சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் மந்த
மந்தம்     மந்திரம்     மந்தரம்     மந்திர     மந்தி     மந்திரிகள்     மந்தரத்தும்     மந்தாநிலம்     மந்திரங்க     மந்திரி     மந்த     மந்தணம்     மந்தரம்(ம்)     மந்திரமும்,    
1.098   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மந்தம் முழவம் மழலை ததும்ப, வரை நீழல்
செந் தண் புனமும் சுனையும் சூழ்ந்த சிராப்பள்ளி,
சந்தம் மலர்கள் சடைமேல் உடையார், விடை ஊரும்
எம்தம் அடிகள், அடியார்க்கு அல்லல் இல்லையே.

2.003   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மந்திரம் தரு மா மறையோர்கள், தவத்தவர்,
செந்து இலங்கு மொழியவர், சேர் தெளிச்சேரியீர்!
வெந்தல் ஆகிய சாக்கியரோடு சமணர்கள்
தம் திறத்தன நீக்குவித்தீர்; ஓர் சதிரரே?

2.010   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மந்த மாம்பொழில் சூழ் மங்கலக்குடி மன்னிய
எந்தையை, எழில் ஆர் பொழில் காழியர்காவலன்
சிந்தைசெய்து அடி சேர்த்திடு ஞானசம்பந்தன் சொல்
முந்தி ஏத்த வல்லார், இமையோர்முதல் ஆவரே.

2.034   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மந்தணம் இருந்து புரி மா மடிதன் வேள்வி
சிந்த விளையாடு சிவலோகன் இடம் என்பர்
அந்தணர்கள் ஆகுதியில் இட்ட அகில், மட்டு ஆர்
பைந்தொடி நல் மாதர் சுவடு ஒற்று பழுவூரே.

2.059   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மந்தம் மருவும் பொழிலில் எழில் ஆர் மது உண்டு
கந்தம் மருவ, வரிவண்டு இசை செய் கலிக் காழி,
பந்தம் நீங்க அருளும் பரனே! என ஏத்திச்
சிந்தை செய்வார் செம்மை நீங்காது இருப்பாரே.

2.066   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மந்திரம் ஆவது நீறு; வானவர் மேலது நீறு;
சுந்தரம் ஆவது நீறு; துதிக்கப்படுவது நீறு;
தந்திரம் ஆவது நீறு; சமயத்தில் உள்ளது நீறு;
செந்துவர்வாய் உமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே.

2.110   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மந்தம் ஆர் பொழில் மாங்கனி மாந்திட மந்திகள்,
மாணிக்கம்
உந்தி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானை;
நிந்தியா எடுத்து ஆர்த்த வல் அரக்கனை நெரித்திடு
விரலானை;
சிந்தியா மனத்தார் அவர் சேர்வது தீ நெறி அதுதானே.

2.118   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மந்தம் ஆரும் பொழில் சூழ் திலதை(ம்) மதிமுத்தர்மேல்,
கந்தம் ஆரும் கடல் காழி உள்ளான் தமிழ் ஞானசம்
பந்தன் மாலை, பழி தீர நின்று ஏத்த வல்லார்கள், போய்ச்
சிந்தைசெய்வார், சிவன் சேவடி சேர்வது திண்ணமே.
3.015   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மந்திர மறையவர், வானவரொடும்,
இந்திரன், வழிபட நின்ற எம் இறை;
வெந்த வெண் நீற்றர் வெண்காடு மேவிய,
அந்தமும் முதல் உடை, அடிகள் அல்லரே!

3.022   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மந்திர நால்மறை ஆகி, வானவர்
சிந்தையுள் நின்றவர், அவர் தம்மை ஆள்வன
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம், அஞ்சு எழுத்துமே.

3.048   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மந்தம் உந்து பொழில் மழபாடி
எந்தை சந்தம் இனிது உகந்து ஏத்துவான்,
கந்தம் ஆர் கடல் காழியுள் ஞானசம்-
பந்தன் மாலை வல்லார்க்கு இல்லை, பாவமே.

