சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் மற்ற
மற்று     மற்றுப்     மற்றி     மற்றவன்     மற்றுநீ     மற்றவர்     மற்ற     மற்றம்     மற்றவ     மற்றவனும்     மற்றவர்தஞ்     மற்றினிநாம்     மற்றவன்தன்     மற்றவ்வூர்ப்     மற்றை     மற்றவர்தாம்     மற்றவ்வுரை     மற்றவர்தம்     மற்றும்     மற்றவரும்     மற்றப்     மற்றதனைக்     மற்றவரை     மற்றவர்தந்     மற்றதற்குப்     மற்றநற்     மற்றுவே     மற்றிவனும்     மற்றவர்க்கு     மற்றத்     மற்றவ்     மற்றைநாள்     மற்றவ்வூர்     மற்றது     மற்றவர்கட்     மற்றிவ்     மற்றவர்கள்     மற்றிவர்     மற்றதனின்     மற்றவருங்     மற்றவன்றன்     மற்றவற்றின்     மற்றிந்     மற்றையார்     மற்றுத்    
1.116   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மற்று இணை இல்லா மலை திரண்டன்ன திண்தோள் உடையீர்!
கிற்று எமை ஆட்கொண்டு கேளாது ஒழிவதும் தன்மைகொல்லோ?
சொல்-துணை வாழ்க்கை துறந்து உம் திருவடியே அடைந்தோம்;
செற்று எமைத் தீவினை தீண்டப்பெறா; திருநீலகண்டம்!

2.049   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மற்றும் இவ் உலகத்து உளோர்களும் வான் உளோர்களும் வந்து, வைகலும்,
கற்ற சிந்தையராய்க் கருதும் கலிக் காழி,
நெற்றிமேல் அமர் கண்ணினானை நினைந்து இருந்து இசை
பாடுவார், வினை
செற்ற மாந்தர் எனத் தெளிமின்கள், சிந்தையுளே

2.099   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மற்று இ(வ்) வாழ்க்கை மெய் எனும் மனத்தினைத் தவிர்ந்து
நீர்,
பற்றி வாழ்மின், சேவடி! பணிந்து வந்து எழுமினோ!
வெற்றி கொள் தசமுகன், விறல் கெட இருந்தது ஓர்
குற்றம் இல் வரையினான் கோடி காவு சேர்மினே!

3.024   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மற்று ஒரு பற்று இலை, நெஞ்சமே! மறைபல
கற்ற நல் வேதியர் கழுமல வள நகர்,
சிற்றிடைப் பேர் அல்குல் திருந்திழை அவளொடும்
பெற்று எனை ஆள் உடைப் பெருந்தகை இருந்ததே!

3.058   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மற்ற வில் மால்வரையா மதில் எய்து, வெண் நீறு பூசி,
புற்று அரவு அல்குலாளோடு உடன் ஆவதும் பொற்பதுவே?
கற்றவர் சாத்தமங்கை நகர் கைதொழ, செய்த பாவம்
அற்றவர் நாளும் ஏத்த, அயவந்தி அமர்ந்தவனே!

4.041   4 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மற்று நீர் மனம் வையாதே மறுமையைக் கழிக்க வேண்டில்
பெற்றது ஓர் உபாயம் தன்னால் பிரானையே பிதற்று மின்கள்!
கற்று வந்து அரக்கன் ஓடிக் கயிலாய மலை எடுக்க,
செற்று உகந்து அருளிச் செய்தார்-திருச் சோற்றுத் துறையனாரே.

4.087   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மற்று வைத்தாய், அங்கு ஓர் மால் ஒரு பாகம்; மகிழ்ந்து உடனே-
உற்று வைத்தாய், உமையாளொடும் கூடும் பரிசு எனவே;
பற்றி வைத்தாய்,-பழனத்து அரசே!-அங்கு ஓர் பாம்பு ஒரு கை
சுற்றி வைத்தாய்; அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே!

4.101   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மற்று இடம் இன்றி மனை துறந்து அல் உணா வல் அமணர்
சொல்-திடம் என்று துரிசுபட்டேனுக்கும் உண்டுகொலோ-
வில்-திடம் வாங்கி, விசயனொடு அன்று ஒரு வேடுவனாய்,
புற்று இடம்கொண்டான்தன் தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?

5.016   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மற்றையார் அறியார்; மழுவாளினார்;
பற்றி ஆட்டி ஓர் ஐந்தலைப்பாம்பு அரைச்
சுற்றியார் அவர்; தூ நெறியால் மிகு
பெற்றியார் அவர்-பேரெயிலாளரே.

5.092   5 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மற்றும் கேண்மின்: மனப் பரிப்பு ஒன்று இன்றிச்
சுற்றும் பூசிய நீற்றொடு, கோவணம்,
ஒற்றை ஏறு, உடையான் அடியே அலால்
பற்று ஒன்று இ(ல்)லிகள் மேல் படைபோகலே!

5.099   5 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மற்று நல்-தவம் செய்து வருந்தில் என்?
பொற்றை உற்று எடுத்தான் உடல் புக்கு இறக்
குற்ற, நல் குரை ஆர் கழல், சேவடி
பற்று இலாதவர்க்குப் பயன் இல்லையே.

