சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் தென்ன
தென்னன்     தென்னாவ     தென்னிலங்கை     தென்னவன்     தென்ன     தென்னவர்கோன்     தென்னற்     தென்னாட்     தென்னவன்(ன்);     தென்னாத்தெனாத்தெத்தெனா     தென்னூர்,    
4.043   4 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தென்னவன் மலை எடுக்கச் சேயிழை நடுங்கக் கண்டு
மன்னவன் விரலால் ஊன்ற, மணி முடி நெரிய, வாயால்
கன்னலின் கீதம் பாடக் கேட்டவர்; காஞ்சி தன்னுள்
இன்னவற்கு அருளிச்செய்தார்-இலங்கு மேற்றளியனாரே.

5.021   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தென்னவன்(ன்); எனை ஆளும் சிவன் அவன்;
மன்னவன்; மதி அம் மறை ஓதியான்;
முன்னம் அன்னவன் சேரலன், பூழியான்,
இன்னம் இன்பு உற்ற இன்னம்பர் ஈசனே.

7.002   7 st/nd Thirumurai   Song # 6   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
தென்னாத்தெனாத்தெத்தெனா என்று பாடிச் சில்பூதமும் நீரும் திசை திசையன;
பல்-நால்மறை பாடுதிர்; பாசூர் உளீர்; படம் பக்கம் கொட்டும் திரு ஒற்றியூரீர்;
பண் ஆர் மொழியாளை ஓர் பங்கு உடையீர்; படு காட்டு அகத்து என்றும் ஓர் பற்று ஒழியீர்;
அண்ணாமலையேன் என்றீர்; ஆரூர் உளீர் அடிகேள்! உமக்கு ஆட்செய அஞ்சுதுமே .

7.012   7 st/nd Thirumurai   Song # 6   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
தென்னூர், கைம்மைத் திருச் சுழியல்,-திருக்கானப்பேர்,
பன் ஊர் புக்கு உறையும் பரமர்க்கு இடம், பாய் நலம்
என் ஊர் எங்கள் பிரான் உறையும் திருத் தேவனூர்,
பொன்னூர் நாட்டுப் பொன்னூர், புரிசை நாட்டுப் புரிசையே.

10.406   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
தென்னன் திருநந்தி சேவகன் றன்னொடும்
பொன்னங் கிரியினிற் பூதலம் போற்றிடும்
பன்னும் பரிபிடி அந்தம் பகவனோ
டுன்னும் திரிபுரை ஓதிநின் றானுக்கே.

