சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் பத்தி
பத்திப்     பத்தினி     பத்திரங்     பத்திட்டங்     பத்தி     பத்தியும்     பத்திவிற்     பத்தியின்     பத்தியிற்     பத்தியால்     பத்திமையால்     பத்திமையும்     பத்தியாய்    
1.126   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பத்திப் பேர் வித்திட்டே, பரந்த ஐம்புலன்கள்வாய்ப்
பாலே போகாமே காவா, பகை அறும் வகை நினையா,
முத்திக்கு ஏவி, கத்தே முடிக்கும் முக்குணங்கள் வாய்
மூடா, ஊடா, நால் அந்தக்கரணமும் ஒரு நெறி ஆய்,
சித்திக்கே உய்த்திட்டு, திகழ்ந்த மெய்ப் பரம்பொருள்
சேர்வார்தாமே தானாகச் செயுமவன் உறையும் இடம்
கத்திட்டோர் சட்டங்கம் கலந்து இலங்கும் நல்பொருள்
காலே ஓவாதார் மேவும் கழுமல வள நகரே.

4.025   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பத்தியால் ஏத்தி நின்று பணிபவர் நெஞ்சத்து உள்
துத்திஐந்தலையநாகம் சூழ் சடைமுடி மேல் வைத்து (வ்),
உத்தர மலையர் பாவை உமையவள் நடுங்க அன்று(வ்)
அத்தியின் உரிவை போர்த்தார்-அதிகைவீரட்டனாரே.

6.054   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பத்திமையால் பணிந்து, அடியேன் தன்னைப் பல்-நாள் பாமாலை பாடப் பயில்வித்தானை;
எத்தேவும் ஏத்தும் இறைவன் தன்னை; எம்மானை; என் உள்ளத்துள்ளே ஊறும்
அத் தேனை; அமுதத்தை; ஆவின் பாலை; அண்ணிக்கும் தீம் கரும்பை; அரனை; ஆதிப்-
புத்தேளை; புள்ளிருக்கு வேளூரானை; போற்றாதே  ஆற்ற நாள் போக்கினேனே!.

7.051   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பத்திமையும் அடிமையையும் கைவிடுவான், பாவியேன்
பொத்தின நோய் அது இதனைப் பொருள் அறிந்தேன்; போய்த் தொழுவேன்;
முத்தனை, மாமணி தன்னை, வயிரத்தை, மூர்க்கனேன்
எத்தனை நாள் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?

8.131   8 st/nd Thirumurai   Song # 7   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பத்திமையும் பரிசும் இலாப் பசு பாசம் அறுத்தருளி,
பித்தன் இவன் என, என்னை ஆக்குவித்து, பேராமே,
சித்தம் எனும் திண் கயிற்றால் திருப்பாதம் கட்டுவித்த
வித்தகனார் விளையாடல் விளங்கு தில்லைக் கண்டேனே!

9.018   9 st/nd Thirumurai   Song # 2   பூந்துருத்தி நம்பி காடநம்பி   திருவிசைப்பா  
பத்தியாய் உணர்வோர் அருளைவாய் மடுத்துப்
   பருகுதோ றமுதமொத் தவர்க்கே
தித்தியா இருக்கும் தேவர்காள் இவர்தம்
   திருவுரு இருந்தவா பாரீர்
சத்தியாய்ச் சிவமாய் உலகெலாம் படைத்த
   தனிமுழு முதலுமாய் அதற்கோர்
வித்துமாய் ஆரூர் ஆதியாய் வீதி
   விடங்கராய் நடங்குலா வினரே. 

10.222   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்
சித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவர்
அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில் மாண்டிடும்
சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே. 

10.304   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
பத்திரங் கோமுகம் பங்கயம் கேசரி
சொத்திரம் வீரம் சுகாதனம் ஓரேழும்
உத்தம மாம்முது ஆசனம் எட்டெட்டுப்
பத்தொடு நூறு பலஆ சனமே. 5,

10.404   10 st/nd Thirumurai   Song # 18   திருமூலர்   திருமந்திரம்  
பத்திட்டங் கெட்டிட்டு ஆறிட்டு நாலிட்டு
மட்டிட்ட குண்டம் மலர்ந்தெழு தாமரை
கட்டிட்டு நின்று கலந்தமெய் ஆகமும்
பட்டிட்டு நின்றது பார்ப்பதி பாலே.

10.601   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
பத்தி பணித்துப் பரவும் அடிநல்கிச்
சுத்த உரையால் துரிசறச் சோதித்துச்
சத்தும் அசத்தும் சதசத்தும் காட்டலால்
சித்தம் இறையே சிவகுரு வாமே.

10.601   10 st/nd Thirumurai   Song # 13   திருமூலர்   திருமந்திரம்  
பத்தியும் ஞானவை ராக்கிய மும்பர
சித்திக்கு வித்தாம் சிவோகமே சேர்தலால்
முத்தியின் ஞானம் முளைத்தலால் அம்முளை
சத்தி அருள்தரின் தான்எளி தாமே.

10.736   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
பத்திவிற் றுண்டு பகலைக் கழிவிடும்
மத்தகர்க் கன்றோ மறுபிறப் புள்ளது
வித்துக்குற் றுண்டு விளைபுலம் பாழ்செய்யும்
பித்தர்கட் கென்றும் பிறப்பில்லை தானே.

12.000   12 st/nd Thirumurai   Song # 63   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
பத்தியின் பால ராகிப்
பரமனுக் காளா மன்பர்
தத்தமிற் கூடி னார்கள்
தலையினால் வணங்கு மாபோல்
மொய்த்தநீள் பத்தி யின்பால்
முதிர்தலை வணங்கி மற்றை
வித்தகர் தன்மை போல
விளைந்தன சாலி யெல்லாம்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1238   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பத்தியிற் குயிற்றும் பைம்பொன்
பவளக்கால் பந்தர் நாப்பண்
சித்திர விதானத் தின்கீழ்ச்
செழுந்திரு நீல நக்கர்
முத்தமிழ் விரகர் முன்பு
முதன்மறை முறையி னோடு
மெய்த்தநம் பெருமான் பாதம்
மேவுமுள் ளத்தாற் செய்ய.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list