6.081   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லான் கண்டாய்; மயிலாடுதுறை இடமா மகிழ்ந்தான் கண்டாய்;
புற்று ஆடு அரவு அணிந்த புனிதன் கண்டாய்; பூந்துருத்திப் பொய் இலியாய் நின்றான் கண்டாய்;
அற்றார்கட்கு அற்றானாய் நின்றான் கண்டாய்; ஐயாறு அகலாத ஐயன் கண்டாய்;
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே.

7.048   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மற்றுப் பற்று எனக்கு இன்றி, நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்;
பெற்(ற்)றலும் பிறந்தேன்; இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன்;
கற்றவர் தொழுது ஏத்தும் சீர்க் கறையூரில் பாண்டிக் கொடுமுடி
நல்-தவா! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே.

7.054   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மற்றுத் தேவரை நினைந்து உனை மறவேன்; நெஞ்சினாரொடு வாழவும் மாட்டேன்;
பெற்றிருந்து பெறா தொழிகின்ற பேதையேன் பிழைத்திட்டதை அறியேன்;
முற்றும் நீ எனை முனிந்திட அடியேன் கடவது என்? உனை நான் மறவேனேல்,
உற்ற நோய் உறு பிணி தவிர்த்து அருளாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே! .

7.058   7 st/nd Thirumurai   Song # 2   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மற்று ஒரு துணை இனி மறுமைக்கும் காணேன்; வருந்தல் உற்றேன்; மறவா வரம்   பெற்றேன்;
சுற்றிய சுற்றமும் துணை என்று கருதேன்; துணை என்று நான் தொழப்பட்ட ஒண்சுடரை,
முத்தியும் ஞானமும் வானவர் அறியா முறைமுறை பலபல நெறிகளும் காட்டிக்
கற்பனை கற்பித்த கடவுளை, அடியேன் கழுமல வள நகர்க் கண்டுகொண்டேனே .

7.069   7 st/nd Thirumurai   Song # 6   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மற்று நான் பெற்றது ஆர் பெற வல்லார்? வள்ளலே! கள்ளமே பேசிக்
குற்றமே செயினும், குணம் எனக் கொள்ளும் கொள்கையால் மிகை பல செய்தேன்;
செற்று மீது ஓடும் திரிபுரம் எரித்த திரு முல்லை வாயிலாய்! அடியேன்
பற்று இலேன்; உற்ற படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே! .

11.009   11 st/nd Thirumurai   Song # 100   நக்கீரதேவ நாயனார்   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி  
மற்றுப் பலிபிதற்ற வேண்டா மடநெஞ்சே
கற்றைச் சடையண்ணல் காளத்தி - நெற்றிக்கண்
ஆரா அமுதின் திருநாமம் அஞ்செழுத்தும்
சோராமல் எப்பொழுதுஞ் சொல்.

