சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter: ( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் மன்ற
மன்றத்தே
மன்று
மன்றங்
மன்றுளே
மன்றல்
மன்றலங்
மன்றல்மலர்ப்
மன்றல்வினைத்
மன்றில்
மன்ற
மன்றத்துப்
மன்றியும்
மன்றனை(ம்),
4.026
4 st/nd Thirumurai
Song # 8
திருநாவுக்கரசர்
தேவாரம்
மன்றத்துப் புன்னை போல மரம் படு துயரம் எய்தி,
ஒன்றினால் உணரமாட்டேன்; உன்னை உள் வைக்க மாட்டேன்;
கன்றிய காலன் வந்து கருக்குழி விழுப்பதற்கே
அன்றினான்; அலமந்திட்டேன் அதிகைவீரட்டனீரே!
4.088
4 st/nd Thirumurai
Song # 7
திருநாவுக்கரசர்
தேவாரம்
மன்றியும் நின்ற மதிலரை மாய வகை கெடுக்கக்
கன்றியும் நின்று கடுஞ்சிலை வாங்கிக் கனல் அம்பினால்
பொன்றியும் போகப் புரட்டினன், பூந்துருத்தி(ய்) உறையும்
அன்றியும் செய்த பிரான் தனை-யான் அடி போற்றுவதே.
5.004
5 st/nd Thirumurai
Song # 6
திருநாவுக்கரசர்
தேவாரம்
மன்றனை(ம்), மதியாதவன் வேள்விமேல்
சென்றனை, திரு அண்ணாமலையனை,
வென்றனை, வெகுண்டார் புரம்மூன்றையும்
கொன்றனை, கொடியேன் மறந்து உய்வனோ?
10.105
10 st/nd Thirumurai
Song # 7
திருமூலர்
திருமந்திரம்
மன்றத்தே நம்பிதன் மாடம் எடுத்தது
மன்றத்தே நம்பி சிவிகைபெற் றேறினான்
மன்றத்தே நம்பிமுக் கோடி வழங்கினான்
சென்றத்தா வென்னத் திரிந்திலன் தானே.
10.820
10 st/nd Thirumurai
Song # 2
திருமூலர்
திருமந்திரம்
மன்று நிறைந்தது மாபரம் ஆயது
நின்று நிறைந்தது நேர்தரு நந்தியும்
கன்றை நினைந்தெழு தாய்என வந்தபின்
குன்று நிறைந்த குணவிளக் காகுமே.
10.915
10 st/nd Thirumurai
Song # 11
திருமூலர்
திருமந்திரம்
மன்று நிறைந்த விளக்கொளி மாமலர்
நன்றிது தான்இதழ் நாலொடு நூறவை
சென்றது தான்இரு பத்திரு நூறுள
நின்றது தான்நெடு மண்டல மாகுமே.
11.032
11 st/nd Thirumurai
Song # 65
நம்பியாண்டார் நம்பி
கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
மன்றங் கமர்திருச் சிற்றம்
பலவ வடவனத்து
மின்றங் கிடைக் குந்தி நாடக
மாடக்கொல் வெண்தரங்கம்
துன்றங் கிளர்கங்கை யாளைச்
சுடுசினத் தீயரவக்
கன்றங் கடைசடை மேலடை
யாவிட்ட கைதவமே.
12.000
12 st/nd Thirumurai
Song # 230
சேக்கிழார்
திருமலைச் சருக்கம்
மன்று ளாடுமது வின்னசை யாலே
மறைச்சு ரும்பறை புறத்தின் மருங்கே
குன்று போலுமணி மாமதில் சூழுங்
குண்ட கழ்க்கமல வண்டலர் கைதைத்
துன்று நீறுபுனை மேனிய வாகித் தூய
நீறுபுனை தொண்டர்க ளென்னச்
சென்று சென்றுமுரல் கின்றன கண்டு
சிந்தை அன்பொடு திளைத்தெதிர் சென்றார். ,
12.020
12 st/nd Thirumurai
Song # 42
சேக்கிழார்
தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
மன்றுளே திருக்கூத் தாடி
அடியவர் மனைகள் தோறுஞ்
சென்றவர் நிலைமை காட்டுந்
தேவர்கள் தேவர் தாமும்
வென்றஐம் புலனான் மிக்கீர்
விருப்புட னிருக்க நம்பால்
என்றுமிவ் விளமை நீங்கா
தென்றெழுந் தருளி னாரே.
