சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter: ( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் மிக்க
மிக்கார்
மிக்க
மிக்கபெருங்
மிக்கதிருத்
மிக்குயர்ந்த
மிக்கபுனல்
மிக்கெழும்அன்
மிக்கு
மிக்கவர்
மிக்கானை,
1.054
1 st/nd Thirumurai
Song # 6
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மிக்கார் வந்து விரும்பிப் பலி இடத்
தக்கார் தம் மக்களீர் என்று
உட்காதார் உளரோ? திரு ஓத்தூர்
நக்கீரே! அருள் நல்குமே!
2.074
2 st/nd Thirumurai
Song # 9
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மிக்க கமலத்து அயன் ஊர், விளங்கு புறவம், சண்பை,
காழி, கொச்சை,
தொக்க பொழில் கழுமலம், தூத் தோணிபுரம், பூந்தராய்,
சிலம்பன் சேர் ஊர்,
மைக் கொள் பொழில் வேணுபுரம், மதில் புகலி, வெங்குரு
வல் அரக்கன் திண்தோள்
ஒக்க இருபதும் முடிகள் ஒருபதும் ஈடு அழித்து உகந்த
எம்மான் ஊரே.
2.095
2 st/nd Thirumurai
Song # 4
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மிக்க காலனை வீட்டி, மெய் கெடக் காமனை விழித்து
புக்க ஊர் இடு பிச்சை உண்பது, பொன் திகழ் கொன்றை,
தக்க நூல் திகழ் மார்பில் தவள வெண் நீறு அணிந்து,
ஆமை
அக்கின் ஆரமும் பூண்ட அடிகளுக்கு இடம் அரசிலியே.
3.059
3 st/nd Thirumurai
Song # 4
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மிக்கு அரை தாழ வேங்கை உரி ஆர்த்து, உமையாள் வெருவ,
அக்கு, அரவு, ஆமை, ஏனமருப்போடு, அவை பூண்டு, அழகு ஆர்
கொக்கரையோடு பாடல் உடையான்; குடமூக்கு இடமா,
எக்கரையாரும் ஏத்த, இருந்தான்; அவன் எம் இறையே.
3.094
3 st/nd Thirumurai
Song # 5
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மிக்கவர் தொழுது எழு வெங்குரு மேவிய
அக்கினொடு அரவு அசைத்தீரே;
அக்கினொடு அரவு அசைத்தீர்! உமது அடி இணை
தக்கவர் உறுவது தவமே.
5.075
5 st/nd Thirumurai
Song # 4
திருநாவுக்கரசர்
தேவாரம்
மிக்கு அனைத்துத் திசையும் அருவிகள்
புக்குக் காவிரி போந்த புனல் கரை,
கொக்கு இனம் பயில் சோலை, குரக்குக்கா
நக்கனை நவில்வார் வினை நாசமே.
6.043
6 st/nd Thirumurai
Song # 5
திருநாவுக்கரசர்
தேவாரம்
மிக்கானை, வெண்நீறு சண்ணித்தானை, விண்டார் புரம் மூன்றும் வேவ நோக்கி
நக்கானை, நால் மறைகள் பாடினானை, நல்லார்கள் பேணிப் பரவ நின்ற
தக்கானை, தண் தாமரைமேல் அண்ணல் தலை கொண்டு மாத்திரைக்கண் உலகம் எல்லாம்
புக்கானை, புண்ணியனை, புனிதன் தன்னை, பொய் இலியை, பூந்துருத்திக் கண்டேன், நானே.
6.050
6 st/nd Thirumurai
Song # 7
திருநாவுக்கரசர்
தேவாரம்
மிக்கானை, குறைந்து அடைந்தார் மேவலானை, வெவ்வேறு ஆய் இரு மூன்று சமயம் ஆகிப்
புக்கானை, எப்பொருட்கும் பொது ஆனானை, பொன்னுலகத்தவர் போற்றும் பொருளுக்கு எல்லாம்
தக்கானை, தான் அன்றி வேறு ஒன்று இல்லாத் தத்துவனை, தடவரையை நடுவு செய்த
திக்கானை, திரு வீழிமிழலையானை, சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே.
7.011
7 st/nd Thirumurai
Song # 7
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
மிக்கு இறை ஏயவன் துன் மதியாய் விட,
நக்கு இறையே விரலால் இற ஊன்றி;
நெக்கு இறையே நினைவார் தனி நெஞ்சம்
புக்கு உறைவான்; உறை பூவணம் ஈதோ! .