12.000   12 st/nd Thirumurai   Song # 39   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
மற்றி தற்குப் பதிகம்வன் றொண்டர்தாம்
புற்றி டத்தெம் புராணர் அருளினால்
சொற்ற மெய்த்திருத் தொண்டத் தொகையெனப்
பெற்ற நற்பதி கம்தொழப் பெற்றதாம்.
12.000   12 st/nd Thirumurai   Song # 144   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
மற்றவன் இசைந்த வார்த்தை
கேட்டவர் வள்ளல் தன்னைப்
பெற்றவர் தம்பால் சென்று
சொன்னபின் பெருகு சிந்தை
உற்றதோர் மகிழ்ச்சி யெய்தி
மணவினை உவந்து சாற்றிக்
கொற்றவர் திருவுக் கேற்பக்
குறித்துநாள் ஓலை விட்டார்.
12.000   12 st/nd Thirumurai   Song # 204   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
மற்றுநீ வன்மை பேசி
வன்றொண்டன் என்னும் நாமம்
பெற்றனை நமக்கு மன்பிற்
பெருகிய சிறப்பின் மிக்க
அர்சனை பாட்டே யாகும்
ஆதலான் மண்மேல் நம்மைச்
சொற்றமிழ் பாடு கென்றார்
தூமறை பாடும் வாயார்.
12.030   12 st/nd Thirumurai   Song # 19   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
மற்றவர் சொன்ன மாற்றம்
கேட்டலும் மனத்தின் வந்த
செற்றமுன் பொங்க உங்கள்
உடற்றுணி யெங்குஞ் சிந்தி
முற்றுநும் உயிரை யெல்லாம்
முதல்விசும் பேற்றிக் கொண்டு
நற்றவர் தம்மைப் போக
விடுவன்என் றெழுந்தார் நல்லோர்.
12.040   12 st/nd Thirumurai   Song # 8   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
மற்ற வர்செய லின்ன தன்மைய
தாக மாலய னானஅக்
கொற்ற ஏனமும் அன்ன முந்தெரி
யாத கொள்கைய ராயினார்
பெற்ற மூர்வதும் இன்றி நீடிய
பேதை யாளுடன் இன்றியோர்
நற்ற வத்தவர் வேட மேகொடு
ஞால முய்ந்திட நண்ணினார்.
12.040   12 st/nd Thirumurai   Song # 14   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
மற்றம் மாற்ற மனைவியார் கூறமுன்
பெற்ற செல்வம் எனப்பெரி துள்மகிழ்ந்
துற்ற காதலி னால்ஒருப் பட்டனர்
சுற்று நீர்வயல் செல்லத்தொ டங்குவார்.
12.050   12 st/nd Thirumurai   Song # 20   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
மற்றவன் கொண்டு போன
வஞ்சனை வேடத் தான்மேல்
செற்றவர் தம்மை நீக்கித் தீ
திலா நெறியில் விட்ட
சொற்றிறங் கேட்க வேண்டிச்
சோர்கின்ற ஆவி தாங்கும்
கொற்றவன் முன்பு சென்றான்
கோமகன் குறிப்பில் நின்றான்.
12.080   12 st/nd Thirumurai   Song # 11   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
மற்றவ ரணைய இப்பால்
வளநக ரதனில் மன்னும்
கொற்றவர் வளவர் தங்கள்
குலப்புகழ்ச் சோழ னார்தம்
பற்றலர் முனைகள் சாய்க்கும்
பட்டவர்த் தனமாம் பண்பு
பெற்றவெங் களிறு கோலம்
பெருகுமா நவமி முன்னாள்.
12.080   12 st/nd Thirumurai   Song # 27   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
மற்றவர் மொழிந்த மாற்றம்
மணிக்கடை காப்போர் கேளாக்
கொற்றவன் தன்பால் எய்திக்
குரைகழல் பணிந்து போற்றிப்
பற்றலர் இலாதாய் நின்பொற்
பட்டமால் யானை வீழச்
செற்றனர் சிலரா மென்று
செப்பினார் பாக ரென்றார்.
12.080   12 st/nd Thirumurai   Song # 55   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
மற்றவர் இனைய தான
வன்பெருந் தொண்டு மண்மேல்
உற்றிடத் தடியார் முன்சென்
றுதவியே நாளும் நாளும்
நற்றவக் கொள்கை தாங்கி
நலமிகு கயிலை வெற்பில்
கொற்றவர் கணத்தின் முன்னாம்
கோமுதல் தலைமை பெற்றார்.
12.090   12 st/nd Thirumurai   Song # 6   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
மற்றவனும் கொற்ற
வடிவாட் படைத்தொழில்கள்
கற்றவர்கள் தன்னில்
கடந்துள்ளார் இல்லையெனும்
பெற்றிமையால் மாநிலத்து
மிக்க பெருமிதம்வந்
துற்றுலகில் தன்னையே
சால மதித்துள்ளான்.
12.090   12 st/nd Thirumurai   Song # 29   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
மற்றவர்தஞ் செய்கை
