8.103
8 st/nd Thirumurai
Song # 14
மாணிக்க வாசகர்
திருவாசகம்
பரம ஆனந்தப் பழம் கடல் அதுவே
கரு மா முகிலின் தோன்றி,
திரு ஆர் பெருந்துறை வரையில் ஏறி,
திருத்தகு மின் ஒளி திசை திசை விரிய,
ஐம் புலப் பந்தனை வாள் அரவு இரிய,
|
8.106
8 st/nd Thirumurai
Song # 35
மாணிக்க வாசகர்
திருவாசகம்
பரம்பரனே, நின் பழ அடியாரொடும் என் படிறு
விரும்பு அரனே, விட்டிடுதி கண்டாய்? மென் முயல் கறையின்
அரும்பு, அர, நேர் வைத்து அணிந்தாய், பிறவி ஐ வாய் அரவம்
பொரும், பெருமான் வினையேன் மனம் அஞ்சி, பொதும்பு உறவே.
|
8.217
8 st/nd Thirumurai
Song # 2
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பரம்பயன் தன்னடி யேனுக்குப் பார்விசும் பூடுருவி வரம்பயன் மாலறி யாத்தில்லை வானவன் வானகஞ்சேர் அரம்பையர் தம்மிட மோஅன்றி வேழத்தி னென்புநட்ட குரம்பையர் தம்மிட மோஇடந் தோன்றுமிக் குன்றிடத்தே.
|
10.402
10 st/nd Thirumurai
Song # 33
திருமூலர்
திருமந்திரம்
பரமாய அஞ்செழுத் துள்நடு வாகப் பரமா யநவசிம பார்க்கில் மவயநசி பரமா யசியநம வாபரத் தோதில் பரமாய வாசி மயநவாய் நின்றதே.
|
10.808
10 st/nd Thirumurai
Song # 6
திருமூலர்
திருமந்திரம்
பரமாம் ஆதீதமே பற்றறப் பற்றப் பரமாம் ஆதீதம் பயிலப் பயிலப் பரமாம் ஆதீதம் பயிலாத் தபோதனர் பரமாகார் பாசமும் பற்றொன் றறாதே.
|
10.808
10 st/nd Thirumurai
Song # 14
திருமூலர்
திருமந்திரம்
பரமாம் நனவின்பின் பாற்சகம் உண்ட திரமார் கனவு சிறந்த சுழுத்தி உரமாம் உபசாந்தம் முற்றல் துறவே தரனாம்சிவதுரி யத்தனும் ஆமே.
|
10.808
10 st/nd Thirumurai
Song # 16
திருமூலர்
திருமந்திரம்
பரம்சீவன் மேலாம் பரமம் பரத்தின் பரம்பரன் மேலாம் பரநன வாக விரிந்த கனாஇடர் வீட்டும் சுழுனை உரந்தகும் ஆனந்திஆம் உண்மை தானே.
|
10.820
10 st/nd Thirumurai
Song # 5
திருமூலர்
திருமந்திரம்
பரம்பர மான பதி பாசம் பற்றாப் பரம்பர மாகும் பரம் சிவம் மேவப் பரம்பர மான பரசிவா னந்தம் பரம்பர மாகப் படைப்ப தறிவே.
|
10.912
10 st/nd Thirumurai
Song # 2
திருமூலர்
திருமந்திரம்
பரமாண்டத் துள்ளே பராசத்தி பாதம் பரமாண்டத் துள்ளே படரொளி ஈசன் பரமாண்டத் துள்ளே படர்தரு நாதம் பரமாண்டத் துள்ளே பரன்நட மாடுமே.
|
10.919
10 st/nd Thirumurai
Song # 1
திருமூலர்
திருமந்திரம்
பரம குரவன் பரம்எங்கும் ஆகி திரம்உற எங்கணும் சேர்ந்தொழி வற்று நிரவு சொரூபத்துள் நீடும் சொரூபம் அரிய துரியத் தணைந்துநின் றானே.
|
11.006
11 st/nd Thirumurai
Song # 4
சேரமான் பெருமாள் நாயனார்
பொன்வண்ணத்தந்தாதி
பரமனை யே பலி தேர்ந்துநஞ் சுண்டது பன்மலர்சேர் பிரமனை யே சிரங் கொண்டுங் கொடுப்பது பேரருளாம் சரமனை யேயுடம் பட்டும் உடம்பொடு மாதிடமாம் வரமனை யேகிளை யாகும்முக் கண்ணுடை மாதவனே.