3.049   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மந்தரம்(ம்) அன பாவங்கள் மேவிய
பந்தனையவர் தாமும் பகர்வரேல்,
சிந்தும் வல்வினை; செல்வமும் மல்குமால்
நந்தி நாமம் நமச்சிவாயவே.

3.073   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மந்தம் மலி சோலை மழபாடி நகர் நீடு பழையாறை அதனுள்
பந்தம் உயர் வீடு நல பட்டிசுரம் மேய படர் புன்சடையனை,
அம் தண் மறையோர் இனிது வாழ் புகலி ஞானசம்பந்தன் அணி ஆர்
செந்தமிழ்கள் கொண்டு இனிது செப்ப வல தொண்டர் வினை நிற்பது இலவே.

3.076   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மந்த முரவம் கடல் வளம் கெழுவு காழிபதி மன்னு கவுணி,
வெந்த பொடி நீறு அணியும் வேதவனம் மேவு சிவன் இன் அருளினால்,
சந்தம் இவை தண் தமிழின் இன் இசை எனப் பரவு பாடல் உலகில்,
பந்தன் உரை கொண்டு மொழிவார்கள் பயில்வார்கள், உயர்
வான் உலகமே.

3.077   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மந்த மலர் கொண்டு வழிபாடு செயும் மாணி உயிர் வவ்வ மனம் ஆய்
வந்த ஒரு காலன் உயிர் மாள உதை செய்த மணிகண்டன் இடம் ஆம்
சந்தினொடு கார் அகில் சுமந்து, தட மா மலர்கள் கொண்டு, கெடிலம்
உந்து புனல் வந்து வயல் பாயும் மணம் ஆர் உதவி மாணிகுழியே.

3.080   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மந்திர நல்மாமறையினோடு வளர் வேள்விமிசை மிக்க புகை போய்,
அந்தர-விசும்பு அணவி, அற்புதம் எனப் படரும் ஆழி இருள்வாய்,
மந்தர நல் மாளிகை நிலாவு மணி நீடு கதிர்விட்ட ஒளி போய்,
வெந்தழல் விளக்கு என விரும்பினர் திருந்து பதி வீழிநகரே.

3.091   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மந்தம் ஆய் இழி மதக்களிற்று இள மருப்பொடு பொருப்பின் நல்ல
சந்தம் ஆர் அகிலொடு சாதியின் பலங்களும் தகைய மோதி,
உந்து மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை,
எந்தையார் இணை அடி இமையவர் தொழுது எழும்
இயல்பினாரே.

4.028   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மந்திரம் உள்ளது ஆக, மறி கடல் எழு நெய் ஆக,
இந்திரன் வேள்வித் தீயில் எழுந்தது ஓர் கொழுந்தின் வண்ணம்
சிந்திரம் ஆக நோக்கிக் தெருட்டுவார்-தெருட்ட வந்து
கந்திரம் முரலும் சோலைக் கானல் அம் கெடிலத்தாரே

5.035   5 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மந்தம் ஆக வளர்பிறை சூடி ஓர்
சந்தம் ஆகத் திருச்சடை சாத்துவான்,
பந்தம் ஆயின தீர்க்கும் பழனத்தான்,
எந்தை தாய் தந்தை எம்பெருமானுமே.

5.082   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மந்தம் ஆகிய சிந்தை மயக்கு அறுத்து,
அந்தம் இல் குணத்தானை அடைந்து, நின்று,
எந்தை! ஈசன்! என்று ஏத்திட வல்லிரேல்,
வந்து நின்றிடும்-வான்மியூர் ஈசனே.

6.003   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மந்திரமும், மறைப் பொருளும், ஆனான்தன்னை; மதியமும், ஞாயிறும், காற்றும், தீயும்,
அந்தரமும், அலைகடலும், ஆனான் தன்னை; அதியரையமங்கை அமர்ந்தான் தன்னை;
கந்தருவம் செய்து, இருவர், கழல் கைகூப்பி, கடிமலர்கள் பல தூவி, காலைமாலை.
இந்திரனும் வானவரும் தொழ, செல்வானை;- ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!

