சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் மறைய
மறையின்     மறையான்,     மறையவன்,     மறையும்     மறையோ     மறையவன்     மறையவர்     மறையவர்க்     மறையவ     மறையவர்கள்     மறையோர்     மறைய     மறையொலி     மறையாளர்     மறையானை,     மறையினான்     மறையினார்,     மறையர்,     மறையோன்,     மறையன்,     மறையினார்     மறையனார்,     மறையினானொடு     மறையவன்(ன்)    
1.070   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மறையின் இசையார், நெறிமென் கூந்தல் மலையான் மகளோடும்,
குறை வெண்பிறையும் புனலும் நிலவும் குளிர்புன்சடை தாழ,
பறையும் குழலும் கழலும் ஆர்ப்ப, படு காட்டு எரி ஆடும்
இறைவர் சிறை வண்டு அறை பூஞ்சாரல் ஈங்கோய்மலையாரே.

1.089   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மறையான், நெடுமால், காண்பு அரியான்! மழு ஏந்தி!
நிறையா மதி சூடி! நிகழ் முத்தின் தொத்து ஏய்
இறையான்! எருக்கத்தம்புலியூர் இடம் கொண்ட
கறை ஆர் மிடற்றானைக் கருத, கெடும், வினையே.

1.125   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மறையவன், மதியவன், மலையவன், நிலையவன்,
நிறையவன், உமையவள் மகிழ் நடம் நவில்பவன்,
இறையவன்-இமையவர் பணிகொடு சிவபுரம்
உறைவு என உடையவன், எமை உடையவனே.

1.135   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மறையும் ஓதுவர்; மான்மறிக் கையினர்;
கறை கொள் கண்டம் உடையவர்
பறையும் சங்கும் ஒலிசெய் பராய்த்துறை
அறைய நின்ற அடிகளே.

2.012   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மறையானை, மாசு இலாப் புன்சடை மல்கு வெண்
பிறையானை, பெண்ணொடு ஆண் ஆகிய பெம்மானை,
இறையானை, ஏர் கொள் கச்சித் திரு ஏகம்பத்து
உறைவானை, அல்லது உள்காது, எனது உள்ளமே.

2.025   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மறையினான் ஒலி மல்கு வீணையன்,
நிறையின் ஆர் நிமிர்புன்சடையன், எம்
பொறையினான், உறையும் புகலியை
நிறையினால் தொழ, நேசம் ஆகுமே.

2.026   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மறையினார், மழுவாளினார், மல்கு
பிறையினார், பிறையோடு இலங்கிய
நிறையினார் அ நெல்வாயிலார்; தொழும்
இறைவனார், எமது உச்சியாரே.

3.030   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மறையர், வாயின் மொழி; மானொடு, வெண்மழு,
கறைகொள் சூலம்(ம்), உடைக் கையர்; கார் ஆர்தரும்
நறை கொள் கொன்றை நயந்து ஆர்தரும் சென்னிமேல்
பிறையர்; கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே.

3.041   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மறையோன், அரியும், அறியா அனலன்
நெறி ஏகம்பம் குறியால் தொழுமே!

3.045   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மறையன், மா முனிவன், மருவார் புரம்
இறையின் மாத்திரையில்(ல்) எரியூட்டினான்,
சிறைவண்டு ஆர் பொழில் சூழ் திரு ஆரூர் எம்
இறைவன்தான், எனை ஏன்றுகொளும் கொலோ?

3.058   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மறையினார் மல்கு காழித் தமிழ் ஞானசம்பந்தன், மன்னும்
நிறையின் ஆர் நீலநக்கன் நெடு மா நகர் என்று தொண்டர்
அறையும் ஊர் சாத்தமங்கை அயவந்திமேல் ஆய்ந்த பத்தும்,
முறைமையால் ஏத்த வல்லார், இமையோரிலும் முந்துவரே.

3.073   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மறையின் ஒலி கீதமொடு பாடுவன பூதம் அடி மருவி, விரவு ஆர்
பறையின் ஒலி பெருக நிகழ் நட்டம் அமர் பட்டிசுரம் மேய பனி கூர்
பிறையினொடு, மருவியது ஒர் சடையின் இடை, ஏற்ற புனல், தோற்றம் நிலை ஆம்-
இறைவன் அடி முறை முறையின் ஏத்துமவர் தீத்தொழில்கள் இல்லர், மிகவே.

