சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் மேவி
மேவிய     மேவி     மேவியஅத்     மேவியசீ     மேவில்     மேவித்து     மேவியந்    
2.007   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மேவில் ஒன்றர், விரிவுஉற்ற இரண்டினர், மூன்றும் ஆய்
நாவில் நாலர், உடல் அஞ்சினர், ஆறர், ஏழ் ஓசையர்,
தேவில் எட்டர் திரு வாஞ்சியம் மேவிய செல்வனார்;
பாவம் தீர்ப்பர், பழி போக்குவர், தம் அடியார்கட்கே.

4.087   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மேவித்து நின்று விளைந்தன, வெந்துயர் துக்கம் எல்லாம்;
ஆவித்து நின்று கழிந்தன, அல்லல்; அவை அறுப்பான்
பாவித்த பாவனை நீ அறிவாய்;-பழனத்து அரசே!-
கூவித்துக் கொள்ளும் தனை அடியேனைக் குறிக்கொள்வதே!

8.211   8 st/nd Thirumurai   Song # 7   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
மேவியந் தோலுடுக் குந்தில்லை
   யான்பொடி மெய்யிற்கையில்
ஓவியந் தோன்றுங் கிழிநின்
   னெழிலென் றுரையுளதால்
தூவியந் தோகையன் னாயென்ன
   பாவஞ்சொல் லாடல்செய்யான்
பாவியந் தோபனை மாமட
   லேறக்கொல் பாவித்ததே

10.408   10 st/nd Thirumurai   Song # 41   திருமூலர்   திருமந்திரம்  
மேவிய மண்டலம் மூன்றுடன் கீழ்எரி
தாவிய நற்பதத் தண்மதி அங்கதிர்
மூவருங் கூடி முதல்வியாய் முன்னிற்பர்
ஓவினும் மேலிடும் உள்ளொளி ஆமே.

10.412   10 st/nd Thirumurai   Song # 8   திருமூலர்   திருமந்திரம்  
மேவிய சக்கர மீது வலத்திலே
கோவை யுடைய குரோம்சிரோம் என்றிட்டுத்
தாவில் இரீங்காரத் தால்சக் கரஞ்சூழ்ந்து
பூவை புவனா பதியைப்பின் பூசியே.

10.511   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
மேவிய சற்புத் திரமார்க்க மெய்த்தொழில்
தாவிப்ப தாம் சக மார்க்கம் சகத்தொழில்
ஆவ திரண்டும் அகன்று சகமார்க்கத்
தேவியோ டொன்றல் சன் மார்க்கந் தெளிவதே.

10.707   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
மேவி யெழுகின்ற செஞ்சுட ரூடுசென்(று)
ஆவி யெழுமள வன்றே உடல்உற
மேவப் படுவதும் விட்டு நிகழ்வதும்
பாவித் தடக்கிற் பரகதி தானே. 8,

10.712   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
மேவிய ஞானத்தின் மிக்கிடின் மெய்ப்பரன்
ஆவயின் ஞான நெறிநிற்றல் அற்சனை
ஓவற உட்பூ சனைசெய்யில் உத்தமம்
சேவடி சேரல் செயலறல் தானே.

10.729   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிர்ஒன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிர மாயினால்
ஆவியின் கூறது நூறா யிரத்தொன்றே.

10.804   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
மேவிய அந்தன் விழிகட் குருடனாம்
ஆவயின் முன்அடிக் காணும் அதுகண்டு
மேவும் தடிகொண்டு சொல்லும் விழிபெற
மூவயின் ஆன்மா முயலுங் கருமமே.

10.813   10 st/nd Thirumurai   Song # 41   திருமூலர்   திருமந்திரம்  
மேவிய பொய்க்கிரி ஆட்டும் வினையெனப்
பாவிய பூதங்கொண் டாட்டிப் படைப்பாதிப்
பூவியல் கூட்டத்தால் போதம் புரிந்தருள்
ஆவியை ஆட்டும் அரன்அரு ளாமே.

