சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் நம்பி
நம்பியா     நம்பி     நம்பினார்க்கு    
7.088   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
நம்பினார்க்கு அருள் செய்யும் அந்தணர் நால்மறைக்கு இடம் ஆய வேள்வியுள்
செம்பொன் ஏர் மடவார் அணி பெற்ற திரு மிழலை,
உம்பரார் தொழுது ஏத்த மா மலையாளொடும்(ம்) உடனே உறைவு இடம்
அம் பொன் வீழி கொண்டீர்!-அடியேற்கும் அருளுதிரே!

12.290   12 st/nd Thirumurai   Song # 30   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நம்பியா ரூரர்திரு
வாரூரில் நயந்துறைநாள்
செம்பொற்புற் றிடங்கொண்டு
வீற்றிருந்த செழுந்தேனைத்
தம்பெரிய விருப்பினொடுந்
தாழ்ந்துணர்வி னாற்பருகி
இம்பருடன் உம்பர்களும்
அதிசயிப்ப ஏத்தினார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 265   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நம்பியா ரூரனுக்கு
நங்கைசங் கிலிதன்னை
இம்பர்ஞா லத்திடைநம்
ஏவலினால் மணவினைசெய்
தும்பர்வா ழுலகறிய
அளிப்பீரென் றுணர்த்துதலும்
தம்பிரான் திருத்தொண்டர்
அருள்தலைமேற் கொண்டெழுவார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 319   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நம்பி யருளால் சென்றவரும்
நங்கை பரவை யார்தமது
பைம்பொன் மணிமா ளிகையணைந்து
பண்பு புரியும் பாங்கினால்
வெம்பு புலவிக் கடலழுந்தும்
மின்னே ரிடையார் முன்னெய்தி
எம்பி ராட்டிக் கிதுதகுமோ
என்று பலவும் எடுத்துரைப்பார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 383   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நம்பியா ரூரர் நெஞ்சில்
நடுக்கம்ஒன் றின்றி நின்று
தம்பிரா னாரைத் தூது
தையல்பால் விட்டார் என்னும்
இம்பரின் மிக்க வார்த்தை
ஏயர்கோ னார்தாங் கேட்டு
வெம்பினார் அதிச யித்தார்
வெருவினார் விளம்ப லுற்றார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 63   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
நம்பி தாமும் அந்நாள்போய்
நாகைக் காரோ ணம்பாடி
அம்பொன் மணிப்பூண் நவமணிகள்
ஆடை சாந்தம் அடற்பரிமா
பைம்பொற் சுரிகை முதலான
பெற்று மற்றும் பலபதியில்
தம்பி ரானைப் பணிந்தேத்தித்
திருவா ரூரில் சார்ந்திருந்தார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 137   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
நம்பி பாதஞ் சேரமான்
பெருமாள் பணிய நாவலூர்ச்
செம்பொன் முந்நூன் மணிமார்பர்
சேரர் பெருமான் எதிர்வணங்கி
உம்பர் நாதர் உமக்களித்த
தன்றோ என்ன வுடன்மகிழ்ந்து
தம்பி ரானைப் போற்றிசைத்துத்
தடங்கா வேரி நடுவணைந்தார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list