சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter: ( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் நாளும்
நாளும்
நாளும்மிகும்
3.071
3 st/nd Thirumurai
Song # 7
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நாளும் மிகு பாடலொடு ஞானம் மிகு நல்ல மலர், வல்ல வகையால்,
தோளினொடு கை குளிரவே தொழுமவர்க்கு அருள்செய் சோதி இடம் ஆம்
நீளி வளர் சோலைதொறும் நாளிபல துன்று கனி நின்றது உதிர,
வாளை குதிகொள்ள, மது நாற மலர் விரியும் வயல் வைகாவிலே.
5.057
5 st/nd Thirumurai
Song # 3
திருநாவுக்கரசர்
தேவாரம்
நாளும் நம்முடை நாள்கள் அறிகிலோம்;
ஆளும் நோய்கள் ஓர் ஐம்பதோடு ஆறு-எட்டும்;
ஏழைமைப்பட்டு இருந்து, நீர், நையாதே,
கோளிலி(ய்) அரன் பாதமே கூறுமே!
7.012
7 st/nd Thirumurai
Song # 8
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
நாளும் நன்னிலம், தென் பனையூர், வட கஞ்சனூர்,
நீள நீள் சடையான் நெல்லிக்காவு, நெடுங்களம்,
காள கண்டன் உறையும் கடைமுடி, கண்டியூர்,
வேளார் நாட்டு வேளூர், விளத்தூர் நாட்டு விளத்தூரே.
7.062
7 st/nd Thirumurai
Song # 8
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
நாளும் இன் இசையால்-தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு உலகவர் முன்
தாளம் ஈந்து, அவன் பாடலுக்கு இரங்கும் தன்மையாளனை; என் மனக் கருத்தை;
ஆளும் பூதங்கள் பாட, நின்று ஆடும் அங்கணன் தனை; எண் கணம் இறைஞ்சும்
கோளிலிப் பெருங்கோயில் உள்ளானை; கோலக் காவினில் கண்டு கொண்டேனே.
12.150
12 st/nd Thirumurai
Song # 9
சேக்கிழார்
மும்மையால் உலகாண்ட சருக்கம்
நாளும் பெருங்கா தல்நயப்புறும்
வேட்கை யாலே
கேளுந் துணையும் முதற்கேடில்
பதங்க ளெல்லாம்
ஆளும் பெருமான் அடித்தாமரை
அல்ல தில்லார்
மூளும் பெருகன் பெனும்மூர்த்தியார்
மூர்த்தி யார்தாம்.
12.210
12 st/nd Thirumurai
Song # 45
சேக்கிழார்
திருநின்ற சருக்கம்
நாளும்மிகும் பணிசெய்து
குறைந்தடையும் நன்னாளில்
கேளுறும்அன் புறவொழுகுங்
கேண்மையினார் பின்பிறந்தார்
கோளுறுதீ வினைஉந்தப்
பரசமயங் குறித்ததற்கு
மூளுமனக் கவலையினால்
முற்றவரும் துயருழந்து.
12.230
12 st/nd Thirumurai
Song # 6
சேக்கிழார்
திருநின்ற சருக்கம்
நாளும் நம்பி ஆரூரர்
நாமம் நவின்ற நலத்தாலே
ஆளும் படியால் அணிமாதி
சித்தி யான அணைந்ததற்பின்
மூளும் காத லுடன்பெருக
முதல்வர் நாமத் தஞ்செழுத்தும்
கேளும் பொருளும் உணர்வுமாம்
பரிசு வாய்ப்பக் கெழுமினார்.
This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list