சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter: ( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் நறை
நறை
நறைகமழுஞ்
நறையாற்றுங்
நறையிதழித்
நறையூரில்
நறைக்கண்
1.021
1 st/nd Thirumurai
Song # 4
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நறை மலிதரும் அளறொடு, முகை, நகு மலர், புகை, மிகு வளர் ஒளி,
நிறை புனல் கொடு, தனை நினைவொடு நியதமும் வழிபடும் அடியவர்
குறைவு இல பதம் அணை தர அருள் குணம் உடை இறை உறை வன பதி
சிறை புனல் அமர் சிவபுரம் அது நினைபவர் செயமகள் தலைவரே.
1.061
1 st/nd Thirumurai
Song # 1
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நறை கொண்ட மலர் தூவி, விரை அளிப்ப, நாள் தோறும்
முறை கொண்டு நின்று, அடியார் முட்டாமே பணி செய்ய,
சிறை கொண்ட வண்டு அறையும் செங்காட்டங்குடி அதனுள்,
கறை கொண்ட கண்டத்தான்-கணபதீச்சரத்தானே.
2.069
2 st/nd Thirumurai
Song # 4
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நறை வளர் கொன்றையினாரும்; ஞாலம் எல்லாம் தொழுது
ஏத்த,
கறை வளர் மா மிடற்றாரும்; காடு அரங்கா, கனல் ஏந்தி,
மறை வளர் பாடலினோடு, மண்முழவம், குழல், மொந்தை
பறை, வளர் பாடலினாரும் பாண்டிக்கொடுமுடியாரே.
5.066
5 st/nd Thirumurai
Song # 4
திருநாவுக்கரசர்
தேவாரம்
நறை கொள் பூம் புனல் கொண்டு எழு மாணிக்கு ஆய்க்
குறைவு இலாக் கொடுங் கூற்று உதைத்திட்டவன்,
மறை கொள் நாவன், வலஞ்சுழி மேவிய
இறைவனை, இனி என்றுகொல் காண்பதே?
6.070
6 st/nd Thirumurai
Song # 10
திருநாவுக்கரசர்
தேவாரம்
நறையூரில் சித்தீச்சரம், நள்ளாறு, நாரையூர், நாகேச்சுரம், நல்லூர், நல்ல
துறையூர், சோற்றுத்துறை, சூலமங்கை, தோணிபுரம், துருத்தி, சோமீச்சுரம்,
உறையூர், கடல் ஒற்றியூர், ஊற்றத்தூர், ஓமாம்புலியூர், ஓர் ஏடகத்தும்,
கறையூர், கருப்பறியல், கன்றாப்பூரும், கயிலாய நாதனையே காணல் ஆமே.
7.053
7 st/nd Thirumurai
Song # 4
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
நறை சேர் மலர் ஐங்கணை யானை நயனத் தீயால் பொடி செய்த
இறையார் ஆவர்; எல்லார்க்கும் இல்லை என்னாது அருள் செய்வார்;
பறை ஆர் முழவம் பாட்டோடு பயிலும் தொண்டர் பயில் கடவூர்ப்
பிறை ஆர் சடையார் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.
8.217
8 st/nd Thirumurai
Song # 9
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
நறைக்கண் மலிகொன்றை யோன்நின்று
நாடக மாடுதில்லைச்
சிறைக்கண் மலிபுனற் சீர்நகர்
காக்குஞ்செவ் வேலிளைஞர்
பறைக்கண் படும்படுந் தோறும்
படாமுலைப் பைந்தொடியாள்
கறைக்கண் மலிகதிர் வேற்கண்
படாது கலங்கினவே.
12.020
12 st/nd Thirumurai
Song # 33
சேக்கிழார்
தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
நறைகமழுஞ் சடைமுடியும்
நாற்றோளும் முக்கண்ணும்
கறைமருவுந் திருமிடறுங்
கரந்தருளி எழுந்தருளும்
மறையவனித் திறமொழிய
மாமறையோர் உரைசெய்வார்
நிறையுடைய வேட்கோவர்
நீர்மொழியும் புகுந்ததென.
12.210
12 st/nd Thirumurai
Song # 7
சேக்கிழார்
திருநின்ற சருக்கம்
நறையாற்றுங் கமுகுநவ
மணிக்கழுத்தி னுடன்கூந்தல்
பொறையாற்றா மகளிரெனப்
புறம்பலைதண் டலைவேலித்
துறையாற்ற மணிவண்ணச்
சுரும்பிரைக்கும் பெரும்பெண்ணை
நிறையாற்று நீர்க்கொழுந்து
படர்ந்தேறு நிலைமையதால்.
12.360
12 st/nd Thirumurai
Song # 13
சேக்கிழார்
வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
நறையிதழித் திருமுடியார்
அடியாரை நாள்தோறும்
முறைமையினில் திருவமுது
முன்னூட்டிப் பின்னுண்ணும்
நிறையுடைய பெருவிருப்பால்
நியதியா கக்கொள்ளும்
துறைவழுவா வகையொழுகுந்
தூயதொழில் தலைநின்றார்.
This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list