சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter: ( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் பெருமை
பெருமைகள்
பெருமை
பெருமைசா
பெருமையால்
பெருமையே
பெருமையிற்
1.078
1 st/nd Thirumurai
Song # 10
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பெருமைகள் தருக்கி ஓர் பேது உறுகின்ற பெருங்கடல் வண்ணனும் பிரமனும் ஓரா
அருமையர்; அடி நிழல் பரவி நின்று ஏத்தும் அன்பு உடை
அடியவர்க்கு அணியரும் ஆவர்;
கருமை கொள் வடிவொடு சுனை வளர் குவளைக் கயல் இனம்
வயல் இளவாளைகள் இரிய,
எருமைகள் படிதர, இள அனம் ஆலும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே?
3.038
3 st/nd Thirumurai
Song # 9
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பெருமையே சரண் ஆக வாழ்வு உறு மாந்தர்காள்! இறை பேசுமின்-
கருமை ஆர் பொழில் சூழும் தண்வயல் கண்டியூர் உறை வீரட்டன்
ஒருமையால் உயர் மாலும், மற்றை மலரவன், உணர்ந்து ஏத்தவே,
அருமையால் அவருக்கு உயர்ந்து எரி ஆகி நின்ற அத் தன்மையே!
4.057
4 st/nd Thirumurai
Song # 4
திருநாவுக்கரசர்
தேவாரம்
பெருமை நன்று உடையது இல்லை என்று நான் பேச மாட்டேன்;
ஒருமையால் உன்னை உள்கி உகந்து வான் ஏறமாட்டேன்;
கருமை இட்டு ஆய ஊனைக் கட்டமே கழிக்கின்றேன், நான்;
அருமை ஆம் நஞ்சம் உண்ட ஆவடுதுறை உளானே!
9.001
9 st/nd Thirumurai
Song # 4
திருமாளிகைத் தேவர்
திருவிசைப்பா
பெருமையிற் சிறுமை பெண்ணொடா ணாய்என்
பிறப்பிறப் பறுத்தபே ரொளியே
கருமையின் வெளியே கயற்கணாள் இமவான்
மகள்உமை யவள்களை கண்ணே
அருமையின் மறைநான் கோலமிட் டரற்றும்
அப்பனே அம்பலத் தமுதே
ஒருமையிற் பலபுக் குருவிநின் றாயைத்
தொண்டனேன் உரைக்குமா றுரையே.
10.104
10 st/nd Thirumurai
Song # 21
திருமூலர்
திருமந்திரம்
பெருமை சிறுமை அறிந்தெம் பிரான்போல்
அருமை எளிமை அறிந்தறி வாரார்
ஒருமையுள் ஆமைபோல் உள்ளைந் தடக்கி
இருமையுங் கெட்டிருந் தார்புரை அற்றே.
12.000
12 st/nd Thirumurai
Song # 141
சேக்கிழார்
திருமலைச் சருக்கம்
பெருமைசா லரசர் காதற்
பிள்ளையாய்ப் பின்னுந் தங்கள்
வருமுறை மரபின் வைகி
வளர்ந்துமங் கலஞ்செய் கோலத்
தருமறை முந்நூல் சாத்தி
யளவில்தொல் கலைகள் ஆய்ந்து
திருமலி சிறப்பின் ஓங்கிச்
சீர்மணப் பருவஞ் சேர்ந்தார்.
12.000
12 st/nd Thirumurai
Song # 325
சேக்கிழார்
திருமலைச் சருக்கம்
பெருமையால் தம்மை ஒப்பார்
பேணலால் எம்மைப் பெற்றார்
ஒருமையால் உலகை வெல்வார்
ஊனமே லொன்று மில்லார்
அருமையாம் நிலையி னின்றார்
அன்பினா லின்ப மார்வார்
இருமையுங் கடந்து நின்றார்
இவரைநீ யடைவா யென்று.
12.200
12 st/nd Thirumurai
Song # 10
சேக்கிழார்
மும்மையால் உலகாண்ட சருக்கம்
பெருமை பிறங்கும் அப்பதியின்
மறையோர் தம்முள் பெருமனைவாழ்
தருமம் நிலவு காசிபகோத்
திரத்துத் தலைமை சால்மரபில்
அருமை மணியும் அளித்ததுவே
நஞ்சும் அளிக்கும் அரவுபோல்
இருமை வினைக்கும் ஒருவடிவாம்
எச்ச தத்தன் உளனானான்.
12.200
12 st/nd Thirumurai
Song # 37
சேக்கிழார்
மும்மையால் உலகாண்ட சருக்கம்
பெருமை பிறங்குஞ் சேய்ஞ்ஞலூர்ப்
பிள்ளை யார்தம் உள்ளத்தில்
ஒருமை நினைவால் உம்பர்பிரான்
உவக்கும் பூசை உறுப்பான
திருமஞ் சனமே முதலவற்றில்
தேடா தனஅன் பினில்நிரப்பி
வரும்அந் நெறியே அர்ச்சனைசெய்
தருளி வணங்கி மகிழ்கின்றார்.
12.270
12 st/nd Thirumurai
Song # 4
சேக்கிழார்
திருநின்ற சருக்கம்
பெருமை விளங்கும் அப்பதியில்
பேணும் நீற்றுச் சைவநெறி
ஒருமை வழிவாழ் அந்தணர்தம்
ஓங்கு குலத்தி னுள்வந்தார்
இருமை உலகும் ஈசர்கழல்
இறைஞ்சி ஏத்தப் பெற்றதவத்
தருமை புரிவார் நமிநந்தி
அடிகள் என்பா ராயினார்.
12.430
12 st/nd Thirumurai
Song # 3
சேக்கிழார்
பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்
பெருமை யில்செறி பேரொலி
பிறங்கலின் நிறைந்து
திரும கட்குவாழ் சேர்விட
மாதலின் யாவும்
தருத லில்கடல் தன்னினும்
பெரிதெனத் திரைபோல்
கரிப ரித்தொகை மணிதுகில்
சொரிவதாங் கலத்தால்.
This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list