7.092   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மந்தி கடுவனுக்கு உண் பழம் நாடி, மலைப்புறம்
சந்திகள்தோறும் சலபுட்பம் இட்டு வழிபட,
புந்தி உறைவாய்! புக்கொளியூர் அவிநாசியே!
நந்தி உனை வேண்டிக் கொள்வேன் நரகம் புகாமையே

7.100   7 st/nd Thirumurai   Song # 3   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மந்திரம் ஒன்று அறியேன், மனைவாழ்க்கை மகிழ்ந்து, அடியேன்;
சுந்தர வேடங்களால்-துரிசே செயும் தொண்டன் எனை
அந்தர மால்விசும்பில்(ல்) அழகு ஆனை அருள்புரிந்தது-
உம்தரமோ? நெஞ்சமே!-நொடித்தான்மலை உத்தமனே.

10.100   10 st/nd Thirumurai   Song # 8   திருமூலர்   திருமந்திரம்  
மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோ
டிந்த எழுவரும் என்வழி யாமே.

10.222   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
மந்திரம் ஒன்றே உரைசெய்த மாதவர்
சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர்
பிந்திச் சுணங்காய்ப் பிறந்தொரு நூறுரு
வந்து புலையராய் மாய்வர்கள் மண்ணிலே. 

10.311   10 st/nd Thirumurai   Song # 32   திருமூலர்   திருமந்திரம்  
மந்தரம் ஏறு மதிபானு வைமாற்றிக்
கந்தாய்க் குழியிற் கசடற வல்லார்க்குத்
தந்தின்று நற்கா மியலோகஞ் சார்வாகும்
அந்த வுலகம் அணிமாதி யாமே.

10.402   10 st/nd Thirumurai   Song # 45   திருமூலர்   திருமந்திரம்  
மந்திரம் ஒன்றுள் மலரால் உதிப்பது
உந்தியி னுள்ளே உதயம்பண் ணாநிற்கும்
சந்திசெய் யாநிற்பர் தாம தறிகிலர்
அந்தி தொழுதுபோய் ஆர்த்தகன் றார்களே.

10.409   10 st/nd Thirumurai   Song # 27   திருமூலர்   திருமந்திரம்  
மந்திரம் சக்கர மானவை சொல்லிடில்
தந்திரத் துள்ளெழுத் தொன்றெரி வட்டமாம்
தந்திரத் துள்ளும் இரேகையில் ஒன்றில்லை
பெந்தம தாகும் பிரணவம் உன்னிடே.

10.602   10 st/nd Thirumurai   Song # 15   திருமூலர்   திருமந்திரம்  
மந்திர மாவதும் மாமருந் தாவதும்
தந்திர மாவதும் தானங்க ளாவதும்
சுந்தர மாவதும் தூய்நெறி யாவதும்
எந்தை பிரான்றன் இணையடி தானே. 3,

10.734   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
மந்திரம் தந்திரம் மாயோகம் ஞானமும்
பந்தமும் வீடும் தரிசித்துப் பார்ப்பவர்ச்
சிந்தனை செய்யாத் தெளிவியாது ஊண் பொருட்டு
அந்தகர் ஆவார் அசற்குரு வாமே.

11.010   11 st/nd Thirumurai   Song # 64   நக்கீரதேவ நாயனார்   திருஈங்கோய்மலை எழுபது  
மந்தி இனங்கள் மணிவரையின் உச்சிமேல்
முந்தி இருந்து முறைமுறையே நந்தி
அளைந்தாடி ஆலிக்கும் ஈங்கோயே கூற்றம்
வளைந்தோடச் செற்றான் மலை.

11.010   11 st/nd Thirumurai   Song # 65   நக்கீரதேவ நாயனார்   திருஈங்கோய்மலை எழுபது  
மந்தி மகவினங்கள் வண்பலவின் ஒண்சுளைக்கண்
முந்திப் பறித்த முறியதனுள் சிந்திப்போய்த்
தேனாறு பாயுஞ்சீர் ஈங்கோயே செஞ்சடைமேல்
வானாறு வைத்தான் மலை.

