சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் புற்றி
புற்றில்     புற்றிடங்     புற்றிடம்     புற்றி     புற்றின்     புற்றினில்    
1.002   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
புற்றில் வாழும் அரவம்(ம்) அரை ஆர்த்தவன் மேவும் புகலூரை,
கற்று நல்ல அவர் காழியுள் ஞானசம்பந்தன் தமிழ் மாலை
பற்றி, என்றும் இசை பாடிய மாந்தர், பரமன் அடி சேர்ந்து,
குற்றம் இன்றி, குறைபாடு ஒழியா, புகழ் ஓங்கி, பொலிவாரே.

3.005   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
புற்றின் நாகம் அணிந்தவன், பூந்தராய்
பற்றி வாழும் பரமனைப் பாடிட,
பாவம் ஆயின தீரப் பணித்திடும்
சே அது ஏறிய செல்வன் தானே.

3.043   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
புற்றின் நாகமும் பூளையும் வன்னியும்
கற்றை வார்சடை வைத்தவர், காழியுள
பொற்றொடியோடு இருந்தவர், பொன்கழல்,
உற்றபோது, உடன் ஏத்தி உணருமே!

3.118   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
புற்றில் வாள் அரவும் ஆமையும் பூண்ட புனிதனார்,
பனிமலர்க்கொன்றை
பற்றி வான்மதியம் சடை இடை வைத்த படிறனார், பயின்று இனிது இருக்கை
செற்று வன் திரைகள் ஒன்றொடு ஒன்று ஓடிச் செயிர்த்து,
வண் சங்கொடு வங்கம்
கல்-துறை வரை கொள் கரைக்கு வந்து உரைக்கும்
கழுமலநகர் எனல் ஆமே.

4.086   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
புற்றினில் வாழும் அரவுக்கும், திங்கட்கும், கங்கை என்னும்
சிற்றிடையாட்கும், செறிதரு கண்ணிக்கும், சேர்வு இடம் ஆம்-
பெற்றுடையான், பெரும் பேச்சு உடையான், பிரியாது எனை ஆள்
விற்று உடையான் ஒற்றியூர் உடையான் தன் விரிசடையே.

5.023   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
புற்றின் ஆர் அரவம் புலித்தோல்மிசைச்
சுற்றினார்; சுண்ணப் போர்வை கொண்டார்; சுடர்
நெற்றிக்கண் உடையார்; அமர் நின்றியூர்
பற்றினாரைப் பற்றா, வினைப் பாவமே.

5.024   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
புற்றில் ஆடு அரவு ஆட்டி, உமையொடு
பெற்றம் ஏறு உகந்து, ஏறும் பெருமையான்
மற்றையாரொடு வானவரும் தொழ
ஒற்றியூர் உறைவான் ஓர் கபாலியே.

5.067   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
புற்றில் ஆடு அரவோடு புனல் மதி
தெற்று செஞ்சடைத் தேவர்பிரான் பதி,
சுற்று மாடங்கள் சூழ், திரு வாஞ்சியம்
பற்றிப் பாடுவார்க்குப் பாவம் இல்லையே.

5.087   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
புற்றில் ஆடு அரவு ஆட்டும் புனிதனார்;
தெற்றினார் புரம் தீ எழச் செற்றவர்-
சுற்றின் ஆர் மதில் சூழ் மணஞ்சேரியார்;
பற்றினார் அவர் பற்று, அவர்; காண்மினே!

7.062   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
புற்றில் வாள் அரவு ஆர்த்த பிரானை; பூதநாதனை; பாதமே தொழுவார்
பற்று வான்துணை; எனக்கு எளி வந்த பாவநாசனை; மேவ(அ)ரியானை;
முற்றலார் திரி புரம் ஒரு மூன்றும் பொன்ற, வென்றி மால்வரை அரி அம்பா,
கொற்ற வில் அம் கை ஏந்திய கோனை; கோலக் காவினில் கண்டு கொண்டேனே .

8.135   8 st/nd Thirumurai   Song # 1   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
புற்றில் வாள் அரவும் அஞ்சேன்; பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்;
கற்றை வார் சடை எம் அண்ணல், கண் நுதல், பாதம் நண்ணி,
மற்றும் ஓர் தெய்வம் தன்னை உண்டு என நினைந்து, எம் பெம்மாற்கு
அற்றிலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

12.000   12 st/nd Thirumurai   Song # 258   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
புற்றிடங் கொண்ட புராதனனைப்
பூங்கோயின் மேய பிரானை யார்க்கும்
பற்றிட மாய பரம்பொருளைப்
பார்ப்பதி பாகனைப் பங்க யத்தாள்
அர்ச்சனை செய்ய அருள்புரிந்த
அண்ணலை மண்மிசை வீழ்ந்தி றைஞ்சி
நற்றமிழ் நாவலர் கோன்உடம்பால்
நன்மையின் தன்மையை மெய்ம்மை பெற்றார்.
12.000   12 st/nd Thirumurai   Song # 272   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
புற்றிடம் விரும்பி னாரைப்
போற்றினர் தொழுது செல்வார்
சுற்றிய பரிச னங்கள்
சூழஆ ளுடைய நம்பி
நற்பெரும் பான்மை கூட்ட
நகைபொதிந் திலங்கு செவ்வாய்
விற்புரை நுதலின் வேற்கண்
விளங்கிழை யவரைக் கண்டார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 514   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
புற்றி டங்கொளும் புனிதரைப்
போற்றிசை பெருகப்
பற்றும் அன்பொடு பணிந்திசைப்
பதிகங்கள் பாடி
நற்ற வத்திருத் தொண்டர்க
ளொடுநலஞ் சிறப்ப
மற்ற வண்பதி தன்னிடை
வைகுமந் நாளில்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list