10.916
10 st/nd Thirumurai
Song # 9
திருமூலர்
திருமந்திரம்
மிக்கார் அமுதுண்ண நஞ்சுண்ட மேலவன்
தக்கார் உரைத்த தவநெறி யேசென்று
புக்கால் அருளும் பொன்னுரை ஞானத்தை
நக்கார்க் கழல்வழி நாடுமின் நீரே.
11.004
11 st/nd Thirumurai
Song # 58
காரைக்கால் அம்மையார்
அற்புதத் திருவந்தாதி
மிக்க முழங்கெரியும் வீங்கிய பொங்கிருளும்
ஒக்க உடனிருந்தால் ஒவ்வாதே - செக்கர்போல்
ஆகத்தான் செஞ்சடையும் ஆங்கவன்தன் பொன்னுருவில்
பாகத்தாள் பூங்குழலும் பண்பு.
12.280
12 st/nd Thirumurai
Song # 1014
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
மிக்கபெருங் காதலுடன் தொண்டர் சூழ
மென்புனல்நாட் டினையகன்று வெற்பும் கானும்
தொக்கபெரு வன்புலக்கா னடைந்து போகிச்
சூலகபா லக்கரத்துச் சுடரு மேனி
முக்கண்முதல் தலைவனிட மாகி யுள்ள
முகில்நெருங்கு காரிகரை முன்னர்ச் சென்று
புக்கிறைஞ்சிப் போற்றிசைத்தப் பதியில் வைகிப்
பூதியரோ டுடன்மகிழ்ந்தார் புகலி வேந்தர்.
12.280
12 st/nd Thirumurai
Song # 1031
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
மிக்கதிருத் தொண்டர்தொழு தணையத் தாமும்
தொழுதிழிந்து விடையவனென் றெடுத்துப் பாடி
மைக்குலவு கண்டத்தார் மகிழுங் கோயில்
மன்னுதிருக் கோபுரத்து வந்து தாழ்ந்து
தக்கதிருக் கடைக்காப்புச் சாற்றித் தேவர்
தம்பெருமான் திருவாயி லூடு சென்று
புக்கருளி வலங்கொண்டு புனிதர் முன்பு
போற்றெடுத்துப் படியின்மேற் பொருந்த வீழ்ந்தார்.
12.280
12 st/nd Thirumurai
Song # 1122
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
மிக்குயர்ந்த கோபுரத்தை
வணங்கிவியன் திருமுன்றில்
புக்கருளிக் கோயிலினைப்
புடைவலங்கொண் டுள்ளணைந்து
கொக்கிறகு மதிக்கொழுந்தும்
குளிர்புனலும் ஒளிர்கின்ற
செக்கர்நிகர் சடைமுடியார்
சேவடியின் கீழ்த்தாழ்ந்தார்.
12.280
12 st/nd Thirumurai
Song # 1163
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
மிக்கதிருத் தொண்டர்களும்
வேதியரும் உடன்ஏகத்
திக்குநிகழ் திருநல்லூர்ப்
பெருமணத்தைச் சென்றெய்தத்
தக்கபுகழ் நம்பாண்டார்
நம்பிதாம் அதுகேட்டுச்
செக்கர்முடிச் சடையார்தம்
திருப்பாதம் தொழுதெழுவார்.
12.290
12 st/nd Thirumurai
Song # 299
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
மிக்கபுனல் தீர்த்தத்தின்
முன்னணைந்து வேதமெலாந்
தொக்கவடி வாயிருந்த
துருத்தியார் தமைத்தொழுது
புக்கதனில் மூழ்குதலும்
புதியபிணி யதுநீங்கி
அக்கணமே மணியொளிசேர்
திருமேனி யாயினார்.
12.360
12 st/nd Thirumurai
Song # 32
சேக்கிழார்
வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
மிக்கெழும்அன் பர்கள்அன்பு
திருமேனி விளைந்ததென
அக்குமணி யாற்சன்ன
வீரமும்ஆ ரமும்வடமும்
கைக்கணிதோள் வளைச்சரியும்
அரைக்கடிசூத் திரச்சரியும்
தக்கதிருக் காற்சரியுஞ்
சாத்தியவொண் சுடர்தயங்க.
12.370
12 st/nd Thirumurai
Song # 3
சேக்கிழார்
வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
மிக்க செல்வ மனைகள்தொறும்
விழையும் இன்பம் விளங்குவன
பக்கம் நெருங்கு சாலைதொறும்
பயில்சட் டறங்கள் பல்குவன
தக்க அணிகொள் மடங்கள்தொறும்
சைவ மேன்மை சாற்றுவன
தொக்க வளங்கொள் இடங்கள்தொறும்
அடங்க நிதியந் துவன்றுவன.
This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list