சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் மைய
மையின்     மையார்     மையற்றுறை     மையல்     மைய    
1.061   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மையின் ஆர் மலர் நெடுங்கண் மலைமகள் ஓர் பாகம் ஆம்
மெய்யினான், பை அரவம் அரைக்கு அசைத்தான், மீன் பிறழ் அச்
செய்யின் ஆர் அகன் கழனிச் செங்காட்டங்குடி அதனுள்
கையின் ஆர் கூர் எரியான்-கணபதீச்சரத்தானே.

2.049   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மையின் ஆர் பொழில் சூழ, நீழலில் வாசம் ஆர் மது மல்க, நாள்தொறும்
கையின் ஆர் மலர் கொண்டு எழுவார் கலிக் காழி,
ஐயனே! அரனே! என்று ஆதரித்து ஓதி, நீதி உளே
நினைபவர்,
உய்யும் ஆறு உலகில் உயர்ந்தாரின் உள்ளாரே.

2.053   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மையின் ஆர் மணி போல் மிடற்றனை, மாசு இல் வெண்பொடிப் பூசும் மார்பனை,
பைய தேன் பொழில் சூழ் புறவு ஆர் பனங்காட்டூர்,
ஐயனை, புகழ் ஆன காழியுள் ஆய்ந்த நால்மறை ஞானசம்பந்தன்
செய்யுள் பாட வல்லார், சிவலோகம் சேர்வாரே.

3.019   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மைய கண் மலைமகள் பாகம் ஆய், இருள
கையது ஓர் கனல்-எரி கனல ஆடுவர்
ஐய நன் பொரு புனல் அம்பர், செம்பியர்
செய்யகண் இறை செய்த கோயில் சேர்வரே.

3.029   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மையின் ஆர் மிடறனார், மான் மழு ஏந்திய
கையினார் கடிபொழில் சூழ்ந்த காட்டுப்பள்ள
தையல் ஓர்பாகமாத் தண்மதி சூடிய
ஐயனார்; அடி தொழ, அல்லல் ஒன்று இல்லையே.

3.046   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மையல் இன்றி, மலர் கொய்து வணங்கிட,
செய்ய உள்ளம் மிக நல்கிய செல்வத்தர்
கைதல், முல்லை, கமழும் கருகாவூர் எம்
ஐயர்; வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே.

4.044   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மையின் ஆர் மலர் நெடுங்கண் மங்கை ஓர் பங்கர் ஆகி,
கையில் ஓர் கபாலம் ஏந்தி, கடை தொறும் பலி கொள்வார், தாம்
எய்வது ஓர் ஏனம் ஓட்டி ஏகம்பம் மேவினாரை,
கையினால் -தொழ வல்லார்க்குக் கடுவினை களையல் ஆமே.

8.141   8 st/nd Thirumurai   Song # 1   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
மையல் ஆய், இந்த மண்ணிடை வாழ்வு எனும் ஆழியுள் அகப்பட்டு,
தையலார் எனும் சுழித்தலைப் பட்டு, நான் தலை தடுமாறாமே,
பொய் எலாம் விட, திருவருள் தந்து, தன் பொன் அடி இணை காட்டி,
மெய்யன் ஆய், வெளி காட்டி, முன் நின்றது ஓர் அற்புதம் விளம்பேனே!

8.217   8 st/nd Thirumurai   Song # 13   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
மையார் கதலி வனத்து
   வருக்கைப் பழம்விழுதேன்
எய்யா தயின்றிள மந்திகள்
   சோரும் இருஞ்சிலம்பா
மெய்யா அரியதெ னம்பலத்
   தான்மதி யூர்கொள்வெற்பின்
மொய்யார் வளரிள வேங்கைபொன்
   மாலையின் முன்னினவே.

9.022   9 st/nd Thirumurai   Song # 1   திருவாலியமுதனார்   திருவிசைப்பா  
மையல் மாதொரு கூறன் மால்விடை
   யேறி மான்மறி யேந்தி யதடங்
கையன் கார்புரை யுங்கறைக்
   கண்டன் கனன் மழுவான்
ஐயன் ஆரழல் ஆடு வான்அணி
   நீர்வயல் தில்லை யம்பலத்தான்
செய்யபாதம் வந்தென் சிந்தை
   யுள் ளிடங் கொண் டனவே.

11.015   11 st/nd Thirumurai   Song # 2   நக்கீரதேவ நாயனார்   கார் எட்டு  
மையார் மணிமிடறு போற்கருகி மற்றவன்தன்
கையார் சிலை விலகிக் காட்டிற்றே ஐவாய்
அழலரவம் பூண்டான் அவிர்சடைபோல் மின்னிக்
கழலரவம் காண்புற்ற கார்.

12.210   12 st/nd Thirumurai   Song # 77   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
மையற்றுறை யேறி மகிழ்ந்தலர்சீர்
வாகீசர் மனத்தொடு வாய்மையுடன்
மெய்யுற்ற திருப்பணி செய்பவராய்
விரவுஞ்சிவ சின்னம் விளங்கிடவே
எய்துற்ற தியானம் அறாவுணர்வும்
ஈறின்றி எழுந்திரு வாசகமும்
கையில்திக ழும்உழ வாரமுடன்
கைத்தொண்டு கலந்து கசிந்தனரே.
12.230   12 st/nd Thirumurai   Song # 5   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
மையார் தடங்கண் பரவையார்
மணவா ளன்தன் மலர்க்கழல்கள்
கையால் தொழுது வாய்வாழ்த்தி
மனத்தால் நினைக்குங் கடப்பாட்டில்
செய்யாள் கோனும் நான்முகனும்
அறியாச் செம்பொன் தாளிணைக்கீழ்
உய்வான் சேர உற்றநெறி
இதுவே என்றன் பினில்உய்த்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 787   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மையல் நெஞ்சுடை அமணரும்
தம்பொருள் வரைந்த
கையில் ஏட்டினைக் கதுவுசெந்
தீயினில் இடுவார்
உய்யு மோஇது வெனஉறும்
கவலையாம் உணர்வால்
நையும் நெஞ்சின ராகியே
நடுங்கிநின் றிட்டார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list