வடிவாள் ஒளிகாணச்
சுற்றிவரும் வட்டணையில்
தோன்றா வகைகலந்து
பற்றிஅடர்க் கும்பொழுதில்
தானும் படைப்பிழைத்துப்
பொற்றடந்தோள் வீரர்க்
குடைந்து புறகிட்டான்.
12.090   12 st/nd Thirumurai   Song # 41   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
மற்றினிநாம் போற்றுவதென்
வானோர் பிரானருளைப்
பற்றலர்தங் கைவாளால்
பாசம் அறுத்தருளி
உற்றவரை யென்றும்
உடன்பிரியா அன்பருளிப்
பொற்றொடியாள் பாகனார்
பொன்னம் பலமணைந்தார்.
12.100   12 st/nd Thirumurai   Song # 51   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
மற்றவன்தன் மொழிகேட்ட வரைச்சூ ராட்டி
மனமகிழ்ந்திங் கன்போடு வருகின் றேனுக்
கெற்றையினுங் குறிகள்மிக நல்ல வான
இதனாலே உன்மைந்தன் திண்ண னான
வெற்றிவரிச் சிலையோன்நின் அளவி லன்றி
மேம்படுகின் றான்என்று விரும்பி வாழ்த்திக்
கொற்றவன தெய்வங்கள் மகிழ வூட்ட
வேண்டுவன குறைவின்றிக் கொண்டு போனாள்.
12.100   12 st/nd Thirumurai   Song # 93   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
மற்றவர் திண்ண னார்க்கு  
மொழிகின்றார் வழிவந் தாற்ற
உற்றது பசிவந் தெம்மை
உதவிய இதனைக் காய்ச்சிச்
சற்றுநீ அருந்தி யாமும்  
தின்றுதண் ணீர்கு டித்து
வெற்றிகொள் வேட்டைக் காடு  
குறுகுவோம் மெல்ல என்றார்.
12.100   12 st/nd Thirumurai   Song # 172   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
மற்றவர் பிழிந்து வார்த்த
மருந்தினால் திருக்கா ளத்திக்
கொற்றவர் கண்ணிற் புண்ணீர்  
குறைபடா திழியக் கண்டே
இற்றையின் நிலைமைக் கென்னோ
இனிச்செய லென்று பார்ப்பார்
உற்றநோய் தீர்ப்ப தூனுக்
கூனெனும் உரைமுன் கண்டார்.
12.110   12 st/nd Thirumurai   Song # 15   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
மற்றவர் மனைவி யாரும்
மக்களும் பசியால் வாடி
அற்றைநா ளிரவு தன்னில்
அயர்வுறத் துயிலும் போதில்
நற்றவக் கொடிய னார்க்குக்
கனவிடை நாதன் நல்கத்
தெற்றென உணர்ந்து செல்வங்
கண்டபின் சிந்தை செய்வார்.
12.180   12 st/nd Thirumurai   Song # 6   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
மற்றவ்வூர்ப் புறம்பணையின்
வயல்மருங்கு பெருங்குலையில்
சுற்றம்விரும் பியகிழமைத்
தொழிலுழவர் கிளைதுவன்றிப்
பற்றியபைங் கொடிச்சுரைமேற்
படர்ந்தபழங் கூரையுடைப்
புற்குரம்பைச் சிற்றில்பல
நிறைந்துளதோர் புலைப்பாடி.
12.200   12 st/nd Thirumurai   Song # 11   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
மற்றை மறையோன் திருமனைவி
வாய்ந்த மரபின் வந்துதித்தாள்
சுற்றம் விரும்பும் இல்வாழ்க்கைத்
தொழிலாள் உலகில் துணைப்புதல்வற்
பெற்று விளங்குந் தவஞ்செய்தாள்
பெறும்பே றெல்லைப் பயன்பெறுவாள்
பற்றை யெறியும் பற்றுவரச்
சார்பா யுள்ள பவித்திரையாம்.
12.210   12 st/nd Thirumurai   Song # 28   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
மற்றவர்தாம் உயிர்நீப்ப
மனைவியார் மாதினியார்
சுற்றமுடன் மக்களையும்
துகளாக வேநீத்துப்
பெற்றிமையால் உடனென்றும்
பிரியாத உலகெய்தும்
கற்புநெறி வழுவாமல்
கணவனா ருடன்சென்றார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 65   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
மற்றவ்வுரை கேட்டலுமே
மருணீக்கி யார்தாமும்
உற்றபிணி உடல்நடுங்கி
எழுந்துதொழ உயர்தவத்தோர்
கற்றைவே ணியர்அருளே
காணுமிது கழலடைந்தோர்
பற்றறுப்பார் தமைப்பணிந்து
பணிசெய்வீர் எனப்பணித்தார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 108   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
மற்றவர்தம் மொழிகேட்டு
மதிகெட்ட மன்னவனும்
செற்றவனை இனிக்கடியும்
திறமெவ்வா றெனச்செப்ப
உற்றவரு மந்திரசா தகநாங்கள்
ஒழித்திடநின்
கொற்றவயக் களிறெதிரே
விடுவதெனக் கூறினார்.