|
11.023
11 st/nd Thirumurai
Song # 61
பரணதேவ நாயனார்
சிவபெருமான் திருவந்தாதி
பரமாய பைங்கண் சிரம்ஏயப் பூண்ட பரமாய பைங்கண் சிரமே பரமாய ஆறடைந்த செஞ்சடையாய் ஐந்தடைந்த மேனியாய் ஆறுஅடைந்த செஞ்சடைஆய் அன்பு.
|
11.023
11 st/nd Thirumurai
Song # 79
பரணதேவ நாயனார்
சிவபெருமான் திருவந்தாதி
பரமாய விட்டுநின் பாதம் பணிந்தேன் பரமாய ஆதிப் பரனே பரமாய நீதியே நின்மலனே நேரார் புரம்மூன்றும் நீதியே செய்தாய் நினை.
|
12.000
12 st/nd Thirumurai
Song # 225
சேக்கிழார்
திருமலைச் சருக்கம்
பரம்பொருளைப் பணிந்துதாள் பரவிப்போய்ப் பணிந்தவர்க்கு
வரந்தருவான் தினைநகரை வணங்கினர்வண் டமிழ்பாடி
நரம்புடையாழ் ஒலிமுழவின் நாதவொலி வேதவொலி
அரம்பையர்தங் கீதவொலி அறாத்தில்லை மருங்கணைந்தார்.
|
12.280
12 st/nd Thirumurai
Song # 255
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
பரமர்தந் திருக்கருப் பறிய லூரினைச்
சிரபுரச் சிறுவர்கை தொழுது செந்தமிழ்
உரையிசை பாடிஅம் மருங்கி னுள்ளவாம்
சுரர்தொழும் பதிகளுந் தொழுது பாடினார்.
|
12.280
12 st/nd Thirumurai
Song # 442
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
பரமர் தந்திருப் பறியலூர்
வீரட்டம் பரவி
விரவு காதலின் வேலையின்
கரையினை மேவி
அரவ ணிந்தவர் பதிபல
அணைந்துமுன் வணங்கிச்
சிரபு ரத்தவர் திருத்தொண்டர்
எதிர்கொளச் செல்வார்.
|
12.280
12 st/nd Thirumurai
Song # 979
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
பரம னார்தந் திருத்தொண்டர்
பண்பு நோக்கிப் பரிவெய்தி
விரவு காத லொடும்விரைந்து
விமலர் கோயில் புக்கருளி
அரவும் மதியும் பகைதீர
அணிந்தார் தம்மை அடிவணங்கி
இரவு போற்றித் திருப்பதிகம்
இசையிற் பெருக எடுத்தருளி.
|
12.280
12 st/nd Thirumurai
Song # 1191
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
பரம்பு தம்வயின் எங்கணும்
உள்ளபல் வளங்கள்
நிரம்ப முன்கொணர்ந் தெண்திசை
யவர்நெருங் குதலால்
தரங்க டந்தவர் தந்திருக்
கல்லியா ணத்தின்
வரம்பில் தன்பயன் காட்டுவ
தொத்தது வையம்.
|
12.290
12 st/nd Thirumurai
Song # 295
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
பரமர்திரு வரத்துறையைப்
பணிந்துபோய்ப் பலபதிகள்
விரவிமழ விடையுயர்த்தார்
விரைமலர்த்தாள் தொழுதேத்தி
உரவுநீர்த் தடம்பொன்னி
அடைந்தன்ப ருடனாடி
அரவணிந்தார் அமர்ந்ததிரு
வாவடுதண் டுறைஅணைந்தார்.
|
12.360
12 st/nd Thirumurai
Song # 82
சேக்கிழார்
வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
பரம ரருளாற் பள்ளியினின்
றோடி வருவான் போல்வந்த
தரமில் வனப்பிற் றனிப்புதல்வன்
தன்னை யெடுத்துத் தழுவித்தம்
கரமுன் னணைத்துக் கணவனார்
கையிற் கொடுப்பக் களிகூர்ந்தார்
புரமூன் றெரித்தார் திருத்தொண்டர்
உண்ணப் பெற்றோ மெனும்பொலிவால்.
|
12.370
12 st/nd Thirumurai
Song # 102
சேக்கிழார்
வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
பரமர்திருப் பரங்குன்றில்
சென்றுபார்த் திபரோடும்
புரமெரித்தார் கோயில்வலங்
கொண்டுபுகுந் துள்ளிறைஞ்சிச்
சிரமலிமா லைச்சடையார்
திருவடிக்கீழ் ஆட்செய்யும்
அருமைநினைந் தஞ்சுதும்என்
றாரூரர் பாடுவார்.
|