11.028   11 st/nd Thirumurai   Song # 13   பட்டினத்துப் பிள்ளையார்   திருவிடைமருதூர் மும்மணிக்கோவை  
மேவிய புன்மயிர்த் தொகையோ அம்மயிர்
பாவிய தோலின் பரப்போ தோலிடைப்
புகவிட்டுப் பொதிந்த புண்ணோ புண்ணிடை
ஊறும் உதிரப் புனலோ கூறுசெய்
திடையிடை நிற்கும் எலும்போ எலும்பிடை
முடைகெழு மூளை விழுதோ வழுவழுத்து
உள்ளிடை ஒழுகும் வழும்போ மெள்ளநின்
றூரும் புழுவின் ஒழுங்கோ நீரிடை
வைத்த மலத்தின் குவையோ வைத்துக்
கட்டிய நரம்பின் கயிறோ உடம்பிற்குள்

பிரியா தொறுக்கும் பிணியோ தெரியா
தின்ன தியானென் றறியேன் என்னை
ஏதினுந் தேடினன் யாதினுங் காணேன்
முன்னம்
வரைத்தனி வில்லால் புரத்தைஅழல் ஊட்டிக்

கண்படை யாகக் காமனை ஒருநாள்
நுண்பொடி யாக நோக்கியண் டத்து
வீயா அமரர் வீயவந் தெழுந்த
தீவாய் நஞ்சைத் திருவமு தாக்கி
இருவர் தேடி வெருவர நிமிர்ந்து
பாலனுக் காகக் காலனைக் காய்ந்து
சந்தன சரள சண்பக வகுள
நந்தன வனத்திடை ஞாயிறு வழங்காது
நவமணி முகிழ்த்த புதுவெயில் எறிப்ப
எண்ணருங் கோடி இருடிகணங் கட்குப்
புண்ணியம் புரக்கும் பொன்னி சூழ்ந்த
திருவிடை மருத பொருவிடைப் பாக
மங்கை பங்க கங்கைநா யகநின்
தெய்வத் திருவருள் கைவந்து கிடைத்தலின்
மாயப் படலங் கீறித் தூய

ஞான நாட்டம் பெற்றபின் யானும்
நின்பெருந் தன்மையுங் கண்டேன் காண்டலும்
என்னையுங் கண்டேன் பிறரையுங் கண்டேன்
நின்னிலை அனைத்தையும் கண்டேன் என்னே
நின்னைக் காணா மாந்தர்

தம்மையுங் காணாத் தன்மை யோரே.

12.210   12 st/nd Thirumurai   Song # 172   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
மேவிய பணிகள் செய்து
விளங்குநாள் வேட்க ளத்துச்
சேவுயர் கொடியார் தம்மைச்
சென்றுமுன் வணங்கிப் பாடிக்
காவியங் கண்டர் மன்னுந்
திருக்கழிப் பாலை தன்னில்
நாவினுக் கரசர் சென்று
நண்ணினார் மண்ணோர் வாழ.

12.280   12 st/nd Thirumurai   Song # 422   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மேவி அங்குறை நாளினில்
வேள்வி செய்வதனுக்
காவ தாகிய காலம்வந்
தணைவுற அணைந்து
தாவில் சண்பையர் தலைவர்க்குத்
தாதையார் தாமும்
போவ தற்கரும் பொருள்பெற
எதிர்நின்று புகன்றார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 110   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மேவிய காதல் தொண்டு
விரவுமெய் விருத்தி பெற்றார்
ஆவியின் விருத்தி யான
அந்தணர் புலியூர் மன்றில்
காவியங் கண்டர் கூத்துக்
கண்டுகும் பிடுவன் என்று
வாவிசூழ் தில்லை மூதூர்
வழிக்கொள்வான் வணங்கிப் போந்தார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 170   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மேவியஅத் தொண்டர்குழாம்
மிடைந்தரவென் றெழுமோசை
மூவுலகும் போயொலிப்ப
முதல்வனார் முன்பெய்தி
ஆவியினு மடைவுடையா
ரடிக்கமலத் தருள்போற்றிக்
கோவலனான் முகனெடுத்துப்
பாடியே கும்பிட்டார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 261   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மேவியசீ ராரூரர்
மெய்ச்சபத வினைமுடிப்பக்
காவியினேர் கண்ணாருங்
கண்டுமிக மனங்கலங்கிப்
பாவியேன் இதுகண்டேன்
தம்பிரான் பணியால்என்
றாவிசோர்ந் தழிவார்அங்
கொருமருங்கு மறைந்தயர்ந்தார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list