சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter: ( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் பற்று
பற்றும்
பற்று
1.053
1 st/nd Thirumurai
Song # 2
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பற்றும் ஆகி வான் உளோர்க்கு, பல் கதிரோன், மதி, பார்,
எற்று நீர், தீ, காலும், மேலைவிண், இயமானனோடு,
மற்று மாது ஓர் பல் உயிர் ஆய், மால் அயனும் மறைகள்
முற்றும் ஆகி, வேறும் ஆனான் மேயது முதுகுன்றே.
3.043
3 st/nd Thirumurai
Song # 7
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பற்றும் மானும் மழுவும் அழகு உற,
முற்றும் ஊர் திரிந்து, பலி முன்னுவர்
கற்ற மா நல் மறையவர் காழியு
பெற்றம் ஏறு அது உகந்தார் பெருமையே!
4.015
4 st/nd Thirumurai
Song # 1
திருநாவுக்கரசர்
தேவாரம்
பற்று அற்றார் சேர்| பழம் பதியை,| பாசூர் நிலாய| பவளத்தை,
சிற்றம்பலத்து எம் |திகழ்கனியை,| தீண்டற்கு அரிய |திரு உருவை,
வெற்றியூரில்| விரிசுடரை,| விமலர்கோனை, |திரை சூழ்ந்த
ஒற்றியூர் எம் | உத்தமனை,| உள்ளத்துள்ளே | வைத்தேனே.
4.031
4 st/nd Thirumurai
Song # 8
திருநாவுக்கரசர்
தேவாரம்
பற்று இலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீர் இறைத்தேன்;
உற்றலால் கயவர் தேறார் என்னும் கட்டுரையோடு ஒத்தேன்;
எற்று உளேன்? என் செய்கேன், நான்? இடும்பையால் ஞானம் ஏதும்
கற்றிலேன்; களைகண் காணேன் கடவூர்வீரட்டனீரே!
4.094
4 st/nd Thirumurai
Song # 2
திருநாவுக்கரசர்
தேவாரம்
பற்று ஆய் நினைந்திடு, எப்போதும்!-நெஞ்சே!-இந்தப் பாரை முற்றும்
சுற்று ஆய் அலைகடல் மூடினும் கண்டேன், புகல் நமக்கு;
உற்றான், உமையவட்கு அன்பன், திருப் பாதிரிப்புலியூர்
முற்றா முளைமதிக் கண்ணியினான்தன மொய்கழலே.
5.049
5 st/nd Thirumurai
Song # 5
திருநாவுக்கரசர்
தேவாரம்
பற்று அவன், கங்கை பாம்பு மதி உடன்
உற்ற வன் சடையான், உயர் ஞானங்கள்
கற்றவன், கயவர் புரம் ஓர் அம்பால்
செற்றவன், திரு வெண்காடு அடை, நெஞ்சே!
8.134
8 st/nd Thirumurai
Song # 5
மாணிக்க வாசகர்
திருவாசகம்
பற்று ஆங்கு அவை அற்றீர், பற்றும் பற்று ஆங்கு அது பற்றி,
நற்று ஆம் கதி அடைவோம் எனின், கெடுவீர், ஓடி வம்மின்;
தெற்று ஆர் சடைமுடியான், மன்னு திருப்பெருந்துறை இறை, சீர்
கற்று ஆங்கு, அவன் கழல் பேணினரொடும் கூடுமின், கலந்தே!
This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list