சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் நிலை
நிலைபெற     நிலையில்     நிலைத்திவ்     நிலைமை     நிலைச்செண்டும்     நிலை     நிலையும்     நிலையின்     நிலைப்பாடே     நிலையவன்    
2.081   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நிலை ஆர்ந்த உண்டியினர் நெடுங் குண்டர், சாக்கியர்கள்
புலை ஆனார் அற உரையைப் போற்றாது, உன் பொன்
அடியே
நிலை ஆகப் பேணி, நீ சரண்! என்றார் தமை, என்றும்
விலை ஆக ஆட்கொண்டு, வேணுபுரம் விரும்பினையே.

2.097   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நிலை வெறுத்த நெஞ்சமோடு நேசம் இல் புதல்வர்கள்
முலை வெறுத்த பேர் தொடங்கியே முனிவ தன் முனம்
தலை பறித்த கையர், தேரர், தாம் தரிப்ப(அ)ரியவன்;
சிலை பிடித்து எயில் எய்தான்; திருந்து காழி சேர்மினே!

3.003   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நிலை உறும் இடர் நிலையாத வண்ணம்
இலை உறு மலர்கள் கொண்டு ஏத்துதும், யாம்;
மலையினில் அரிவையை வெருவ, வன் தோல்
அலைவரு மதகரி உரித்தவனே!
இமையோர்கள் நின் தாள் தொழ, எழில் திகழ் பொழில் புகலி
உமையாளொடு மன்னினை உயர் திருவடி இணையே.

4.014   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நிலை வலி இன்றி எங்கும் நிலனோடு விண்ணும் நிதனம் செய்து ஓடு புரம் மூன்று
அலை நலிவு அஞ்சி ஓடி, அரியோடு தேவர் அரணம் புக, தன் அருளால்-
கொலை நலி வாளி, மூள அரவு, அம் கை நாணும், அனல் பாய நீறு புரம் ஆம்-
மலை சிலை கையில் ஒல்க வளைவித்த வள்ளல் அவன், ஆம், நமக்கு ஒர் சரணே.

4.059   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நிலை வலம் வல்லன் அல்லன், நேர்மையை நினைய மாட்டான்,
சிலை வலம் கொண்ட செல்வன் சீரிய கயிலை தன்னைத்
தலை வலம் கருதிப் புக்குத் தாங்கினான் தன்னை, அன்று(வ்)
அலை குலை ஆக்குவித்தார்-அவளி வணல்லூராரே.

4.064   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நிலை இலா ஊர் மூன்று ஒன்ற-நெருப்பு, -அரி காற்று அம்பு ஆக,
சிலையும் நாண் அதுவும் நாகம் கொண்டவர்; தேவர் தங்கள்
தலையினால்-தரித்த என்பும், தலைமயிர் வடமும், பூண்ட
விலை இலா வேடர்-வீழிமிழலையுள் விகிர்தனாரே.

4.082   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நிலையும் பெருமையும் நீதியும் சால அழகு உடைத்து ஆய்,
அலையும் பெரு வெள்ளத்து அன்று மிதந்த இத் தோணிபுரம்,
சிலையில்-திரி புரம் மூன்றும் எரித்தார், தம் கழுமலவர்,
அலரும் கழல் அடி நாள் தொறும் நம் தமை ஆள்வனவே.

5.023   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நிலை இலா வெள்ளைமாலையன், நீண்டது ஓர்
கொலை விலால் எயில் எய்த கொடியவன்,
நிலையின் ஆர் வயல் சூழ் திரு நின்றியூர்
உரையினால்-தொழுவார் வினை ஓயுமே.

5.039   5 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நிலைமை சொல்லு, நெஞ்சே! தவம் என் செய்தாய்?
கலைகள் ஆய வல்லான், கயிலாயநல்
மலையன், மா மயிலாடுதுறையன், நம்
தலையின்மேலும் மனத்துளும் தங்கவே.

5.070   5 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நிலையின் ஆர் வரை நின்று எடுத்தான் தனை
மலையினால் அடர்த்து(வ்) விறல் வாட்டினான்,
குலையின் ஆர் பொழில் கொண்டீச்சுரவனைத்
தலையினால் வணங்க, தவம் ஆகுமே.

6.031   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நிலை பெறுமாறு எண்ணுதியேல், நெஞ்சே! நீ வா! நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு,
புலர்வதன் முன் அலகிட்டு, மெழுக்கும் இட்டு, பூமாலை புனைந்து ஏத்தி, புகழ்ந்து பாடி,
தலை ஆரக் கும்பிட்டு, கூத்தும் ஆடி, சங்கரா, சய! போற்றி போற்றி! என்றும்,
அலை புனல் சேர் செஞ்சடை எம் ஆதீ! என்றும், ஆரூரா! என்று என்றே, அலறா நில்லே!.