12.000   12 st/nd Thirumurai   Song # 311   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
தென்னாவ லூர்மன்னன்
தேவர்பிரான் திருவருளால்
மின்னாருங் கொடிமருங்குற்
பரவையெனு மெல்லியல்தன்
பொன்னாரும் முலைஓங்கல்
புணர்குவடே சார்வாகப்
பன்னாளும் பயில்யோக
பரம்பரையின் விரும்பினார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 408   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
தென்னிலங்கை இராவணன்தன்
சிரம்ஈரைந் துந்துணித்த
மன்னவனாம் இராமனுக்கு
வரும்பெரும்பா தகந்தீர்த்த
பிஞ்ஞகனைத் தொழுவதற்கு
நினைந்துபோய்ப் பெருமகிழ்ச்சி
துன்னிமனங் கரைந்துருகத்
தொழுதெழுந்தார் சொல்லரசர்.
12.280   12 st/nd Thirumurai   Song # 600   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தென்னவன் தானும் முன்செய்
தீவினைப் பயத்தி னாலே
அந்நெறிச் சார்வு தன்னை
அறமென நினைந்து நிற்ப
மன்னிய சைவ வாய்மை
வைதிக வழக்க மாகும்
நன்னெறி திரிந்து மாறி
நவைநெறி நடந்த தன்றே.
12.280   12 st/nd Thirumurai   Song # 671   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தென்ன வன்பெருந் தேவியார்
சிவக்கன்றின் செய்ய
பொன்ன டிக்கம லங்களிற்
பொருந்தமுன் வீழ்ந்தார்
மன்னு சண்பையர் வள்ளலார்
மகிழ்சிறந் தளிக்கும்
இன்ன ருட்பெருஞ் சிறப்பொடுந்
திருக்கையால் எடுத்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 745   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தென்னவன் தேவி யாரும்
திருமணிச் சிவிகை மீது
பின்வர அமைச்சர் முன்பு
பெருந்தொண்டர் குழாத்துச் செல்லப்
பொன்னணி மாட வீதி
யூடெழுந் தருளிப் புக்கார்
கன்னிநா டுடையான் கோயில்
காழிநா டுடைய பிள்ளை.
12.280   12 st/nd Thirumurai   Song # 758   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தென்னவன் தன்னை நோக்கித்
திருமேனி எளியர் போலும்
இன்னருட் பிள்ளை யார்மற்
றிவர் எண்ணி லார்கள்
மன்னநின் மயக்க மெங்கள்
வள்ளலார் தீர நல்கும்
பின்னையிவ் வமணர் மூள்வார்
வல்லரேல் பேச என்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 764   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தென்னவன் நோக்கங் கண்டு
திருக்கழு மலத்தார் செல்வர்
அன்னவன் வலப்பால் வெப்பை
ஆலவாய் அண்ணல் நீறே
மன்னும்மந் திரமு மாகி
மருந்துமாய்த் தீர்ப்ப தென்று
பன்னிய மறைக ளேத்திப்
பகர்திருப் பதிகம் பாடி.
12.280   12 st/nd Thirumurai   Song # 794   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தென்னவன் நகையுட் கொண்டு
செப்பிய மாற்றந் தேரார்
சொன்னது பயனாக் கொண்டு
சொல்லுவார் தொடர்ந்த வாது
முன்னுற இருகாற் செய்தோம்
முக்காலில் ஒருகால் வெற்றி
என்னினும் உடையோம் மெய்ம்மை
இனியொன்று காண்ப தென்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 801   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தென்னவன் வெப்புத் தீர்ந்து
செழுமணிக் கோயில் நீங்கிப்
பின்னுற அணைந்த போது
பிள்ளையார் பெருகுஞ் செல்வம்
மன்னிய மதுரை மூதூர்
மறுகில்வந் தருளக் கண்டு
துன்னிய மாதர் மைந்தர்
தொழுதுவே றினைய சொன்னார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 819   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தென்னவன் மாறன் தானுஞ்
சிவபுரத் தலைவர் தீண்டிப்
பொன்னவில் கொன்றை யார்தந்
திருநீறு பூசப் பெற்று
முன்னைவல் வினையும் நீங்கி
முதல்வனை யறியுந் தன்மை
துன்னினான் வினைக ளொத்துத்
துலையென நிற்ற லாலே.
12.280   12 st/nd Thirumurai   Song # 857   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தென்னவன் தனக்கு நீறு
சிரபுரச் செல்வர் ஈந்தார்
முன்னவன் பணிந்து வாங்கி
முழுவதும் அணிந்து நின்றான்
மன்னன்நீ றணிந்தான் என்று
மற்றவண் மதுரை வாழ்வார்
துன்னிநின் றார்கள் எல்லாம்
தூயநீ றணிந்து கொண்டார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 864   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தென்னவன் தானும் எங்கள்
செம்பியன் மகளார் தாமும்
நன்னெறி அமைச்ச னாரும்
ஞானசம் பந்தர் செய்ய
பொன்னடிக் கமலம் போற்றி
உடன் புகப் புனிதர்கோயில்
தன்னைமுன் வலங்கொண் டுள்ளால்
சண்பையர் தலைவர் புக்கார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 867   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தென்னவன் பணிந்து நின்று
திருவால வாயில் மேவும்
மன்னனே அமணர் தங்கள்
மாயையால் மயங்கி யாதும்
உன்னையான் அறிந்தி லேனை
உறுபிணி தீர்த்தாட் கொள்ள
இன்னருட் பிள்ளை யாரைத்
தந்தனை இறைவ என்றான்.
12.280   12 st/nd Thirumurai   Song # 903   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தென்னவர்கோன் முன்அமணர் செய்த வாதில்
தீயின்கண் இடுமேடு பச்சை யாக்கி
என்னுள்ளத் துணையாகி ஆல வாயில்
அமர்ந்திருந்த வாறென்கொல் எந்தாய் என்று
பன்னுதமிழ்த் தொடைசாத்திப் பரவிப் போந்து
பண்பினிய தொண்டருடன் அங்கு வைகி
மன்னுபுகழ்ப் பதிபிறவும் வணங்கச் சண்பை
வள்ளலார் நள்ளாறு வணங்கிச் செல்வார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 944   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தென்னற் குயிரோடு
நீறளித்துச் செங்கமலத்
தன்னம் அனையார்க்கும்
அமைச்சர்க்கும் அன்பருளித்
துன்னுநெறி வைதிகத்தின்
தூநெறியே ஆக்குதலான்
மன்னுபுகழ் வாகீசர்
கேட்டு மனமகிழ்ந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 951   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தென்னாட் டமண்மா
சறுத்துத் திருநீறே
அந்நாடு போற்றுவித்தார்
வந்தணையும் வார்த்தைகேட்
டெந்நாள் பணிவதென
ஏற்றெழுந்த மாமறையோர்
முன்னாக வேதம்
முழங்க எதிர்கொண்டார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 982   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தென்னாட் டமண்மா சறுத்தார்தம்
செய்கை கண்டு திகைத்தமணர்
அந்நாட் டதனை விட்டகல்வார்
சிலர்தங் கையிற் குண்டிகைகள்
என்னா வனமற் றிவையென்று
தகர்ப்பார் இறைவன் ஏறுயர்த்த
பொன்னார் மேனிப் புரிசடையான்
அன்றே என்று போற்றினார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 92   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
தென்னவர்கோன் மகளாரைத்
திருவேட்டு முன்னரே
தொன்மதுரை நகரின்கண்
இனிதிருந்த சோழனார்
அன்னவர்க ளுடன்கூட
அணையஅவ ருங்கூடி
மன்னுதிரு வாலவாய்
மணிக்கோயில் வந்தணைந்தார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list