சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter: ( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் நான
நானாவித
நான்பெற்ற
நானும்நின்
நான்கண்ட
நானென்றும்
நானென
நான்இது
நானறிந்
நானா
நானுமென்
நானுடைய
நானே
நான்முகனே
நான்மறை
நான்மறைநூற்
நான
நான்
நானேல்
நான்முகன்
நானும்,
நானேயோ
1.009
1 st/nd Thirumurai
Song # 5
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நானாவித உருவான், நமை ஆள்வான், நணுகாதார்
வான் ஆர் திரி புரம் மூன்று எரியுண்ணச் சிலை தொட்டான்,
தேன் ஆர்ந்து எழு கதலிக்கனி உண்பான் திகழ் மந்தி
மேல் நோக்கி நின்று இரங்கும் பொழில் வேணுபுரம் அதுவே.
4.057
4 st/nd Thirumurai
Song # 2
திருநாவுக்கரசர்
தேவாரம்
நான் உகந்து உன்னை நாளும் நணுகுமா கருதியேயும்
ஊன் உகந்து ஓம்பும் நாயேன் உள் உற ஐவர் நின்றார்
தான் உகந்தே உகந்த தகவு இலாத் தொண்டனேன், நான்;
ஆன் உகந்து ஏறுவானே! ஆவடுதுறை உளானே!
7.021
7 st/nd Thirumurai
Song # 6
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
நானேல் உன் அடியே நினைந்தேன்; நினைதலுமே
ஊன் நேர் இவ் உடலம் புகுந்தாய்; என் ஒண்சுடரே!
தேனே! இன்னமுதே! திரு மேற்றளி உறையும்
கோனே! உன்னை அல்லால் குளிர்ந்து ஏத்த மாட்டேனே .
7.084
7 st/nd Thirumurai
Song # 3
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
நான் உடை மாடு எனவே நன்மை தரும் பரனை, நல் பதம் என்று உணர்வார் சொல்பதம் ஆர் சிவனை,
தேன் இடை இன்னமுதை, பற்று அதனில்-தெளிவை, தேவர்கள் நாயகனை, பூ உயர் சென்னியனை,
வான் இடை மாமதியை, மாசு அறு சோதியனை, மாருதமும்(ம்) அனலும் மண் தலமும்(ம்) ஆய-
கான் இடை மாநடன் என்று எய்துவது என்றுகொலோ?-கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே .
8.104
8 st/nd Thirumurai
Song # 1
மாணிக்க வாசகர்
திருவாசகம்
நான்முகன் முதலா வானவர் தொழுதெழ
ஈரடி யாலே மூவுல களந்து
நால்திசைமுனிவரும் ஐமுலன் மலரப்
போற்றிச்செய் கதிர்முதித் திருநெடு மாலன்(று)
அடி முடி அரியும் ஆதர வதனிற்
8.110
8 st/nd Thirumurai
Song # 2
மாணிக்க வாசகர்
திருவாசகம்
நான் ஆர்? என் உள்ளம் ஆர்? ஞானங்கள் ஆர்? என்னை யார் அறிவார்
வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல்? மதி மயங்கி
ஊன் ஆர் உடை தலையில் உண் பலி தேர் அம்பலவன்
தேன் ஆர் கமலமே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
8.110
8 st/nd Thirumurai
Song # 13
மாணிக்க வாசகர்
திருவாசகம்
நான் தனக்கு அன்பு இன்மை, நானும், தானும், அறிவோம்;
தான் என்னை ஆட்கொண்டது எல்லாரும் தாம் அறிவார்;
ஆன கருணையும் அங்கு உற்றே தான்; அவனே
கோன் என்னைக் கூட குளிர்ந்து ஊதாய்; கோத்தும்பீ!
8.110
8 st/nd Thirumurai
Song # 15
மாணிக்க வாசகர்
திருவாசகம்
நானும், என் சிந்தையும், நாயகனுக்கு எவ் இடத்தோம்
தானும், தன் தையலும், தாழ் சடையோன் ஆண்டிலனேல்?