4.022   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மறையனார், மழு ஒன்று ஏந்தி, மணி நிலா எறிக்கும் சென்னி
இறைவனார், எம்பிரானார், ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்
சிறை கொள் நீர்த் தில்லை தன்னுள்-திகழ்ந்த சிற்றம்பலத்தே
அறைகழல் ஆர்க்க நின்று அனல்-எரி ஆடும் ஆறே!

5.005   5 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மறையினானொடு மாலவன் காண்கிலா
நிறையும் நீர்மையுள் நின்று அருள்செய்தவன்
உறையும் மாண்பின் அண்ணாமலை கைதொழப்
பறையும், நாம் செய்த பாவங்கள் ஆனவே.

5.014   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மறையின் நாள்மலர் கொண்டு அடி வானவர்-
முறையினால் முனிகள் வழிபாடு செய்
இறைவன், எம்பெருமான், இடைமருதினில்
உறையும் ஈசனை, உள்கும், என் உள்ளமே.

5.016   5 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மறையும் ஓதுவர்; மான்மறிக் கையினர்;
கறை கொள் கண்டம் உடைய கபாலியார்;
துறையும் போகுவர்; தூய வெண் நீற்றினர்;
பிறையும் சூடுவர்-பேரெயிலாளரே.

5.096   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மறையும் பாடுதிர்; மா தவர் மாலினுக்கு
உறையும் ஆயினை; கோள் அரவோடு ஒரு
பிறையும் சூடினை; என்பது அலால், பிறிது
இறையும் சொல் இலை-எந்தைபிரானிரே!

6.066   6 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மறையானை, மால் விடை ஒன்று ஊர்தியானை, மால்கடல் நஞ்சு உண்டானை, வானோர் தங்கள்-
இறையானை, என் பிறவித்துயர் தீர்ப்பானை,   இன்னமுதை, மன்னிய சீர் ஏகம்பத்தில்
உறைவானை, ஒருவரும் ஈங்கு அறியா வண்ணம் என் உள்ளத்துள்ளே ஒளித்து வைத்த
சிறையானை, திரு நாகேச்சுரத்து உளானை, சேராதார் நன்நெறிக்கண் சேராதாரே.

7.027   7 st/nd Thirumurai   Song # 2   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மறையோர் வானவரும் தொழுது ஏத்தி வணங்க நின்ற
இறைவா! எம்பெருமான்! எனக்கு இன் அமுது ஆயவனே!
கறை ஆர் சோலைகள் சூழ் திருக்கற்குடி மன்னி நின்ற
அறவா! அங்கணனே! அடியேனையும், அஞ்சல்! என்னே!.

7.066   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மறையவன்(ன்) ஒரு மாணி வந்து அடைய, வாரம் ஆய், அவன் ஆர் உயிர் நிறுத்தக்
கறை கொள் வேல் உடைக் காலனைக் காலால் கடந்த காரணம் கண்டு கண்டு, அடியேன்,
இறைவன், எம்பெருமான் என்று எப்போதும் ஏத்தி ஏத்தி நின்று அஞ்சலி செய்து, உன்
அறை கொள் சேவடிக்கு அன்பொடும் அடைந்தேன்-ஆவடுதுறை ஆதி எம்மானே! .

10.115   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
மறையோ ரவரே மறையவ ரானால்
மறையோர்தம் வேதாந்த வாய்மையில் தூய்மை
குறையோர்தல் மற்றுள்ள கோலா கலமென்
றறிவார் மறைதெரிந் தந்தண ராமே. 

10.402   10 st/nd Thirumurai   Song # 27   திருமூலர்   திருமந்திரம்  
மறையவன் ஆக மதித்த பிறவி
மறையவன் ஆக மதித்திடக் காண்பர்
மறையவன் அஞ்செழுத் துள்நிற்கப் பெற்ற
மறையவன் அஞ்செழுத் தாம்அவர் தாமே.

10.702   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
மறையவர் அற்சனை வண்படி கந்தான்
இறையவர் அற்சனை ஏய்பொன் னாகும்
குறைவில் வசியர்க்குக் கோமள மாகும்
துறையுடைச் சூத்திரர் சொல்வாண லிங்கமே.

