சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter: ( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் நீள
நீளிடை
நீளிடைவிசை
நீள்நிலைக்கோ
நீள்
நீளமா
நீள
5.039
5 st/nd Thirumurai
Song # 10
திருநாவுக்கரசர்
தேவாரம்
நீள் நிலா அரவச் சடை நேசனைப்
பேணிலாதவர் பேதுறவு ஓட்டினோம்;
வாள்நிலா மயிலாடுதுறைதனைக்
காணில், ஆர்க்கும் கடுந் துயர் இல்லையே.
5.054
5 st/nd Thirumurai
Song # 2
திருநாவுக்கரசர்
தேவாரம்
நீளமா நினைந்து, எண் மலர் இட்டவர்
கோள வல்வினையும் குறைவிப்பரால்-
வாளமா இழியும் கெடிலக் கரை,
வேளி சூழ்ந்து, அழகு ஆய வீரட்டரே.
6.091
6 st/nd Thirumurai
Song # 7
திருநாவுக்கரசர்
தேவாரம்
நீள் நிலமும், அம் தீயும், நீரும், மற்றை நெறி இலங்கும் மிகு காலும், ஆகாச(ம்)மும்,
வாள் நிலவு தாரகையும், மண்ணும், விண்ணும், மன் உயிரும், என் உயிரும், தான் ஆம் செம்பொன்
ஆணி! என்றும், அஞ்சன மாமலையே! என்றும், அம் பவளத்திரள்! என்றும், அறிந்தோர் ஏத்தும்
சேண் எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தை; செழுஞ்சுடரை; சென்று அடையப் பெற்றேன், நானே.
7.020
7 st/nd Thirumurai
Song # 1
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
நீள நினைந்து அடியேன் உமை நித்தலும் கை தொழுவேன்;
வாள் அன கண் மடவாள் அவள் வாடி வருந்தாமே,
கோளிலி எம்பெருமான்! குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்;
ஆள் இலை; எம்பெருமான், அவை அட்டித்தரப் பணியே! .
7.081
7 st/nd Thirumurai
Song # 3
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
நீள நின்று தொழுமின், நித்தலும் நீதியால்
ஆளும் நம்ம வினைகள் அல்கி அழுந்திட-
தோளும் எட்டும் உடைய மா மணிச்சோதியான்,
காளகண்டன், உறையும் தண் கழுக்குன்றமே.!
12.090
12 st/nd Thirumurai
Song # 20
சேக்கிழார்
இலை மலிந்த சருக்கம்
நீளிடை முடுகி நடந்தெதிர்
நேரிரு வரில்ஒரு வன்றொடர்
தாளிரு தொடையற முன்பெயர்
சாரிகை முறைமை தடிந்தனன்
வாளொடு விழுமுடல் வென்றவன்
மார்பிடை அறமுன் எறிந்திட
ஆளியி னவனு மறிந்தனன்
ஆயினர் பலருள ரெங்கணும்.
12.100
12 st/nd Thirumurai
Song # 83
சேக்கிழார்
இலை மலிந்த சருக்கம்
நீளிடைவிசை மிசைகுதிகொள
நெடுமுகில்தொட எழுமான்
தாளுறுகழல் மறவர்கள்விடு
சரநிரைதொடர் வனதாம்
வாள்விடுகதிர் மதிபிரிவுற
வருமெனவிழும் உழையைக்
கோளொடுபயில் பணிதொடர்நிலை
கொளவுளவெதிர் பலவே.
12.280
12 st/nd Thirumurai
Song # 900
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
நீள்நிலைக்கோ புரமதனை இறைஞ்சிப் புக்கு
நிகரிலாத் தொண்டருடன் நெருங்கச் சென்று
வாள்நிலவு கோயிலினை வலங்கொண் டெய்தி
மதிச்சடையார் திருமுன்பு வணங்கி நின்று
தாணுவே ஆற்றின்கண் ஓடம் உய்க்குந்
தன்மையால் அருள்தந்த தலைவா நாகப்
பூணினாய் களிற்றுரிவை போர்த்த முக்கட்
புனிதனே எனப்பணிந்து போற்றி செய்தார்.
This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list