சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter: ( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் முத்தன
முத்தன
முத்தன்,
முத்தனே!
முத்தனை,
2.034
2 st/nd Thirumurai
Song # 1
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
முத்தன், மிகு மூஇலைநல்வேலன், விரி நூலன்,
அத்தன், எமை ஆள் உடைய அண்ணல், இடம் என்பர்
மைத் தழை பெரும் பொழிலின் வாசம் அது வீச,
பத்தரொடு சித்தர் பயில்கின்ற பழுவூரே.
2.082
2 st/nd Thirumurai
Song # 4
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
முத்தன், சில் பலிக்கு ஊர்தொறும் முறை முறை திரியும்
பித்தன், செஞ்சடைப் பிஞ்ஞகன், தன் அடியார்கள்
சித்தன் மாளிகை செழு மதி தவழ் பொழில் தேவூர்
அத்தன்; சேவடி அடைந்தனம், அல்லல் ஒன்று இலமே.
5.013
5 st/nd Thirumurai
Song # 4
திருநாவுக்கரசர்
தேவாரம்
முத்தனே! முதல்வா! முகிழும் முளை
ஒத்தனே! ஒருவா! உரு ஆகிய
சித்தனே! திரு வீழிமிழலையுள்
அத்தனே!-அடியேனைக் குறிக்கொளே!
8.129
8 st/nd Thirumurai
Song # 8
மாணிக்க வாசகர்
திருவாசகம்
முத்தனே! முதல்வா! முக்கணா! முனிவா! மொட்டு அறா மலர் பறித்து, இறைஞ்சி,
பத்தியாய் நினைந்து, பரவுவார் தமக்குப் பர கதி கொடுத்து, அருள்செய்யும்
சித்தனே! செல்வத் திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவிய சீர்
அத்தனே! அடியேன் ஆதரித்து அழைத்தால், அதெந்துவே?' என்று, அருளாயே!
8.142
8 st/nd Thirumurai
Song # 10
மாணிக்க வாசகர்
திருவாசகம்
முத்தனை, முதல் சோதியை, முக் கண் அப்பனை, முதல் வித்தினை,
சித்தனை, சிவலோகனை, திரு நாமம் பாடித் திரிதரும்
பத்தர்காள்! இங்கே, வம்மின், நீர்; உங்கள் பாசம் தீரப் பணிமினோ;
சித்தம் ஆர்தரும் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, திகழுமே.!
11.034
11 st/nd Thirumurai
Song # 90
நம்பியாண்டார் நம்பி
ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி
முத்தன வெண்ணகை யார்மயல்
மாற்றி, முறைவழுவா(து)
எத்தனை காலம்நின்று ஏத்து
மவரினு மென்பணிந்த
பித்தனை, யெங்கள் பிரானை,
யணைவ தெளிதுகண்டீர்;
அத்தனை, ஞானசம் பந்தனைப்
பாதம் அடைந்தவர்க்கே.
This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list