சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter: ( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் படம்
படம்
2.118
2 st/nd Thirumurai
Song # 9
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
படம் கொள் நாகத்து அணையானும், பைந்தாமரையின்
மிசை
இடம் கொள் நால்வேதனும், ஏத்த நின்ற இறைவன் இடம்
திடம் கொள் நாவின்(ன்) இசை தொண்டர் பாடும்
திலைதைப்பதி,
மடங்கல் வந்து வழிபாடு செய்யும் மதிமுத்தமே.
3.041
3 st/nd Thirumurai
Song # 5
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
படம் ஆர் கச்சி, இடம் ஏகம்பத்து
உடையாய்! என்ன, அடையா, வினையே.
4.044
4 st/nd Thirumurai
Song # 8
திருநாவுக்கரசர்
தேவாரம்
படம் உடை அரவினோடு பனி மதி அதனைச் சூடி,
கடம் உடை உரிவை மூடிக் கண்டவர் அஞ்ச, அம்ம!
இடம் உடைக் கச்சி தன்னுள் ஏகம்பம் மேவினான் தன்
நடம் உடை ஆடல் காண ஞாலம் தான் உய்ந்த ஆறே!
5.066
5 st/nd Thirumurai
Song # 6
திருநாவுக்கரசர்
தேவாரம்
படம் கொள் பாம்பொடு பால்மதியம் சடை
அடங்க ஆள வல்லான், உம்பர் தம்பிரான்,
மடந்தை பாகன், வலஞ்சுழியான், அடி
அடைந்தவர்க்கு அடிமைத்திறத்து ஆவனே.
5.082
5 st/nd Thirumurai
Song # 5
திருநாவுக்கரசர்
தேவாரம்
படம் கொள் பாம்பரை, பால்மதி சூடியை,
வடம் கொள் மென்முலை மாது ஒரு கூறனை,
தொடர்ந்து நின்று தொழுது எழுவார் வினை
மடங்க நின்றிடும்-வான்மியூர் ஈசனே.
6.081
6 st/nd Thirumurai
Song # 8
திருநாவுக்கரசர்
தேவாரம்
படம் ஆடு பன்னகக்கச்சு அசைத்தான் கண்டாய்; பராய்த்துறையும் பாசூரும் மேயான் கண்டாய்;
நடம் ஆடி ஏழ் உலகும் திரிவான் கண்டாய்; நால்மறையின் பொருள் கண்டாய்; நாதன் கண்டாய்;
கடம் ஆடு களிறு உரித்த கண்டன் கண்டாய்; கயிலாயம் மேவி இருந்தான் கண்டாய்;
குடம் ஆடி இடம் ஆகக் கொண்டான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே.
7.006
7 st/nd Thirumurai
Song # 1
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
படம் கொள் நாகம் சென்னி சேர்த்தி, பாய் புலித்தோல் அரையில் வீக்கி,
அடங்கலார் ஊர் எரியச் சீறி, அன்று மூவர்க்கு அருள் புரிந்தீர்;
மடங்கலானைச் செற்று உகந்தீர்; மனைகள்தோறும் தலை கை ஏந்தி
விடங்கர் ஆகித் திரிவது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே! .
7.017
7 st/nd Thirumurai
Song # 9
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
படம் ஆடு பாம்பு அணையானுக்கும், பாவை நல்லாள் தனக்கும்,
வடம் ஆடு மால்விடை ஏற்றுக்கும், பாகனாய் வந்து ஒரு நாள்
இடம் ஆடியார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்ட
நடம் ஆடியார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே .
8.113
8 st/nd Thirumurai
Song # 14
மாணிக்க வாசகர்
திருவாசகம்
படம் ஆக, என் உள்ளே தன் இணைப் போது அவை அளித்து, இங்கு
இடம் ஆகக் கொண்டிருந்த, ஏகம்பம் மேய பிரான்,
தடம் ஆர் மதில் தில்லை அம்பலமே தான் இடமா,
நடம் ஆடுமா பாடி பூவல்லி கொய்யாமோ!
This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list