சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் நறு
நறு     நறும்பொழில்     நறுமலர்     நறும்     நறுமாமலர்    
1.134   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நறு நீர் உகும் காழி ஞானசம்பந்தன்,
வெறி நீர்த் திருப் பறியல் வீரட்டத்தானை,
பொறி நீடு அரவன், புனை பாடல் வல்லார்க்கு
அறும், நீடு அவலம்; அறும், பிறப்புத்தானே.

3.125   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நறும்பொழில் காழியுள் ஞானசம்பந்தன்,
பெறும் பத நல்லூர்ப்பெருமணத்தானை,
உறும் பொருளால் சொன்ன ஒண்தமிழ் வல்லார்க்கு
அறும், பழி பாவம்; அவலம் இலரே.

4.062   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நறுமலர் நீரும் கொண்டு நாள் தொறும் ஏத்தி வாழ்த்திச்
செறிவன சித்தம் வைத்துத் திருவடி சேரும் வண்ணம்
மறி கடல் வண்ணன் பாகா! மாமறை அங்கம் ஆறும்
அறிவனே! ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!

5.074   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நறும் பொன்நாள் மலர்க் கொன்றையும் நாகமும்
துறும்பு செஞ்சடை, தூ மதி வைத்து, வான்
உறும் பொன்மால்வரைப் பேதையோடு ஊர்தொறும்
எறும்பியூர் மலையான், எங்கள் ஈசனே.

6.006   6 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நறுமலர் ஆய் நாறும் மலர்ச்சேவடி;
நடு ஆய்  உலகம் நாடு ஆய(வ்) அடி;
செறிகதிரும் திங்களும் ஆய் நின்ற(வ்) அடி;
தீத்திரள் ஆய் உள்ளே திகழ்ந்த(வ்) அடி;
மறு மதியை மாசு கழுவும்(ம்) அடி;
மந்திரமும் தந்திரமும் ஆய(வ்) அடி;
செறி கெடில நாடர் பெருமான் அடி
திரு வீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி.

6.047   6 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நறுமாமலர் கொய்து, நீரில் மூழ்கி, நாள்தோறும் நின் கழலே ஏத்தி, வாழ்த்தி,
துறவாத துன்பம் துறந்தேன் தன்னைச் சூழ் உலகில் ஊழ்வினை வந்து உற்றால் என்னே?
உறவு ஆகி, வானவர்கள் முற்றும் வேண்ட, ஒலிதிரை நீர்க்கடல் நஞ்சு உண்டு, உய்யக்கொண்ட
அறவா! அடியேனை, அஞ்சேல்! என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.


This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list