சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் பண்டு
பண்டு     பண்டுபுரி     பண்டுதிரு     பண்டுநிகழ்     பண்டு,    
1.011   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண்டு ஏழ் உலகு உண்டான், அவை கண்டானும், முன் அறியா
ஒண் தீ உரு ஆனான் உறை கோயில் நிறை பொய்கை
வண் தாமரை மலர் மேல் மட அன்னம் நடை பயில,
வெண் தாமரை செந் தாது உதிர் வீழிமிழலையே.

1.083   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண்டு ஆழ்கடல் நஞ்சை உண்டு, களி மாந்தி,
வண்டு ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய
விண்டார் புரம் வேவ மேருச் சிலை ஆகக்
கொண்டான் கழல் ஏத்த, குறுகா, குற்றமே.

2.013   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண்டு ஆலின்நீழலானை, பரஞ்சோதியை,
விண்டார்கள்தம் புரம்மூன்று உடனேவேவக்
கண்டானை, கடி கமழ் கோழம்பம் கோயிலாக்
கொண்டானை, கூறுமின், உள்ளம் குளிரவே!

2.045   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண்டு அமரர் கூடிக் கடைந்த படு கடல் நஞ்சு
உண்ட பிரான்' என்று இறைஞ்சி. உம்பர் தொழுது ஏத்த,
விண்டவர்கள் தொல் நகரம் மூன்று உடனே வெந்து
அவியக்
கண்ட பிரான் மேவி உறை கோயில் கைச்சினமே.

2.093   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண்டு நாம் செய்த வினைகள் பறைய, ஓர் நெறி அருள்
பயப்பார்;
கொண்டல் வான்மதி சூடி; குரை கடல் விடம் அணி
கண்டர்
வண்டு மா மலர் ஊதி மது உண, இதழ் மறிவு எய்தி
விண்ட வார் பொழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று
அமர்ந்தாரே.

2.099   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண்டு செய்த வல்வினை பற்று அறக் கெடும் வகை
உண்டு; உமக்கு உரைப்பன், நான்; ஒல்லை நீர் எழுமினோ!
மண்டு கங்கை செஞ்சடை வைத்து மாது ஒர்பாகமாக்
கொண்டு உகந்த மார்பினான் கோடி காவு சேர்மினே!

2.107   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண்டு நால்வருக்கு அறம் உரைத்து அருளிப் பல்
உலகினில் உயிர் வாழ்க்கை
கண்ட நாதனார், கடலிடம் கைதொழ, காதலித்து உறை
கோயில்
வண்டு பண் செயும் மா மலர்ப்பொழில் மஞ்ஞை நடம் இடு
மாதோட்டம்,
தொண்டர் நாள்தொறும் துதிசெய, அருள் செய் கேதீச்சுரம்
அதுதானே.

3.033   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண்டு, இரைத்து அயனும் மாலும், பலபத்தர்கள்
தொண்டு இரைத்தும், மலர் தூவித் தோத்திரம் சொல,
கொண்டு இரைக் கொடியொடும் குருகினின் நல் இனம்
தெண்திரைக் கழனி சூழ் திரு உசாத்தானமே.

3.047   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண்டு அடித்தவத்தார் பயில்வால்-தொழும்
தொண்டருக்கு எளியாய்! திரு ஆலவாய்
அண்டனே! அமண் கையரை வாதினில்
செண்டு அடித்து, உளறத் திரு உள்ளமே?

3.076   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண்டு இரை பயப்புணரியில் கனகமால் வரையை நட்டு, அரவினைக்
கொண்டு கயிறின் கடைய, வந்த விடம் உண்ட குழகன் தன் இடம் ஆம்
வண்டு இரை நிழல் பொழிலின் மாதவியின் மீது அணவு
தென்றல் வெறி ஆர்
வெண் திரைகள் செம்பவளம் உந்து கடல் வந்த மொழி வேதவனமே.

3.114   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண்டு அரக்கன் எடுத்த பலத்தையே பாய்ந்து அரக்கல்
நெடுத்த (அ)பலத்தையே
கொண்டு, அரக்கியதும் கால்விரலையே; கோள் அரக்கியதும் கால்வு இரலையே;
உண்டு உழன்றதும் முண்டத் தலையிலே; உடுபதிக்கு இடம்
உண்டு, அத் தலையிலே;
கண்டம் நஞ்சம் அடக்கினை கம்பமே; கடவுள் நீ இடம்
கொண்டது கம்பமே.

3.115   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண்டு அயன்தலை ஒன்றும் அறுத்தியே; பாதம் ஓதினர்
பாவம் மறுத்தியே;
துண்ட வெண்பிறை சென்னி இருத்தியே; தூய வெள் எருது ஏறி இருத்தியே;
கண்டு காமனை வேவ விழித்தியே; காதல் இல்லவர் தம்மை இழித்தியே
அண்ட நாயகனே! மிகு கண்டனே! ஆலவாயினில்
மேவிய(அ) கண்டனே!

4.093   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பண்டு அங்கு அறுத்தது ஓர் கை உடையான் படைத்தான் தலையை,
உண்டு, அங்கு அறுத்ததும் ஊரொடு நாடு அவைதான் அறியும்;
கண்டம் கறுத்த மிடறு உடையான்; கண்டியூர் இருந்த
தொண்டர் பிரானை- கண்டீர்- அண்டவாணர் தொழுகின்றதே.

