சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் பெருகு
பெருகும்     பெருகு     பெருகுவித்து    
1.010   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பெருகும் புனல் அண்ணாமலை, பிறை சேர், கடல் நஞ்சைப்
பருகும் தனை துணிவார், பொடி அணிவார், அது பருகிக்
கருகும் மிடறு உடையார், கமழ் சடையார், கழல் பரவி
உருகும் மனம் உடையார் தமக்கு உறு நோய் அடையாவே.

2.110   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பெருகு சந்தனம், கார் அகில், பீலியும், பெரு மரம்,
நிமிர்ந்து உந்தி,
பொருது காவிரி வடகரை மாந்துறைப் புளிதன்
எம்பெருமானை
பரிவினால் இருந்து, இரவியும் மதியமும் பார் மன்னர்
பணிந்து ஏத்த,
மருதவானவர் வழிபடும் மலர் அடி வணங்குதல்
செய்வோமே.

4.005   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பெருகுவித்து என் பாவத்தை, பண்டு எலாம் குண்டர்கள் தம் சொல்லே கேட்டு
உருகுவித்து, என் உள்ளத்தினுள் இருந்த கள்ளத்தைத் தள்ளிப் போக்கி,
அருகுவித்து, பிணி காட்டி, ஆட்கொண்டு, பிணி தீர்த்த ஆரூரர் தம்
அருகு இருக்கும் விதி இன்றி,-அறம் இருக்க மறம் விலைக்குக் கொண்ட ஆறே!

12.040   12 st/nd Thirumurai   Song # 15   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
பெருகு வானம் பிறங்கம ழைபொழிந்
தருகு நாப்பண் அறிவருங் கங்குல்தான்
கருகு மையிரு ளின்கணங் கட்டுவிட்
டுருகு கின்றது போன்ற துலகெலாம்.
12.260   12 st/nd Thirumurai   Song # 37   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
பெருகு காதலில் பின்நெடு
நாள்முறை பிறங்க
வருபெ ருந்தவ மறையவர்
வாழிசீ காழி
ஒருவர் தந்திருக் கல்லியா
ணத்தினில் உடனே
திரும ணத்திறஞ் சேவித்து
நம்பர்தாள் சேர்ந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 280   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பெருகு விருப்புடன் நோக்கிப்
பெற்ற குலத்தாதை யாரும்
அருமையால் உம்மைப் பயந்த
அதனாற் பிரிந்துறை வாற்றேன்
இருமைக்கும் இன்ப மளிக்கும்
யாகமும் யான்செய வேண்டும்
ஒருமையால் இன்னஞ் சிலநாள்
உடன்எய் துவேன்என் றுரைத்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 709   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பெருகும் அச்சமோ டாருயிர்
பதைப்பவர் பின்பு
திரும டப்புற மருங்குதீ
தின்மையில் தெளிந்து
கருமு ருட்டமண் கையர்செய்
தீங்கிது கடைக்கால்
வருவ தெப்படி யாமென
மனங்கொளும் பொழுது.
12.290   12 st/nd Thirumurai   Song # 66   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பெருகும் பதிகம் பிறையணிவாள்
நுதலாள் பாடிப் பெயர்ந்துநிறை
திருவின் மலியுஞ் சிவபுரத்துத்
தேவர் பெருமான் கழல்வணங்கி
உருகுஞ் சிந்தை யுடன்போந்தே
யுமையோர் பாகர் தாமகிழ்ந்து
மருவும் பதிகள் பிறபணிந்து
கலைய நல்லூர் மருங்கணைந் தார்
12.720   12 st/nd Thirumurai   Song # 18   சேக்கிழார்   வெள்ளானைச் சருக்கம்  
பெருகும் மதிநூல் அமைச்சர்களை
அழைத்துப் பெரியோ ரெழுந்தருளப்
பொருவில் நகரம் அலங்கரித்துப்
பண்ணிப் பயணம் புறப்படுவித்
தருவி மதமால் யானையினை
அணைந்து மிசைகொண் டரசர்பெருந்
தெருவு கழிய எதிர்வந்தார்
சேரர் குலம்உய்ந் திடவந்தார்.
12.720   12 st/nd Thirumurai   Song # 47   சேக்கிழார்   வெள்ளானைச் சருக்கம்  
பெருகு வேதமும் முனிவரும்
துதிப்பரும் பெருமையாய் உனைஅன்பால்
திருவு லாப்புறம் பாடினேன்
திருச்செவி சாத்திடப் பெறவேண்டும்
மருவு பாசத்தை அகன்றிட
வன்றொண்டர் கூட்டம்வைத் தாய்என்ன
அருளும் ஈசருஞ் சொல்லுக
என்றனர் அன்பருங் கேட்பித்தார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list