சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் தேய்
தேய்ந்தற்     தேய்த்ததுவே     தேய்ந்துடல்     தேய்ந்து     தேய்     தேய்ந்த    
2.045   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேய்ந்து மலி வெண்பிறையான், செய்யதிருமேனியினான்,
வாய்ந்து இலங்கு வெண்நீற்றான், மாதினை ஓர் கூறு
உடையான்,
சாய்ந்து அமரர் வேண்டத் தடங்கடல் நஞ்சு உண்டு
அநங்கைக்
காய்ந்த பிரான், மேவி உறை கோயில் கைச்சினமே.

4.008   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தேய் பொடி வெள்ளை பூசி, அதன் மேல் ஒர் திங்கள்-திலகம் பதித்த நுதலர்
காய் கதிர் வேலை நீல ஒளி மா மிடற்றர்; கரிகாடர்; கால் ஒர் கழலர்;
வேய் உடன் நாடு தோளி அவள் விம்ம, வெய்ய மழு வீசி, வேழ உரி போர்த்து
ஏ, இவர் ஆடும் ஆறும் இவள் காணும் ஆறும்! இதுதான் இவர்க்கு ஒர் இயல்பே?

4.089   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தேய்ந்து இலங்கும் சிறு வெண் மதியாய்! நின் திருச்சடை மேல்
பாய்ந்த கங்கைப் புனல் பல்முகம் ஆகிப் பரந்து ஒலிப்ப,
ஆய்ந்து இலங்கும் மழு, வேல், உடையாய்!-அடியேற்கு உரை நீ,
ஏந்து இளமங்கையும் நீயும் நெய்த்தானத்து இருந்ததுவே!

5.006   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தேய்ந்த திங்கள் கமழ் சடையன்; கனல்
ஏந்தி எல்லியுள் ஆடும் இறைவனார்;
காய்ந்து காமனை நோக்கின கண்ணினார்
ஆய்ந்த நால்மறை ஓதும் ஆரூரரே.

9.023   9 st/nd Thirumurai   Song # 6   திருவாலியமுதனார்   திருவிசைப்பா  
தேய்ந்து மெய்வெளுத் தகம்வளைந் தரவினை
   அஞ்சித்தான் இருந்தேயும்
காய்ந்து வந்துவந் தென்றனை வலிசெய்து
   கதிர்நிலா எரிதூவும்
ஆய்ந்த நான்மறை அந்தணர் தில்லையுள்
   அம்பலத் தரன் ஆடல்
வாய்ந்த மாமலர்ப் பாதங்கள் காண்பதோர்
   மனத்தினை யுடையேற்கே. 

10.107   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
தேய்ந்தற் றொழிந்த இளமை கடைமுறை
ஆய்ந்தற்ற பின்னை அரிய கருமங்கள்
பாய்ந்தற்ற கங்கைப் படர்சடை நந்தியை
ஓர்ந்துற்றுக் கொள்ளும் உயிருள்ள போதே. 

11.016   11 st/nd Thirumurai   Song # 27   நக்கீரதேவ நாயனார்   போற்றித் திருக்கலி வெண்பா  
தேய்த்ததுவே செம்பொற் செழுஞ்சடைமேற் சேர்வித்து
வாய்த்திமையோர் தம்மைஎல்லாம் வான்சிறையில் பாய்த்திப்

11.038   11 st/nd Thirumurai   Song # 57   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்  
தேய்ந்துடல் வற்றிச்
  சின்னரம் பெழுந்தே
இறுகுபு சுள்ளி
  இயற்றிய குரம்பை
உறுசெறித் தனைய
  உருவுகொண் டுள்வளைஇ
இன்னிசை நல்லி
  யாழ்சுமந் தன்னம்
மன்னிய வளநகர்
  மனைக்கடை தோறும் (10)


This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list