12.210   12 st/nd Thirumurai   Song # 135   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
மற்றும் இனையன வண்டமிழ்
மாலைகள் பாடிவைகி
வெற்றி மழவிடை வீரட்டர்
பாதம்மிக நினைவில்
உற்றதொர் காதலின் அங்குநின்
றேகிஒன் னார்புரங்கள்
செற்றவர் வாழுந் திருவதி
கைப்பதி சென்றடைவார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 202   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
மற்றவரும் மனமகிழ்ந்து
மனைவியார் மைந்தர்பெருஞ்
சுற்றமுடன் களிகூரத்
தொழுதெழுந்து சூழ்ந்துமொழிக்
கொற்றவரை அமுதுசெயக்
குறைகொள்வார் இறைகொள்ளப்
பெற்றபெருந் தவத்தொண்டர்
திருவுள்ளம் பெறப்பெற்றார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 303   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
மற்றப் பதிகள் முதலான
மருங்குள் ளனவுங் கைதொழுது
பொற்புற் றமைந்த திருப்பணிகள்
செய்து பதிகங் கொடுபோற்றி
உற்ற அருளால் காவிரியை
ஏறி ஒன்னார் புரமெரியச்
செற்ற சிலையார் திருப்பைஞ்ஞீ
லியினைச் சென்று சேர்கின்றார்.
12.240   12 st/nd Thirumurai   Song # 9   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
மற்றவனும் முறைமையினால்
மணம்இசைந்து செலவிடச் சென்
றுற்றவர்கள் உரைகேட்ட
நிதிபதியும் உயர்சிறப்புப்
பெற்றனன் போல் உவந்துதனிப்
பெருமகற்குத் திருமலியுஞ்
சுற்றமுடன் களிகூர்ந்து
வதுவைவினைத் தொழில்பூண்டான்.
12.240   12 st/nd Thirumurai   Song # 22   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
மற்றவர்தாம் போயினபின்
மனைப்பதியா கியவணிகன்
உற்றபெரும் பகலின்கண்
ஓங்கியபேர் இல்எய்திப்
பொற்புறமுன் நீராடிப்
புகுந்தடிசில் புரிந்தயிலக்
கற்புடைய மனையாருங்
கடப்பாட்டில் ஊட்டுவார்.
12.240   12 st/nd Thirumurai   Song # 26   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
மற்றதனைக் கொடுவந்து
மகிழ்ந்திடலும் அயின்றதனில்
உற்றசுவை அமுதினுமேற்
படவுளதா யிடஇதுதான்
முன்தருமாங் கனியன்று
மூவுலகிற் பெறற்கரிதால்
பெற்றதுவே றெங்கென்று
பெய்வளையார் தமைக்கேட்டான்.
12.240   12 st/nd Thirumurai   Song # 47   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
மற்றவர் தம்மை நோக்கி
மானுடம் இவர்தாம் அல்லர்
நற்பெருந் தெய்வ மாதல்
நானறிந் தகன்ற பின்பு

பெற்றஇம் மகவு தன்னைப்
பேரிட்டேன் ஆத லாலே பொற்பதம் பணிந்தேன் நீரும்
போற்றுதல் செய்மின் என்றான்.

