சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் வடி
வடி     வடிவு     வடிவுடைய     வடிவார்     வடிக்கண்ணி     வடிக்கண்     வடிவுதாங்     வடிவும்     வடிவேல்     வடிக்க    
1.102   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வடி கொள் வாவிச் செங்கழு நீரில் கொங்கு ஆடிக்
கடி கொள் தென்றல் முன்றிலில் வைகும் கலிக் காழி
அடிகள் தம்மை, அந்தம் இல் ஞானசம்பந்தன்
படி கொள் பாடல் வல்லவர் தம்மேல் பழி போமே.

1.125   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வடிவு உடை மலைமகள் சலமகள் உடன் அமர்
பொடிபடும் உழை அதள் பொலி திரு உருவினன்,
செடி படு பலி திரி சிவன், உறை சிவபுரம்
அடைதரும் அடியவர் அருவினை இலரே.

2.059   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வடி கொள் பொழிலில் மழலை வரிவண்டு இசைசெய்ய,
கடி கொள் போதில் தென்றல் அணையும் கலிக் காழி,
முடி கொள் சடையாய்! முதல்வா! என்று முயன்று ஏத்தி,
அடி கைதொழுவார்க்கு இல்லை, அல்லல் அவலமே.

2.108   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வடி கொள் மேனியர், வான மா மதியினர், நதியினர் மது
ஆர்ந்த
கடி கொள் கொன்றை அம் சடையினர், கொடியினர், உடை
புலி அதள் ஆர்ப்பர்,
விடை அது ஏறும் எம்மான், அமர்ந்து இனிது உறை
விற்குடி வீரட்டம்,
அடியர் ஆகி நின்று, ஏத்த வல்லார் தமை அருவினை
அடையாவே.

3.059   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வடிவு உடை வாள்-தடங்கண் உமை அஞ்ச, ஒர் வாரணத்தைப்
பொடி அணி மேனி மூட உரிகொண்டவன்; புன்சடையான்;
கொடி நெடுமாடம் ஓங்கும், குழகன், குடமூக்கு இடமா,
இடி படு வானம் ஏத்த இருந்தான்; அவன் எம் இறையே.

4.037   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வடி தரு மழு ஒன்று ஏந்தி, வார்சடை மதியம் வைத்து
பொடி தரு மேனிமேலே புரிதரு நூலர் போலும்-
நெடி தரு பொழில்கள் சூழ நின்ற நெய்த்தானம் மேவி,
அடி தரு கழல்கள் ஆர்ப்ப, ஆடும் எம் அண்ணலாரே.

4.084   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வடிவு உடை வாள் நெடுங்கண் உமையாளை ஓர்பால் மகிழ்ந்து
வெடிகொள் அரவொடு வேங்கை அதள் கொண்டு மேல் மருவி,
பொடி கொள் அகலத்துப் பொன் பிதிர்ந்தன்ன பைங்கொன்றை அம்தார்
அடிகள் அடி நிழல் கீழது அன்றோ, என் தன் ஆர் உயிரே!

4.103   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வடிவு உடை மாமலைமங்கை பங்கா! கங்கை வார்சடையாய்!
கடி கமழ் சோலை சுலவு கடல் நாகைக்காரோணனே!
பிடி மதவாரணம் பேணும் துரகம் நிற்க, பெரிய
இடி குரல் வெள் எருது ஏறும் இது என்னைகொல்? எம் இறையே!

5.055   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வடி கொள் வெண்மழு மான் அமர் கைகளும்,
பொடி கொள் செம்பவளம் புரை மேனியும்,
நடிகொள் நல் மயில் சேர் திரு நாரையூர்
அடிகள் தம் வடிவு, அம்ம அழகிதே!

6.018   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வடி ஏறு திரிசூலம் தோன்றும் தோன்றும்;
வளர்  சடைமேல் இளமதியம் தோன்றும் தோன்றும்;
கடி ஏறு கமழ் கொன்றைக் கண்ணி தோன்றும்; 
காதில் வெண் குழைதோடு கலந்து தோன்றும்;
இடி ஏறு களிற்று உரிவைப்போர்வை தோன்றும்;
எழில் திகழும் திருமுடியும் இலங்கித் தோன்றும்
பொடி ஏறு திருமேனி பொலிந்து தோன்றும்
பொழில்  திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.

6.021   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வடி விளங்கு வெண் மழுவாள் வல்லார் போலும்; வஞ்சக் கருங்கடல் நஞ்சு உண்டார் போலும்;
பொடி விளங்கு முந்நூல் சேர் மார்பர் போலும்; பூங் கங்கை தோய்ந்த சடையார் போலும்;
கடி விளங்கு கொன்றை அம்தரார் போலும்; கட்டங்கம் ஏந்திய கையார் போலும்;
அடி விளங்கு செம் பொன்கழலார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.