12.000   12 st/nd Thirumurai   Song # 109   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
மந்திரிகள் அதுகண்டு
மன்னவனை அடிவணங்கிச்
சிந்தைதளர்ந் தருளுவது
மற்றிதற்குத் தீர்வன்றால்
கொந்தலர்த்தார் மைந்தனைமுன்
கோவதைசெய் தார்க்குமறை
அந்தணர்கள் விதித்தமுறை
வழிநிறுத்தல் அறமென்றார்.
12.140   12 st/nd Thirumurai   Song # 26   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
மந்தரத்தும் மத்திமத்தும்
தாரத்தும் வரன்முறையால்
தந்திரிகள் மெலிவித்தும்
சமங்கொண்டும் வலிவித்தும்
அந்தரத்து விரல்தொழில்கள்
அளவுபெற அசைத்தியக்கிச்
சுந்தரச்செங் கனிவாயும்
துளைவாயும் தொடக்குண்ண.
12.150   12 st/nd Thirumurai   Song # 6   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
மந்தாநிலம் வந்தசை பந்தரின்
மாட முன்றில்
பந்தாடிய மங்கையர் பங்கயச்
செங்கை தாங்கும்
சந்தார்முலை மேலன தாழ்குழை
வாள்மு கப்பொற்
செந்தாமரை மேலன நித்திலம்
சேர்ந்த கோவை.
12.280   12 st/nd Thirumurai   Song # 266   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மந்திரங்க ளானவெலாம் அருளிச் செய்து
மற்றவற்றின் வைதிகநூற் சடங்கின் வந்த
சிந்தைமயக் குறும்ஐயந் தெளிய எல்லாஞ்
செழுமறையோர்க் கருளியவர் தெருளும் ஆற்றால்
முந்தைமுதன் மந்திரங்கள் எல்லாந் தோன்றும்
முதலாகும் முதல்வனார் எழுத்தஞ் சென்பார்
அந்தியினுள் மந்திரம் அஞ்செழுத்து மேயென்
றஞ்செழுத்தின் திருப்பதிகம் அருளிச் செய்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 700   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மந்தி ரச்செயல் வாய்த்தில
மற்றினிச் செய்யும்
புந்தி யாவதிங் கிதுஎனப்
பொதிதழல் கொடுபுக்
கந்தண் மாதவர் திருமடப்
புறத்தயல் இருள்போல்
வந்து தந்தொழில் புரிந்தனர்
வஞ்சனை மனத்தோர்.
12.280   12 st/nd Thirumurai   Song # 747   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மந்திரி யாரைப் பின்னும்
எதிர்செல மன்னன் ஏவச்
சிந்தையுள் மகிழ்ந்து போந்தார்
செயலையான் சமயத் துள்ளோர்
பைந்துணர் அலங்கல் மன்னன்
பரிசுகண் டிதுவோ பண்பால்
நந்தனிச் சமயந் தன்னை
நாட்டுமா றென்று பின்னும்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1241   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மந்திர முறையால் உய்த்த
எரிவல மாக மாதர்
தந்திருக் கையைப் பற்றும்
தாமரைச் செங்கை யாளர்
இந்தஇல் லொழுக்கம் வந்து
சூழ்ந்ததே இவள்தன் னோடும் அந்தமில் சிவன்தாள் சேர்வன்
என்னும்ஆ தரவு பொங்க.
12.680   12 st/nd Thirumurai   Song # 14   சேக்கிழார்   மன்னிய சீர்ச் சருக்கம்  
மந்திரிகள் தமைஏவி
வள்ளல்கொடை அநபாயன்
முந்தைவருங் குலமுதலோ
ராயமுதற் செங்கணார்
அந்தமில்சீர்ச் சோணாட்டில்
அகல்நாடு தொறுமணியார்
சந்திரசே கரன்அமருந்
தானங்கள் பலசமைத்தார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list