12.250   12 st/nd Thirumurai   Song # 18   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
மற்றவரை எதிர்வணங்கி
வாகீசர் எடுத்தருள
அற்றவர்கள் அருநிதியம்
பெற்றார்போல் அருமறையோர்
முற்றவுளங் களிகூர
முன்னின்று கூத்தாடி
உற்றவிருப் புடன்சூழ
ஓடினார் பாடினார்.
12.260   12 st/nd Thirumurai   Song # 16   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
மற்ற வேலையிற் கதிரவன்
மலைமிசை மறைந்தான்
உற்ற ஏவலின் மனைவியார்
ஒருவழி நீங்க
முற்ற வேண்டுவ பழுதுதீர்
பூசனை முடித்துக்
கற்றை வேணியார் தொண்டருங்
கடிமனை புகுந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 16   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மற்றவர்தந் திருமனையார்
வாய்ந்தமறை மரபின்வரு
பெற்றியினார் எவ்வுலகும்
பெறற்கரிய பெருமையினார்
பொற்புடைய பகவதியார்
எனப்போற்றும் பெயருடையார்
கற்புமேம் படுசிறப்பால்
கணவனார் கருத்தமைந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 141   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மற்றதற்குப் பிள்ளையார்
மனமகிழ்வுற் றிசைந்தருளப்
பெற்றவர்தாம் தம்பிரான்
அருளிதுவே யெனப்பேணிச்
சொற்றமிழ்மா லையின்இசைகள்
சுருதியாழ் முறைதொடுத்தே
அற்றைநாட் போலென்றும்
அகலாநண் புடன்அமர்ந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 251   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மற்றநற் பதிவட தளியின் மேவிய
அற்புதர் அடிபணிந் தலர்ந்த செந்தமிழ்ச்
சொற்றொடை பாடிஅங் ககன்று சூழ்மதில்
பொற்பதி வாழ்கொளி புத்தூர் புக்கனர்.
12.280   12 st/nd Thirumurai   Song # 312   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மற்றுவே றொருபரிசால் தவிராமை
மறிவளரும் கையார் பாதம்
பற்றியே வருங்குலத்துப் பான்மையினான்
ஆதலினாற் பரிவு தீரப்
பொற்றொடியைக் கொடுவந்து போர்க்கோலச்
சேவகராய்ப் புரங்கள் மூன்றும்
செற்றவர்தங் கோயிலினுள் கொடுபுகுந்து
திருமுன்பே இட்டு வைத்தான்.
12.280   12 st/nd Thirumurai   Song # 466   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மற்றவர்தம் பெருங்கேண்மை மகிழ்ந்து கொண்டு
மாலயனுக் கரியபிரான் மருவு தானம்
பற்பலவும் சென்றுபணிந் தேத்திப் பாடிப்
பரமர்திருத் தொண்டர்குழாம் பாங்கின் எய்தக்
கற்றவர்வாழ் கடல்நாகைக் காரோ ணத்துக்
கண்ணுதலைக் கைதொழுது கலந்த ஓசைச்
சொற்றமிழ்மா லைகள் பாடிச் சிலநாள் வைகித்
தொழுதகன்றார் தோணிபுரத் தோன்ற லார்தாம்.
12.280   12 st/nd Thirumurai   Song # 481   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மற்றிவனும் வாளரவு தீண்ட மாண்டான்
மறிகடலில் கலங்கவிழ்த்தார் போல நின்றேன்
சுற்றத்தா ரெனவந்து தோன்றி யென்பால்
துயரமெலாம் நீங்கஅருள் செய்தீர் என்னக்
கற்றவர்கள் தொழுதேத்துங் காழி வேந்தர்
கருணையினாற் காரிகையாள் தனக்கு நல்கப்
பற்றியவாள் அரவுவிடம் தீரு மாறு
பணைமருகற் பெருமானைப் பாட லுற்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 484   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மற்றவர்க்கு விடைகொடுத்தங் கமரு நாளில்
மருகல்நக ரினில்வந்து வலிய பாசம்
செற்றபுகழ்ச் சிறுத்தொண்டர் வேண்ட மீண்டும்
செங்காட்டங் குடியிலெழுந் தருள வேண்டிப்
பற்றியெழுங் காதல்மிக மேன்மேற் சென்று
பரமனார் திறத்துன்னிப் பாங்க ரெங்கும்
சுற்றும் அருந் தவரோடும் கோயி லெய்திச்
சுடர்மழுஆண் டவர்பாதந் தொழுவான் புக்கார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 492   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மற்றத் திருப்பதி வைகு நாளில்
வாக்கின் பெருவிறல் மன்ன னார்தாம்
புற்றிடங் கொண்டாரை வந்தி றைஞ்சிப்
பொன்மதில் ஆரூர் புகழ்ந்து போற்றிச்
சிற்றிடைப் பொற்றொடிப் பங்கர் தங்கும்
திருப்புக லூர்தொழச் சிந்தை செய்து
கொற்றவ னாரருள் பெற்ற தொண்டர்
குழாத்துடன் அவ்வூர் குறுக வந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 534   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மற்றவ் வண்பதி அணைந்துவீ
ரட்டத்து மழவிடை யார்கோயில்
சுற்று மாளிகை வலங்கொண்டு
காலனை உதைத்துருட் டியசெய்ய
பொற்சி லம்பணி தாமரை வணங்கிமுன்
போற்றிஉய்ந் தெதிர்நின்று
பற்ற றுப்பவர் சடையுடை
யானெனும் பதிகஇன் னிசைபாடி.
12.280   12 st/nd Thirumurai   Song # 570   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மற்றைநாள் தம்பிரான் கோயில் புக்கு
வாசிதீர்த் தருளும்எனப் பதிகம் பாடிப்
பெற்றபடி நற்காசு கொண்டு மாந்தர்
பெயர்ந்துபோய் ஆவணவீ தியினிற் காட்ட
நற்றவத்தீர் இக்காசு சால நன்று
வேண்டுவன நாந்தருவோம் என்று நல்க
அற்றைநாள் தொடங்கிநாட் கூறு தன்னில்
அடியவரை அமுதுசெய்வித் தார்வ மிக்கார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 575   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மற்றவ்வூர் தொழுதேத்தி மகிழ்ந்து பாடி
மாலயனுக் கரியபிரான் மருவுந் தானம்
பற்பலவும் சென்று பணிந் தேத்திப் பாடிப்
பரவுதிருத் தொண்டர்குழாம் பாங்கின் எய்தக்
கற்றவர்வாழ் தண்டலைநீள் நெறியுள் ளிட்ட
கனகமதில் திருக்களருங் கருதார் வேள்வி