5.008   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பண்டு ஒத்த(ம்) மொழியாளை ஓர்பாகம் ஆய்,
இண்டைச் செஞ்சடையன்(ன்); இருள் சேர்ந்தது ஓர்
கண்டத்தன்; கரியின்(ன்) உரி போர்த்தவன்;
அண்டத்து அப் புறத்தான் அன்னியூரனே.

5.047   5 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பண்டு செய்த பழவினையின் பயன்
கண்டும் கண்டும், களித்திகாண், நெஞ்சமே!
வண்டு உலாம் மலர்ச் செஞ்சடை ஏகம்பன்
தொண்டனாய்த் திரியாய், துயர் தீரவே!

5.052   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பண்டு ஓர் நாள் இகழ் வான் பழித் தக்கனார்
கொண்ட வேள்விக் குமண்டை அது கெட,
தண்டமா, விதாதாவின் தலை கொண்ட
செண்டர்போல்-திரு நாகேச்சுரவரே.

6.079   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பண்டு அளவு நரம்பு ஓசைப் பயனை, பாலை, படுபயனை, கடுவெளியை, கனலை, காற்றை,
கண்ட(அ)ளவில் களி கூர்வார்க்கு எளியான் தன்னை, காரணனை, நாரணனை, கமலத்தோனை,
எண் தள இல் என் நெஞ்சத்துள்ளே நின்ற எம்மானை, கைம்மாவின் உரிவை பேணும்
தண்டு அரனை, தலையாலங்காடன் தன்னை, சாராதே சால நாள் போக்கினேனே!.

7.035   7 st/nd Thirumurai   Song # 9   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பண்டு அரீயன செய்த தீமையும் பாவமும் பறையும்படி
கண்டு அரீயன கேட்டியேல், கவலாது எழு(ம்), மட நெஞ்சமே!
தொண்டு அரீயன பாடித் துள்ளி நின்று, ஆடி வானவர்தாம் தொழும்
புண்டரீகம் மலரும் பொய்கை புறம்பயம் தொழப் போதுமே.

8.148   8 st/nd Thirumurai   Song # 1   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பண்டு ஆய நான்மறையும் பால் அணுகா; மால், அயனும்,
கண்டாரும் இல்லை; கடையேனைத் தொண்டு ஆகக்
கொண்டருளும் கோகழி எம் கோமாற்கு, நெஞ்சமே!
உண்டாமோ கைம்மாறு? உரை.

11.009   11 st/nd Thirumurai   Song # 14   நக்கீரதேவ நாயனார்   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி  
பண்டு தொடங்கியும் பாவித்தும் நின்கழற்கே
தொண்டு படுவான் தொடர்வேனைக் கண்டுகொண்
டாளத் தயாஉண்டோ இல்லையோ சொல்லாயே
காளத்தி யாய்உன் கருத்து.

12.210   12 st/nd Thirumurai   Song # 49   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
பண்டுபுரி நற்றவத்துப்
பழுதினள விறைவழுவும்
தொண்டரைஆ ளத்தொடங்கும்
சூலைவே தனைதன்னைக்
கண்தருநெற் றியரருளக்
கடுங்கனல்போல் அடுங்கொடிய
மண்டுபெருஞ் சூலைஅவர்
வயிற்றினிடைப் புக்கதால்.
12.270   12 st/nd Thirumurai   Song # 18   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
பண்டு போலப் பலநாளும்
பயிலும் பணிசெய் தவர்ஒழுகத்
தண்டி அடிக ளால்அமணர்
கலக்கம் விளைந்து சார்வில்அமண்
குண்டர் அழிய ஏழுலகும்
குலவும் பெருமை நிலவியதால்
அண்டர் பெருமான் தொண்டர்கழல்
அமரர் பணியும் அணியாரூர்.
12.280   12 st/nd Thirumurai   Song # 55   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பண்டுதிரு வடிமறவாப்
பான்மையோர் தமைப்பரமர்
மண்டுதவ மறைக்குலத்தோர்
வழிபாட்டின் அளித்தருளத்
தொண்டின்நிலை தரவருவார்
தொடர்ந்தபிரி வுணர்வொருகால்
கொண்டெழலும் வெருக்கொண்டாற்
போல்அழுவார் குறிப்பயலாய்.
12.290   12 st/nd Thirumurai   Song # 223   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பண்டு கயிலைத் திருமலையில்
செய்யும் பணியின் பான்மைமனம்
கொண்ட உணர்வு தலைநிற்பக்
குலவு மலர்மென் கொடியனையார்
வண்டு மருவுந் திருமலர்மென்
மாலை காலங் களுக்கேற்ப
அண்டர் பெருமான் முடிச்சாத்த
அமைத்து வணங்கி யமருநாள்.
12.290   12 st/nd Thirumurai   Song # 267   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பண்டுநிகழ் பான்மையினால்
பசுபதிதன் னருளாலே
வண்டமர்பூங் குழலாரை
மணம்புணர்ந்த வன்தொண்டர்
புண்டரிகத் தவள்வனப்பைப்
புறங்கண்ட தூநலத்தைக்
கண்டுகேட் டுண்டுயிர்த்துற்
றமர்ந்திருந்தார் காதலினால்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list