வானும், திசைகளும், மா கடலும், ஆய பிரான்
தேன் உந்து சேவடிக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
8.114
8 st/nd Thirumurai
Song # 14
மாணிக்க வாசகர்
திருவாசகம்
நான்மறை யோனுமகத்திய மான்படப்
போம்வழி தேடுமா றுந்தீபற
புரந்தரன் வேள்வியி லுந்தீபற.
8.134
8 st/nd Thirumurai
Song # 2
மாணிக்க வாசகர்
திருவாசகம்
நான் ஆர், அடி அணைவான்? ஒரு நாய்க்குத் தவிசு இட்டு, இங்கு,
ஊன் ஆர் உடல் புகுந்தான்; உயிர் கலந்தான்; உளம் பிரியான்;
தேன் ஆர் சடை முடியான்; மன்னு திருப்பெருந்துறை உறைவான்;
வானோர்களும் அறியாதது ஒர் வளம் ஈந்தனன், எனக்கே.
8.138
8 st/nd Thirumurai
Song # 10
மாணிக்க வாசகர்
திருவாசகம்
நானேயோ தவம் செய்தேன்? சிவாய நம' எனப் பெற்றேன்?
தேன் ஆய், இன் அமுதமும் ஆய், தித்திக்கும் சிவபெருமான்
தானே வந்து, எனது உள்ளம் புகுந்து, அடியேற்கு அருள் செய்தான்
ஊன் ஆரும் உயிர் வாழ்க்கை ஒறுத்து அன்றே, வெறுத்திடவே!
10.100
10 st/nd Thirumurai
Song # 24
திருமூலர்
திருமந்திரம்
நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறும் மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.
10.101
10 st/nd Thirumurai
Song # 33
திருமூலர்
திருமந்திரம்
நானும்நின் றேத்துவன் நாடொறும் நந்தியைத்
தானும்நின் றான்தழல் தானொக்கு மேனியன்
வானில் நின் றார்மதி போல்உடல் உள்ளுவந்
தூனில்நின் றாங்கே உயிர்க்கின்ற வாறே.
10.313
10 st/nd Thirumurai
Song # 15
திருமூலர்
திருமந்திரம்
நான்கண்ட வன்னியும் நாலு கலையேழுந்
தான்கண்ட வாயுச் சரீர முழுதொடும்
ஊன்கண்டு கொண்ட உணர்வு மருந்தாக
மான்கன்று நின்று வளர்கின்ற வாறே.
10.504
10 st/nd Thirumurai
Song # 4
திருமூலர்
திருமந்திரம்
நானென்றும் தானென்றும் நாடிநான் சாரவே
தானென்று நானென் றிரண்டிலாத் தற்பரம்
தானென்றும் நான் என்ற தத்துவம் நல்கலால்
தானென்றும் நானென்றும் சாற்றகில் லேனே.
10.708
10 st/nd Thirumurai
Song # 11
திருமூலர்
திருமந்திரம்
நானென நீயென வேறில்லை நண்ணுதல்
ஊனென ஊனுயி ரென்ன உடன்நின்று
வானென வானவர் நின்று மனிதர்கள்
தேனென இன்பம் திளைக்கின்ற வாறே.
10.708
10 st/nd Thirumurai
Song # 13
திருமூலர்
திருமந்திரம்
நான்இது தான்என நின்றவன் நாடொறும்
ஊன்இது தான்உயிர் போல்உணர் வான்உளன்
வான்இரு மாமழை போற்பொழி வான்உளன்
நான்இது வாம்பரன் நாதனும் ஆமே.
10.709
10 st/nd Thirumurai
Song # 6
திருமூலர்
திருமந்திரம்
நானறிந் தன்றே யிருக்கின்ற தீசனை
வானறிந் தார்அறி யாது மயங்கினர்
ஊனறிந் துள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்
தானறி யான்பின்னை யார்அறி வாரே
10.917
10 st/nd Thirumurai
Song # 7
திருமூலர்
திருமந்திரம்
நானென்றும் தானென்றும் நாடினேன் நாடலும்
நானென்று தானென் றிரண்டில்லை என்பது
நானென்ற ஞான முதல்வனே நல்கினான்
நானென்று நானும் நினைப்பொழிந் தேனே.