11.038   11 st/nd Thirumurai   Song # 13   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்  
மறையவர்க் கொருவன் நீ
மருவலர்க் குருமு நீ
நிறைகுணத் தொருவன் நீ
நிகரில்உத் தமனும் நீ

12.020   12 st/nd Thirumurai   Song # 22   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
மறையவ னாகி நின்ற
மலைமகள் கேள்வன் தானும்
உறையுளிற் புக்கு நின்ற
ஒருபெருந் தொண்டர் கேட்ப
இறையிலிங் கெய்தப் புக்காய்
தாழ்த்ததென் னென்ன வந்து
கறைமறை மிடற்றி னானைக்
கைதொழு துரைக்க லுற்றார்.
12.180   12 st/nd Thirumurai   Song # 31   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
மறையவர்கள் மொழிந்ததற்பின்
தென்றிசையின் மதிற்புறத்துப்
பிறையுரிஞ்சும் திருவாயில்
முன்னாகப் பிஞ்ஞகர்தம்
நிறையருளால் மறையவர்கள்
நெருப்பமைத்த குழியெய்தி
இறையவர்தாள் மனங்கொண்டே
எரிசூழ வலங்கொண்டார்.
12.200   12 st/nd Thirumurai   Song # 43   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
மறையோர் மொழியக் கேட்டஞ்சிச்
சிறுமா ணவகன் செய்தஇது
இறையும் நான்முன் பறிந்திலேன்
இதற்கு முன்பு புகுந்ததனை
நிறையும் பெருமை அந்தணர்காள்
பொறுக்க வேண்டும் நீங்களெனக்
குறைகொண் டிறைஞ்சி இனிப்புகுதில்
குற்றம் எனதே யாம்என்றான்.
12.280   12 st/nd Thirumurai   Song # 188   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மறைய னைத்தும் ஒருவடி வாமென
நிறைம திப்பிள்ளை நீள்நிலஞ் சேர்ந்தெனத்
துறைய லைக்கங்கை சூடும் அரத்துறை
இறைவ ரைத்தொழு வான்விரைந் தேகினார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 262   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மறையவர்கள் அடிபோற்றத் தந்தை யாரும்
மருங்கணைய மாளிகையில்அணையும் போதில்
நிறைகுடமும் மணிவிளக்கும் முதலா யுள்ள
நீதிமறைக் குலமகளிர் நெருங்கி யேந்த
இறைவர்திரு நீற்றுக்காப் பேந்தி முன்சென்
றீன்றதா யார்சாத்தி இறைஞ்சி ஏத்த
முறைமையவர்க் கருள்செய்து மடத்தில் புக்கார்
முதல்வர்பால் மணிமுத்தின் சிவிகை பெற்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 860   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மறையவர் வேள்வி செய்ய
வானவர் மாரி நல்க
இறைவன் நன்னெறியின் ஓங்க
இகத்தினில் அவனி இன்பம்
குறைவில தெனினும் கூற்றை
உதைத்தவர் நாமம் கூறி
நிறைகடற் பிறவித் துன்பம்
நீங்கிடப் பெற்ற தன்றே.
12.280   12 st/nd Thirumurai   Song # 1239   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மறையொலி பொங்கி யோங்க
மங்கல வாழ்த்து மல்க
நிறைவளைச் செங்கை பற்ற
நேரிழை யவர்முன் அந்தப்
பொறையணி முந்நூல் மார்பர்
புகரில்வெண் பொரிகை அட்டி
இறைவரை ஏத்தும் வேலை
எரிவலங் கொள்ள வேண்டி.
12.490   12 st/nd Thirumurai   Song # 1   சேக்கிழார்   கறைக் கண்டன் சருக்கம்  
மறையாளர் திருக்கடவூர்
வந்துதித்து வண்தமிழின்
துறையான பயன்தெரிந்து
சொல்விளங்கிப் பொருள்மறையக்
குறையாத தமிழ்க்கோவை
தம்பெயரால் குலவும்வகை
முறையாலே தொகுத்தமைத்து
மூவேந்தர் பால்பயில்வார்.
12.720   12 st/nd Thirumurai   Song # 5   சேக்கிழார்   வெள்ளானைச் சருக்கம்  
மறையோர் வாழும் அப்பதியின்
மாட வீதி மருங்கணைவார்
நிறையுஞ் செல்வத் தெதிர்மனைகள்
இரண்டில் நிகழ்மங் கலஇயங்கள்
அறையும் ஒலியொன் றினில்ஒன்றில்
அழுகை ஒலிவந் தெழுதலும் ஆங்கு
உறையும் மறையோர் களைஇரண்டும்
உடனே நிகழ்வ தென்னென்றார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list