சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் வஞ்ச
வஞ்ச     வஞ்சியன     வஞ்சனை     வஞ்சியும்     வஞ்சகர்     வஞ்சக     வஞ்ச(அ)மணர்,     வஞ்சித்து     வஞ்சனையார்     வஞ்சகர்க்கு     வஞ்சப்     வஞ்சகப்     வஞ்ச(அ)அரக்கன்     வஞ்சம்     வஞ்சி    
1.062   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வஞ்ச மனத்து அஞ்சு ஒடுக்கி, வைகலும் நல் பூசனையால்,
நஞ்சு அமுது செய்து அருளும் நம்பி எனவே நினையும்
பஞ்சவரில் பார்த்தனுக்குப் பாசுபதம் ஈந்து உகந்தான்-
கொஞ்சுகிளி மஞ்சு அணவும் கோளிலி எம்பெருமானே.

3.076   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வஞ்சக மனத்து அவுணர் வல் அரணம் அன்று அவிய வார் சிலை வளைத்து
அஞ்சு அகம் அவித்த அமரர்க்கு அமரன், ஆதி பெருமானது இடம் ஆம்
கிஞ்சுக இதழ்க்கனிகள் ஊறிய செவ்வாயவர்கள் பாடல் பயில,
விஞ்சு அக இயக்கர் முனிவக்கணம் நிறைந்து மிடை வேதவனமே.

3.078   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வஞ்ச(அ)மணர், தேரர், மதிகேடர், தம் மனத்து அறிவு இலாதவர் மொழி
தஞ்சம் என என்றும் உணராத அடியார் கருது சைவன் இடம் ஆம்
அஞ்சுபுலன் வென்று, அறுவகைப் பொருள் தெரிந்து, எழு இசைக் கிளவியால்,
வெஞ்சினம் ஒழித்தவர்கள் மேவி நிகழ்கின்ற திரு வேதிகுடியே.

4.012   4 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வஞ்சித்து என் வளை கவர்ந்தான் வாரானே ஆயிடினும்,
பஞ்சிக்கால் சிறகு அன்னம் பரந்து ஆர்க்கும் பழனத்தான்
அஞ்சிப் போய்க் கலி மெலிய அழல் ஓம்பும் அப்பூதி
குஞ்சிப் பூ ஆய் நின்ற சேவடியாய்!-கோடு இயையே!

4.019   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வஞ்சனையார் ஆர் பாடும் சாராத மைந்தனை,
துஞ்சு இருளில் ஆடல் உகந்தானை, தன் தொண்டர்
நெஞ்சின் இருள் கூரும்பொழுது நிலாப் பாரித்து
அம் சுடர் ஆய் நின்றானை,-நான் கண்டது ஆரூரே.

4.066   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வஞ்சகர்க்கு அரியர் போலும்; மருவினோர்க்கு எளியர் போலும்;
குஞ்சரத்து உரியர் போலும்; கூற்றினைக் குமைப்பர் போலும்;
விஞ்சையர் இரிய அன்று வேலைவாய் வந்து எழுந்த
நஞ்சு அணி மிடற்றர் போலும்-நாக ஈச்சுரவனாரே.

4.075   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வஞ்சப் பெண் அரங்கு கோயில், வாள் எயிற்று அரவம் துஞ்சா;
வஞ்சப் பெண் இருந்த குழல் வான் தவழ் மதியம் தோயும்;
வஞ்சப் பெண் வாழ்க்கையாளன் வாழ்வினை வாழல் உற்று
வஞ்சப் பெண் உறக்கம் ஆனேன்; வஞ்சனேன் என் செய்கேனே!

4.076   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வஞ்சகப் புலையனேனை வழி அறத் தொண்டில் பூட்டி
அஞ்சல்! என்று ஆண்டுகொண்டாய்; அதுவும் நின் பெருமை அன்றே!
நெஞ்சு அகம் கனிய மாட்டேன்; நின்னை உள் வைக்க மாட்டேன்;
நஞ்சு இடம் கொண்ட கண்டா! என், என நன்மைதானே?

5.008   5 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வஞ்ச(அ)அரக்கன் கரமும்-சிரத்தொடும்-
அஞ்சும் அஞ்சும் ஓர் ஆறும் நான்கும்(ம்) இற,
பஞ்சின் மெல்விரலால் அடர்த்து, ஆயிழை,
அஞ்சல் அஞ்சல்! என்றார்-அன்னியூரரே.

5.031   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வஞ்சம் இன்றி வணங்குமின்! வைகலும்
வெஞ்சொல் இன்றி விலகுமின்! வீடு உற
நைஞ்சு நைஞ்சு நின்று உள் குளிர்வார்க்கு எலாம்,
அஞ்சல்! என்றிடும்-ஆனைக்கா அண்ணலே.

