சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் நஞ்சு
நஞ்சுமிழ்     நஞ்சும்அமு     நஞ்சுகலந்     நஞ்சு    
2.085   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நஞ்சு அணி கண்டன், எந்தை, மடவாள் தனோடும் விடை ஏறும் நங்கள் பரமன்,
துஞ்சு இருள் வன்னி, கொன்றை, முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும், உரும் இடியும், மின்னும், மிகை ஆன பூதம் அவையும்,
அஞ்சிடும்; நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே.

2.117   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நஞ்சு கண்டத்து அடக்கி(ந்), நடுங்கும் மலையான்மகள்
அஞ்ச, வேழம் உரித்த பெருமான் அமரும்(ம்) இடம்
எஞ்சல் இல்லாப் புகழ் போய் விளங்கும்(ம்) இரும்பைதனுள்,
மஞ்சில் ஓங்கும் பொழில் சூழ்ந்து அழகு ஆய மாகாளமே.

3.071   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நஞ்சு அமுது செய்த மணிகண்டன், நமை ஆள் உடைய ஞான முதல்வன்,
செஞ்சடை இடைப் புனல் கரந்த சிவலோகன், அமர்கின்ற இடம் ஆம்
அம் சுடரொடு, ஆறுபதம், ஏழின் இசை, எண் அரிய வண்ணம் உள ஆய்,
மஞ்சரொடு மாதர்பலரும் தொழுது சேரும், வயல் வைகாவிலே.

4.053   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நஞ்சு இருள் மணி கொள் கண்டர்; நகை இருள் ஈமக் கங்குல்
வெஞ்சுடர் விளக்கத்து ஆடி விளங்கினார் போலும் மூவா
வெஞ்சுடர் முகடு தீண்டி வெள்ளி நாராசம் அன்ன
அம் சுடர் அணி வெண் திங்கள் அணியும் ஆரூரனாரே.

6.013   6 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நஞ்சு அடைந்த கண்டத்தர், வெண் நீறு ஆடி, நல்ல புலி அதள்மேல் நாகம் கட்டி,
பஞ்சு அடைந்த மெல்விரலாள் பாகம் ஆக,
பராய்த்துறையேன் என்று ஓர் பவள வண்ணர்
துஞ்சு இடையே வந்து, துடியும் கொட்ட,
துண்ணென்று எழுந்திருந்தேன்; சொல்லமாட்டேன்;
புன்சடையின்மேல் ஓர் புனலும் சூடி, புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே!

6.032   6 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நஞ்சு உடைய கண்டனே, போற்றி போற்றி!
நல்-தவனே, நின் பாதம் போற்றி போற்றி!
வெஞ்சுடரோன் பல் இறுத்த வேந்தே, போற்றி!
வெண்மதி அம் கண்ணி விகிர்தா, போற்றி!
துஞ்சு இருளில் ஆடல் உகந்தாய், போற்றி!
தூ நீறு மெய்க்கு அணிந்த சோதீ, போற்றி!
செஞ்சடையாய், நின் பாதம் போற்றி போற்றி!
திருமூலட்டானனே, போற்றி போற்றி!.

6.084   6 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நஞ்சு அடைந்த கண்டத்து நாதன் தன்னை, நளிர்மலர்ப்-பூங்கணை வேளை நாசம் ஆக
வெஞ்சினத்தீ விழித்தது ஒரு நயனத்தானை, வியன்கெடில வீரட்டம் மேவினானை,
மஞ்சு அடுத்த நீள் சோலை மாட வீதி மதில் ஆரூர் இடம் கொண்ட மைந்தன் தன்னை,
செஞ் சினத்த திரிசூலப்படையான் தன்னை, செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.

8.116   8 st/nd Thirumurai   Song # 4   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
நஞ்சு அமர் கண்டத்தன்; அண்டத்தவர் நாதன்;
மஞ்சு தோய் மாட, மணி உத்தரகோசமங்கை
அம் சொலாள் தன்னோடும் கூடி, அடியவர்கள்
நெஞ்சுளே நின்று, அமுதம் ஊறி, கருணை செய்து,
துஞ்சல், பிறப்பு அறுப்பான்; தூய புகழ் பாடி,
புஞ்சம் ஆர் வெள் வளையீர்! பொன் ஊசல் ஆடாமோ.

11.026   11 st/nd Thirumurai   Song # 8   பட்டினத்துப் பிள்ளையார்   கோயில் நான்மணிமாலை  
நஞ்சுமிழ் பகுவாய் வெஞ்சின மாசுணம்
தன்முதல் முருக்க நெல்முதற் சூழ்ந்த
நீர்ச்சிறு பாம்புதன் வாய்க்கெதிர் வந்த
தேரையை வவ்வி யாங்கி யான்முன்
கருவிடை வந்த ஒருநாள் தொடங்கி

மறவா மறலி முறைபிறழ் பேழ்வாய்
அயில்தலை அன்ன எயிற்றிடைக் கிடந்தாங்
கருள்நனி இன்றி ஒருவயி றோம்பற்குப்
பல்லுயிர் செகுத்து வல்லிதின் அருந்தி
அயர்த்தனன் இருந்த போதும் பெயர்த்துநின்று
எண்டோள் வீசிக் கண்டோர் உருகத்
தொல்லெயில் உடுத்த தில்லை மூதூர்
ஆடும் அம்பலக் கூத்தனைப்
பாடுதல் பரவுதல் பணிதலோ இலமே.

12.210   12 st/nd Thirumurai   Song # 104   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
நஞ்சும்அமு தாம்எங்கள்
நாதனடி யார்க்கென்று
வஞ்சமிகு நெஞ்சுடையார்
வஞ்சனையாம் படியறிந்தே
செஞ்சடையார் சீர்விளக்குந்
திறலுடையார் தீவிடத்தால்
வெஞ்சமணர் இடுவித்த
பாலடிசில் மிசைந்திருந்தார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 107   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
நஞ்சுகலந் தூட்டிடவும்
நஞ்சமயத் தினில்விடந்தீர்
தஞ்சமுடை மந்திரத்தால்
சாதியா வகைதடுத்தான்
எஞ்சும்வகை அவற்கிலதேல்
எம்முயிரும் நின்முறையும்
துஞ்சுவது திடமென்றார்
சூழ்வினையின் துறைநின்றார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list