7.064   7 st/nd Thirumurai   Song # 3   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
வடி கொள் கண் இணை மடந்தையர் தம்பால் மயல் அது உற்று, வஞ்சனைக்கு இடம் ஆகி,
முடியுமா கருதேல்! எருது ஏறும் மூர்த்தியை, முதல் ஆய பிரானை,
அடிகள்! என்று அடியார் தொழுது ஏத்தும் அப்பன், ஒப்பு இலா முலை உமை கோனை,
செடி கொள் கான் மலி திருத் தினை நகருள் சிவக்கொழுந்தினை, சென்று அடை,   மனனே! .

7.085   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
வடிவு உடை மழு ஏந்தி, மதகரி உரி போர்த்து,
பொடி அணி திருமேனிப் புரிகுழல் உமையோடும்,
கொடி அணி நெடுமாடக் கூடலையாற்றூரில்
அடிகள் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே!

8.202   8 st/nd Thirumurai   Song # 14   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
வடிக்க ணிவைவஞ்சி யஞ்சும்
   இடையிது வாய்பவளந்
துடிக்கின்ற வாவெற்பன் சொற்பரி
   சேயான் றொடர்ந்துவிடா
அடிச்சந்த மாமல ரண்ணல்விண்
   ணோர்வணங் கம்பலம்போற்
படிச்சந் தமுமிது வேயிவ
   ளேஅப் பணிமொழியே.

8.213   8 st/nd Thirumurai   Song # 24   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
வடிவார் வயற்றில்லை யோன்மல
   யத்துநின் றும்வருதேன்
கடிவார் களிவண்டு நின்றலர்
   தூற்றப் பெருங்கணியார்
நொடிவார் நமக்கினி நோதக
   யானுமக் கென்னுரைக்கேன்
தடிவார் தினையெமர் காவேம்
   பெருமஇத் தண்புனமே.

11.004   11 st/nd Thirumurai   Song # 63   காரைக்கால் அம்மையார்    அற்புதத் திருவந்தாதி  
வடிவுடைய செங்கதிர்க்கு மாறாய்ப் பகலே
நெடிதுலவி நின்றெறிக்குங் கொல்லோ - கடியுலவு
சொன்முடிவொன் றில்லாத சோதியாய் சொல்லாயால்
நின்முடிமேல் திங்கள் நிலா.

11.022   11 st/nd Thirumurai   Song # 50   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருவந்தாதி  
வடிவார் அறப்பொங்கி வண்ணக்கச் சுந்தி
வடிவார் வடம்புனைந்தும் பொல்லா வடிவார்வேல்
முற்கூடல் அம்மான் முருகமருங் கொன்றையந்தார்
முற்கூட மாட்டா முலை.

11.036   11 st/nd Thirumurai   Song # 29   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை  
வடிக்கண்ணி யாளையிவ் வான்சுரத்தி னூடே
கடிக்கண்ணி யானோடும் கண்டோம் வடிக்கண்ணி
மாம்பொழில்சேர் வைகை யமண்மலைந்தான் வண்காழிப்
பூம்பொழிலே சேர்ந்திருப்பார் புக்கு
.

11.037   11 st/nd Thirumurai   Song # 130   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை  
வடிக்கண் மலர்வாளி வார்புருவ வில்மேல்
தொடுத் ததரத் தொண்டை துடிப்பப் பொடித்தமுலைக்

12.070   12 st/nd Thirumurai   Song # 10   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
வடிவு காண்டலும் மனத்தினும் முகம்மிக மலர்ந்து
கடிது வந்தெதிர் வணங்கிஇம் மடத்தினிற் காணும்
படியி லாதநீ ரணையமுன் பயில்தவ மென்னோ
அடிய னேன்செய்த தென்றனர் அமர்நீதி யன்பர்.
12.250   12 st/nd Thirumurai   Song # 3   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
வடிவுதாங் காணா ராயும்
மன்னுசீர் வாக்கின் வேந்தர்
அடிமையுந் தம்பி ரானார்
அருளுங்கேட் டவர்நா மத்தால்
படிநிகழ் மடங்கள் தண்ணீர்ப்
பந்தர்கள் முதலா யுள்ள
முடிவிலா அறங்கள் செய்து
முறைமையால் வாழும் நாளில்.
12.290   12 st/nd Thirumurai   Song # 210   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வடிவும் குணமும் நம்முடைய
மகட்கு மண்ணு ளோர்க்கிசையும்
படிவ மன்றி மேற்பட்ட
பரிசாம் பான்மை அறிகிலோம்
கடிசேர் மணமும் இனிநிகழுங்
கால மென்னக் கற்புவளர்
கொடியே அனைய மனைவியார்
ஏற்கு மாற்றால் கொடுமென்றார்.
12.410   12 st/nd Thirumurai   Song # 27   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
வடிவேல் அதிகன் படைமா ளவரைக்
கடிசூ ழரணக் கணவாய் நிரவிக்
கொடிமா மரில்நீ டுகுறும் பொறையூர்
முடிநே ரியனார் படைமுற் றியதே.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list