சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் பரந்த
பரந்தது     பரந்த     பரந்திருந்     பரந்துல     பரந்தும்     பரந்தவிளை     பரந்து     பரந்தவன்    
2.031   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பரந்தது நிரந்து வரு பாய் திரைய கங்கை
கரந்து, ஒர் சடைமேல் மிசை உகந்து அவளை வைத்து,
நிரந்தரம் நிரந்து இருவர் நேடி அறியாமல்
கரந்தவன் இருப்பது கருப்பறியலூரே.

2.054   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பரந்து ஓங்கு பல்புகழ் சேர் அரக்கர் கோனை வரைக்கீழ் இட்டு
உரம் தோன்றும் பாடல் கேட்டு, உகவை அளித்தீர்! உகவாதார்
புரம் தோன்று மும்மதிலும் எரியச் செற்றீர்! பூம் புகலி,
வரம் தோன்று கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.

3.050   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பரந்த நீலப் படர் எரி வல்விடம்
கரந்த கண்டத்தினான் கருதும்(ம்) இடம்
சுரந்த மேதி துறை படிந்து ஓடையில்
நிரந்த தண்டலை நீணெறி; காண்மினே!

6.064   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பரந்தவன் காண், பல் உயிர்கள் ஆகி எங்கும்; பணிந்து எழுவார் பாவமும் வினையும் போகத்
துரந்தவன் காண்; தூ மலர் அம் கண்ணியான் காண்; தோற்றம், நிலை, இறுதி, பொருள் ஆய் வந்த
மருந்து அவன் காண்; வையகங்கள் பொறை தீர்ப்பான்
காண்; மலர் தூவி நினைந்து எழுவார் உள்ளம் நீங்காது
இருந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.

7.088   7 st/nd Thirumurai   Song # 8   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பரந்த பாரிடம் ஊர் இடைப் பலி பற்றிப் பாத்து உணும் சுற்றம் ஆயினீர்;
தெரிந்த நால்மறையோர்க்கு இடம் ஆய திரு மிழலை
இருந்து, நீர் தமிழோடு இசை கேட்கும் இச்சையால் காசு நித்தம் நல்கினீர்;
அருந் தண் வீழி கொண்டீர்!;-அடியேற்கும் அருளுதிரே!

8.105.01   8 st/nd Thirumurai   Song # 6   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பரந்து பல் ஆய் மலர் இட்டு, முட்டாது, அடியே இறைஞ்சி,
இரந்த எல்லாம் எமக்கே பெறலாம்' என்னும், அன்பர் உள்ளம்
கரந்து நில்லாக் கள்வனே! நின் தன் வார் கழற்கு அன்பு, எனக்கும்
நிரந்தரமாய் அருளாய் நின்னை ஏத்த முழுவதுமே.

10.402   10 st/nd Thirumurai   Song # 30   திருமூலர்   திருமந்திரம்  
பரந்தது மந்திரம் பல்லுயிர்க் கெல்லாம்
வரந்தரும் மந்திரம் வாய்த்திட வாங்கித்
துரந்திடு மந்திரம் சூழ்பகை போக
உரந்தரு மந்திரம் ஓம்என் றெழுப்பே.

10.413   10 st/nd Thirumurai   Song # 58   திருமூலர்   திருமந்திரம்  
பரந்த கரம்இரு பங்கயம் ஏந்திக்
குவிந்த கரம்இரு கொய்தளிர்ப் பாணி
பரிந்தருள் கொங்கைகள் முத்தார் பவளம்
இருந்தநல் லாடை மணிபொதிந் தன்றே.

10.413   10 st/nd Thirumurai   Song # 60   திருமூலர்   திருமந்திரம்  
பரந்திருந் துள்ளே அறுபது சத்தி
கரந்தனர் கன்னிகள் அப்படிச் சூழ
மலர்ந்திரு கையின் மலரவை ஏந்தச்
சிறந்தவர் ஏத்தும் (சிரீம்)தன மாமே.

10.716   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
பரந்துல கேழும் படைத்த பிரானை
`இரந்துணி` என்பர் எற்றுக் கிரக்கும்
நிரந்தர மாக நினையும் அடியார்
இரந்துண்டு தன்கழல் எட்டச் செய்தானே.

10.821   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
பரந்தும் சுருங்கியும் பார் புனல் வாயு
நிரந்த வெளியொடு ஞாயிறு திங்கள்
அரந்தம் அரன்நெறி யாய் அவை யாகித்
தரந்த விசும்பொன்று தாங்கிநின் றானே.

12.280   12 st/nd Thirumurai   Song # 7   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பரந்தவிளை வயற்செய்ய
பங்கயமாம் பொங்கெரியில்
வரம்பில்வளர் தேமாவின்
கனிகிழிந்த மதுநறுநெய்
நிரந்தரம்நீள் இலைக்கடையால்
ஒழுகுதலால் நெடிதவ்வூர்
மரங்களும்ஆ குதிவேட்கும்
தகையவென மணந்துளதால்.
12.370   12 st/nd Thirumurai   Song # 35   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
பரந்த நிதியின் பரப்பெல்லாம்
பாண னார்பத் திரனார்க்கு
நிரந்த தனங்கள் வெவ்வேறு
நிரைத்துக் காட்டி மற்றிவையும்
உரந்தங் கியவெங் கரிபரிகள்
முதலாம் உயிருள் ளனதனமும்
புரந்த அரசுங் கொள்ளுமென
மொழிந்தார் பொறையர் புரவலனார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list