5.068   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வஞ்ச நஞ்சின் பொலிகின்ற கண்டத்தர்;
விஞ்சையின் செல்வப் பாவைக்கு வேந்தனார்;
வஞ்ச நெஞ்சத்தவர்க்கு வழி கொடார்-
நஞ்ச நெஞ்சர்க்கு அருளும் நள்ளாறரே.

7.019   7 st/nd Thirumurai   Song # 5   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
வஞ்சம் கொண்டார் மனம் சேரகில்லார்; நறு நெய் தயிர் பால்
அஞ்சும் கொண்டு ஆடிய வேட்கையினார்; அதிகைப் பதியே
தஞ்சம் கொண்டார்; தமக்கு என்றும் இருக்கை, சரண் அடைந்தார்
நெஞ்சம், கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே .

7.034   7 st/nd Thirumurai   Song # 5   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
வஞ்சம் நெஞ்சனை, மா சழக்கனை, பாவியை, வழக்கு இ(ல்)லியை,
பஞ்சதுட்டனை, சாதுவே! என்று பாடினும் கொடுப்பார் இலை;
பொன் செய் செஞ்சடைப் புண்ணியன் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்!
நெஞ்சில் நோய் அறுத்து உஞ்சு போவதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.

7.042   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
வஞ்சி நுண் இடையார் மயில் சாயல் அன்னார், வடிவேல் கண் நல்லார் பலர் வந்து இறைஞ்சும்
வெஞ்சமாக்கூடல் விகிர்தா! அடியேனையும் வேண்டுதியே” என்று தான் விரும்பி,
வஞ்சியாது அளிக்கும் வயல் நாவலர் கோன்-வனப் பகை அப்பன், வன் தொண்டன்- சொன்ன
செஞ்சொல்-தமிழ் மாலைகள் பத்தும் வல்லார் சிவலோகத்து இருப்பது திண்ணம் அன்றே! .

7.086   7 st/nd Thirumurai   Song # 8   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
வஞ்சம் அற்ற மனத்தாரை மறவாத பிறப்பு இலியை,
பஞ்சிச் சீறடியாளைப் பாகம் வைத்து உகந்தானை,
மஞ்சு உற்ற மணி மாட வன் பார்த்தான் பனங்காட்டூர்
நெஞ்சத்து எங்கள் பிரானை, நினையாதார் நினைவு என்னே!

7.087   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
வஞ்சி நுண் இடை மங்கை பங்கினர்-மா தவர் வளரும், வளர் பொழில்,
பஞ்சின் மெல் அடியார் பயிலும்-திருப் பனையூர்,
வஞ்சியும் வளர் நாவலூரன்வனப்பகை அவள் அப்பன், வன்தொண்டன்
செஞ்சொல் கேட்டு உகப்பார் அவரே அழகியரே.

11.005   11 st/nd Thirumurai   Song # 5   ஐயடிகள் காடவர்கோன் நாயனார்   திருக்கோயில் திருவெண்பா சேத்திரத்  
வஞ்சியன நுண்ணிடையார் வாள்தடங்கண் நீர்சோரக்
குஞ்சி குறங்கின்மேற் கொண்டிருந்து கஞ்சி
அருத்தொருத்தி கொண்டுவா என்னாமுன் நெஞ்சே
திருத்துருத்தி யான்பாதஞ் சேர்.

11.006   11 st/nd Thirumurai   Song # 94   சேரமான் பெருமாள் நாயனார்   பொன்வண்ணத்தந்தாதி  
வஞ்சனை யாலே வரிவளை
கொண்டுள்ள மால்பனிப்பத்
துஞ்சும் பொழுதும் உறத்தொழு
தேன்சொரி மாலருவி
அஞ்சன மால்வரை வெண்பிறை
கவ்வியண் ணாந்தனைய
வெஞ்சின ஆனையின் ஈருரி
மூடிய வீரனையே.

11.008   11 st/nd Thirumurai   Song # 93   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
வஞ்சனை செய்து மனங்கவரும் வாட்கண்ணுக்
கஞ்சனத்தை யிட்டங் கழகாக்கி எஞ்சா

11.008   11 st/nd Thirumurai   Song # 114   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
வஞ்சியும் வேயும் வளர்தா மரைமொட்டும்
மஞ்சில்வரும் மாமதிபோல் மண்டலமும் எஞ்சாப்

12.210   12 st/nd Thirumurai   Song # 116   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
வஞ்சகர் விட்ட சினப்போர்
மதவெங் களிற்றினை நோக்கிச்
செஞ்சடை நீள்முடிக் கூத்தர்
தேவர்க்குந் தேவர் பிரானார்
வெஞ்சுடர் மூவிலைச் சூல
வீரட்டர் தம்அடி யோம்நாம்
அஞ்சுவ தில்லைஎன் றென்றே
அருந்தமிழ் பாடி அறைந்தார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list