சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் துன்ன
துன்னலின்     துன்னார்புரமும்     துன்னிநின்     துன்னி     துன்னு     துன்னும்முழு     துன்னார்     துன்னம்     துன்ன     துன்னக்     துன்னத்தின்    
1.041   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
துன்னலின் ஆடை உடுத்து, அதன்மேல் ஓர் சூறை நல் அரவு அது சுற்றி,
பின்னுவார் சடைகள் தாழவிட்டு ஆடி, பித்தர் ஆய்த் திரியும் எம்பெருமான்,
மன்னு மா மலர்கள் விட, நாளும் மாமலையாட்டியும் தாமும்,
பன்னும் நால்மறைகள் பாடிட, வருவார் பாம்புர நன்நகராரே.

1.097   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
துன்னார்புரமும் பிரமன் சிரமும் துணிசெய்து,
மின் ஆர் சடைமேல் அரவும் மதியும் விளையாட,
பல்-நாள், இடுமின், பலி! என்று அடைவார் பதிபோலும்
பொன் ஆர் புரிநூல் அந்தணர் வாழும் புறவமே.

2.032   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
துன்னு குழல் மங்கை உமைநங்கை சுளிவு எய்த,
பின் ஒரு தவம் செய்து உழல் பிஞ்ஞகனும், அங்கே,
என்ன சதி? என்று உரைசெய் அங்கணன் இடம் சீர்
மன்னு கொடையாளர் பயில் வண் திரு ஐயாறே.

2.044   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
துன்னம் பெய் கோவணமும் தோலும் உடை ஆடை,
பின் அம் சடைமேல் ஓர் பிள்ளைமதி சூடி,
அன்னம் சேர் தண் கானல் ஆமாத்தூர் அம்மான்தன்
பொன் அம் கழல் பரவாப் பொக்கமும் பொக்கமே?

2.067   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
துன்னு கடல் பவளம் சேர் தூயன நீண்ட திண்தோள்கள்
மின்னு சுடர்க்கொடி போலும் மேனியினார்; ஒரு கங்கைக்
கன்னிகளின் புனையோடு கலைமதிமாலை கலந்த
பின்னுசடைப் பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே.

2.076   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
துன்னம் கொண்ட உடையான், துதைந்த வெண் நீற்றினான்,
மன்னும் கொன்றை மதமத்தம் சூடினான், மா நகர்
அன்னம் தங்கும் பொழில் சூழ் அகத்தியான் பள்ளியை
உன்னம் செய்த மனத்தார்கள் தம் வினை ஓடுமே.

2.090   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
துன்ன ஆடை ஒன்று உடுத்து, தூய வெண் நீற்றினர் ஆகி,
உன்னி நைபவர்க்கு அல்லால், ஒன்றும் கைகூடுவது அன்றால்
பொன்னும் மா மணி உந்தி, பொரு புனல் நிவா மல்கு கரைமேல்,
அன்னம் ஆரும் நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்)அருளே
5.046   5 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
துன்னக் கோவண, சுண்ணவெண் நீறு அணி,
பொன் நக்கன்ன சடை, புகலூரரோ!
மின் நக்கன்ன வெண்திங்களைப் பாம்பு உடன்
என்னுக்கோ உடன்வைத்திட்டு இருப்பதே?

5.087   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
துன்னு வார்குழலாள் உமையாளொடும்
பின்னு வார் சடைமேல் பிறை வைத்தவர்,
மன்னு வார் மணஞ்சேரி மருந்தினை,
உன்னுவார் வினை ஆயின ஓயுமே.

5.087   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
துன்ன ஆடையர், தூ மழுவாளினர்;
பின்னும் செஞ்சடைமேல் பிறை வைத்தவர்-
மன்னு வார் பொழில் சூழ் மணஞ்சேரி எம்
மன்னனார்; கழலே தொழ வாய்க்குமே.

6.053   6 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
துன்னத்தின் கோவணம் ஒன்று உடையார் போலும்; சுடர்   மூன்றும் சோதியும் ஆய்த் யார் போலும்;
பொன் ஒத்த திருமேனிப் புனிதர் போலும்; பூதகணம் புடை   சூழ வருவார் போலும்;
மின் ஒத்த செஞ்சடை வெண்பிறையார் போலும்; வியன்   வீழிமிழலை சேர் விமலர் போலும்;
அன்னத்தேர் அயன் முடி சேர் அடிகள் போலும்   அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.

6.099   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
துன்னம் சேர் கோவணத்தாய்! தூய நீற்றாய்!
துதைந்து   இலங்கு வெண் மழுவாள் கையில் ஏந்தி,
தன் அணையும் தண் மதியும் பாம்பும் நீரும்
சடை முடிமேல் வைத்து உகந்த தன்மையானே!
அன்ன நடை மடவாள் பாகத்தானே!
அக்கு ஆரம் பூண்டானே! ஆதியானே!
பொன் அம்கழல் அடிக்கே போதுகின்றேன்
பூம் புகலூர் மேவிய புண்ணியனே!.

7.056   7 st/nd Thirumurai   Song # 2   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
துன்னு வார்சடைத் மதியானை, துயக்கு உறா வகை தோன்றுவிப்பானை,
பன்னு நால்மறை பாட வல்லானை, பார்த்தனுக்கு அருள் செய்த பிரானை,
என்னை இன் அருள் எய்துவிப்பானை, ஏதிலார் தமக்கு ஏதிலன் தன்னை,
புன்னை, மாதவிப்போது, அலர் நீடூர்ப் புனிதனை, பணியா விடல் ஆமே?

10.922   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
துன்னிநின் றான்தன்னை உன்னிமுன் னாஇரு
முன்னி யவர்தம் குறையை முடித்திடும்
மன்னிய கேள்வி மறையவன் மாதவன்
சென்னியுள் நின்றதோர் தேற்றத்த னாமே.

11.037   11 st/nd Thirumurai   Song # 35   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை  
துன்னி எழில்சிறப்பச் சோதி மலர்மடந்தை
மன்னி மகிழ்ந்துறையும் வாய்மைத்தாய்ப் பொன்னும்

12.190   12 st/nd Thirumurai   Song # 55   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
துன்னு பல்லுயிர் வானவர் முதலாச்
சூழ்ந்து டன்செலக் காஞ்சியில் அணையத்
தன்னை நேர்வரும் பதுமமா நாகந்
தம்பி ராட்டிதாள் தலைமிசை வைத்தே
அன்னை யாயுல கனைத்தையும் ஈன்றாய்
அடிய னேன்உறை பிலமத னிடையே
மன்னு கோயில்கொண் டருளுவாய் என்ன
மலைம டந்தைமற் றதற்கருள் புரிந்து.
12.280   12 st/nd Thirumurai   Song # 651   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
துன்னும்முழு வுடல்துகளால்
சூழும்உணர் வினில்துகளால்
அன்னெறியிற் செறிந்தடைந்த
அமண்மாசு கழுவுதற்கு
மன்னியொளிர் வெண்மையினால்
தூய்மையினால் வழுதியர்தம்
கன்னிநாட் டிடைக்கங்கை
அணைந்ததெனுங் கவின்காட்ட.
12.390   12 st/nd Thirumurai   Song # 1   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
துன்னார் முனைகள் தோள்வலியால்
வென்று சூலப் படையார்தம்
நன்னா மம்தம் திருநாவில்
நாளும் நவிலும் நலமிக்கார்
பன்னாள் ஈசர் அடியார்தம்
பாதம் பரவிப் பணிந்தேத்தி
முன்னா கியநல் திருத்தொண்டில்
முயன்றார் களந்தை முதல்வனார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list