12.210
12 st/nd Thirumurai
Song # 264
சேக்கிழார்
திருநின்ற சருக்கம்
மன்றல் விரவு மலர்ப்புன்னை
மணஞ்சூழ் சோலை உப்பளத்தின்
முன்றில் தோறுஞ் சிறுமடவார்
முத்தங் கொழிக்கும் மறைக்காட்டுக்
குன்ற வில்லி யார்மகிழ்ந்த
கோயில் புகுந்து வலங்கொண்டு
சென்று சேர்ந்தார் தென்புகலிக்
கோவும் அரசுந் திருமுன்பு.
12.280
12 st/nd Thirumurai
Song # 366
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
மன்றலங் கழனிசூழ் திருநலூர் மறைவலோர்
துன்றுமங் கலவினைத் துழனியால் எதிர்கொளப்
பொன்தயங் கொளிமணிச் சிவிகையிற் பொலிவுறச்
சென்றணைந் தருளினார் சிரபுரச் செம்மலார்.
12.280
12 st/nd Thirumurai
Song # 629
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
மன்றல்மலர்ப் பிறங்கல்மருங்
கெறிந்துவரு நதிகள்பல
சென்றணைந்து கடந்தேறித்
திரிமருப்பின் கலைபுணர்மான்
கன்றுதெறித் தெனவுகைக்கும்
கானஅதர் கடந்தணைந்தார்
கொன்றைநறுஞ் சடைமுடியார்
மகிழ்ந்ததிருக் கொடுங்குன்றம்.
12.280
12 st/nd Thirumurai
Song # 646
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
மன்றலங் குழலி னாரை
வணங்கிப் போந் தமைச்சனாரும்
வென்றிவே லரச னுக்கும்
உறுதியே எனநி னைந்து
பொன்திகழ் மாட வீதி
மதுரையின் புறத்துப் போகி
இன்தமிழ் மறைதந் தாரை
எதிர்கொள எய்துங் காலை.
12.280
12 st/nd Thirumurai
Song # 1175
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
மன்றல்வினைத் திருமுளைநாள்
தொடங்கிவரு நாளெல்லாம்
முன்றில்தொறும் வீதிதொறும்
முகநெடுவா யில்கள்தொறும்
நின்றொளிரும் மணிவிளக்கு
நிறைவாசப் பொற்குடங்கள்
துன்றுசுடர்த் தாமங்கள்
தூபங்கள் துதைவித்தார்.
12.370
12 st/nd Thirumurai
Song # 135
சேக்கிழார்
வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
மன்றில் நிறைந்து நடமாட
வல்லார் தொல்லை ஐயாற்றில்
கன்று தடையுண் டெதிரழைக்கக்
கதறிக் கனைக்கும் புனிற்றாப்போல்
ஒன்று முணர்வால் சராசரங்கள்
எல்லாங் கேட்க வோலமென
நின்று மொழிந்தார் பொன்னிமா
நதியு நீங்கி நெறிகாட்ட.
12.720
12 st/nd Thirumurai
Song # 31
சேக்கிழார்
வெள்ளானைச் சருக்கம்
மன்ற லந்தரு மிடைந்தபூங்
கயிலையின் மலைவல்லி யுடன்கூட
வென்றி வௌள்விடைப் பாகர்தாம்
வீற்றிருந் தருளிய பொழுதின்கண்
ஒன்று சிந்தைநம் மூரனை
உம்பர்வெள் ளானையில் உடன்ஏற்றிச்
சென்று கொண்டிங்கு வாருமென்று
அயன்முதல் தேவர்கட் கருள்செய்தார்.
This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list