செற்றவர்சேர் பதிபிறவும் சென்று போற்றித்
திருமறைக்காட்டதன் மருங்கு சேர்ந்தா ரன்றே.
12.280   12 st/nd Thirumurai   Song # 583   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மற்றது கண்ட போதே வாக்கின்மன்
னவரை நோக்கிப்
பொற்புறு புகலி மன்னர் போற்றிட
அவரும் போற்றி
அற்புத நிலையி னார்கள் அணிதிரு
மறைக்கா டாளுங்
கொற்றவர் கோயில் வாயில் நேர்வழி
குறுகிப் புக்கார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 610   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மற்றவர் சென்று புக்கு
வளவர்கோன் மகளார் தென்னர்
கொற்றவன் தேவி யாரும்
குலச்சிறை யாரும் ஏவப்
பொற்கழல் பணிய வந்தோம்
எனச்சிலர் புறத்து வந்து
சொற்றனர் என்று போற்றித்
தொழுதுவிண் ணப்பஞ் செய்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 615   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மற்றவர்கட் கருள்புரிந்து பிள்ளை யாரும்
வாகீச முனிவருடன் கூடச் சென்று
பெற்றமுயர்த் தவர்பாதம் பணிந்து போந்து
பெரியதிருக் கோபுரத்துள் இருந்து தென்னா
டுற்றசெயல் பாண்டிமா தேவி யாரும்
உரிமைஅமைச் சரும்உரைத்து விட்ட வார்த்தை
சொற்றனிமன் னவருக்குப் புகலி மன்னர்
சொல்லியெழுந் தருளுதற்குத் துணிந்த போது.
12.280   12 st/nd Thirumurai   Song # 680   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மற்றிவ் வான்பழி மன்னவன்
மாறனை எய்திச்
சொற்றும் என்றுதம் சூழ்ச்சியும்
ஒருபடி துணிவார்
கொற்ற வன்கடை காவலர்
முன்சென்று குறுகி
வெற்றி வேலவற்கு எங்களை
விளம்புவீர் என்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 687   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மற்ற மாமறை மைந்தன்இம்
மருங்கணைந் தானேல்
உற்ற செய்தொழில் யாதுசெய்
கோம்என உரைப்பச்
செற்ற மீக்கொண்ட சிந்தையும்
செய்கையும் உடையோர்
கொற்ற மன்னவன் மொழிக்கெதிர்
குறித்துரை செய்வார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 799   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மற்றவர் சொன்ன வார்த்தை
கேட்டலும் மலய மன்னன்
செற்றத்தால் உரைத்தீர் உங்கள்
செய்கையும் மறந்தீ ரென்று
பற்றிய பொருளின் ஏடு
படர்புனல் வைகை யாற்றில்
பொற்புற விடுவ தற்குப்
போதுக என்று கூற.
12.280   12 st/nd Thirumurai   Song # 852   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மற்றவர் பிள்ளை யார்தம்
மலரடி வணங்கிப் போற்றிக்
கொற்றவன் முதலா யுள்ளோர்
காணமுன் கொணர்ந்த ஏடு
பற்றிய கையி லேந்திப்
பண்பினால் யார்க்குங் காட்ட
அற்றருள் பெற்ற தொண்டர்
அரவொலி எழுந்த தன்றே.
12.280   12 st/nd Thirumurai   Song # 906   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மற்றவர்கள் வெவ்வுரையும் பிள்ளை யார்முன்
வருசின்னப் பெருகொலியும் மன்னுந் தொண்டர்
பொற்புடைய ஆர்ப்பொலியுஞ் செவியினூடு
புடைத்தநா ராசமெனப் புக்க போது
செற்றமிகு முள்ளத்துப் புத்த நந்தி
செயிர்த் தெழுந்து தேரர்குழாஞ் சூழச்சென்று
வெற்றிபுனை சின்னங்கள் வாதி லெம்மை
வென்றன்றோ பிடிப்பதென வெகுண்டு சொன்னான்.
12.280   12 st/nd Thirumurai   Song # 910   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மற்றவர்கள் நிலைமையையும் புத்த நந்தி
வாக்கின்போர் ஏற்றவன்தன் தலையும் மெய்யும்
அற்றுவிழ அத்திரவாக் கதனால் அன்பர்
அறுத்ததுவுங் கண்டஅர னடியார் எல்லாம்
வெற்றிதரும் பிள்ளையார் தமக்குச் சென்று
விண்ணப்பஞ் செயவெதிர்ந்த விலக்கு நீங்க
உற்றவிதி அதுவேயாம் அரஎன் றெல்லாம்
ஓதுகென அவ்வொலிவான் உற்ற தன்றே.
12.280   12 st/nd Thirumurai   Song # 1114   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மற்றவர் தமக்குவண் புகலி வாணர்நீர்
பெற்றபெண் விடத்தினால் வீந்த பின்னையான்
கற்றைவார் சடையவர் கருணை காண்வர
உற்பவிப் பித்தலால் உரைத காதென.
12.280   12 st/nd Thirumurai   Song # 1157   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மற்றவர்தம் மொழிகேட்டு
மாதவத்தின் கொழுந்தனையார்
சுற்றமுறு பெரும்பாசத்
தொடர்ச்சிவிடு நிலைமையராய்ப்
பெற்றம்உயர்த் தவரருள்முன்
பெற்றதனால் இசையாது
முற்றியதா யினுங்கூடா
தென்றவர்முன் மொழிந்தருள.
12.280   12 st/nd Thirumurai   Song # 1205   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மற்றிவர் மிடைந்து செல்லும்
மங்கல வனப்பின் காட்சி
முற்றஇத் தலத்தி னுள்ளோர்
மொய்த்துடன் படரும் போதில்
அற்புத நிகழ்ச்சி எய்த
அணைதலால் மணமேற் செல்லும்
பொற்பமை மணத்தின் சாயை
போன்றுமுன் பொலியச் செல்ல.
12.290   12 st/nd Thirumurai   Song # 130   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மற்றதனின் வடகீழ்பால்
கரைமீது வந்தருளி
முற்றிழையார் தமைநிறுத்தி
முனைப்பாடித் திருநாடர்
கற்றைவார் சடையாரைக்
கைதொழுது குளத்தில்இழிந்து
அற்றைநாள் இட்டெடுப்பார்
போல்அங்குத் தடவுதலும்.
12.290   12 st/nd Thirumurai   Song # 243   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மற்றவர்தம் உரைகொண்டு
வன்தொண்டர் நிலைமையினை
ஒற்றிநகர் அமர்ந்தபிரான்
உணர்ந்தருளி யுரைசெய்வார்
பொற்றொடியா யுனையிகந்து
போகாமைக் கொருசபதம்
