சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter: ( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் மாறி
மாறி
மாறிப்
மாறில்ஊன்
மாறிலா
மாறில்பெருஞ்
மாறில்
8.105.04
8 st/nd Thirumurai
Song # 33
மாணிக்க வாசகர்
திருவாசகம்
மாறி நின்று எனைக் கெடக் கிடந்தனையை, எம் மதி இலி மட நெஞ்சே!
தேறுகின்றிலம் இனி உனை; சிக்கெனச் சிவன் அவன் திரள் தோள்மேல்
நீறு நின்றது கண்டனை; ஆயினும், நெக்கிலை; இக் காயம்
கீறுகின்றிலை; கெடுவது உன் பரிசு இது; கேட்கவும் கில்லேனே.
8.122
8 st/nd Thirumurai
Song # 1
மாணிக்க வாசகர்
திருவாசகம்
மாறி நின்று, என்னை மயக்கிடும் வஞ்சப் புலன் ஐந்தின் வழி அடைத்து; அமுதே
ஊறி நின்று; என் உள் எழு பரஞ்சோதி! உள்ளவா காண வந்தருளாய்:
தேறலின் தெளிவே! சிவபெருமானே! திருப்பெருந்துறை உறை சிவனே!
ஈறு இலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே! என்னுடை அன்பே!
10.316
10 st/nd Thirumurai
Song # 4
திருமூலர்
திருமந்திரம்
மாறி வரும்இரு பால்மதி வெய்யவன்
ஏறி இழியும் இடைபிங் கலையிடை
ஊறும் உயிர்நடு வேஉயிர் உக்கிரம்
தேறி அறிமின் தெரிந்து தெளிந்தே.
11.009
11 st/nd Thirumurai
Song # 25
நக்கீரதேவ நாயனார்
கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி
மாறிப் பிறந்து வழியிடை யாற்றிடை
ஏறி யிழியும் இதுவல்லால் தேறித்
திருக்கயிலை ஏத்தீரேல் சேமத்தால் யார்க்கும்
இருக்கையிலை கண்டீர் இனிது.
11.038
11 st/nd Thirumurai
Song # 49
நம்பியாண்டார் நம்பி
ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்
மாறி லாத பொடிநீ
றேறு கோல வடிவும்
வம்பு பம்பு குழலும்
துங்க கொங்கை இணையும்
ஊறி யேறு பதிகத்
தோசை நேச நுகர்வும்
ஒத்து கித்து நடையும்
சித்த பத்தி மிகையும்
வீற தேறும் வயல்சூழ்
காழி ஞான பெருமான்
வென்றி துன்று கழலின்
ஒன்றி நின்ற பணியும்
தேறல் போலும் மொழியும்
சேல்கள் போலும் விழியும்
சிந்தை கொண்ட பரிசும்
நன்றி மங்கை தவமே. 30
பதிக வகை: அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
12.100
12 st/nd Thirumurai
Song # 162
சேக்கிழார்
இலை மலிந்த சருக்கம்
மாறில்ஊன் அமுதும் நல்ல
மஞ்சனப் புனலுஞ் சென்னி
ஏறுநாண் மலரும் வெவ்வே
றியல்பினில் அமைத்துக் கொண்டு
தேறுவார்க் கமுத மான
செல்வனார் திருக்கா ளத்தி
ஆறுசேர் சடையார் தம்மை
அணுகவந் தணையா நின்றார்.
12.110
12 st/nd Thirumurai
Song # 33
சேக்கிழார்
இலை மலிந்த சருக்கம்
மாறிலா மகிழ்ச்சி பொங்க
எதிர்கொண்டு மனையில் எய்தி
ஈறிலா அன்பின் மிக்கார்க்
கின்னமு தேற்கும் ஆற்றால்
ஆறுநற் சுவைகள் ஓங்க
அமைத்தவர் அருளே அன்றி
நாறுபூங் கொன்றை வேணி
நம்பர்தம் அருளும் பெற்றார்.
12.120
12 st/nd Thirumurai
Song # 9
சேக்கிழார்
இலை மலிந்த சருக்கம்
மாறில்பெருஞ் செல்வத்தின்
வளம்பெருக மற்றதெலாம்
ஆறுலவுஞ் சடைக்கற்றை
அந்தணர்தம் அடியாராம்
ஈறில்பெருந் திருவுடையார்
உடையாரென் றியாவையுநேர்
கூறுவதன் முன்னவர்தம்
குறிப்பறிந்து கொடுத்துள்ளார்.
12.190
12 st/nd Thirumurai
Song # 24
சேக்கிழார்
மும்மையால் உலகாண்ட சருக்கம்
மாறில் வண்பகட் டேர்பல நெருங்கிட வயல்கள்
சேறு செய்பவர் செந்நெலின் வெண்முளை சிதறி
நாறு வார்ப்பவர் பறிப்பவர் நடுபவ ரான
வேறு பல்வினை யுடைப்பெருங் கம்பலை மிகுமால்.
12.190
12 st/nd Thirumurai
Song # 69
சேக்கிழார்
மும்மையால் உலகாண்ட சருக்கம்
மாறி லாதஇப் பூசனை யென்றும்
மன்ன எம்பிரான் மகிழ்ந்துகொண் டருளி
ஈறி லாதஇப் பதியினு ளெல்லா
அறமும் யான்செய அருள்செய வேண்டும்
வேறு செய்வினை திருவடிப் பிழைத்தல்
ஒழிய இங்குளார் வேண்டின செயினும்
பேறு மாதவப் பயன்கொடுத் தருளப்
பெறவும் வேண்டும்என் றனள்பிறப் பொழிப்பாள்.
12.280
12 st/nd Thirumurai
Song # 1074
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
மாறில் வண்பெரு வணிகரும்
தொண்டரும் மலர்ந்த
நீறு சேர்தவக் குழாத்தினை
நீளிடைக் கண்டே
ஆறு சூடினார் திருமக
னார்அணைந் தாரென்
ஈறி லாததோர் மகிழ்ச்சியி
னால்விழுந் திறைஞ்ச.
12.280
12 st/nd Thirumurai
Song # 1182
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
மாறி லாநிறை வளந்தரு
புகலியின் மணமீக்
கூறு நாளின்முன் னாளினில்
வேதியர் குழாமும்
நீறு சேர்திருத் தொண்டரும்
நிகரிலா தவருக்
காறு சூடினார் அருள்திருக்
காப்புநா ணணிவார்.
This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list