6.045   6 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நிலைப்பாடே நான் கண்டது; ஏடீ, கேளாய்! நெருநலை நன்பகல இங்கு ஓர் அடிகள் வந்து,
கலைப்பாடும் கண்மலரும் கலக்க, நோக்கி, கலந்து பலி இடுவேன்; எங்கும் காணேன்;
சலப்பாடே; இனி ஒரு நாள் காண்பேன் ஆகில், தன் ஆகத்து   என் ஆகம் ஒடுங்கும் வண்ணம்,
உலைப்பாடே படத் தழுவி, போகல் ஒட்டேன்-ஒற்றியூர் உறைந்து இங்கே திரிவானையே.

6.048   6 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நிலையவன் காண்; தோற்று அவன் காண்; நிறை ஆனான் காண்; நீர் அவன் காண்; பார் அவன் காண், ஊர் மூன்று எய்த
சிலையவன் காண்; செய்ய வாய், கரிய கூந்தல், தேன்மொழியை ஒருபாகம் சேர்த்தினான் காண்;
கலையவன் காண்; காற்று அவன் காண்; காலன் வீழக் கறுத்தவன் காண்; கயிலாயம் என்னும் தெய்வ-
மலையவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலி வலத்தான் காண்; அவன் என் மனத்து உளானே.

7.021   7 st/nd Thirumurai   Song # 9   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
நிலை ஆய் நின் அடியே நினைந்தேன்; நினைதலுமே;
தலைவா! நின் நினையப் பணித்தாய்; சலம் ஒழிந்தேன்;
சிலை ஆர் மா மதில் சூழ் திரு மேற்றளி உறையும்
மலையே! உன்னை அல்லால் மகிழ்ந்து ஏத்த மாட்டேனே .

7.100   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
நிலை கெட, விண் அதிர(ந்), நிலம் எங்கும் அதிர்ந்து அசைய,
மலை இடை யானை ஏறி(வ்) வழியே வருவேன் எதிரே,
அலைகடல் ஆல் அரையன்(ன்) அலர் கொண்டு முன் வந்து இறைஞ்ச,
உலை அணையாத வண்ணம்-நொடித்தான்மலை உத்தமனே.

10.312   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
நிலைபெற நின்றது நேர்தரு வாயு
சிலைபெற நின்றது தீபமும் ஒத்துக்
கலைவழி நின்ற கலப்பை அறியில்
மலைவற வாகும் வழியது வாமே. 

10.841   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
நிலைபெற கேடென்று முன்னே படைத்த
தலைவனை நாடித் தயங்குமென் உள்ளம்
மலையுளும் வானகத் துள்ளும் புறத்தும்
உலையுளும் உள்ளத்தும் ஊழ்த்துநின் றானே. 42,

11.009   11 st/nd Thirumurai   Song # 16   நக்கீரதேவ நாயனார்   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி  
நிலையில் பிறவி நெடுஞ்சுழியிற் பட்டுத்
தலைவ தடுமாறு கின்றேன் தொலைவின்றிப்
போந்தேறக் கைதாராய் காளத்திப் புத்தேளிர்
வேந்தே இப் பாசத்தை விட்டு.

11.023   11 st/nd Thirumurai   Song # 73   பரணதேவ நாயனார்   சிவபெருமான் திருவந்தாதி  
நிலைத்திவ் வுலகனைத்தும் நீரேயாய் நின்றீர்
நிலைத்தில் வுலகனைத்தும் நீரே நிலைத்தீரக்
கானப்பே ரீங்கங்கை சூடினீர் கங்காளீர்
கானப்பே ரீர்கங்கை யீர்.

12.070   12 st/nd Thirumurai   Song # 40   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
நிலைமை மற்றது நோக்கிய நிகரிலார் நேர்நின்
றுலைவில் பல்தனம் ஒன்றொழி யாமைஉய்த் தொழிந்தேன்
தலைவ யானுமென் மனைவியும் சிறுவனும் தகுமேல்
துலையி லேறிடப் பெறுவதுன் னருளெனத் தொழுதார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 126   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
நிலைச்செண்டும் பரிச்செண்டும்
வீசிமிக மகிழ்வெய்தி
விலக்கரும்போர்த் தகர்ப்பாய்ச்சல்
கண்டருளி வென்றிபெற
மலைக்கு நெடு முட்கணைக்கால்
வாரணப்போர் மகிழ்ந்தருளி
அலைக்குமறப் பலபுள்ளின்
அமர்விரும்பி யமர்கின்றார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list