அற்றமுறு நிலைமையினால்
அவன்செய்வா னெனவருளி.
12.290   12 st/nd Thirumurai   Song # 252   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மற்றவருங் கைகுவித்து
மாலயனுக் கறிவரியீர்
அற்றமெனக் கருள்புரிந்த
அதனில்அடி யேனாகப்
பெற்றதியான் எனக்கண்கள்
பெருந்தாரை பொழிந்திழிய
வெற்றிமழ விடையார்தம்
சேவடிக்கீழ் வீழ்ந்தெழுந்தார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 318   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மற்ற மாற்றங் கேட்டழிந்த
மனத்த ராகி வன்தொண்டர்
உற்ற இதனுக் கினியென்னோ
செயலேன் றுயர்வார் உலகியல்பு
கற்ற மாந்தர் சிலர் தம்மைக்
காதற் பரவை யார்கொண்ட
செற்ற நிலைமை யறிந்தவர்க்குத்
தீர்வு சொல்லச் செலவிட்டார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 393   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மற்றவன் தீர்க்கில் தீரா
தொழிந்தெனை வருத்தல் நன்றால்
பெற்றம்மே லுயர்த்தீர் செய்யும்
பெருமையை அறிந்தார் யாரே
உற்றவன் தொண்டற் கேயாம்
12.290   12 st/nd Thirumurai   Song # 397   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மற்றவன் இங்கு வந்து
தீர்ப்பதன் முன்நான் மாயப்
பற்றிநின் றென்னை நீங்காப்
பாதகச் சூலை தன்னை
உற்றஇவ் வயிற்றி னோடும்
கிழிப்பன்என் றுடைவாள் தன்னால்
செற்றிட வுயிரி னோடும்
சூலையுந் தீர்ந்த தன்றே.
12.290   12 st/nd Thirumurai   Song # 405   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மற்றவர் வணங்கி வீழ
வாளினை மாற்றி ஏயர்
கொற்றவ னாரும் நம்பி
குரைகழல் பணிந்து வீழ்ந்தார்
அற்றைநாள் நிகழ்ந்த இந்த
அதிசயங் கண்டு வானோர்
பொற்றட மலரின் மாரி
பொழிந்தனர் புவனம் போற்ற.
12.300   12 st/nd Thirumurai   Song # 2   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மற்றவர்தாம் அணிமாதி
வருஞ்சித்தி பெற்றுடையார்
கொற்றவனார் திருக்கயிலை
மலைநின்றுங் குறுமுனிபால்
உற்றதொரு கேண்மையினால்
உடன்சிலநாள் உறைவதற்கு
நற்றமிழின் பொதியமலை
நண்ணுதற்கு வழிக்கொண்டார்.
12.300   12 st/nd Thirumurai   Song # 12   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மற்றவன்றன் உடம்பினைஅக்
கோக்குலங்கள் வந்தணைந்து
சுற்றிமிகக் கதறுவன
சுழல்வனமோப் பனவாக
நற்றவயோ கிகள்காணா
நம்பரரு ளாலேயா
உற்றதுய ரிவைநீங்க
ஒழிப்பன்என வுணர்கின்றார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 161   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
மற்றவரும் பணிந்திசைந்தே
மந்திரிகள் தமையழைத்துப்
பொற்புநிறை தொன்னகரில்
இற்றைக்கு முன்புகுந்த
நற்பெரும்பண் டாரநா
னாவருக்க மானவெலாம்
பற்பலவாம் ஆளின்மிசை
ஏற்றிவரப் பண்ணும்என.
12.370   12 st/nd Thirumurai   Song # 163   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
மற்றவற்றின் பரப்பெல்லாம்
வன்றொண்டர் பரிசனத்தின்
முற்படவே செலவிட்டு
முனைப்பாடித் திருநாடர்
பொற்பதங்கள் பணிந்தவரைத்
தொழுதெடுத்துப் புனையலங்கல்
வெற்பியர்தோ ளுறத்தழுவி
விடையளித்தார் வன்றொண்டர்.
12.420   12 st/nd Thirumurai   Song # 6   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
மற்றவர்தம் வடிவிருந்த
படிகண்டு மருங்குள்ளார்
உற்றகஇழ்ச் சியராகி
ஒதுங்குவார் தமைக்கண்டு
கொற்றவனார் எதிர்சென்று
கைகுவித்துக் கொடுபோந்தப்
பெற்றியினார் தமைமிகவுங்
கொண்டாடிப் பேணுவார்.
12.440   12 st/nd Thirumurai   Song # 2   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
மற்றப் பதியின் இடைவாழும்
வணிகர் குலத்து வந்துதித்தார்
கற்றைச் சடையார் கழற்காத
லுடனே வளர்ந்த கருத்துடையார்
அற்றைக் கன்று தூங்கானை
மாடத்து அமர்ந்தார் அடித்தொண்டு
பற்றிப் பணிசெய் கலிக்கம்பர்
என்பார் மற்றோர் பற்றில்லார்.
12.450   12 st/nd Thirumurai   Song # 16   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
மற்றவர்தம் முன்னாக
மழவிடைமேல் எழுந்தருள
உற்றவூ றதுநீங்கி
ஒளிவிளங்க வுச்சியின்மேல்
பற்றியஞ் சலியினராய்
நின்றவரைப் பரமர்தாம்
பொற்புடைய சிவபுரியில்
பொலிந்திருக்க அருள்புரிந்தார்.
12.520   12 st/nd Thirumurai   Song # 5   சேக்கிழார்   கறைக் கண்டன் சருக்கம்  
மற்றிந் நிலைமை பன்னெடுநாள்
வையம் நிகழச் செய்துவழி
உற்ற அன்பின் செந்நெறியால்
உமையாள் கணவன் திருவருளால்
பெற்ற சிவலோ கத்தமர்ந்து
பிரியா வுரிமை மருவினார்
முற்ற வுழந்த முனையடுவார்
என்னு நாமம் முன்னுடையார்.
12.570   12 st/nd Thirumurai   Song # 5   சேக்கிழார்   கடல் சூழ்ந்த சருக்கம்  
மற்றவர்தாம் போயினபின்
சிலநாளில் வற்காலம்
உற்றலும்அச் சுற்றத்தார்
உணவின்றி இறப்பதனில்
பெற்றமுயர்த் தவர்அமுது
படிகொண்டா கிலும்பிழைத்துக்
குற்றமறப் பின்கொடுப்போம்
எனக்கூடு குலைத்தழிந்தார்.
12.690   12 st/nd Thirumurai   Song # 3   சேக்கிழார்   மன்னிய சீர்ச் சருக்கம்  
மற்றவர் கருவிப் பாடல்
மதுரைநீ டால வாயில்
கொற்றவன் திருவுள் ளத்துக்
கொண்டுதன் தொண்டர்க் கெல்லாம்
அற்றைநாள் கனவில் ஏவ
அருட்பெரும் பாண னாரைத்
தெற்றினார் புரங்கள் செற்றார்
திருமுன்பு கொண்டு புக்கார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list