ஊனமே.

1.111   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
திரை பொரு திரு முடி திங்கள் விம்மும்
அரை பொரு புலி அதள் அடிகள் இடம்,
திரையொடு நுரை பொரு தெண் சுனை நீர்
கரை பொரு வள நகர் கடைமுடியே.

2.055   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
திரை ஆர்ந்த மா கடல் சூழ் தென் இலங்கைக்
கோமானை,
வரை ஆர்ந்த தோள் அடர, விரலால் ஊன்றும்
மாண்பினீர்!
அரை ஆர்ந்த மேகலையீர்! அந்தணாளர் தலைச்சங்கை,
நிரை ஆர்ந்த கோயிலே கோயில் ஆக நினைந்தீரே.

2.081   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
திரை மண்டிச் சங்கு ஏறும் கடல் சூழ் தென் இலங்கையர்
கோன்
விரை மண்டு முடி நெரிய விரல் வைத்தீர்! வரை தன்னின்
கரை மண்டிப் பேர் ஓதம் கலந்து எற்றும் கடல் கவின்
ஆர்
விரை மண்டு வேணுபுரமே அமர்ந்து மிக்கீரே.

3.031   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
திரை தரு பவளமும், சீர் திகழ் வயிரமும்,
கரை தரும் அகிலொடு கன வளை புகுதரும்,
வரைவிலால் எயில் எய்த, மயேந்திரப்பள்
அரவு அரை, அழகனை அடி இணை பணிமினே!

3.083   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
திரைகள் இருகரையும் வரு பொன்னி நிலவும் திரு நலூர்மேல்
பரசு தரு பாணியை, நலம் திகழ் செய் தோணிபுர நாதன்-
உரைசெய் தமிழ் ஞானசம்பந்தன்-இசை மாலை மொழிவார், போய்,
விரை செய் மலர் தூவ, விதி பேணு கதிபேறு
பெறுவாரே.

3.124   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
திரை புல்கு கங்கை திகழ் சடை வைத்து
வரை மகளோடு உடன் ஆடுதிர் மல்கு
விரை கமழ் தண்பொழில் வெள்ளடை மேவிய
அரை மல்கு வாள் அரவு ஆட்டு உகந்தீரே!

4.082   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
திரைவாய்ப் பெருங்கடல் முத்தம் குவிப்ப, முகந்து கொண்டு
நுரைவாய் நுளைச்சியர் ஓடிக் கழு மலத்துள்(ள்) அழுந்தும்
விரை வாய் நறுமலர் சூடிய விண்ணவன் தன் அடிக்கே
வரையாப் பரிசு இவை நாள்தொறும் நம் தமை ஆள்வனவே.

6.007   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
திரை ஆர் புனல் கெடில வீரட்ட(ம்)மும், திரு
 ஆரூர், தேவூர், திரு நெல்லிக்கா,
உரையார் தொழ நின்ற ஒற்றியூரும், ஓத்தூரும்,
மாற்பேறும், மாந்துறையும்,
வரை ஆர் அருவி சூழ் மாநதியும், மாகாளம்,
கேதாரம், மா மேரு(வ்)வும்-
கரை ஆர் புனல் ஒழுகு காவிரீ சூழ் கடம்பந்துறை
உறைவார் காப்புக்களே.

6.021   6 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
திரையானும் செந்தாமரை மேலானும் தேர்ந்து, அவர்கள் தாம் தேடிக் காணார், நாணும்
புரையான் எனப்படுவார் தாமே போலும்; போர் ஏறு தாம் ஏறிச் செல்வார் போலும்;
கரையா வரை வில், ஏ, நாகம் நாணா, காலத்தீ அன்ன கனலார் போலும்;
வரை ஆர் மதில் எய்த வண்ணர் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.

7.040   7 st/nd Thirumurai   Song # 11   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
திரையின் ஆர் கடல் சூழ்ந்த தென் இலங்கைக் கோனைச் செற்றவனை, செஞ்சடை மேல் வெண் மதியினானை,
கரையின் ஆர் புனல் தழுவு கொள்ளிடத்தின் கரை மேல் கானாட்டு முள்ளூரில் கண்டு  கழல்-தொழுது,
உரையின் ஆர் மதயானை நாவல் ஆரூரன், உரிமையால் உரை செய்த ஒண் தமிழ்கள்   வல்லார்
வரையின் ஆர் வகை ஞாலம் ஆண்டவர்க்கும், தாம் போய், வானவர்க்கும், தலைவராய்      நிற்பர், அவர் தாமே .

11.004   11 st/nd Thirumurai   Song # 91   காரைக்கால் அம்மையார்    அற்புதத் திருவந்தாதி  
திரைமருவு செஞ்சடையான் சேவடிக்கே ஆளாய்
உரைமருவி யாமுணர்ந்தோங் கண்டீர் - தெரிமினோ
இம்மைக்கும் அம்மைக்கும் எல்லாம் அமைந்தோமே
எம்மைப் புறனுரைப்ப தென்

12.210   12 st/nd Thirumurai   Song # 69   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
திரைக்கெடில வீரட்டா
னத்திருந்த செங்கனக
வரைச்சிலையார் பெருங்கோயில்
தொழுதுவலங் கொண்டிறைஞ்சித்
தரைத்தலத்தின் மிசைவீழ்ந்து
தம்பிரான் திருவருளால்
உரைத்தமிழ்மா லைகள்சாத்தும்
உணர்வுபெற உணர்ந்துரைப்பார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 436   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
திரைத்த டம்புனல் பொன்னிசூழ்
திருத்துருத் தியினில்
வரைத்த லைப்பசும் பொன்எனும்
வண்டமிழ்ப் பதிகம்
உரைத்து மெய்யுறப் பணிந்துபோந்
துலவும்அந் நதியின்
கரைக்கண் மூவலூர்க் கண்ணுத
லார்கழல் பணிந்தார்.
12.500   12 st/nd Thirumurai   Song # 9   சேக்கிழார்   கறைக் கண்டன் சருக்கம்  
திரைசெய்கட லுலகின்கண்
திருநீற்றின் நெறிவிளங்க
உரைசெய்பெரும் புகழ்விளக்கி
ஓங்குநெடு மாறனார்
அரசுரிமை நெடுங்காலம்
அளித்திறைவர் அருளாலே
பரசுபெருஞ் சிவலோகத்
தின்புற்றுப் பணிந்திருந்தார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list