சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter: ( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் பாடிய
பாடிய
பாடியஅப்
பாடியவர்
7.098
7 st/nd Thirumurai
Song # 4
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பாடிய நால்மறையான்; படு பல் பிணக்காடு அரங்கா
ஆடிய மா நடத்தான் அடி போற்றி! என்று அன்பினராய்ச்
சூடிய செங்கையினார் பலதோத்திரம் வாய்த்த சொல்லி
நாடிய-நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.
11.006
11 st/nd Thirumurai
Song # 90
சேரமான் பெருமாள் நாயனார்
பொன்வண்ணத்தந்தாதி
பாடிய வண்டுறை கொன்றையி
னான்படப் பாம்புயிர்ப்ப
ஓடிய தீயால் உருகிய
திங்களின் ஊறலொத்த
தாடிய நீறது கங்கையுந்
தெண்ணீர் யமுனையுமே
கூடிய கோப்பொத்த தாலுமை
பாகமெம் கொற்றவற்கே.
11.034
11 st/nd Thirumurai
Song # 80
நம்பியாண்டார் நம்பி
ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி
பாடிய செந்தமி ழாற்பழங்
காசு பரிசில் பெற்ற
நீடிய சீர்த்திரு ஞானசம்
பந்தன் நிறைபுகழான்
நாடிய பூந்திரு நாவுக் கரசோ
டெழில்மிழலைக்
கூடிய கூட்டத்தி னாலுள
தாய்த்திக் குவலயமே.
12.280
12 st/nd Thirumurai
Song # 582
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
பாடியஅப் பதிகப்பாட் டான பத்தும்
பாடல்நிரம் பியபின்னும் பைம்பொன் வாயிற்
சேடுயர்பொற் கதவுதிருக் காப்பு நீங்காச்
செய்கையினால் வாகீசர் சிந்தை நொந்து
நீடுதிருக் கடைக்காப்பில் அரிது வேண்டி
நின்றெடுக்கத் திருக்காப்பு நீக்கங் காட்ட
ஆடியசே வடியார்தம் அடியார் விண்ணோர்
ஆர்ப்பெழுந்த தகிலாண்டம் அனைத்தும் மூழ்க.
12.280
12 st/nd Thirumurai
Song # 664
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
பாடிய பதிகம் பரவியே வந்து
பண்புடை யடியவ ரோடுந்
தேடுமால் அயனுக் கரியவர் மகிழ்ந்த
திருவால வாய்மருங் கணைந்து
நீடுயர் செல்வக் கோபுரம் இறைஞ்சி
நிறைபெரு விருப்புடன் புக்கு
மாடுசூழ் வலங்கொண் டுடையவர் கோயில்
மந்திரி யாருடன் புகுந்தார்.
12.290
12 st/nd Thirumurai
Song # 174
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
பாடியஅப் பதியின்கண்
இனிதமர்ந்து பணிந்துபோய்
நாடியநல் லுணர்வினொடும்
திருக்கச்சூர் தனைநண்ணி
ஆடகமா மதில்புடைசூழ்
ஆலக்கோ யிலின்அமுதைக்
கூடியமெய் யன்புருகக்
கும்பிட்டுப் புறத்தணைந்தார்.
12.370
12 st/nd Thirumurai
Song # 171
சேக்கிழார்
வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
பாடியவர் பரவுதலும்
பரம்பொருளாம் அவரருளால்
வேடுவர் தாம் பறித்தபொரு
ளவையெல்லாம் விண்ணெருங்க
நீடுதிரு வாயிலின்முன்
குவித்திடலும் நேரிறைஞ்சி
ஆடுமவர் திருவருளால்
அப்படியே கைக்கொண்டார்.
This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list