10.928
10 st/nd Thirumurai
Song # 7
திருமூலர்
திருமந்திரம்
நானா விதஞ்செய்து நாடுமின் நந்தியை
ஊனார் கமலத்தி னூடுசென் றப்புறம்
வானோர் உலகம் வழிபட மீண்டவன்
தேனார உண்டு தெவிட்டலும் ஆமே.
10.929
10 st/nd Thirumurai
Song # 2
திருமூலர்
திருமந்திரம்
நானறிந் தப்பொருள் நாட இடமில்லை
வானறிந் தங்கே வழியுற விம்மிடும்
ஊனறிந் துள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்
தானறிந் தெங்குந் தலைப்பட லாமே.
11.021
11 st/nd Thirumurai
Song # 23
கபிலதேவ நாயனார்
சிவபெருமான் திருஇரட்டைமணிமாலை
நானுமென் நல்குரவும் நல்காதார் பல்கடையில்
கானிநிமிர்த்து நின்றிரப்பக் கண்டிருக்கும் வானவர்கள்
தம்பெருமான் மூவெயிலும் வேவச் சரந்தூற்றல்
எம்பெருமான் என்னா இயல்பு.
11.023
11 st/nd Thirumurai
Song # 47
பரணதேவ நாயனார்
சிவபெருமான் திருவந்தாதி
நானுடைய மாடே என்ஞானச் சுடர்விளக்கே
நானுடைய குன்றமே நான்மறையாய் நானுடைய
காடுடையாய் காலங்கள் ஆனார் கனலாடும்
காடுடையாய் காலமா னாய்
11.026
11 st/nd Thirumurai
Song # 10
பட்டினத்துப் பிள்ளையார்
கோயில் நான்மணிமாலை
நானே பிறந்த பயன்படைத்
தேன் அயன் நாரணனெம்
கோனே எனத்தில்லை அம்பலத்
தேநின்று கூத்துகந்த
தேனே திருவுள்ள மாகியென்
தீமையெல் லாமறுத்துத்
தானே புகுந்தடி யேன்மனத்
தேவந்து சந்திக்கவே.
1
11.037
11 st/nd Thirumurai
Song # 44
நம்பியாண்டார் நம்பி
ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை
நான்முகனே அன்னசீர் நானூற் றுவர்மறையோர்
தாம்மன்னி வாவும் தகைமைத்தாய் நாமன்னும்
12.000
12 st/nd Thirumurai
Song # 197
சேக்கிழார்
திருமலைச் சருக்கம்
நான்மறை முனிவ னார்க்கு
நம்பியா ரூரர் தோற்றீர்
பான்மையி னேவல் செய்தல்
கடனென்று பண்பின் மிக்க
மேன்மையோர் விளம்ப நம்பி
விதிமுறை யிதுவே யாகில்
யானிதற் கிசையே னென்ன
இசையுமோ வென்று நின்றார்.
12.210
12 st/nd Thirumurai
Song # 227
சேக்கிழார்
திருநின்ற சருக்கம்
நான்மறைநூற் பெருவாய்மை நமிநந்தி
அடிகள்திருத் தொண்டின் நன்மைப்
பான்மைநிலை யால்அவரைப் பரமர்திரு
விருத்தத்துள் வைத்துப் பாடித்
தேன்மருவுங் கொன்றையார் திருவாரூர்
அரனெறியில் திகழுந் தன்மை
ஆனதிற மும்போற்றி அணிவீதிப்
பணிசெய்தங் கமரும் நாளில்.
12.280
12 st/nd Thirumurai
Song # 502
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
நான மான்மத நளிர்பெருஞ்
சேற்றிடை நறும்பொன் தூந றுந்துகள் சொரிதலிற்
சுடரொளிப் படலை
ஆன வீதிகள் அடிவலித்
தவைகரைந் தலைய
வான மாரியிற் பொழிந்தது
மலர்மது மாரி.
This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list